வெள்ளி, 29 ஜூலை, 2016

ஜாதக ஆலோசனை, திருமணம் எப்பொழுது? வாழ்க்கை துணை எப்படி அமையும்?


ஜாதக ஆலோசனை : 

சந்தேகங்களும் அதற்க்கு உண்டான உண்மை விளக்கங்களும்.

Opinions from other Astrologers about my horoscope:

1. Marriage will happen before Aug 2016.
2. No possibilities of marriage in kethu thissai.I should do marriage before kethu thisai starts.
3. Marriage possibilities would be less in my horoscope.
4. Suriyan in 7th house in my horoscope, so i will have problems in my marriage, marriage life. I have kalathira dosham and sarpa dosam. Sun is placed badly in 7th house, so problem will be more in my life.
5. Last minute marriage will cancel.If i marry also,I will stay alone for long time without wife.
6. I have pen(women) sabam in my horoscope. So, i could choose the girl who is a widower or divorcee or short time separated girl from husband or inter caste girl or engagement cancelled girl.
7. I should do only job. I should not invest money in business, if i do business, there will be a huge loss.
8. I will have extra affair or may be possibility of second marriage.
9. I have less luck in my horoscope.
10.I will loose my properties and wealth.
11.Future wife will be short tempered nature. Marriage life will not be happy.
12.Some problems will come in before marriage.
13.Rahu in 2nd place and kethu in 8th place, so i have sarpa dosam. Because of this, marriage is getting delayed.
14.I will loose many big opportunities in my life.

15.I will get a very old age wife.


1) நிச்சயமாக நடக்க வாய்ப்பில்லை, ஏனெனில் தற்போழுது நடைபெறும் புதன் திசையும் தங்களுக்கு விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, புதன் திசையில் நடைபெறும் சனி புத்தியும் தங்களுக்கு விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துகிறது, எனவே தங்கள் எடுக்கும் திருமண முயற்ச்சிகள் யாவும் தோல்வியையே தழுவும்.

2) கேது திசையில் திருமணம் செய்ய வாய்ப்பில்லை என்பது, முற்றிலும் தவறான கருத்து, ஏனெனில் கேது திசை தரும் பலாபலன்கள் பற்றியும், கேது திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை பற்றியும் அறியாமல் சொல்லும் பொது பலனாகவே இது உள்ளது, தங்களது ஜாதகத்தில் அடுத்து வரும் கேது திசை தங்களுக்கு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு அதிர்ஷ்டமிக்க யோகவாழ்க்கையை வாரி வழங்கும், மேற்கண்ட கூற்று முற்றிலும் தவறானது, கேது திசை தங்களுக்கு முழு அளவில் யோகத்தையே தருகிறது, ( கேது திசை வழங்கும் பலாபலன்கள் பற்றி தனி பதிவு இடப்படும் ) மேலும் கேது திசைக்கு முன்னாள் தற்போழுது நடைபெறும் புதன் திசையும் சரி, புதன் திசை சனி புத்தியும் சரி தங்களுக்கு விரைய ஸ்தான  பலனையே நடத்துவதால் நிச்சயம் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்பதை உணருங்கள், தங்களுக்கு எதிர்வரும் கேது திசையே  யோகம் மிகுந்த திருமண வாழ்க்கையை அமைத்து தரும்.

3) இது தங்களது ஜாதக வலிமைக்கு புறம்பான உண்மையற்ற கருத்து, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு குடும்பம் எனும் 2ம் பாவகமும், களத்திரம் எனும் 7ம் பாவகமும் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே ( பாதக ஸ்தான தொடர்பை பெற்று, நடைபெறும் திசா புத்திகளும் ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே) ஜாதகருக்கு திருமண வாழ்க்கை இல்லை என முடிவு செய்யலாம், தங்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை உடனும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பது, மனதிற்கு உகந்த இல்லற வாழ்க்கையை வாரி வழங்கும், இது கேது திசையில் கேது புத்தியிலேயே நடைமுறைக்கு வரும்.

4) சூரியன் 7ம் பாவகத்தில் அமர்ந்தாலே தீமையை மட்டுமே செய்யும் என்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று உள்ளது எனவே, இங்கு அமர்ந்த சூரியபகவான் தங்களுக்கு நன்மைகளையும் யோகத்தியுமே நல்குவார், குறிப்பாக வெளிநாடு, வெளியூர் வழியில் இருந்து யோகம் உண்டாகும், களத்திர ஸ்தானம் தங்களுக்கு உபய மண் தத்துவத்தில் அமைவது, தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து பரிபூரண யோகங்களை அனுபவிக்க வல்லவர் என்பதை தெளிவுபடுத்துகிறது, மேலும் இங்கு அமர்ந்த சூரிய பகவானால் தங்களுக்கு எவ்வித இன்னல்களும் இல்லை, இல்லற வாழ்க்கையிலும் யாதொரு துன்பமும் நிகழாது என்பதை கருத்தில் கொள்வது தங்களுக்கு  நன்மையை தரும், மேலும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்றுள்ளது யோகமே, இதில் யாதொரு களத்திர தோஷமும் இல்லை, சர்ப்ப தோஷமும் இல்லை என்பதே உண்மை.

5) திருமண முயற்ச்சிகள் கடைசி நேரத்தில் தோல்வியை தந்தத்திற்கு தற்போழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி (புதன்,சனி  ) வலிமை அற்ற விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திடுவது, மட்டுமே காரணமாக சொல்ல இயலும், ஆகவே தற்போழுது  நடைபெறும் திசை மற்றும் புத்தி சாதகமாக தங்களுக்கு இல்லாமல் இருப்பதே இதற்க்கு முழு முதற் காரணமாக அமைந்து விடுகிறது, மேலும் வாழ்க்கை துணை இல்லாமல் வெகு காலம் எல்லாம் தாங்கள் அவதிப்படும் நிலையை தாராது, நடைபெறும் புதன் திசை சனி புத்தி  நிறைவுக்கு பிறகு வரும் கேது திசை, கேது புத்தியில் நல்ல வாழ்க்கை துணை அமையும் .

6) தங்களுக்கு எந்த ஒரு பெண்ணின் சாபமும் இல்லை ( அப்படி இருப்பின் சுய ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் காட்டி கொடுத்துவிடும் ) மேலும் விதவை பெண்ணை திருமணம் செய்யும் அளவிற்கு தங்களுக்கு எந்த ஒரு குறையும் ஜாதக ரீதியாக இல்லை, வேற்று ஜாதியில் திருமணம் செய்யும் நிலையும் தங்களுக்கு வாராது, கணவனை குறுகிய காலத்தில் பிரிந்த பெண்ணையும் திருமணம் செய்யும் நிலையும் வாராது, ஒருவேளை இதை சொன்னவர்களுக்கு வேண்டுமானால் பெண் சாபம் இருக்க கூடும், அதனால் தான் மேற்கண்ட பலனை தங்களுக்கு வழங்கி உள்ளனர்.

7) சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதும், லாப ஸ்தானம் மிகவும் வலிமை பெறுவதும் தங்களுக்கு நல்ல தொழில் வெற்றிகளை வாரி வழங்கும், இது திருமணத்திற்கு பிறகும், கேது மற்றும் சுக்கிரன் திசையில் நடைமுறைக்கு வரும், ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருக்கும் ஜாதகர்கள் சுய தொழில் செய்ய அருகதை உடையவர்கள், லாப ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழில் வழியில் இருந்து நல்ல லாபங்களை முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், தாங்கள் ஓர் இடத்தில் பணிபுரிவதை விட சுய தொழில் செய்வது சகல நிலைகளில் இருந்து லாபத்தை வாரி வழங்கும், அதற்க்கு உண்டான வாய்ப்புகள் தங்களுக்கு வந்துகொண்டு இருக்கின்றது வாழ்த்துக்கள்.

8) இரண்டாவது திருமணத்துக்கு தங்களுக்கு வாய்ப்பில்லை, உங்களுக்கு விருப்பம் இருந்தால் முயற்ச்சி செய்யலாம், அதற்க்கு " ஜோதிடதீபம் " பொறுப்பு ஏற்காது.

9) ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதை விட  வேறு அதிர்ஷ்டம் உலகில் இல்லை எனலாம், தங்களுக்கு 1,5,7,8,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, அதிர்ஷ்டத்தின் தன்மையை தங்களது ஜாதகத்திற்கு இறைஅருள் பரிபூரணமாக வாரி வழங்கி உள்ளது, ஆனால் என்ன தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை, அடுத்து வரும் கேது மற்றும் சுக்கிரன் திசைகளில் அதிர்ஷ்டத்தின் முழு பலாபலன்களை தாங்கள்  பரிபூர்ணமாக அனுபவிக்கலாம் என்பது வரவேற்க தக்க அம்சமாகும், (அவயோகம் பெற்றவர்களிடம் தாங்கள் ஆலோசனை பெற்றால் மேற்கண்ட கருத்தைத்தான் தங்களுக்கு வழங்குவார்கள்.)

10) தங்களின் அறிவு சார்ந்த முடிவுகள் மட்டுமே தங்களுக்கு சுக குறைவை தரும், எந்த விதத்திலும் தங்களுக்கு பொருள் இழப்பு, சொத்து இழப்பு, மற்றும் பொருளாதார இழப்பு வர வாய்ப்பில்லை.

11) தங்களது களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தங்களுக்கு வரும் வாழ்க்கை துணையின் விசாலமான மனப்பக்குவம் கொண்டவர் என்பதை உறுதி செய்கிறது, மேலும் அழகும் அறிவும் ஒருங்கே அமையப்பெற்ற பொறுமைசாலியாக இருப்பர் என்பதும் தெளிவாகிறது. தங்களது இல்லற வாழ்க்கை 100% விகித மகிழ்சசியுடன் சிறப்பாக இருக்கும் என்பதே உண்மை.

12) ஒன்றும் வராது, ஏனெனில் சுய ஜாதகம் மிகவும் வலிமையுடன் உள்ளது, இதை சொன்னவர்களுக்கு வேண்டுமானால் ஏதாவது வராதது வரக்கூடும்.

13) 2ல் ராகு,8ல் கேது இருப்பது தங்களது ஜாதகத்தில் வலிமையாக உள்ளதா? வலிமை அற்று உள்ளதா? என்பதில் தெளிவு தேவை, தங்களது ஜாதகத்தில் 2ல் உள்ள ராகு தங்களுக்கு சிறப்பான நன்மைகளை வழங்குகிறார், 8ல் உள்ள கேது சற்று இன்னல்களை தருகிறார் அவ்வளவே, இதில் சர்ப்ப தோஷத்திற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை, சாயா கிரகங்கள் வழங்கு பலாபலன்கள் பற்றிய தெளிவு இல்லாத பொழுது, சர்ப்ப தோஷம் என்று கூறிவிடுவது சிலரது இயல்பாக உள்ளது என்பதே முற்றிலும் உண்மை, இதற்கும் தங்களது திருமண தாமதத்திற்கு யாதொரு காரணமும் இல்லை, ராகு வின் வலிமையை தங்களுக்கு வரும் வருமானத்தை கொண்டு தாங்களே சுய மதிப்பீடு செய்யலாம், ராகு கேது பற்றி விரிவாக பதிவு செய்யப்படும்.

14) அப்படி ஒரு நிகழ்வு தங்களின் வாழ்க்கையில் நடைபெறாது, ஏனெனில் லாப ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது தங்களின் வாழ்க்கையில் அனைத்து வாய்ப்புகளையும் பரிபூரணமாக அனுபவிக்க வைக்கும், குறிப்பாக அடுத்து வரும் கேது திசை மற்றும் சுக்கிரன் திசை தங்களின் வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும்.

15) களத்திர ஸ்தான வலிமை மற்றும் களத்திர ஸ்தான அதிபதி ஆகியவை தங்களுக்கு மிகவும் சிறப்பாக இருப்பது நிச்சயம் இளம் வயது வாழ்க்கை துணையை பெற்று தரும், மேற்கண்ட கூற்றில் சிறிதும் உண்மை இல்லை அன்பரே, கேது திசை சுக்கிரன் திசை இரண்டு திசைகளும் தங்களுக்கு லாப ஸ்தான பலனை வாரி வழங்குவது அதிர்ஷ்டகரமான எதிர்காலத்தை வாரி வழங்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை அன்பரே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து: