சனி, 11 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - ரிஷபம்




பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

ரிஷப லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 4,8,10,12 பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், 4ம் பாவகத்தில் அமர்ந்த குரு தங்களுக்கு சுக போக வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களை தந்த போதிலும், புதிய வண்டி வாகன யோகம், மண் மனை யோகத்தை வாரி வழங்க கூடும், மேலும் கல்வி சார்ந்த விஷயங்களில் ஜீவனத்தை மேற்கொண்டுள்ள அன்பர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும், புதிய வசதி வாய்ப்புகள் ஜாதகருக்கு தேடிவரும் வாய்ப்பை தரும், சுய அறிவில் விருத்தி, புத்திசாலிதனத்தால் ஆதாயம், முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் வல்லமை, பூர்வீக சொத்துகள் கிடைக்கும் யோகம் அல்லது பூர்வீகத்தில் ஜீவனம் செய்வதால் ஜாதகருக்கு கிடைக்கும் தொழில் முன்னேற்றம் என்ற வகையில் யோக பலன்களை வாரி வழங்கும்.

4ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை வசீகரிப்பது ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, உடல் ரீதியான மருத்துவ செலவுகளை திடீரென தரக்கூடும், எனவே ஜாதகர் தனது உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும், மேலும் மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது ஜாதகருக்கு வீண் அவபெயரில் இருந்து காக்கும், தன்னம்பிக்கை ஜாதகருக்கு மிதமிஞ்சிய அளவில் இனிவரும் காலங்களில் உண்டாகும், வாகனங்களில் செல்லும் பொழுது பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வது விபத்துகளை தவிர்க்கும், தேவையற்ற மருத்துவ செலவினங்களை தவிர்க்கலாம், மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது தங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவையும், மன உளைச்சலையும் தரக்கூடும், தங்களிடம் உள்ள சொத்துகள், வண்டி வாகனங்களை முறையாக பராமரித்து வைத்துகொள்வது, திடீர் செலவுகளை தவிர்க்கலாம், முடிந்த வரை உடல் நலனிலும், வாழ்க்கை துணையின் நலனிலும் அதிக கவனம் செலுத்துவது, இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிறப்பாக்கும்.

4ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை வசீகரிப்பது ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, தொழில் ரீதியான திடீர் அதிர்ஷ்டங்களை வாரி வழங்ககூடும், இருப்பினும் தொழிலாளார்கள் வழியில் இருந்து அதிக இன்னல்களை தரும், பணியில் உள்ள அன்பர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் சிறு சிறு இன்னல்கள் வர கூடும், இருப்பினும் இறுதியில் நன்மையே உண்டாகும், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தாங்கள் ஈடுபடாமல் இருப்பது தங்களுக்கும், தங்களை  சார்ந்தவர்களுக்கும் நன்மையை தரும், தொழில் வேலை வாய்ப்பில் அதிர்ஷ்டங்கள் உண்டு இதுவரை தொழில் வேலை வாய்ப்பு இல்லாத ரிஷப இலக்கின அன்பர்களுக்கு திடீரென தொழில் முன்னேற்றமும், வேலைவாய்ப்பும் உருவாகும், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நிறைவேறும், தங்களின் செயல்பாடுகளில் அறிவுக்கூர்மையும், அதிபுத்திசாலிதனத்தையும் இனி வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம், தொழில் ரீதியான முன்னேற்றம் எதிர்ர்பார்த்த அளவில் இருக்கும் என்பதை நினைத்து மன மகிழ்ச்சி அடையலாம் ரிஷப இலக்கின அன்பர்களே !

4ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தை வசீகரிப்பது ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு,  முதலீடுகளில் வரும் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கும், வெளிநாடுகளில் இருந்து செல்வ வளங்களை வாரி குவிக்கும், வெளிநாடு செல்லும் யோகமும், வெளிநாட்டில் வேலை மற்றும் தொழில் செய்யும் யோகத்தையும் வாரி வழங்கும், பங்கு வர்த்தகத்தில் லாபம் உண்டாக்கு, மன நிம்மதியான செயல்களில் ஜாதகர் ஈடுபடும் யோகத்தை ஜாதகர் பெறுவார், திருமணம் மூலம் நல்ல லாபங்களை ஜாதகர் பெறுவார், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பன்மடங்கு உதவிகரமாக அமையும், புதையல் யோகம் அல்லது புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை தரும், தங்களின் மனதை கட்டுபடுத்தும் வித்தையை கற்று வைத்துகொள்வது, அகல கால் வைத்து இன்னல்களை தேடிகொள்வதில் இருந்து காப்பாற்றும், முதலீடு செய்வதில் அதிக கவனம் தேவை, மற்றவர்களிடம் அதிகம் பகைமை பாராட்டாமல் இருப்பது, தங்களின் மன நிம்மதிக்கு அதிக உத்திரவாதம் தரும்.

குறிப்பு : 

ரிஷப இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட 4,8,10,12 ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 4,8,10,12 ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  இந்த குரு மாற்றத்தின் மூலாம் 60% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது ரிஷப லக்கினமே முதல் இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக