வியாழன், 16 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - சிம்மம்




பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

சிம்ம லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 1,5,7,9ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், முதல் பாவகமான லக்கினத்தில் அமர்ந்துள்ள குருபகவான் சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு, இனி வரும் ஒரு வருட காலத்திற்கு ராஜயோக பலன்களை வாரி வழங்குகிறார், சிம்ம இலக்கின அன்பர்களுக்கு உடல் நிலையில் நல்ல ஆரோக்கியத்தையும், தெளிவான சிந்தனையும், செயல்திறனில் ஒரு உத்வேகத்தையும் தருவார், எந்த ஒரு பிரச்சனைகளையும் மிக எளிதாக கையாளும் தன்மையை தருவார், வருமுன் காக்கும் தன்மையையும், எடுக்கும் காரியங்களில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழகுவார், புதிய மனிதர்களின் அறிமுகம் தங்களது வாழ்க்கையில் பல அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், கல்வி கலை சார்ந்த துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு சிறப்பான நல்ல எதிர்க்கலாம் உண்டு, அரசியலில் நல்ல பெயரையும் உயர் பதவிகளை அலங்கரிக்கும் யோகத்தை தரும்.

1ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, இதுவரை குழந்தை பாக்கியம் அற்ற தம்பதியருக்கு புத்திரசந்தான பாக்கியம் உண்டாகும், தனது குழந்தைகள் வழியில் இருந்து நல்ல முன்னேற்றமும், செல்வாக்கும் உண்டாகும், கல்வி கலைகளில் தேர்ச்சியும், புகழும் உண்டாகும், காதலில் வெற்றியும் காதலர்களுக்கு திருமண யோகத்தையும் வழங்குவார், ஆன்மீக பெரியோர்களில் ஆசிர்வாதமும், முன்னோர்களின் ஆசிவாதமும் தங்களுக்கு வாழ்க்கையில் அளவில்லா நன்மைகளையும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், பல ஆன்மீக திருத்தலங்களுக் சென்றுவரும் யோகத்தையும், அதன் வழியில் வாழ்க்கையில் முன்னேற்றமும் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்து நல்ல சேதியும், வெளிநாட்டில் பணியாற்றும் அன்பர்களுக்கு, திடீர்  பதவி உயர்வும் தன சேர்க்கையும் உண்டாகும், தங்களின் அறிவு திறன் மிகசிறந்த திட்டங்களை வகுத்து தரும், இதன் மூலம் அளவில்லா தொழில் முன்னேற்றமும், கை நிறைவான லாபமும் கிடைக்க பெறுவீர்கள், தன்னம்பிக்கையும் மனோ தைரியமும் அதிகரிக்கும் யோக காலமாக இதை கருதலாம்.

1ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து மிகசிறந்த யோக பலன்களை வாரி வழங்கும், வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு வந்த போதிலும், ஒற்றுமை குறையாது, வாழ்க்கை துணையின் ஆதரவின் மூலம் பல அறிய செயல்களில் ஈடுபட்டு வெற்றியை குவிக்கும் யோகத்தை தரும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் ஒரு வருடம் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், பொதுமக்களை சார்ந்து  தொழில் செய்யும் அன்பர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும், தங்களின் எண்ணங்கள் லட்சியங்கள் யாவும் நிறைவேற்றும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சியை கருதலாம், அரசியலில் உள்ள அன்பர்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்பையும், எதிர்பாராத பதவி உயர்வையும் தங்குதடையின்றி இந்த குரு பெயர்ச்சி வாரி வழங்கும்.

1ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தை வசீகரிப்பது சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, உறவுகள் வழியில் இருந்தும், தந்தை வழியில் இருந்தும் நன்மைகளை வாரி வழங்கும், ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும், உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி படிப்பு சார்ந்த முயற்சிகளில் உள்ள அன்பர்களுக்கு சிற்றப்பன கல்வி முன்னேற்றத்தையும் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளையும் வாரி வழங்கும், புதிய கண்டு பிடிப்புகள், புதிய ஆராய்ச்சிகள் பெயரையும் புகழையும் பெற்று தரும், சமூகத்தில் நல்ல பெயரும் அந்தஸ்தும் உண்டாகும், பொது காரியங்களில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும், கோவில் மற்றும் சாஸ்திரம் சார்ந்த விஷயங்களில் நன்மையையும் லாபத்தையும் பெற்று தரும், புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், அதன் வழியில் யோக வாழ்க்கையும் உண்டாகும், இடம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பமும், இயற்க்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பை தரும், தொலைதூர பயணங்களில் லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், தடை பெற்ற கல்வியில் முன்னேற்றமும், வேலைவாய்ப்பில் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், குரு வட்டமான சிம்மத்தில் அமர்ந்துள்ள குரு பகவான் தங்களுக்கு இந்த வரும் யோக பலன்களையே தங்கு தடையின்றி வாரி வழங்குவது வரவேற்க தக்க விஷயமாகவே கருதலாம்.

குறிப்பு : 

சிம்ம இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட1,5,7,9ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 1,5,7,9ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 50% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது 
சிம்ம லக்கினமே இரண்டாம் இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக