திங்கள், 31 ஆகஸ்ட், 2015

திசாசந்திப்பும் ( ஏக திசை ) திருமண பொருத்தமும் !


திருமண பொருத்தம் காண வரும் பெற்றோர்கள் தற்பொழுது திசா சந்திப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டா ? இதனால் திருமணதிற்கு பிறகு தம்பதியருக்குள் பிரச்சனைகள் வருமா ? ஒரே நேரத்தில் தம்பதியர் இருவரும் ஒரு திசை நடைமுறையில் இருந்தால் திருமண வாழ்க்கையில் இன்னல்கள் வரும் என்று கூறுகின்றனர் எனவே தம்பதியரின் ஜாதகத்தில் திசாசந்திப்பு உள்ளத என்பதை சொல்லுங்கள் என்ற ஒரு கேள்வியை முன் வைக்கின்றனர், திருமண பொருத்ததில் ஏக திசை சந்திப்புக்கு முக்கியதுவம் தருவது அவசியம் என அனைத்து ஜோதிடர்களும் அறிவுறுத்துகின்றனர், அதாவது திருமணம் செய்வதற்கு முன் வது,வரனின் ஜாதகத்தில் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றால் ஜாதக பொருத்தம் கிடையாது, திருமணம் செய்தால் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையிலும், தொடர்ந்தும் வரும் பொழுது நன்மை நடைபெறாது என்பது பல ஜோதிடர்களின் வாதமாக இருக்கிறது, சமீப காலங்களில் இது அதிக அளவில் மிகைபடுத்தபட்டு, பொதுமக்களிடம் சென்று இருக்கிறது, திசாசந்திப்பு ( ஏக திசை ) பற்றியும் அதன் உண்மை நிலையை பற்றியும் சற்று இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

தம்பதியர் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையில் இருந்தால் நன்மையை தாராது, இன்னல்களை தரும் என்ற வாதமே தவறானதாக "ஜோதிடதீபம் " கருதுகிறது, பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை எவ்வித பலன்களை  ( எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற அடிப்படை விஷயம் ) வழங்குகிறது என்பது தெரியாத பொழுதே இந்த குழப்பம் ஏற்ப்பட வாய்ப்புண்டு அன்பர்களே ! 

பொருத்தம் காண வரும் ஆண் பெண் இருவரது ஜாதகத்திலும் ஒரே திசை நடைமுறையில் இருந்தாலும், ஆணுக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது, பெண்ணுக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற தெளிவு பெறுவது மிக மிக அவசியமாகிறது, இருவருக்கும் நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை நடத்தினால், தம்பதியர் இருவருக்கும் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளே நடைபெறும், ஒரு வேலை பாதிக்கபட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே அவயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், பொதுவாக இருவருக்கும் ஒரே திசை நடைபெறுவது இன்னல்களையே தரும் என்று முடிவு செய்வதும், பொருத்தம் இல்லை என முடிவு செய்வதும் ஜாதக கணிதம் பற்றிய தெளிவும், ஜோதிட ஞானமும் அற்றவர்கள் செய்யும் காரியமாகவே படுகிறது.

கிழ்கண்ட தம்பதியரின் ஜாதகங்களை உதாரணம் கொண்டு காண்போம் அன்பர்களே !

ஆண் ஜாதகம் :



பெண் ஜாதகம் :


மேற்கண்ட இருவருக்கும் திருமணம் நடந்து 4 வருடங்கள் முடிந்துவிட்டது, ஜாதகர் ஒரு சிறந்த வெளிநாட்டு நிறுவனத்தில் பணியில் உள்ளார், ஜாதகி வீட்டு கடமைகளை சிறப்பாக கவனித்து வருகிறார், சிறந்த ஆண் வாரிசு உண்டு, திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது, திருமணதிற்கு பிறகு ஜாதகர்  பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றங்களை பெற்று வருகிறார், இனி விஷயத்திற்கு வருவோம்.

தம்பதியர் இருவருக்கும் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை குரு திசையாகும், குரு திசை ஜாதகருக்கு ( 20/04/2015 முதல் 20/04/2031 வரையிலும் )  நடைபெறுகிறது, ஜாதகிக்கு குரு திசை ( 27/02/2014 முதல் 27/02/2030 வரையிலும் ) நடைபெறுகிறது, எனவே இருவரும் ஒரே திசை சந்திப்பு பெறுவதால் இன்னல்களே நடைபெறும் என்று முடிவு செய்யலாமா? அப்படி செய்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு ஒன்றும் இல்லை மேலும் ஜாதகத்தை கணிதம் செய்தவருக்கு ஜோதிடம் சாஸ்திரம் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பதே முற்றிலும் உண்மை.

இருவருக்கும் நடைபெறும் குரு திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்வது குரு திசை இருவருக்கும் தரும் பலாபலன்கள் பற்றி தெளிவை தரும்.

ஜாதகருக்கு நடைபெறும் குரு திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் மற்றும் பலன்கள் :

2,5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குரு திசை யோக பலன்களை  வாரி வழங்குவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும், நல்ல வருமான வாய்ப்புகளையும், 5ம் பாவக வழியில் இருந்து குழந்தைகள் மூலம் யோகமும், நல்ல வாரிசும், தனது சுய புத்திசாலிதனத்தால் தொழில் அபவிரித்தியும், 11ம் பாவக வழியில் இருந்து செய்யும் தொழிலில் அபரிவிதமான வளர்ச்சியும், அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், பதவி உயர்வுகளையும், சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்து போன்ற விஷயங்கள் ஜாதகரை தேடி வரும் யோகத்தையும் பெறுகின்றார்.

ஜாதகிக்கு நடைபெறும் குரு திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் மற்றும் பலன்கள் :

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று குரு திசை  யோக பலன்களை  வாரி வழங்குவது ஜாதகிக்கு எங்கு சென்றாலும் நற்ப்பெயரும் புகழும் உண்டாகும், தனது அறிவு வழியில் பல யோக பலன்களை ஜாதகி அனுபவிக்கும் தன்மையை தரும், கற்ற கல்வியின் மூலம் வாழ்க்கையில் சுய முன்னேற்றம் பெரும் யோகத்தை தரும், ஆக தம்பதியர் இருவருக்கும் தற்பொழுது நடைபெறும் குரு திசை மிகுந்த யோக பலன்களை வாரி வழங்குவது தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், தொழில், பொருளாதார ரீதியான வளர்ச்சிகளையும் 100% விகிதம் வாரி வழங்குவதும், ஏக திசை தம்பதியருக்கு மிகுந்த யோக பலன்களையே தருகிறது என்பது தெளிவாகிறது.

அடுத்து வரும் சனி திசை தரும் பலன்களை பற்றி சிறிது சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

ஜாதகருக்கு அடுத்து வரும் சனி திசை 1ம் வீடு உயிர் உடலாகிய லக்கினத்துடன் தொடர்பு பெற்று, 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்குகிறது.

ஜாதகிக்கு அடுத்து வரும் சனி திசை 2,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும், சிறந்த வருமான வாய்ப்புகளையும், 6ம் பாவக வழியில் இருந்து செய்யும் தொழிலில் திடீர் அதிர்ஷ்டங்களும் முன்னேற்றங்களையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், 10ம் பாவக வழியில் இருந்து நிரந்தரமான தொழில் வாய்ப்புகளையும்,தொழில் ரீதியான அபரிவித வளர்ச்சிகளையும், வாரி வழங்குவது தெளிவாகிறது.

எனவே அன்பர்களே, தம்பதியரின் ஜாதகங்களில் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றாலும், நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு பலன் கூறுவதே சரியான ஜோதிட கணிதம், சுய ஜாதகத்தில் உள்ள பலன்களுக்கு மாறாக பலன்களை கூறுவது, ஜாதக பலன்கான வந்தவருக்கு இன்னல்களை தரும், அதை பலனாக கூறியவருக்கு மிகுந்த இன்னல்களை வாரி வழங்கிவிடும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகங்களுக்கு ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று திருமணத்தை நிறுத்தும் நிலைக்கு வந்த வரன் வதுவின் பெற்றோர்களுக்கு, ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை நிலையை பற்றியும், நடைபெறும் திசைகள் தரும் யோகங்கள் பற்றியும் "ஜோதிடதீபம் " சரியான விளக்கம் தந்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன் திருமண வாழ்க்கையில் இணைத்து வைத்தது, அதன் பிறகு இது வரையிலும் தம்பதியரின் வாழ்க்கையில் யோகங்களுக்கு குறைவு இல்லை  முன்னேற்றத்திற்கும் தடையில்லை என்பது கவனிக்க தக்கது, இவை அனைத்திற்கும் காரணம் இறை அருளின் கருணையே!

எனவே திருமண வாழ்க்கையில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை உணர்ந்து திருமணம் அமைத்து தரும் பொழுது, தம்பதியரின் வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக அமைகிறது, இதில் செவ்வாய் தோஷமோ, சர்ப்ப தோஷமோ, களத்திர தோஷமோ,ரஜ்ஜு பொருத்தமோ, திசாசந்திப்போ,
 எவ்வித இன்னல்களையும் தருவதில்லை அன்பர்களே, இதுவே முற்றிலும் உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

15 கருத்துகள்:

  1. ஐயா
    படத்தில் உள்ள ஜாதகத்திற்கும் தாங்கள் கூறியதற்கும் வித்தியாசமாக உள்ளதாக தோன்றுகிறது.

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    பதிலளிநீக்கு
  2. ஐயா
    படத்தில் உள்ள ஜாதகத்திற்கும் தாங்கள் கூறியதற்கும் வித்தியாசமாக உள்ளதாக தோன்றுகிறது.

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன வித்தியாசம் எனக்கு ஒன்று தெரியவில்லையே ?

      நீக்கு
    2. ஐயா
      ஆணின் ஜாதக கட்டத்தில் 2,5,11 தொடர்பு புதனுக்கு உள்ளது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. இதை தான் கிரகங்களின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்று தெரியாமல் முடிவு செய்வது என்று சொல்கிறோம், அடிப்படையில் ஜாதக கணிதம் பற்றி தெளிவு பெற்ற பின்பு கருத்து சொல்லுங்கள், அல்லது குரு திசை 2,5,11ம் வீட்டு பலனை எப்படி? ஏற்று நடத்துகின்றது என்பதை ஆய்வு செய்து கண்டுபிடியுங்கள்.

      நீக்கு
    4. ஐயா

      மன்னிக்கவும்
      வளர்நிலை ஜாதகம்
      சரிதானே
      புரிந்து கொண்டேன்

      நன்றி

      நீக்கு
    5. "தவறு ஒன்றும் இல்லை" அன்பரே ! தங்களின் ஆர்வம் சரியான தேடுதல்களை நோக்கி செல்வது சிறந்தது, வாழ்த்துகள் இறை அருள் தங்களின் தேடுதல்களுக்கு சரியான தீர்வுகளை தரும்

      நீக்கு
  3. அய்யா, தங்கள் கருத்துக்கள் மிக வித்தியாசமாகவும் அற்புதமாகவும் உள்ளன. மிக்க நன்றி. தாங்கள் உபயோகபடுத்தும் இந்த சாதக கணினி பெயர் (horoscope software) என்ன அய்யா? Jagannatha Hora பற்றி உங்கள் கருத்து என்ன அய்யா?

    பதிலளிநீக்கு
  4. ஐயா எனக்கும் ஓரு பொண்ணு ஜாதகத்திற்கும் ஓரே திசை நடக்கிறது அதாவது ராகு திசை நடக்கிறது பொருத்தம் சரியாக இருக்கிறது ஆனால் ஒரே திசை நடக்க கூடாது என்று சொல்கிறார்கள் அது உண்மையை ஐயா.திருமணம் செய்யலாமா ஐயா

    பதிலளிநீக்கு
  5. 2023 வரை இருவருக்கும் சனி திசை உள்ளது பொருத்தம் 7 உள்ளது திருமணம் செய்யலாமா

    பதிலளிநீக்கு
  6. ஐயா எனக்கும் ஓரு பொண்ணு ஜாதகத்திற்கும் ஓரே திசை நடக்கிறது அதாவது சனி திசை நடக்கிறது பொருத்தம் சரியாக இருக்கிறது ஆனால் ஒரே திசை நடக்க கூடாது என்று சொல்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  7. *ஐயா,*

    எனது பெயர் கிருஷ்ணகுமார்.
    எனது ஊர் நாமக்கல்.

    Name Krishnakumar
    Father name Periyasamy
    Mother Name -Nallammal.
    Birth date. 01(day)07(month)1989(year) first July 1989.
    Time of birth 10.25 PM .
    Place of birth - Namakkal

    ஐயா, நான் கடந்த மூன்று வருடங்களாக எனது வாழ்க்கையில் இது நாள் வரை படாத துன்பங்களையும், கஷ்டங்களையும், வேதனைகளையும், அவமானங்களையும், அசிங்கங்களையும், பல கஷ்டங்களையும், வேலையின்மையும், கடன் பிரச்சனை களையும், விபத்தினால் 20 லட்சம் ரூபாய் அளவிலான மருத்துவ செலவினங்களையும் & தொடர்ச்சியாக திருமண தடைகளையும் சந்திக்க நேர்ந்தது.
    இப்பொழுது கூட கடந்த மார்ச் மாதத்திலிருந்து வீட்டிலேயே ஆடு எருமை மாடு மேய்த்துக் கொண்டு உள்ளேன் வேலை இல்லாது. நான், அஷ்டமசனி காலத்திற்கு(before July 2016)முன்பாக நான் கத்தார் நாட்டில் தீ தடுப்பு வடிவமைப்பாளராக நல்ல ஊதியத்தில் பணியில் இருந்தேன்.
    அந்த சமயத்தில் இன்னொரு நபரின் பேச்சினை கேட்டு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கு வந்த நான்கே மாதங்களில் நான் விபத்தை சந்திக்க நேர்ந்தது.
    அதற்குப் பிறகு எனது வாழ்க்கையே அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
    தினம் தினம் நரக வேதனையை அனுபவித்து வந்தேன், வருகின்றேன்.

    இப்பொழுது நான் கடந்த மார்ச் மாதத்திலிருந்து வேலையில்லாமல் உள்ளேன்.
    நான் ஒவ்வொரு மாதமும் இப்பொழுது மாதாந்திர வீட்டுக் கடனுக்கு EMI உண்டான தொகையை செலுத்துவதற்கு கூட அங்கேயும் இங்கேயும் கடன் வாங்கி திண்டாடி வருகின்றேன்.
    நான் சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் எல்லாம் நான் வேலையில் சேர்த்து விட்டவர்கள் பெரும்பாலும்வெளிநாட்டிலும் & உள்நாட்டிலும்.
    ஆனால் என்னால் ஒரு நல்ல ஊதியத்தில் நல்ல கம்பெனியில் வேலையில் அமர முடியவில்லை கடந்த மூன்று வருடங்களாக வெளிநாட்டிலும் சரி உள்நாட்டிலும் சரி.

    *தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணினால் கூட அதற்கு மனம் வரவில்லை.*
    எனது தாத்தாவின் பரம்பரை சொத்து ஆனது இன்னும் 13 ஏக்கர் அளவில் பிரிக்கப்படாமல் உள்ளது கடந்த 30 வருடங்களாக.

    *தயவு செய்து என்னுடைய தற்போதைய சூழ்நிலையை மனதில் வைத்து என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்லுங்கள்.

    கேள்வி-1,
    எனக்கு எந்த தேதிக்குள் திருமணம் நடந்தேறிவிடும்?.

    2. எனக்கு எந்த தேதிக்குள் வெளிநாட்டிலிருந்து நல்ல ஊதியத்தில் நல்ல கம்பெனி வேலையில் விசா கிடைக்க பெற்று வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வேன் ?.

    3.எந்த தேதிக்குள் எனது தாத்தா சொத்து எனக்கு உண்டான பங்கு எனது கைக்கு வந்து சேரும்?.

    4. *எந்த தேதிக்குள் என்னுடைய சொல்லுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பு வந்து சேரும் நான் சொன்னால் சரி என அனைவரும் எப்போது ஏற்று நடப்பார்கள் சமூகத்தில்?(ஏனெனில் உண்மையிலும் கஷ்டப்படும் ஏழை மக்களுக்காக உதவி செய்ய நான் விருப்பப்படுகிறேன் இந்த நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் கூட என்னால் முடிந்த உதவியினை செய்து வருகின்றேன்*.)
    *
    5.எந்த தேதிக்குள் என்னுடைய தற்போதைய அனைத்து கடன்களையும் அடைத்து விட்டு தலைநிமிர்ந்து நடப்பேன் நிம்மதியாக. ?.

    6. எப்போதுதான் எனது குடும்பத்திள் அன்பு அமைதி மகிழ்ச்சி சந்தோஷம் மீண்டும் பழையபடியே நிலவும்?.

    7. நான் எனது கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வந்து நான் ஏழை மக்களுக்கு தொடர்ச்சியாக உதவி செய்ய ஆசைப்படுகிறேன். இது நடப்பதற்கு சாத்தியமா? என்னுடைய ஜாதகத்தின்படி அப்படி சாத்தியம் எனில் இது எப்போது நடந்தேறும்?.



    ஐயா எனக்கு இன்னும் திருமணமாகாத காரணத்தினால் என்னுடைய எண்ணங்கள் காமத்தை நோக்கியே நகர்கின்றன. ஆதலால் ஏதாவது பிரச்சனையில் சிக்கி விடுவேனோ என்ற பயமும் இருக்கிறது. இதற்கு தகுந்த தீர்வினை கூறுங்கள்🙏🏼

    *ஐயா என்னுடைய இந்த மிகவும் மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனக்காக பெரிய மனது செய்து என்னுடைய ஜாதகத்தை அலசி ஆராய்ந்து என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் நல்லபடியாக ஜாதக பலனை உள்ளது உள்ளபடியே கூறுங்கள் உங்களுக்கு புண்ணியமாக போய்விடும்*


    என் மீது கருணை காண்பித்து என்னுடைய ஜாதகத்தை நன்றாக அலசி ஆராய்ந்து என்னுடைய கேள்விகளுக்கு உண்டான பதிலை கூறுங்கள் ஐயா உங்களுக்கு புண்ணியமாக போய்விடும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு
  8. எனக்கும் நான் விரும்பும் நபருக்கும் ஜாதகம் பொருத்தம் இல்லை.. ஆனால் நசதிற பொருத்தம் உள்ளது.... யோனி மற்றும் மகேந்திர பொருத்தம் இல்லை... நாங்கள் திருமணம் செய்யலாமா

    பதிலளிநீக்கு