புதன், 8 ஆகஸ்ட், 2012

பாரியூரில் பஞ்ச தரிசனம் தரும் கொண்டத்து காளியம்மன் கோவில் !






  
நன்றி 
திரு மணிவண்ணன் அவர்கள் 
குப்தா  ஜுவெல்லர்ஸ்
கோபி  

பெருமை மிகு கொங்கு மண்டலத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் 5 வது கிலோ மீட்டரில் பாரியூர்  என்னுமிடத்தில் , கொண்டத்து காளியம்மன் கோவில் எழில் மிகு இயற்க்கை சூழலில் அமைந்து இருக்கிறது ,  இங்குவந்து வழிபடும் அன்பர்களுக்கு அம்பாள் வழங்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே காண்போம் :

 

1 ) விவாகரத்து வரை சென்ற கணவன் மனைவியினை ஒன்றுசேர்த்து குடும்ப வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் சக்தி பெற்றவள் , குடும்பத்தில் கணவனின் நடத்தை சரியில்லாத பொது சம்பந்த பட்ட குடும்ப தலைவி தொடர்ந்து 7 வளர் பிறை திங்கள் கிழமை நாட்களில் அம்மனுக்கு மல்லிகை மலர் மாலை சாற்றி , ஒன்பது  நெய் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் , குடும்ப தலைவன் அறிவில் தொளிவு பெற்று குடும்பம் முன்னேற்றம் பெற பாடுபடும் யோகம் ஏற்ப்படும் , மேலும் இல்லற வாழ்க்கையில் எதிர் எதிர் துருவமாக இருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர இங்கு வந்து திங்கள் கிழமை நாட்களில் வழிபடுவது விரைவான நற்ப்பலனை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

 

2 ) தொழில் முடக்கம் , விருத்தி அற்ற நிலை , கடன் தொந்தரவு , எதிரிகள் தொந்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அன்பர்கள் , வளர் பிறை வியாழன் அன்று மாலை நேரத்தில் தனது கையால் 48 எலுமிச்சை பழங்களை கோர்த்து மாலையாக  எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி  2 நெய் விளக்கேற்றி வழிபட்டால் நிச்சயம் தொழில் விருத்தி , பொருளாதார முன்னேற்றம் , அபரிவிதமான தொழில் வளர்ச்சி கிடைக்க பெறலாம் , மேலும் கடன் தொல்லைகளில் இருந்து விரைவான நிவர்த்தி கிடைக்க பெறலாம் , தொழில் முறை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு நிச்சயம் கிடைக்க பெறுவார்கள்.

 

3 ) அஷ்டமா சித்து எனும் எண்வகை ( மாந்திரீக ) பாதிப்பிலிருந்தும் விடுபட, பாதிக்க பட்ட அன்பர் செவ்வாய் அன்று மதியம் உச்சிகால வேளையில் செவ்வரளி மாலை அம்மனுக்கு சாற்றி, இலுப்பை என்னை நெய் சேர்த்து 5 விளக்கேற்றி வழிபாடு செய்தால் பாதிப்பில் இருந்து விரைவில் அம்பாள் மீட்டெடுத்து நலம் தருவாள் , துஷ்ட சக்திகளின் பாதிப்பில் இருந்து விடுபடவும் இந்த வழிபாட்டு முறை மிகசிறப்பான நன்மையை தரும் .

 

4 ) உடல் நிலை பாதிப்பால் சிரமம் படும் அன்பர்கள் கோவிலுக்கு வந்து அங்க பிரதஷ்ணமும் , அடி பிரதஷ்ணமும் செய்தால் விரைவான உடல் நலம் பெறுவார் , சிறு குழந்தைகளுக்கு வரும் இனம் தெரியாத உடல் தொந்தரவுகளில் இருந்தும் , மன தொந்தரவுகளில் இருந்தும் அம்பாள் விரைவில் மீட்டெடுத்து நலம் தருவாள் . குழந்தை பாக்கியம் அற்றவர்களுக்கு சந்தானா பாக்கியத்தை வாரிவழங்கும் தன்மை  அம்பாளின் சிறப்பு குணாதிசயம் , அம்பாளின் அருளால் கிடைக்க பெரும் குழந்தை நிச்சயம் இறை அருள் பரிபூரணமாக அமைந்திருக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை , எனவே பஞ்ச தரிசனம் தரும் கொண்டத்து காளியம்மனை வழிபடுங்கள் வாழ்வில் சகல நலம்
பெறுங்கள் .

 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக