வெள்ளி, 15 ஜூன், 2012

ஜோதிட ஆலோசனை! முன்னேற்றமான எதிர்காலம் !



வணக்கம் அன்பு நண்பரே !

தங்களுடைய ஜாதக அமைப்பில், தற்பொழுது நடக்கும் குருதிசையில் கேது புத்தி( 02 /05 /2012 முதல் 08 /04 /2013 வரை) , நடக்க இருக்கும் சுக்கிரன் புத்தி( 08 /04 /2013 முதல் 08 /12 /2015 வரை) ஆகியன 2 ,4 ,8 ,10 வீடுகள் 10 வீட்டின்  பலனை மட்டுமே செய்கிறது.


இது மிகவும் நன்மை தரும் அமைப்பு , இந்த காலங்களில் தாங்கள் குடும்பம் மற்றும் வருவாய் , சொத்து சுகம் மற்றும் சொந்த வீடு , வண்டி வாகன யோகம் , நிறைவான வாழ்க்கை துணையை பெரும் யோகம் ,திடீர் என தன யோகம் , செய்யும் தொழில் முன்னேற்றம் அல்லது பணியில் பதவி உயர்வு , வெளிநாடு செல்லும் யோகம் , ஜீவன வழியில் சகல முன்னேற்றங்களையும் பெருவதற்குண்டன சரியான  கால கட்டம் இதுவாகும் .

வடக்கு திசை அல்லது மேற்கு திசை அமைப்பில் வாயிற்படி அமைந்த வீடுகளில் குடியிருந்தால் ஜாதகருக்கு மேற்சொன்ன அமைப்புகளில் இருந்து 100 சதவிகித நன்மையான பலன்களை தடையின்றி தரும், விழிப்புடன் இருந்து வாழ்க்கையில் சகல நலன்களையும் வளமான வாழ்க்கையையும் பெருங்கள் வாழ்த்துகள் . இனி வரும் காலங்களில் திருமண வாழ்க்கையும் மிகவும் சிறப்பாக அமையும், நல்ல குழந்தை பேரு கிடைக்கும் இதன் மூலம் தங்களின் வாழ்க்கை சகல நலன்களையும் அடைவீர்கள் .

தங்களுடைய ஜாதக அமைப்பில் , பாதிக்க பட்டுள்ள வீடுகள் என்ற அமைப்பை 6 ,7 ,11 ,12 ம் வீடுகள் முறையே பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம், பொதுவாகவே தாங்கள் 6 ,7 ,11 ,12 ம் வீடுகள் அமைப்பில் இருந்து மட்டுமே அதிக சிரமங்களை அனுபவிக்க வேண்டி வரும் , நடக்கும் திசையில் இந்த வீடுகளின் பலன் நடை பெரும் பொழுது மட்டும்.

மேலும் மற்றவரிடம் கடன் பெரும் பொழுதும் , கொடுக்கும் பொழுதும் அதிக கவனத்துடன் இருப்பது நலம் தரும் , முடிந்தால் கடன் பெறாமலே வாழ்க்கையை நடத்துவது நலம் தரும் , சேமிக்கும் பழக்கத்தை இப்பொழுதிலிருந்தே கடை பிடிப்பது மிகுந்த நலம் பயக்கும் , மன நிம்மதிக்காக தினமும் அல்லது மாதம் ஒரு முறை ஒதுக்குவது அதிக நலம் தரும் , முக்கியமாக நண்பர்கள் சேர்க்கை தங்களை மிகவும் துன்பத்தை தரும் வகையில் அமைவதால் இடம் அறிந்து சேர்க்கை சேர்வது நலம் தரும் , கடின உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை  தாங்கள் அடைவது உறுதி.

குல தெய்வ அருள் பரிபூரணமாக இருப்பதால் , எந்த பிரச்சனைக்கும் விரைவான தீர்வு தங்களுக்கு கிடைக்கும் , எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் நல்ல வெற்றிகளை வாரி வழங்கும் , சரியான உணவு பழக்க வழக்கத்தை கடைபிடிப்பது அவசியம் மேலும் உடல் நிலையில் ஏற்ப்படும்  பாதிப்புக்களை உதாசீனம் செய்வது அதிக துன்பத்தை தரும் , எனவே உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்ட முடியும் .

இறை அருள் சகல நலன்களையும் தங்களுக்கு வழங்கட்டும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக