வெள்ளி, 14 செப்டம்பர், 2012

நடப்பு திசா புத்தியில் கேட்சர கிரகங்களின் சம்பந்தமும் , அவை தரும் நன்மை தீமை பலன்களும் !



பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தை கணித்து பலன் சொல்லும்பொழுது , ஜோதிடர்கள் தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி சுய ஜாதகத்திற்கு ( லக்கினம் ) நன்மை செய்கிறதா ? தீமையான பலனை தருகிறதா ?  சந்திர ராசியை அடிப்படையாக வைத்து  சனி பகவன் , குரு பகவான் , ராகு கேது கிரகங்கள் கேட்சர நிலையில் ( ராசிக்கு ) நன்மை செய்கிறதா ? தீமையான பலனை தருகிறதா ? என்று ஜோதிட கணிப்பு செய்து (கணிதம் அல்ல ) பலன் சொல்கின்றனர்இது எந்த அளவிற்கு நடைமுறையில் ஒத்து வருகிறது , மேற்கண்ட முறையில் பலன் சொல்லும்பொழுது , ஜோதிடரை நம்பிவரும் நபர்களுக்கு நன்மை மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற கூடுமா ? என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் .

ஒருவருடைய ஜாதகத்தில் பலன் நிர்ணயம் செய்யும் பொழுது , ஜோதிடர்கள் பெரும்பாலும் லக்கினம் , நடப்பு திசை மற்றும் புத்தி , சந்திரனுக்கு கோட்சார கிரகங்களின் நிலை , இவற்றை அடிப்படையாக வைத்து பலன் சொல்லும் பொழுது நிச்சயம் அது சரியான பலனாக இருக்க வாய்ப்பே இல்லை , காரணம் ஒருவருடைய ஜாதக அமைப்பில் குறிப்பிட்ட திசை எந்த பாவக பலனை தருகிறது என்பதை தெரிந்தால் மட்டுமே சரியான பலனை சம்பந்த பட்ட ஜாதகருக்கு சரியாக சொல்ல முடியும் , மேலும் சம்பந்த பட்ட பாவகம் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறதா ? பாதிக்க பட்டு இருக்கிறதா ? அந்த பாவகத்துடன் சம்பந்தம் பெரும் கோட்சார கிரகங்கள் , நன்மையை செய்கிறதா , தீமையை செய்கிறதா என்பதை சரியாக கணிதம் செய்ய தெரிந்து இருந்தால் மட்டுமே , பலன் கேட்க வந்த நபருக்கு தெளிவான , சரியான பலனை சொல்ல முடியும்.

எடுத்து காட்டாக மேற்கண்ட ஜாதகத்தை எடுத்து கொண்டு தற்பொழுது நடை முறையில் உள்ள பலனை கணாலாம் மேலும் கேட்சர கிரகங்களின் பங்களிப்பு எந்த மாதிரியான பலனை தருகிறது என்பதை பற்றியும் பார்ப்போம் . 

இந்த தனுசு இலக்கின ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் குரு திசை ( 25 /02 /2004 முதல் 25 /02 /2020 வரை ) 7 ம் பாவகம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று 11 ம் வீட்டின் பலனை தந்துகொண்டு இருக்கிறது , இதில் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் புத்தி ( 07 /01 /2012 முதல் 07 /09 /2014 வரை ) ஜாதகருக்கு 7 ம் பாவகம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று 11 ம் வீட்டின் பலனையே  தந்துகொண்டு இருக்கிறது , ஆக தற்பொழுது நடக்கும் குரு திசை சுக்கிர புத்தி ஜாதகருக்கு 11 ம் வீட்டு பலனை மட்டுமே செய்துகொண்டு இருக்கிறது , அடுத்ததாக இந்த 11 ம் வீடு ஜாதகருக்கு சர துலாம் ராசியில் கற்று தத்துவமாக அமைகிறது , மேலும் லக்கினத்திற்கு லாப ஸ்தானமாக வருகிறது எனவே தற்பொழுது நடக்கும் குரு தசை சுக்கிர புத்தி ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையை தந்துகொண்டு இருக்கிறது , மேலும் இந்த 11 ம் வீட்டுடன் தொடர்பு பெரும் கோட்சார கிரகமான சனிபகவானும் நன்மையே செய்கிறார் , எனவே ஜாதகருக்கு கேட்சார கிரகமும் நன்மையை செய்வதால் சம்பந்தபட்ட 11 ம் வீட்டில் இருந்து ஜாதகருக்கு நன்மை மட்டுமே நடைபெறும் .

 எந்தமாதிரியான பலன் எனில் துலாம் காற்று சர ராசி இந்த ராசியுடன் களத்திர பாவகம் சம்பந்தம் பெற்று பலன் தருகிறது ,களத்த்திர பாவகம் ஒருவருக்கு மக்கள் வழியில் தொடர்புகளையும் , வாழ்க்கை துணை வழி தொடர்புகளையும் , நண்பர்கள் வழி தொடர்புகளையும் தரும் , எனவே ஜாதகருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது , திருமணத்திற்கு முன்னராகவே மக்கள் தொடர்பு உடைய அரசு துறையில் வேலை அமைந்தது , நல்ல நண்பர்களாலும் , உறவுகளாலும் ஜாதகர் அதிக நன்மைகளை பெற்றுகொண்டு இருக்கிறார் , அரசு துறையில் தற்பொழுது சில நாட்களுக்கு முன் பதவி உயர்வினை பெற்றிருக்கிறார் , இதற்க்கு காரணம் தற்பொழுது சனிபகவான் கேட்சர ரீதியாக ௧௧ ம் வீட்டுடன் தொடர்பு பெற்று அந்த வீட்டிற்கு 100 சதவிகிதம் நன்மையை செய்வதே .

மேலும் துலாம் சர காற்று ராசியாக இருப்பதால் பலன்கள் எல்லாம் விரைவாகவும் , உறுதியாகவும் நடை பெறுகிருகிறது, காற்று தத்துவமாக இருப்பதால் ஜாதகரின் அறிவாற்றல் சிறப்பாக செயல் படுகிறது இதானால் ஜாதகர் தனக்கு வரும் ஒவ்வொரு வாய்ப்பினையும் சரியாக பயன் படுத்தி கொண்டு வாழ்க்கையில் 200 சதவிகித வெற்றிகளை பெற்றுகொண்டு இருக்கிறார் .

 ஒருவேளை மேற்கண்ட ஜாதகருக்கு மகர லக்கினமாக அமைந்து ,  7 ம் பாவகம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று  பலனை நடத்தி இருந்தால் ஜாதகர் பாடு பெரும் திண்டாட்டமாக மாறியிருக்கும் , காரணம் சர லக்கினத்திற்கு 11 ம் பாவகம் பாதக ஸ்தானம் ஆகும் , ஒருவருடைய ஜாதகத்தில் நடைபெறும் திசை புத்தி பாதக ஸ்தான பலனை நடத்தினால் ஜாதகர் நிலை மிகவும் மோசமாக மாறிவிடும் , மேலும் கோட்சாரத்தில் சம்பந்தம் பெரும் அனைத்து கிரகங்களும் கடுமையான பாதிப்பை மட்டுமே செய்யும் இதில் மாற்றம் இல்லை .

எனவே ஒருவருடைய ஜாதகத்தில் பலன் நிர்ணயம் செய்யும் பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி எந்த வீட்டின் பலனை தருகிறது , அது நன்மையான பலான ? தீமையான பலனா ? என்று முதலில் நிர்ணயம் செய்ய வேண்டும் , அதன் பிறகு அந்த வீட்டுடன் கோட்சாரத்தில் எந்த கிரகமாவது  சம்பந்தம் பெறுகிறத என்று பார்க்க வேண்டும் , அப்படி கோட்சாரத்தில் ஏதாவது கிரகம் சம்பந்தம் பெற்றால் அது அந்த பாவகத்திர்க்கு நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா என்று காண வேண்டும் , மேற்கண்ட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் செய்தால் ஜாதகருக்கு நிச்சயம் தெளிவான பதிலை நாம் தர முடியும் . 
மேலும் லக்கினத்தை வைத்து பலன் நிர்ணயம் செய்வதே சரியானது , ராசியை வைத்தது பலன் சொல்லுவது ஜாதக பலனை சரியாக சொல்ல உதவி புரியாது , காரணம் சில பேர் ஏழரை சனி , அஷ்டமத்து சனி , ஜென்ம குரு , ராகு கேது என்று பலன் நிர்ணயம் செய்கின்றனர், இதில் மேற்கண்ட கிரகங்கள் ஒருவருடைய சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை எந்த வீடுகளின் பலனை தருகிறதோ அந்த வீட்டுடன் கோட்சார சம்பந்தம் பெற்றால் மட்டுமே பலன் தரும் இல்லை எனில் மேற்கண்ட கிரகங்களை பற்றி நாம் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை , சந்திரனை வைத்து கோட்சார பலனை நிர்ணயம் செய்வது நடை முறையில் நிச்சயம் பலன் தருவதில்லை என்பதே முற்றிலும் உண்மை .


ஜாதக பலன் நிர்ணயம் செய்யும்பொழுது லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் நிர்ணயம் செய்வது 100 சதவிகிதம் சரியான ஜாதக பலனை தரும் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக