ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சுய ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்களில் இருந்து, நன்மை பெற ஜாதகர் என்ன செய்ய வேண்டும் ! பாகம் 1





பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் நவக்கிரக அமைப்பால் , லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதிப்படைந்து இருக்கும் எனில் , அந்த  பாவகங்களின் பலன்களை நடப்பு திசை அல்லது எதிர்வரும் திசை தருமாயின் , இதனால் ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து துன்பங்களையும் , கெடுதலான பலன்களையும் அனுபவிக்க வேண்டி வரும் , இதையே பல ஜோதிடர்கள் தோஷம் என்று சொல்கின்றனர் , மேலும் அப்படி வரும் தீமையான பலன்களில் இருந்து ஒரு ஜாதகர் எப்படி தப்பிப்பது , தீமையான பலன்களில் இருந்து விடுபட்டு கர்ம வினை பதிவினை கழித்து கொள்வது , சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து நன்மை பெறுவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம் . அதாவது பரிகாரம் தேடிக்கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம் )

லக்கினம் பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


ஜாதகர் சுயமாக முடிவெடுக்காமல் , குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் , அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற்று செய்வது காரியங்களில் 100 சதவிகித வெற்றியை தரும் , போதை வஸ்துகளின் பக்கம் தலை வைத்து படுக்காமல் இருப்பது நல்லது , உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது மிகுந்த நன்மையை தரும் , மேலும் மனதை அலைய விடாமல் ஒருநிலை படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துகொல்வதும் , சுய கட்டு பாட்டுடன் வாழ்க்கையை நடத்துவதும் , நல்ல பழக்க வழக்கங்களை கடை பிடித்து வாழ்வதும் நிச்சயம் தீமையான பலன்களில் இருந்து காப்பாற்றி , நன்மை தரும் , மேலும் விழிப்புணர்வுடன் இருப்பது ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் .


இரண்டாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


ஜாதகர் அளவறிந்து செலவு செய்வதும் , தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதும் ,வீண் ஆடம்பரங்களை களைந்து எளிமையான வாழ்க்கையை வாழ பழகி கொள்வது அவசியம் , இல்லையெனில் அதிக துன்பம் வந்து சேரும் , மேலும் தாம்பத்திய வாழ்க்கையில் வாழ்க்கை துணையுடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்ய வேண்டும் , வாழ்க்கை துணை தங்களை மனம் நோகும் படி செய்தாலும் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மை செய்து வாழ்க்கை நடத்த வேண்டும் , குறிப்பாக தேவையில்லாமல் பேசகூடாது , இதனால் மன நிம்மதி கெடும் , யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதி காப்பது தங்களுக்கும் நல்லது , தங்களை சார்ந்தவருக்கும் நல்லது .


மூன்றாம்  பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


சகோதர வழயில் இருந்து வரும் இன்னல்களையும் , துன்பங்களையும் ஏற்றுகொள்வது ஜாதகரீதியாக மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக எடுக்கும் முயற்ச்சிகளில் சரியாக கவனம் செலுத்துவது குறிப்பிட்ட காரியத்தில் வெற்றியை தரும் , தேவையில்லாமல் பெண்களிடம் பேசுவது ஜாதகருக்கு அதிக சிக்கல்களை உருவாக்கும் , மன நிம்மதி கெடும் தேவையில்லாத வீண் முயற்ச்சிகள் எடுத்து தோல்வியை தழுவ வேண்டி வரும் , திட்டமிடாத செயல்களால் நிறைய தோல்விகளை சந்திக்க வேண்டிவரும் , மேலும் சரியான உண்மை  தகவல்களை ஜாதகர் புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு ஆட்ப்படலாம் , இதனால் தவறான முடிவு அவசரப்பட்டு எடுத்து சிக்கல்களை உருவாக்கி கொள்ள கூடும் எனவே எதிலும் நிதான போக்கை கடை பிடிப்பது அவசியம் , பொறுமையுடன் இருப்பது சகல நலன்களையும் தரும் .

நான்காம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் குடியிருக்கும் வீடு தனக்கு உகந்த அமைப்பில் இருக்கிறதா என்று சரியான ஜோதிடரின் மூலம் ஆலோசனை பெற்று , தனக்கு உகந்த வாயிர்ப்படி அமைந்த வீடுகளில் இருப்பது சகல நலன்களையும் தரும் , தனது பெயரில் , வீடு , வண்டி , வாகனம் ஆகியவற்றை வைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது , தனது தாய்க்கு ஏதாவது உடல் நிலை பிரச்சனை ஏற்ப்பட்டால் உடனடியாக ஓடி சென்று கவனித்துகொள்வது நான்காம் வீட்டு பாதிப்பான பலனில் இருந்து காப்பாற்றும் , மேலும் வாகனங்களில் செல்லும்பொழுது அதிக கவனமுடன் வாகனத்தை இயக்குவது நலம் தரும் , அல்லது வாகன ஓட்டுனரை பணிக்கு நியமித்து கொள்வது சால சிறந்தது , மற்றவரிடம் பழகும் பொழுது கோப உணர்வை காட்டாமல் , அன்பாக பேசுவது நலம் தரும் .

ஐந்தாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் தனது பூர்வீகம் எதுவோ அந்த இடத்தை விட்டு வெகு தொலைவில் சென்று ஜீவனம் செய்வது மிகுந்த நன்மை தரும் , ஐந்தாம் பாவகம் பாதிக்க பட்டால் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் செல்வது ஒன்ற சரியான தீர்வாக இருக்க முடியும் , மேலும் தனது குழந்தைகளால் வரும் இன்னல்களை ஜாதகர் ஏற்றுக்கொள்வதும் , முறையாக குலதெய்வ வழிபாட்டினை மேற்க்கொல்லுவதும் நிச்சயம் இந்த பாவக வழியில் இருந்து அதிக நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக அமாவசை தினங்களில் குலதெய்வ கோவில்களுக்கு சென்று முன் பின் தெரியாத மக்களுக்கு அண்ண தானம் செய்து வழிபடும் பொழுது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து நிச்சயம் நன்மை தரும் , இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் விரைவில் வலிமை பெரும் .

ஆறாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் யாரிடமும் தேவையின்றி கடன் வாங்காமல் , கொடுக்காமல் இருப்பது மிகுந்த நன்மை தரும் , உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துவது பெரிய உடல் நிலை பாதிப்பில் இருந்து காப்பாற்றும் , இந்த கால கட்டங்களில் சிறு முதலீடு செய்வது நிச்சயம் இழப்பையே தரும் , மன நலம் கெடும் , இந்த காலகட்டங்களில் ஜாதகர் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்ப்படாமல் இருப்பது நன்மை . இல்லையெனில் மீள தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும் , யாவரிடமும் பகைமை பாராட்டாமல் சுகுமுமான போக்கை கடைபிடிப்பது சால சிறந்தது , மேலும் மற்றவருக்கு ஜாமீன் ஏற்காமல் இருந்தால் ஜாதகரின் பெயருக்கு எவ்வித களங்கமும் வர வாய்ப்பிருக்காது .




வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696


1 கருத்து:

  1. அய்யா பார்வதி பிள்ளையின் அருளால் நீரும் உம் குடும்பமும் நூறு வருடம் நல் வாழ்வு வாழ்வீர்களாக .................அய்யா இதன் இரண்டாவது பாகத்தை தயவு செய்து எழுதவும்

    பதிலளிநீக்கு