வெள்ளி, 10 ஜூலை, 2015

ரஜ்ஜு பொருத்தமும் திருமண வாழ்க்கையும் !



 திருமண பொருத்தம் காண்பதில் பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து நட்சத்திர பொருத்ததில் "ரஜ்ஜு" பொருத்தம் இல்லை எனில், பொருந்தாது திருமணம் செய்வதை தவிர்ப்பது நலம், மீறி திருமணம் செய்தால் தாம்பதியரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கும், உயிருக்கு கண்டம் ஏற்ப்படும், கணவனை இழந்து வாழும் சூழ்நிலைக்கு மணப்பெண் தள்ளபடுவார் என்ற ஒரு வாதத்ததை கூறுவது வழக்கமாக கொண்டுள்ளது வருந்ததக்கது, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஏனெனில் ரஜ்ஜு பொருத்தம் அற்ற நட்சத்திரங்களை பெற்ற தம்பதியரின் ஜாதகங்களில் 12 பாவகங்கள் வலிமை பெற்று இருப்பின், திருமண வாழ்க்கை சிறிதும் பாதிப்பதில்லை, ரஜ்ஜு பொருத்தம் இருந்தாலும் சுய ஜாதகத்தில் 2,5,7,8 வீடுகள் பாதிக்க பட்டு இருப்பின் தாம்பத்திய வாழ்க்கையில் நீடிப்பது இல்லை, கணவன் மனைவி பிறிவு, விவாகரத்து, ஒற்றுமை இன்மை, வாரிசு இன்மை, குடும்பத்தில் நிம்மதியில்லாமல் வாழ்க்கையில் போராட்டத்துடன் வாழும் சூழ்நிலையை தருவது, என்ற வகையில் தீய பலன்களையே செய்கிறது, மேற்கண்ட விஷயங்கள் அனுபவ ரீதியாகவும், உதாரண ஜாதகங்களை கொண்டு உறுதி செய்யபட்ட விஷயம் என்பதை ஜோதிடதீபம் இங்கு ஆணித்தரமாக பதிவு செய்கிறது.


பொதுவாக நட்சத்திர பொருத்தம் என்பது ஒருவரின் திருமண வாழ்க்கையில் வரும் யோக அவயோக நிகழ்வுகளை 100% விகிதம் நிர்ணயம் செய்வதில்லை, திருமணத்திற்கு பிறகு தம்பதியரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் அதிக பங்கு வகிப்பது சுய ஜாதகத்தில் உள்ள 12 பாவகங்களின் வலிமை நிலையே, நட்சத்திர பொருத்தங்கள் 10க்கு 10 அமைந்தாலும் சுய ஜாதகத்தில் 2ம் வீடு எனும் குடும்ப ஸ்தானமும், 7ம் வீடு எனும் களத்திர ஸ்தானமும் நல்ல நிலையில் வலிமை பெற்று அமையவில்லை எனில், திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமைவதில்லை, மன வாழ்க்கையும் தம்பதியருக்கு மகிழ்ச்சியை தருவதில்லை, நட்சத்திர பெருத்தம் என்பது இருவரின் குண நலன்களை வேண்டுமானால் நிர்ணயம் செய்யலாம், ஆனால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் யோக வாழ்க்கையை 100% விகிதம், தம்பதியர் இவற்றின் சுய ஜாதகத்தில் உள்ள 12 பாவகங்களின் வலிமையே நிர்ணயம் செய்கிறது என்பதே முற்றிலும் மறுக்க இயலாத உண்மை, இதற்க்கு பல உதாரண ஜாதகங்கள் நம்மிடம் உண்டு அன்பர்களே !

ரஜ்ஜு பொறுத்தம் ஒன்று இல்லை என்ற காரணத்தினால், மனம் ஒத்து போன பல ஆண்கள் பெண்களின் திருமணங்கள் தடை ஏற்ப்பட்டுள்ளது. ஏற்ப்படுத்தபட்டுள்ளது, இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் அதிக வியப்பாக தருகிறது அதாவது மணமகன் இறந்துவிடுவான், இதனால் மணப்பெண் விதவை ஆகும் சூழ்நிலை உண்டாகும் என்பதாக உள்ளது, எமது அனுபவத்தில் இது உண்மைக்கு புறம்பானதாகவே தெரிகிறது, ஏனெனில் ரஜ்ஜு பெருத்தம் இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்தால் கண்டம் ஏற்ப்பட்டு மரணம் நிகழும் என்பது ஜோதிடர்களால் மிகைபடுத்தி காட்டபட்டதாகவே ஜோதிடதீபம் கருதுகிறது .

தம்பதியரின் சுய ஜாதகம்  இரண்டிலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம், அல்லது ஆயுள் பாவகம் எனும் 8ம் பாவகம் பாதகஸ்தானதுடன் தொடர்பு பெற்று தொடர்பு பெற்ற பாதக ஸ்தானம் சர மண் தத்துவமாக அமைந்து , திருமணத்திற்கு பிறகு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஒருவேளை இதற்கு சாத்தியம் உண்டு, அதுவும் அவர்களது சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்களின் வலிமையை கொண்டே இந்த விஷயத்தை நிர்ணயம் செய்ய இயலும், பொத்தம் பொதுவாக ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் மணமகனுக்கு மரணம் நிகழும் என்று நிர்ணயம் செய்வது,  ஜோதிட கணிதம் தெரியாத ஜோதிடர்கள் செய்யும் தவறாகவே கருதவேண்டி உள்ளது.

கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, இந்த இரண்டு ஜாதகங்களுக்கு திருமண பொருத்தம் உண்டா இல்லையா ? இவர்கள் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கையில் வரும் ஜாதக பாதகங்களை ஆய்வு செய்வோம், பல ஜோதிடர்கள் கிழ்கண்ட ஜாதகத்திற்கு பொருத்தமில்லை, ரஜ்ஜு பொருத்தம் இல்லாதது மணமகனுக்கு கண்டத்தை தரும் என்று பலன் கூறியுள்ளனர், 

1) நாம் இந்த ஜாதகங்களை குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தையும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தையும், ஆயுள் பாவகமான 8ம் பாவகத்தையும், ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்.

2) தற்பொழுது இருவருக்கும் நடைமுறையில் உள்ள திசை எவ்வித பலன்களை தருகிறது என்பதையும்,

 3) குழந்தை பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவகத்தையும் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

ஜாதகரின் லக்கினம் : துலாம்     
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : மகம் 4ம் பாதம் 


ஜாதகியின் லக்கினம் : கன்னி  
ராசி : தனுசு  
நட்சத்திரம் : மூலம் 4ம் பாதம் 


2ம் பாவக வலிமை நிலை :

ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் கல்வியில் நல்ல வெற்றியை பெற்று தந்து இருக்கும், நல்ல உத்தியோகம் கிடைத்திருக்கும், சுய கௌரவம் மற்றும் அந்தஸ்த்தில் நல்ல முன்னேற்றத்தை வாரி வழங்கி இருக்கும், பேச்சில் இனிமையும் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியையும், குடும்ப ஒற்றுமையையும் கௌரவம் குறையாத குடும்ப வாழ்க்கையையும் பெற்று தரும், வாழ்நாள் முழுவதும் எவ்வித தடையும் இல்லாமல் கை நிறைவான வருமானத்தை ஜாதகர் பெறுவார் என்பது உறுதியான விஷயமாக கருதலாம், மேலும் ஜாதகர் திருமணதிற்கு பிறகு அமையும் குடும்ப வாழ்க்கைக்கு பிறகே ஜீவன வழியில் இருந்து அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும் என்பது கவனிக்க தக்க விஷயம்.

ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு கல்வியில் நல்ல  வெற்றியையும், எதிர்பாராத தனவரவையும் பெற்று தரும், குடும்பத்தில் குறைவற்ற வாழ்க்கையையும், தன்னிறைவான வருமான வாய்ப்பையும் பெற்று தரும், எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும், மேலும் ஜாதகியின் திருமணத்திற்கு பிறகே ஜீவன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும், மேலும் ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாக வருவது குடும்ப வாழ்க்கையில் ஜாதகி அனுபவிக்கும் யோகங்களையும், சுக போக வசதிகளையும் குறிக்கிறது.

7ம் பாவக வலிமை நிலை :

ஜாதகரின் 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களை தந்த போதிலும், மணவாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை தரும், ஜாதகரின் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியாக வருவது அனைவருடனும் அன்பாக பழக வேண்டிய கட்டாயத்தை அறிவுறுத்துகிறது, தனது உடல் நிலையில் வயிறு சார்ந்த பிரச்சனைகளில் ஜாதகர் சிறு சிறு இன்னல்களை தரும் அமைப்பாக உள்ளது, மேலும் 12ம் பாவகம் உபய ராசியாக இருப்பதால், ஜாதகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து, 25% விகித இன்னகளை தரக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது.

ஜாதகியின் 7ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தனது  கணவனுக்கு 100% அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் வாரி வழங்குபவர் என்பது உறுதியாகிறது, தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும், வாழ்க்கை துணை பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து 100% யோகத்தை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை பெற்று உள்ளார் என்பது வரவேற்க்கதக்கது, மேலும் 7ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகி திருமண வாழ்க்கையில் பெற போகும் யோக வாழ்க்கையை தெளிவு படுத்துகிறது.

8ம் பாவக வலிமை நிலை :

ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரின் பூரண ஆயுளை உறுதி செய்கிறது, மேலும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் தொழில் முன்னேற்றத்தையும், கௌரவம் மற்றும் அந்தஸ்த்தையும் குறிக்கிறது, தாமத திருமணம் இருப்பினும் வாழ்க்கை துணை வழியில் இருந்து செல்வ வளத்தை குறைவில்லாமல் தரும், குறுகிய காலத்தில் அபரிவிதமான சொத்து சுக சேர்க்கையை ஜாதகர் புதையலுக்கு நிகராக தொழில் ரீதியாவும், அதிர்ஷ்டத்தின் மூலமும் பெறுவார் என்பது கவனிக்க தக்கது, ஜாதகரின் உடல் நிலையில் எவ்வித குறையும் இல்லாத தன்மையை ஆயுள் முழுவதும் தரும் என்பது கவனிக்க தக்கது, ஜாதகருக்கு பூரண ஆயுள் என்பது மறுக்க இயலாத உண்மை.

ஜாதகிக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகியின் பூரண ஆயுளை உறுதி செய்கிறது, மேலும் ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஆயுள் முழுவதுமான யோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தரும், மேலும் சீக்கிரமாக அந்தஸ்த்தையும் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், அரசியலில் வெற்றி, திடீர் பதவி உயர்வு, திடீர் தொழில் முன்னேற்றம், வாழ்க்கை துணை வழியில் இருந்து பொருளாதார உதவிகளை பெறும் யோகம், வாழ்க்கை துணையின் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பரிபூரணமாக பெரும் யோகத்தை தரும்.

தற்பொழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் :

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை ( 05/09/2013 முதல் 06/09/2023 வரை ) 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 2ம் பாவக வழியில் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நல்ல வருமான வாய்ப்பையும், இனிமையான பேச்சு திறனையும் வாரி வழங்கும், 4ம் பாவக வழியில் இருந்து சொந்த வீடு, சொத்து சுகங்களை சுயமாக  வாங்கும் யோகத்தை தரும், சுக போக வாழ்க்கைக்கு குறைவில்லா நிலையை தரும், வண்டி வாகன யோகமும் நல்ல குணத்தின் மூலம் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும்.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும்  சந்திரன் திசை ( 15/03/2015 முதல் 14/03/2015 வரை ) 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இலக்கின வழியில் இருந்து நீண்டஆயுள், சிறப்பான அதிர்ஷ்டங்களை அடையும் யோகம், முற்போக்கு சிந்தனையுடன் செயல்படும் குணம், எந்த ஒரு விஷயத்திலும், நேர்மறையான எண்ணங்கள் மூலம் வெற்றியை பெரும் யோகத்தை தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முயற்ச்சியில் நல்ல வெற்றிகளையும், என்ன ஈடேறும் வாய்ப்பையும் பெறுவார், 5ம் பாவக வழியில் இருந்து நல்ல அறிவு திறனையும், சிறந்த குழந்தை பாக்கியத்தையும், அந்த குழந்தை வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகத்தை தரும்,7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணையின் ஆதரவும், நண்பர்கள் பொதுமக்கள் ஆதரவும் உண்டாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகி மிகப்பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் தன்மையை தரும், 9ம் பாவக வழியில் இருந்து ஜாதகி செல்லும் இடங்களில் நல்ல மதிப்பு மரியாதையும், கௌரவம் அந்தஸ்தையும் பெறுவார், நல்ல அறிவு திறன் ஜாதகிக்கு எப்பொழுதும் யோகத்தை வாரி வழங்கும்,11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டத்தையும், நல்ல குணத்தையும் வாரி வழங்கும், அனைத்திலும் லாபம் உண்டாகும்.

இருவரின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது நல்ல புத்திர பாக்கியத்தை வாரி வழங்கும் .

ஆக இருவரின் சுய ஜாதகமும் நல்ல வலிமையுடன் இருப்பதாலும், 2,5,7,8 பாவகங்கள் சிறப்பான வலிமையுடன், யோக வாழ்க்கையை தரும் என்பதாலும், இருவருக்கும் திருமணம் செய்வது 100% நன்மையை தரும், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்பதை பற்றி எவ்வித கவலையும் பட தேவையில்லை, ஜாதகிக்கு மூல நட்சத்திரம் என்ற போதிலும் சுய ஜாதகம் வலிமையுடன் இருப்பது திருமண வாழ்க்கையில் சந்தோசம், தம்பதியர் ஒற்றுமை, நல்ல வாரிசு, 16 வகை செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழும் யோகத்தையே தரும்.

குறிப்பு :

இந்த இரண்டு ஜாதக அமைப்பிற்கும் ஜாதக ரீதியான பொருத்தம் மிகவும் சிறப்பாக இருப்பதால் நட்சத்திர பொருத்தத்தை கருத்தில் கொள்ளாமல், திருமணத்தை சிறப்பாக நடத்துவது சால சிறந்து, எந்த காரணத்தை கொண்டு தம்பதியரின் வாழ்க்கையில் இன்னல்கள் வர வாய்ப்பில்லை, மேலும் ஆண் பெண் இருவருக்கும் மனசு பொருந்தினால் போதும் ஜாதக பொருத்தமும் தேவையில்லை, நட்சத்திர பொருத்தமும் தேவையில்லை, மன பொருத்தமே மன மகிழ்வான வாழ்க்கையையும், சகல செல்வ வளங்களையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக