வியாழன், 7 ஜூன், 2012

ஜோதிட ஆலோசனை ! மிக சிறந்த யோக ஜாதக நிலை !



அன்புள்ள நண்பருக்கு வணக்கம் ..

தங்களுடை சரியான ஜாதகத்தை அனுப்பி வைத்துள்ளோம் , இதை அடிப்படையாக கொண்ட பலன்கள் கிழ்வருமாறு:

தங்களுடை ஜாதக அமைப்பில் தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் கேது திசை பாதக ஸ்தான பலனை தந்து கொண்டு இருக்கிறது , மேலும் இந்த திசை தங்களுக்கு அவ்வளவு நன்மை தரும் அமைப்பில் இல்லை , தற்பொழுது நடக்கும் புதன் புத்தி மட்டும் ஒருவகையில் நன்மையான பலன்களை தந்துகொண்டு இருக்கிறது , இது வாக்கு மற்றும் செல்வ நிலையில் சற்று ஆறுதல் தரும் அமைப்பு .


பொதுவாக ஒரு ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பின் நல்ல குடும்பம் மனைவி நிச்சயம் அமையும் இது உறுதி தங்களின் ஜாதக அமைப்பில் , 2 ம் வீடு மிகவும் நல்ல நிலையில் உள்ளது அதுவும் கால புருஷ தத்துவத்திற்கு 5 ம் வீடாக வருவது மிகசிறப்பான யோகம் ஆகும் , அதாவது தங்களின் குல தெய்வ அருளால் நல்ல மனைவி அமைவார் , மேலும் திருமண வாழ்க்கையில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும் , வாழ்க்கை நல்ல முன்னேற்ற பாதையில் செல்லும் இதில் சந்தேகம் இல்லை .

தங்களுடைய ஜாதக அமைப்பிற்கு அடுத்து நடக்கும் சுக்கிர திசை 2 ம் வீடு 2 ம் வீட்டு பலனை தர காத்திருக்கிறது எனவே நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கை நிச்சயம் அமையும் , தங்களுடை ஜாதக அமைப்பில் ஏழாம் பாவகம் ( 290 .40 பாகையில் ஆரம்பித்து  319 .43 பாகையில்)  முடிவடைகிறது, குரு பகவானோ 289 .56 பாகையில் அமர்ந்து இருக்கிறார் ஆக சுய ஜாதகத்தில் குருபகவான் மகரத்தில் உள்ள ஆறாம் வீட்டில் இருக்கிறார் என்பதே உண்மை.

குருபகவான் 7 ம் வீட்டில் இல்லை என்பது தங்களின் சுய ஜாதக அமைப்பின் படி உறுதியாகிறது . ஆகவே குருபகவான் 7 ம் வீட்டில் இருப்பதாக நினைத்து கவலை கொள்ள தேவையில்லை , அப்படியே இருந்தாலும்  7 ம் வீடு 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்தால் குரு பகவானால் எந்த வித இடையூறும் ஏற்ப்பட வாய்ப்பு இல்லை.


இந்த அமைப்பை வைத்து பார்க்கும் பொழுது தங்களின் சுய ஜாதக அமைப்பிற்கு ஏழாம் வீடு 10 வீட்டுடன் தொடர்பு  இது மிகசிறந்த யோகம் தரும் அமைப்பு , இதற்குண்டான பலனை ஜாதகர் திருமணம் செய்த பிறகு 100 சதவிகிதம் நன்மையான பலன்களை அனுபவிக்கும் பொழுது தெரியும் , தங்களின் ஜாதக அமைப்பிற்கு 2 ம் வீடு 7 ம் வீடு ஆகியவைகள் மிகவும் சிறப்பாக உள்ளதால் திருமண வாழ்க்கையை பற்றி எந்த வித கவலையும் கொள்ளத் தேவையில்லை , நிச்சயம் மிகசிறந்த வாழ்க்கை துணை அமைவார் , மனைவியாலும் , நண்பர்களாலும் நன்மையை மட்டும் பெரும் ஜாதக அமைப்பு இது வாழ்த்துக்கள் .

தற்பொழுது நடந்து வரும் கேது தசை முடிந்த பிறகு சுக்கிர திசை சுக்கிர புத்தியில் நிரந்தர நல்ல வேலை வாய்ப்பினை பெரும் யோகம் அதிகம் உண்டு , தங்களின் ஜாதக அமைப்பில் வெளிநாடுகளில் நல்ல முன்னேற்றம் காணும் வாய்ப்பு அதிகம் உள்ளது , ஜாதகர் தனியாக  சுய தொழில் செய்வது ஜாதகருக்கு அவ்வளவு நன்மையை தர வாய்ப்பு இல்லை , கூட்டு தொழில் செய்தால் மிகசிறந்த முன்னேற்றம் பெற முடியும் எதிர்காலத்தில் , அரசுத்துறையில் பணியாற்றும் யோகம் ஜாதகருக்கு உண்டு கடுமையான முயற்ச்சி செய்தால் நிச்சயம் சுக்கிர திசையில் பலனை தட்டாமல் தரும் , முக்கியமாக நிர்வாக துறையில்  சிறந்து விளங்கும் தன்மை நிச்சயம் உண்டு . முயற்சிக்கவும் வாழ்த்துக்கள் .

தாங்கள் தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்து உள்ளீர்கள் ,வெளிநாடுகளில் முன்னேற்றம் என்பது ஒரு 65 சதவிகிதம் மட்டுமே , தாங்கள் தாய்நாடு வாழ்க்கையில் 100 சதவிகித முன்னேற்றத்தை அள்ளித்தரும் என்பதில் சந்தேகம் இல்லை , இதன் பலனை சுக்கிர திசை சூரிய புத்தியில் தாங்கள் காணும் யோகத்தை பெறுவீர்கள் .

ஜாதக ரீதியான தீர்வு மற்றும் பரிகாரம் :

தங்களுடை ஜாதக அமைப்பில் பாதிப்படைந்த வீடுகள் என்று பார்த்தால் 4 ம் வீடு ( தாய் ஸ்தானம் ) 10 வீடு  ( தகப்பன்  ஸ்தானம் ) ஆகியன 12 ம் வீட்டுடன் தொடர்பு , எனவே தங்களது  பெற்றோரை பேணிகாப்பது  மிக முக்கியமான பரிகாரம் ஆகும் , தாங்கள் இவர்கள் அமைப்பில் வரும் துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வது அவசியம் , எதற்காகவும் பெற்றோரிடம் கோபித்து கொள்ள கூடாது , தங்களுக்கு இவர்கள் செய்யும் நன்மைகூட சில நேரங்களில் துன்பம் தரலாம். இருப்பினும் ஏற்றுக்கொள்வது உங்களுக்கு
4 ம் வீடு ( தாய் ஸ்தானம் ) 10 வீடு  ( தகப்பன்  ஸ்தானம் ) ஆகியன 12 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவதிற்கு சரியான பரிகாரம் .

தங்களுடை ஜாதக அமைப்பில் பாதிப்படைந்த மாற்றோர் அமைப்பு 8 ம் வீடு 8 வீட்டுடன் தொடர்பு பெறுவது , அதிக முதலீடு செய்வது , வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது , அதிக கவனம் தேவை இல்லை எனில் பாதிப்படைய வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும் , மற்றவரை நம்பி அதிக தொகையை கொடுப்பது அதிக துன்பத்தை தரும் , எந்த ஒரு விஷயத்தையும் அதிகம் யோசனை செய்து செய்வது நலம் தரும் இல்லை எனில் அதன் வழியில் அதிக துன்பமே ஏற்ப்படும் .

பரிகாரம்

தினமும் சூர்யா நமஸ்காரம் செய்வது அவசியம் ,

அதிர்ஷ்ட ரத்தினங்கள் மீது நம்பிக்கை இருப்பின் , அலைபேசியில் தொடர்புகொண்டு தங்களுக்கு ஏற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை தெரிந்து கொண்டு முறைப்படி  சுத்தி செய்து அணிந்து கொள்ளுங்கள் , சுய ஜாதகத்திற்கு உட்பட்டு அனைத்து யோகங்களையும் பெறுங்கள் .

வேறு கேள்விகள் இருப்பின் மின்னஞ்சலில் தெரிவியுங்கள் .

வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக