செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஜோதிட ஆலோசனை : கேந்திர பாவகங்கள் எனும் 1 , 4 , 7 , 10 வீடுகள், வலிமையாக இருந்தும் யோக வாழ்வினை பெற முடியாத ஜாதக அமைப்பு !?



மேற்கண்ட ஜாதகருக்கு கேந்திர பாவகங்கள் எனும் லக்கினம் , நான்காம் பாவகம், களத்திர பாவகம் , ஜீவன ஸ்தானம் ஆகியன , மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கிறது , குறிப்பாக 1) லக்கினம்  களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , 2 )  சுக ஸ்தானம் நான்காம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , 3 ) களத்திர பாவகம் ஏழாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , 4 ) ஜீவன ஸ்தானம் பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதக அமைப்பில் மிகவும் சிறப்பான நிலையை காட்டுகிறது .

மேலும் லக்கினம் சர கடக ( நீர் ) ராசியுடன் சம்பந்தம் பெறுவதும் , சுக ஸ்தானம் சர மேஷ ( நெருப்பு ) ராசியுடன் சம்பந்தம் பெறுவதும் , களத்திர ஸ்தானம் சர கடக ( நீர் ) ராசியுடன் சம்பந்தம் பெறுவதும் , ஜீவன ஸ்தானம் சர துலாம் ( காற்று ) ராசியுடன் சம்பந்தம் பெறுவதும் , 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , மேலும் உண்மையில் இதை போன்ற யோக ஜாதக அமைப்பை காணுவது அரிதிலும் அரிது , ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகங்களும் பரிபூரணமாக அமையப்பெற்ற ஜாதகம் இதுவென்று நிச்சயம் சொல்ல முடியும் , மேலும் அடிப்படை கல்வி , உயர்கல்வி , தொழில் , திருமணம் , வீடு, வண்டிவாகன யோகம் , சகல வசதி வாய்ப்புகள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டிய ஜாதகரின் தற்ப்பொழுதைய நிலை நேருக்கு மாறாக இருக்கிறது , ஜாதகத்தில் இருக்கும் யோக நிலையை சிறிதுகூட ஜாதகரால் இன்னும் அனுபவிக்க முடியவில்லை, இதற்க்கு என்ன காரணம் என்று இந்த பதிவில் காணலாம் , மேலும் ஒரு யோக ஜாதக அமைப்பை சார்ந்தவருக்கு , நடை முறையில் யோகங்கள் பலன் தராமல் இருப்பதற்கு காரணம் என்னவென்பதையும் காணலாம் .

ஜாதகத்தில் சுப யோகம் தடைபட காரணம் :

மேற்கண்ட ஜாதகருக்கு கேந்திர பாவகங்கள் மிகசிறப்பான நிலையில் இருந்தாலும் , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , 200 மடங்கு தீமையை செய்யும் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருப்பதும் , பாதக ஸ்தானத்திற்கு சம்பந்தம் பெற்ற கிழக்கு திசை வாயிற்படி அமைந்த வீட்டில் ஜீவனம் செய்வதுமே, கேந்திர பாவகங்களின் யோக பலன்களை அனுபவிக்க இயலாத அமைப்பிற்கும்,  கேந்திர பாவக யோக நிலை பலன் தடைக்கும்  முக்கிய காரணம் , இதன் காரணமாக ஜாதகத்தில் கேந்திர பாவக அமைப்பில் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகள் எதுவுமே இதுவரை ஜாதகருக்கு கிடைக்கவில்லை , எடுத்துகாட்டாக கல்வியில் சிறந்து விளங்க வேண்டிய ஜாதகருக்கு , அடிப்படை கல்வியிலேயே தடை ஏற்ப்பட்டது . சிறப்பான ஜீவனம் அமைய வேண்டியது , இதுவரை நிலையான தொழில் இல்லை , சரியான காலத்தில் திருமணம் அமைய வேண்டியது , ஜாதகருக்கு 3o வருடங்கள் ஆகியும் இன்னும் திருமணம் அமைய வில்லை , பல தொழில் செய்ய வேண்டிய ஜாதக அமைப்பு இதுவரை அடிப்படை வருவாயினை பெறுவதற்கே வாழ்க்கையில்  போராடிக்கொண்டு இருக்கிறார் .


ஜாதகத்தில் இருக்கும் யோகங்கள் அனைத்தையும் அனுபவிக்க வழி :

நிச்சயம் ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருக்க கூடாது , தனது பூர்வீகத்தை விட்டு 100 km தொலைவுக்கு அப்பால் சென்றுவிடுவது சாலசிறந்தது , பூர்விகம் பாதிக்க பட்டாலே அதிக பாதிப்புகளை ஜாதகர் அனுபவிக்க வேண்டும் , இந்த ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது மிகவும் சிரமத்தின் பேரில் வாழ்க்கையை நடத்தும் சூழ்நிலையை தந்துவிடும்,  மேலும் பூர்விகத்தில் குடியிருந்தால் ஜாதகரின் கதி அதே கதிதான் , எனவே ஜாதகரை பூர்வீகத்தை விட்டு அதிக  தொலைவில் சென்று வாழ்க்கை நடத்த சொல்லி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தோம் , இதற்க்கு சரியான வழி இது ஒன்றே . பூர்வீகத்தை விட்டு ஜாதகர் வெளியே வந்தாலே ஜாதகரின் வாழ்க்கை மிகப்பெரிய வெற்றியை பெரும் வாழ்வாக நிச்சயம் மாறிவிடும் , மேற்கண்ட கேந்திர பாவகங்கள் யோக  பலன்களை 100 சதவிகிதம் தடை இன்றி தர ஆரம்பித்து விடும் , மேலும்  ஜாதகருக்கு ஏற்ற வடக்கு திசை வாயிர்ப்படி கொண்ட வீடாக அமைந்து விட்டால்,  நிச்சயம் முழு யோகமும்,  அதிக நன்மைகளும்  கேந்திர பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

வாழ்க்கையில் முன்னேற்றம் பெற இயலாதவர்கள் , ஜாதக ரீதியாக யோகம் இருந்தும் ,யோக நிலை பாதிக்கபட்டவர்கள் , சரியான ஜோதிட ஆலோசனை மூலம் ,  தனது ஜாதக நிலையை தெளிவாக தெரிந்துகொண்டு சுய  ஜாதக அமைப்பின் படி , வாழ்க்கையில் முன்னேற்றம் பெற சரியான வழி முறையை கடை பிடித்து,   வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக