சனி, 9 ஜூன், 2012

சிம்ம லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும் பொழுது தரும் பலன்கள் !



சிம்ம லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும் பொழுது தரும் பலன்கள்:

ஜாதகருக்கு மிகசிறந்த யோகங்களை தரும் அமைப்பு , வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் பெறுவார் , ஜாதகருக்கு நண்பர்கள் வட்டம் ரொம்ப அதிகம் , மக்கள் ஆதரவு வாழ்க்கையின் இறுதி வரை உண்டு , பொது வாழ்க்கையில் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை தரும் அமைப்பு .

 அடிப்படையில் நல்ல வளரும் சூழ்நிலையை கொண்டிருப்பார் , நிறைவான கல்வி அல்லது உலக அனுபவத்தை கொண்டிருக்கும் தன்மை உள்ளவர் , தான் கற்ற கல்வியினை மற்றவருக்கு பயன்படும் விதத்தில் செயல் ஆற்றும் திறன் கொண்டவர் , ஜாதகருக்கு சிந்தனை ஆற்றல் மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கும் , எவ்வித பிரச்சனைக்கும் தனது அறிவாற்றால் மூலம் தீர்வு சொல்லும் தன்மை பெற்றவர்கள் .

ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் இருந்து 100 சதவிகித நன்மையை மட்டுமே பெறுவார் , கால புருஷ தத்துவத்திற்கு ஐந்தாம் வீடாக வருவதால் , இறைஅருள் ஜாதகருக்கு எப்பொழுதும் துணை நிற்கும் , சக்தி வழிபாட்டில் மிகசிறப்பான முன்னேற்றத்தை ஜாதகர் பெறுவார் , குல தெய்வத்தின் பரிபூரண அருள் எப்பொழுதும் உண்டு , மிகவேகமான செயல் திறன் கொண்டவர்கள் , பெரியோர் ஆதரவும் , ஆன்மீக வாதிகளின் அருளும் , சித்தர்களின் அருளாசியும் நிரம்ப பெரும் யோகம் பெற்றவர்கள்.


 நல்ல கவர்ச்சியான உடல் அமைப்பு கொண்டவர்கள், எதிர் பாலினம் கொண்டவர்களால் அதிகம் விரும்பப்படும் யோகம் பெற்றவர்கள் , திடமான உடல் அமைப்பு இறுதிவரை வாய்த்திருக்கும் , உடல் நிலையை பற்றி ஜாதகர் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை , எவ்வித உடல் தொந்தரவு வந்தாலும் விரைவில் குணமடையும் தெய்வீக ஆற்றல் கொண்டவர்கள்.

இவர்கள் அனைவரும் மக்கள் ஆதரவு பெற்ற தொழில்களில் மிகசிறப்பான முன்னேற்றம் பெறுவார்கள் , முக்கியமாக மருத்துவம் , வழக்கறிஞர் , பொறியாளர் , கலைத்துறையில் இசை  , நடிப்பு , நாட்டிய , ஆகியவைகள் . ஜோதிட கலையில் சிறந்து விளங்கும் தன்மை இந்த அமைப்பை கொண்டவர்களுக்கு இயற்கையாக அமையும்.


 மன நிலை மருத்துவராக சிறப்பாக செயலாற்றும் திறமை கொண்டவர்கள் , மற்றவர் மனதில் உள்ள விஷங்களை கூட உணரும் தெய்வீக ஆற்றல் கொண்டவர்கள் , இவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் மக்களுக்கு நன்மையான பலனை தந்து கொண்டே இருக்கும் , உலகின் தலை சிறந்த மருத்துவராக வேண்டும் எனில் ஜாதகத்தில் இந்த அமைப்பை பெற்று இருக்க வேண்டும் .

லக்கினத்தில் அமரும் ராகு ஜாதகருக்கு நல்ல உடல் அமைப்பையும் , நினைத்ததை சாதிக்கும் தன்மையை தருவார் , உலகின் மிகசிறந்த பெரிய  மனிதர்கள் தொடர்பை நிச்சயம் ஏற்ப்படுத்தும் , வாழ்க்கையில் விரைவான அதிரடி முன்னேற்றங்களை தரும் அமைப்பை பெற்ற ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் , நீண்ட ஆயுளை  தரும் இங்கு அமரும் ராகு பகவான் ஆனால் உடலில் தழும்பு வடுக்களை நிச்சயம் தரும் முக்கியமாக தலையில் அல்லது முகத்தில் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் .


ஜாதகர் சிறந்த தொழில் அமைப்பு , சிறந்த மக்கள் ஆதரவு , நல்ல நண்பர்கள் ஆதரவு , சிறந்த மனைவியை பெரும் யோகம் அவர்களால் சிறப்பான முன்னேற்றம் என ஜாதகர் மிகவும் சிறப்பான முன்னேற்றங்களை மட்டுமே பெறுவார் , தாய் மகலக்ஷ்மியின் பரிபூரண ஆதரவை பெற்றவர்கள் சிறு சோம்பேறி தனம் கொண்டவர்கள் , வேலை என்று வந்துவிட்டால் உறக்கம் பார்க்காமல் வேலையை முடிக்கும் திறமை கொண்டவர்கள் , நிர்வாக துறையில் இவர்களின் பங்களிப்பு அதிகம் காணப்படும் , இவர்களுக்கு என்று தனி வழியை கடை பிடிக்கும் தனித்தன்மை வாய்ந்தவர்கள், மிகவும் சிறப்பான யோக அமைப்பை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

லக்கினத்தில் அமரும் கேது சிறப்பான அறிவாற்றலை தந்து விடும் , இவர்களின் அறிவாற்றலுக்கு நிகர் எதுவுமே இல்லை , வாழ்க்கையின் தத்துவத்தை சிறுவயதிலேயே உணரும் யோகம் கொண்டவர்கள் , நல்ல ஆன்மீக வாதிகளின் தரிஷனம் கிடைக்க பெரும் யோகம் கொண்டவர்கள் , எதற்காகவும் கவலை கொள்ளாதவர்கள் , மன கவலை கொண்டவர்களையும் புத்துணர்ச்சி பெறவைக்கும் பிரமிக்க தக்க பேச்சாற்றல் கொண்டவர்கள் , நேர்மையான குணமும் ,சுய கட்டுப்பாடும் கொண்டவர்கள் .


 என்ன இவர்களது அப்பாவித்தனமான குணத்தை மக்கள் நன்றாக பயன்படுத்தி கொள்வார்கள்.  இருப்பினும் அதை பற்றி கவலை கொள்ளாதவர்கள் , கூட்டு அமைப்பு , கூட்டு தொழில்களில் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை காண்பவர்கள் , மக்கள் செல்வாக்கினை எப்பொழுதும் கொண்டுள்ளவர்கள் , இவர்களின் பேச்சுக்கு மக்களிடம் எப்பொழுதும் நல்ல மதிப்பு , மரியாதை இருக்கும் , தன்னம்பிக்கை , வீரம் , பேராண்மை குணம் பெற்றவர்கள் , அறிவின் வழியில் சகல யோகங்களையும் பெரும் அமைப்பை பெற்றவர்கள் .

சிம்ம லக்கினத்தில் பிறந்து லக்கினத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமர்ந்தால் ஜாதகருக்கு  மிகவும் நல்ல யோக பலனையே தரும் என்பதில் எவ்வித சந்தேகமும்  இல்லை, இந்த அமைப்பை பெற்றவர்கள் ஒருநல்ல ஆன்மீக வாதியாக வாழ்க்கையின் இறுதி காலங்களில் இருப்பார்கள். இவர்களால் சமுதாயம் நல்ல முன்னேற்றமும் நல்லறிவையும் பெரும் என்பதில் ஆச்சரியமில்லை , சிம்மலக்கினம் கொண்டவர்கள் இதை உணருவது அவசியம், வாழ்க்கையின் இறுதிகாலங்களில்  இறைநிலையின் திருவடியை அடையும் யோகம் இந்தலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கே அதிகம் உண்டு .
 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
  9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக