வியாழன், 7 ஜூன், 2012

ஜோதிட ஆலோசனை ! எதிர்பாராத குருட்டு அதிர்ஷ்டம் !?






ஒரு மாம்பழ விஷயத்திற்காக கோபித்து கொண்டு மலைமீது நின்றவரின் நாமத்தை தனது நாமாமாக கொண்டவர் ,  இவர் கடந்த மூன்று வருடமாக ஜோதிட துறையில் அதிக வருமானத்தை பெற்றவர் என்றால் அது மிகையாகாது , ஒரு மருத்துவனுக்கும் , ஜோதிடனுக்கும் ஜாதக கணிதம் செய்யும்பொழுது ஜோதிட கணித முறையில் தனிப்பட்ட முறையை கடைப்பிடித்து பலனை காண வேண்டும் என்பது விதிமுறை , அந்த வகையில் இவரது ஜாதகத்தை கணிதம் செய்த பொழுது நமக்கு கிடைத்த விபரங்கள் .


மேற்கண்ட ஜாதகம் தமிழகத்தின் தலை சிறந்த ஒரு ஜோதிடரின் 
ஜாதகம் , இந்த ஜாதக அமைப்பிற்கு பலன் பின்வருமாறு :
திருவாளர் ஜோதிடருக்கு .....

லக்கினமும் , பாக்கியமும் தொடர்பு பெறகூடாத வீடான 8 ம் வீட்டுடன் தொடர்பு, ஜாதகருக்கு இந்த வீடுகளின் பலன் ஜாதகரை முழுவதும் ஸ்தம்பிக்க வைத்துவிடும் .
 2 ,4 ,6 ,12 ,  வீடுகள் முறையே 12 ம் வீட்டுடன் தொடர்பு ஜாதகர் இந்தவகையிலும் கெடுதலான பலனை அனுபவிக்க வேண்டும்
8 ம் வீடு 8 ம் வீடுடன் தொடர்பு ஜாதகருக்கு திடீர் இழப்பை தவிர்க்க இயலாது ,
3 ,5 ,7 , ம் வீடுகள் முறையே பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் , இந்த வகையில் ஜாதகர் கடுமையான தீமையான பலன்களை அனுபவிக்க வேண்டும் எதிர்காலத்தில்.

11 வீடு 11 வீட்டுடன் தொடர்பு ஜாதகருக்கு எதிர்பாராத குருட்டு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் இந்த வீட்டின் பலன் நடை பெரும் பொழுது .
10 வீடு 10 வீட்டுடன் தொடர்பு ஜாதகருக்கு ஜீவிக்க ஏதாவது ஒரு வகையில் வருமானத்தை சிறிதோணும் தந்துகொண்டு இருக்கும் அமைப்பு இது .

ஜாதகருக்கு நடக்கும் சந்திர திசையில் கடந்த, செவ்வாய் மற்றும்  ராகு புத்திகள்  20 /09 /2009 முதல் 21 /10 /2011 வரை நடந்துள்ளது இது 11 வீடு 11 வீட்டுடன் தொடர்பு ஜாதகருக்கு எதிர்பாராத குருட்டு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கிய காலம், ஜாதகர் இந்த காலங்களில் வருமானத்திற்கு ஒரு அளவே இருந்திருக்க வாய்ப்பு இல்லை, ஆனால் தற்பொழுது ஜாதகருக்கு நடக்கும் குரு புத்தி   2 ,4 ,6 ,12 ,  வீடுகள் முறையே 12 ம் வீட்டு பலனையும் ,8 ம் வீடு 8 ம் வீட்டு பலனையும் தற்பொழுது நடத்திக்கொண்டு இருக்கிறது , ஜாதகருக்கு இப்பொழுது நவகிரகங்களின் சக்தி என்ன என்பதனை நேரடியாக காணும் அருமையான வாய்ப்பை பெற்றுள்ளார் .

இதுபற்றி ஜாதகரை கேட்டால் தெரியவரும் , மேலும் இவருக்கு களத்திர வழியில் இருந்து வரும் துன்பத்தை தங்கும் சக்தியையும்,  நல்ல மனோ திடத்தையும் கடவுள் இவருக்கு அளிக்க வேண்டும் , திருமணம் செய்ததே ஜாதகருக்கு பெரிய குதிரை கொம்பாக இருந்து இருக்கும் , இதில் பெண் குழந்தை பிறந்தால் , ஜாதகர் பாடு பெரும் திண்டாட்டம் ஆகிவிடும் .

மேலும் நடக்கும் சந்திரன் திசையும் 8 ம் வீடு 8 ம் வீட்டு பலனையும் தற்பொழுது நடத்திக்கொண்டு இருக்கிறது , ஜாதகர் மனோ நிலை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது, தனது பிடிவாத குணத்தாலும், நல்ல நண்பர்களின் சேர்க்கை இல்லாத காரணத்தாலும் , ஜாதகரின் வீழ்ச்சி மிகவும் வேகமாக இருக்கும் மேஷம் 8 ம் வீடாக வந்து சர நெருப்பு தத்துவமாக இருப்பதால் , ஜாதகரின் முன்யோசனை அற்ற குணத்தால் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை ஏற்ப்படும் , இதை தமிழ் கூறும் நல் உலகம் காணும் வாய்ப்பு அதிக தூரத்தில் இல்லை என்பதே உண்மை.

இந்த ஜாதகருக்கு செவ்வாய் புத்தியும் , ராகு புத்தியும் தந்த குருட்டு அதிர்ஷ்டத்தின் தன்மையை பார்த்திர்களே ஆயின் பாவ கிரகங்கள் என்று சொல்லப்படும் திசைகளும் நல்ல வீட்டு பலனை தருமாயின் மிகசிறந்த முன்னேற்றத்தை தரும் என்பது தெளிவாகும் ,

ஜாதகர் நவகிரகத்தின் மதிப்பும் , திறனையும் இனி வரும் காலங்களில் நிச்சயம் உணருவார் , இந்த புனிதமான ஜோதிட கலையை தவறாக பயன் படுத்தியதன் பலனை இனிவரும் காலங்களில் அனுபவிக்கும் யோகத்தை ஜாதகர் பெறுவது உறுதி நலம் பெற இறையருள் துணை புரியட்டும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக