திங்கள், 25 ஜூன், 2012

ராகு கேது எனும் சாயா கிரகங்களின் சிறப்பு !



நவக்கிரகங்களில் சாயாகிரகம் என்று போற்றப்படும் ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு தன்மை உண்டு , ஒருவரது சுய ஜாதக அமைப்பில் லக்கினம் முதற்கொண்டு 12 பாவகங்களில் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் அந்தபாவகத்திர்க்கு உண்டான பலனை முழுவதும் தான்  மட்டுமே உரிமை எடுத்து கொண்டு  செய்யும் என்பதே அதன் சிறப்பு தன்மை , இதில் அவரவர் வினை பதிவிற்கு ஏற்றார் போல் நன்மை தீமை பலனை செய்யும் .

ஒருவரது
ஜாதக அமைப்பில் சாயா கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்தால் தரும் பலன்கள் :

ராகு
கேது சுய ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் அமரும்பொழுது ஜாதகருக்கு முதலில் நல்லவர்கள் சேர்க்கை ஏற்ப்படும் , ராகு கேது கிரகங்களின் அமைப்பில் நன்மையான பலன்களை அனுபவிக்கும் நிலையில் உள்ள ஜாதகர்களுக்கு  எங்கு சென்றாலும் , எந்த சூழ்நிலையிலும் நல்ல மனிதர்கள் சேர்க்கை , செல்வந்தர்களின் அறிமுகம் , சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவு . அவர்களால் ஜாதகர் அனுகூலமான பலன்களை பெரும் வாய்ப்பு , அதனால் ஏற்ப்படும் முன்னேற்றம் என நன்மையான பலன்களை இந்த சாயா கிரகங்கள் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , மேலும் ஒரு ஜாதகருக்கு நல்லவர்கள் சேர்க்கை ஏற்ப்பட வேண்டும் எனில் அவருக்கு நிச்சயம் ராகு கேது நல்ல நிலையில் இருப்பது அவசியம் .

சாயா
கிரகங்கள் நல்ல நிலையில் அமைந்த ஜாதகருக்கு எந்த விதத்திலும் மற்றவர்களால் தீமையான பலன்கள் நடக்க வாய்ப்பு சிறிதும் இல்லை என்பது உண்மை , ஜாதகர் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றம் மட்டும் காண்பார் என்பது நிச்சயம்  , ஜாதகருக்கு மனதில் நினைக்கும் எண்ணங்கள் எல்லாம் நடைமுறையில் நடப்பதை காண முடியும் . தான் போடும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெரும் , அதன் வழி ஆதாயம் ஜாதகர் நிச்சயம் பெறுவார்முக்கியமாக அரசியலில் , கலை துறையில் , தொழில் துறையில் சிறந்து விளங்க வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் ராகு கேது 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பது அவசியம்( ராகு கேது எந்த வீடுகளில் இருந்தாலும் சரி ) .

ஜாதகரின்
உடல் நிலையை ஆளுமை செய்வதில் இந்த சாயா கிரகங்களுக்கு முக்கிய பங்கு நிச்சயம் உண்டு , மிகசிறந்த யோக கலையில் சிறந்து விளங்கவும் , தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கவும் , சிறந்த விளையாட்டு வீரராக திகழவும் , சுய ஜாதகத்தில் ராகு கேது 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே முடியும் .ஜாதகருடைய நண்பர்களை நிர்ணயம் செய்வது இந்த ராகு கேது கிரகங்களே , சாயகிரகங்களின் அருள் இல்லை எனில் நிச்சயம் நமக்கு நல்ல நட்புறவு கொண்ட நண்பர்கள் இல்லை என்பது மறுக்க முடியாத
உண்மை
.

சாயா
கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்த ஜாதகருக்கு இயற்கையாகவே கருமைய்யம் மிகவும் பரிசுத்தமாக காணப்படும் , இதனால் ஜாதகருக்கு விளைவு அறிந்து செயல் படும் தன்மை  சிறிய வயதில் இருந்தே துவங்கி விடும்  என்பதில் ஆச்சரியம் இல்லை , ஜாதகருக்கு தன்னிலை விளக்கம் சரியான பருவம் வந்தவுடன் கிடைத்து விடும் , இதன்காரணமாக  சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் , பரந்த மனப்பான்மை , பொது நலம் , சேவை செய்யும் குணம் , எந்த சூழ்நிலையிலும் கடமை தவறாத குணம் , தம்மை சார்ந்தவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கு ஆற்றல் என  எல்லா பிறப்பிலே அமைந்து விடுகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை .

எனவே
சாயா கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் பல நன்மைகளை நிச்சயம்  வாரி வழங்கும் .


ஒருவரது
ஜாதக அமைப்பில் சாயா கிரகங்கள் தீமை செய்யும் அமைப்பில் அமர்ந்தால்  தரும் பலன்கள் :

ஜாதகருக்கு
சுயமாக வாழ்க்கை வாழ முடியாமல் மற்றவரை சார்ந்து வாழ வேண்டி வரும் , தன்னம்பிக்கை குறையும் , சுய முயற்சிகளில் அதிக தடைகளை சந்திக்க வேண்டி வரும் , ஆண்  மற்றும் பெண் நண்பர்களால் அதிக துன்பம் ஏற்ப்படும் , நண்பர்கள் வழியே நன்மையான பலனை ஜாதகர் எந்த காலத்திலும் எதிர்பார்க்க இயலாது , நண்பர்கள் காட்டும் வழியில் ஜாதகர் சென்றால் நிச்சயம் வாழ்க்கையில் மனநிம்மதி என்பதே இருக்காது , உதவி செய்ய யாரும் முன் வர மாட்டார்கள், ஜாதகரிடம் இருந்து எல்லா வற்றையும் அகபறிக்கவே சுற்றி உள்ளவர்கள் திட்டம் திட்டுவார்கள் , இறை நிலையும் ஜாதகருக்கு உதவி செய்யாது , குறிப்பாக வாழ்க்கையில் நல்ல வழிகாட்டி கிடைப்பது அரிது .

அடிப்படை
கல்வியை தாண்டுவதே ஜாதகருக்கு பெரும் பாடாக இருக்கும், இளம் வயதிலேயே உலகில் உள்ள அனைத்து தீய பழக்க வழக்கங்களும் ஜாதாகருக்கு அறிமுகமாகி விடும் , சற்றே கவனமாக இல்லை எனில் இந்த பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகும் சூழ்நிலை ஏற்ப்படும் , ஜாதகர் என்னும் எண்ணங்கள் அனைத்தும் எதிர்மறை எண்ணங்களாகவே இருக்கும் , குறுக்கு வழியில் புத்தி செயல் பட துவங்கி விடும் . ஜாதகர் தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் உதறி தள்ளும் நிலை ஏற்ப்படும் , அனைவரிடமும் பகைமை பாராட்டும் நிலைக்கு தள்ளபடுவார் .

இவர்களை
எளிதாக மற்றவர்கள் தமது சுய லாபத்திற்காக பயன் படுத்தி கொள்ளவார்கள் , அதனால் ஜாதகருக்கு எவ்வித பயனும் இருக்காது மற்றவர்கள் சொல்வதை ஆராய்ந்து பார்க்காமல் அவர்களுக்கு அடிமை ஆகும் சூழ்நிலை ஏற்ப்படும் , தனக்கு தேவை எனில் சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட தயங்க மாட்டார்கள் மேலும் இவர்களின் செயல்கள் அனைத்தும்  செய்து முடித்த பிறகு வருத்த படும் அளவிலேயே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை , இந்த அமைப்பை பெற்ற ஜாதகத்தை கொண்ட ஆண் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் சிறப்பு கவனம் எடுத்து வளர்த்துவது முக்கிய கடமையாகும் .

மேலும்  மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் இல்லற வாழ்க்கை  ஜாதகருக்கு அமைந்து விடும். மனைவி மற்றும் உறவினர் ,நண்பர்கள் என்ற வகையில் ஜாதகர் அதிக துன்பங்களையே எதிர்கொள்ள வேண்டி வரும் , இப்படிபட்ட அமைப்பை கொண்ட ஜாதகர்கள் ஒரு விஷயத்தை செய்யுமுன் பலமுறை சிந்தனை செய்து செயலாற்றுவது சிறிது நன்மையான பலனைத்தரும்  .

இந்த
தீமையான பலன்களில் இருந்து ஜாதகர் விடுபட வேண்டும் எனில் அவர் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் , ஒரு சிறந்த ஆன்மீக ஆசானை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் முறையாக தீட்சை பெறுவது மட்டுமே நல்ல வாழ்க்கையை அமைத்து தரும் . மேலும் கருமையம் தூய்மை பெற்று சாயா கிரகங்களின் பாதிப்பிலிருந்து நிச்சயம் 100 சதவிகிதம் ஜாதகர் விடு பட வழி வகுக்கும் ஆனால் இது எளிதில் நடக்கும் விஷயம் அல்ல ஜாதகர் பல சோதனைகளை கடந்து வர  வேண்டி இருக்கும் .

இந்த
அமைப்பை பெற்ற ஜாதகர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தால் நிச்சயம் இவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் அது " தேடுதல் " இதனால் ஜாதகருக்கு நல்ல வழி கிடைக்கும் என்பது உறுதி .

வாழ்க வளமுடன்
ஜோதிடன்
வர்ஷன்
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக