வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சுய ஜாதக அமைப்பின் படி தொழில் மற்றும் வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?




ஜீவனம் ஸ்தானம் ஒருவருடைய ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய ஒரு பாவகம் , குறிப்பாக ஒருவருக்கு தொழில் சிறப்பாக அமைவது பற்றி இந்த பாவக அமைப்பை வைத்து மிகவும் தெளிவாக சொல்லி விட முடியும் , ஜாதகர் தனித்து தொழில் செய்வாரா ? கூட்டு தொழிலா ? அல்லது மற்றவரிடம் அடிமை சேவகம் செய்ய வேண்டி வருமா ? அரசு துறையில் பணியாற்றும் யோகம் உண்டா ? வெளிநாடுகளில் பணியாற்றும் யோகம் உண்டா ? 

பாரம்பரியமாக செய்து வரும் தொழில்களில் ஜாதகர் ஜொலிப்பாரா ?  தான் செய்யும் தொழில் மூலம் ஜாதகர் யோக வாழ்க்கை பெரும் அமைப்பு உண்டா ? இல்லை அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை ஏற்படுமா ? ஜீவன வழியில் சொத்து சுக சேர்க்கை உண்டா ? இல்லை சொத்து சுக இழப்பை தருமா ? என்ற கேள்விகளுக்கெல்லாம், ஒரு  ஜாதக அமைப்பில் இந்த ஜீவன பாவகமும் மேலும் சில பாவக அமைப்பை வைத்தும் தெளிவாக கணிதம் செய்து சொல்லிவிட முடியும், மேலும் ஒருவருக்கு அமையும் ஜீவனம் ஜாதகரின் தகப்பனார் செய்த புண்ணியத்தின் அடிப்படியிலேயே கிடைக்க பெறுகிறது .

குறிப்பாக ஒருவரது ஜாதக அமைப்பில் ஜீவன பாவகம் எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது அடிப்படையிலேயே ஜீவன வாழ்க்கைக்கு இன்னல்களை தந்து விட வாய்ப்பு உண்டு , மேலும் ஜீவன ஸ்தானம் 6 , 8 , 12 ம்  வீடுகளுடன் தொடர்பு பெறுவது மிகுந்த தீமையான பலன்களையே வாரி வழங்கும் , இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் அனைவரும் , சுய தொழில் செய்வதை விட்டு விட்டு , மற்றவரிடம் அடிமை தொழில் புரிவது நல்லது , ஒரு வேலை களத்திர பாவகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் கூட்டு தொழில் செய்யலாம் , களத்திர பாவகமும் பதிக்க பட்டிருந்தால் ஜாதகர் ஓரிடத்தில் அடிமை தொழில் செய்வதே சால சிறந்தது .


1 ) ஒருவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் சர ராசிகள் ஆனா மேஷம் , கடகம் , துலாம் , மகர ராசிகளுடன் தொடர்பு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் சுய தொழில் செய்வதில் 200 சதவிகித வெற்றியை வாரி வழங்கும் .

2 ) ஒருவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஸ்திர ராசிகள் ஆனா ரிஷபம் , சிம்மம், விருச்சகம், கும்ப மகர ராசிகளுடன் தொடர்பு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் சுய தொழில் செய்வதில் 100 சதவிகித வெற்றியை வாரி வழங்கும் .

3 ) ஒருவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் உபய  ராசிகள் ஆனா மிதுனம், கன்னி, தனுசு, மீன  ராசிகளுடன் தொடர்பு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் சுய தொழில் செய்வதில் 60 சதவிகித வெற்றியை வாரி வழங்கும் அல்லது அடிமை தொழில் செய்வதில் வெற்றியை தரும் .


மேற்கண்ட அமைப்பில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்றிருந்தால் மட்டுமே ஒரு ஜாதகர் ஜீவன வழியில் யோக வாழ்வினை பெற முடியாது , தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்திகள் , நடை பெற இருக்கும் திசை மற்றும் புத்திகள் ஜீவன ஸ்தான பலனை நடத்தினால் மட்டுமே 100 சதவிகித தொழில் வெற்றியும் , ஜீவன மேன்மையும் ஜாதகர் பெற இயலும் , சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று நடக்கும் திசை மற்றும் புத்திகள் இந்த பாவக பலனை தரவில்லை எனில் நிச்சயம் ஜாதகர் ஜீவன வழியில் யோக  வாழ்க்கையை பெற முடியாது என்பது உறுதி .


எனவே ஒருவர் சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யுமுன் தனது சுய ஜாதக அமைப்பின் படி சம்பந்த பட்ட பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கின்றதா , என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு சரியான தொழிலை தேர்ந்தெடுத்து செய்தால் நிச்சயம் ஜாதகர் தொழில் மேன்மையும் , ஜீவன வழியில் நன்மையையும் பெறுவார் , மாறாக ஜாதக அமைப்பில் ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் இல்லாமலும் , நடப்பு திசை மற்றும் புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக இல்லாத நேரத்தில் துவங்கும் தொழில்கள் யாவும் விரைவில்  மூடு விழ காணும் என்பதில் சந்தேகம் இல்லை .


புதிதாக தொழில் துவங்குபவர் ஜாதக அமைப்பில் தற்பொழுது நடை பெற்று கொண்டு இருக்கும் திசா புத்தியில் ஜீவன ஸ்தானம் வலிமையுடன் இருந்தாலும் ஜாதகர் தான் துவங்கிய தொழில் மிக பெரிய வெற்றியை பெற முடியும் , ஒரு வேலை சுய ஜாதக அமைப்பின் படி ஜீவன ஸ்தானம் பாதிக்க பட்டு இருப்பின் தனது குடும்பத்தில் உள்ள நபர்களின் ஜாதக அமைப்பில் ஜீவான ஸ்தானம் வலிமை பெற்ற ஜாதகரின் பெயரில் தொழில் துவங்கலாம் , இதனால் நிச்சயம் அந்த தொழில் மிக பெரிய வெற்றியை தரும் அல்லது கோட்சார ரீதியாக ஜீவன ஸ்தானம் வலிமையுடன் இருக்கும் பொழுது துவங்கும் தொழில்களும் மிக பெரிய வெற்றியை தரும் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

3 கருத்துகள்:

  1. ஆண் ஜாதகத்தில் சுய தொழில் செய்யும் யோகம் இல்லை. ஆனால் மனைவியின் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் நன்றாக உள்ளது. மனைவியின் பெயரில் தொழில் செய்யலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை தங்களது சுய ஜாதகம் மற்றும் தங்களது வாழ்க்கை துணையின் சுய ஜாதக அமைப்பை வைத்து துல்லியமாக கண்டறிந்து செய்யலாம் , ஜோதிட ஆலோசனை பெற்று நலம் பெறுங்கள் .
      நன்றி

      நீக்கு
  2. i am S.HARIHARASUTHAN B.TECH -IT
    AYYA ENNAKU VELAI KEDIAKKVELLAI EN JATHAGATHIL PROBELM UNDA ENNAKKU KURUNKAL AYYA

    EN VAALKAI ? ERUKKENDRANA

    DOB :8-12-1987



    LAK 1 : SIMMAM LAK
    KANNI 2 : KETU
    THULAM 3 : SEVAI
    VERCHAGAM 4 : SANI,SURIYAN,PUTHAN
    THANNUR 5 : SUKKIRAN
    MAGARAM 6 :......
    KUMBAM 7 :....
    MEENAM 8 : GURU ,RAGU
    MASAM 9 : ...
    RESABAM 10 :....
    METHUNAM 11: MAANTHI
    KADAKAM 12: CHANTHIRAN

    பதிலளிநீக்கு