புதன், 8 அக்டோபர், 2014

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - மேஷ லக்கினம் பாகம் 3




 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷ ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று அமரும் பொழுது தரும் யோக பலன்களையும், வலிமை அற்று அமரும் பொழுது தரும் அவயோக பலன்களை பற்றியும் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு மகரம் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகமாக அமையும், இந்த மகரம் மேஷ லக்கினதிர்க்கும் சரி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் சரி 10ம் வீடாகவே அமைகிறது, மேலும் சர மண் தத்துவ அமைப்பில் இயங்குகிறது, இந்த மகரம் மேஷ லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு 6,8,11,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறாமல் இருந்தால் ஜாதகரின் ஜீவன மேன்மை மிகவும் சிறப்பாக இருக்கும் குறிப்பாக பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது மிகுந்த யோகத்தை தரும்.


 மேஷ லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவகங்களும், ஜாதகர் பெரும் நன்மைகளும்:

 ஜீவன ஸ்தானம் லக்கினத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

 ஜாதகர் சிறந்த நிர்வாக திறமை கொண்டவராக காணப்படுவார், அரசு மற்றும் காவல் ராணுவ துறையில் கொடிகட்டி பறக்கும் யோகம் உண்டாகும், குறிப்பாக அரசு நிர்வாகம் சார்ந்த உயர் பதவிகளான IAS ,IPS தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியை பெரும் யோகத்தை தரும், அரசு துறை சார்ந்த நிர்வாக அமைப்புகளில் சிறப்பாக பணிபுரியும் தன்மையை தரும், தன்னம்பிக்கையும், சுய கட்டுபாடும் கொண்டவர்களாக இருப்பார்கள், நேர்மைக்கு பெயர்போனவர்கள், ஜீவன ஸ்தானமான மகரம் லக்கினத்துடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகருக்கு அளவில்லா தைரியத்தையும், நேர்மையாக வாழும் யோகத்தையும் தந்துவிடும், இதற்க்கு முக்கிய காரணமாக இந்த மகர ராசிக்கு அதிபதியான சனியும், மேஷ ராசிக்கு அதிபதியான சனியும் காரணமாக இருக்கின்றனர், பொதுவாக செவ்வாய் சனி சேர்க்கை பெறுவதை, பாரம்பரிய ஜோதிடத்தில் தீய பல்னகளை தரும் என்று வர்ணிக்க படுவதுண்டு, இதில் யாருக்கு தீய பலன்களை வழங்கும் என்பதை கருத்தில் கொள்வது நலம், நேர்மைக்கும் உண்மைக்கும் புறம்பாக செயல்படும் அனைவருக்கும், மேற்கண்ட அமைப்பு தீய பலன்களையே வழங்கும், உண்மைக்கும் நேர்மைக்கும் பாடுபடும் அன்பர்களுக்கு மிகுந்த யோகத்தையே வாரி வழங்கும்.

 எனவே சுய ஜாதகத்தில் இந்த சனி செவ்வாய் சேர்க்கை பெற்ற அன்பர்கள் பலர் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பாக செயல் படாத காரணத்தால், மற்றவர்கள் இவர்களை புறக்கணிப்பதும், இவர்கள் வாழ தெரியாதவர்கள் என்று புகார்  சொல்வதும் இயற்கையான ஒன்றே, ஆக மேஷ லக்கினத்தை சார்ந்தவர்கள் ஜீவன ஸ்தானம் லக்கினத்துடன் தொடர்பு பெரும் பொழுது, மிகவும் நேர்மையாகவும், உண்மையாகவும் ஜீவன வாழ்க்கையை மேற்கொள்வார்கள், எனவேதான் இவர்களால் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் அரசியல், காவல் துறை, ராணுவ துறையில் சிறந்த பதவிகளை பெற இயலுகிறது, மேலும் கட்டுமான துறையிலும், பொறியியல் துறையிலும், நிலம் சம்பந்தபட்ட  ரியல் எஸ்டேட் துறையிலும் தன்னிகரற்று விளங்கும் யோகத்தை தருகிறது. ஆக மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு இலக்கின பாவகத்துடன் தொடர்பு பெறுவது 100% யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

 குறிப்பு : ( சுயமாக பெரிய முதலீடுகளை செய்து மிகப்பெரிய தொழில்களை செய்யும் யோகம் பெற்றவர்கள் ) 


 ஜீவன ஸ்தானம் இரண்டாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

 ஜாதகர் சிறந்த கலை நுணுக்கமும், ஆய கலைகள் 64 ல் சிறந்து விளங்கும் தனித்தன்மை பெற்றவராக காணப்படுவார், குறிப்பாக கட்டிட கலையில் சிறந்து விளங்கும்  யோகத்தை தரும் மேலும், பணம் சார்ந்த துறைகளிலும், வணிகம் சார்ந்த துறைகளிலும் சிறந்து விளங்கும் அறிவாற்றலை தரும், ஒரு நாட்டின் பொருளாதரத்தை மிகவும் சிறப்பாக நடத்தி செல்லும் தனி திறன் பெற்றவர்கள் குறிப்பாக சொல்ல வேண்டும் எனில், வியாபாரம், வணிகம், ஏற்றுமதி இறக்குமதி, அந்நிய செலவாணி, வங்கி துறை போன்ற அமைப்புகளில் முக்கிய பங்காற்றும் அன்பர்கள் இவர்களே, மிகசிறந்த சொகுசு வாழ்க்கையை வாழும் யோகத்தை தரும், இதை சார்ந்த தொழில்களில் ஜாதகர் கொடிகட்டி பறக்கும் யோகத்தையும் வாரி வழங்கும், ஜாதக அமைப்பில் 66%  சதவிகித ஜீவன யோகத்தை அனுபவிக்கும் தன்மையை தரும் .

 மனிதன் சொகுசாக வாழும் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை தாயரிக்கும் தொழில், விற்பனை தொழில் மற்றும் சேவை தொழில்களில் மிகப்பெரிய வெற்றிய பெரும் அன்பர்கள் அனைவரும் மேற்கண்ட அமைப்பை சார்ந்தவர்களே! ஜீவன ஸ்தானமான மகரம் இரண்டாம் பாவகமான ரிஷபத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது, ஸ்திரமான வெற்றியை வாரி வழங்கி விடுகிறது, மேலும் 2ம் பாவகமான ரிஷப ராசிக்கு அதிபதியாக சுக்கிரன் பொறுப்பேற்று கொள்வதால், ஜாதகரின் சொகுசு வாழ்க்கையை எவராலும் தடுத்து நிறுத்த இயலாத வண்ணம் அமைந்துவிடுகிறது, இந்த அமைப்பு மேஷ லக்கினத்தை சார்ந்தவரகளுக்கு வணிகம், வங்கி, வண்டி வாகனம், வீடு நில புலன்கள், வட்டி, வாடகை தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள், அரசு துறையில் பணம் சார்ந்த விஷயங்களை நிர்வாகிக்கும் அமைப்புகளிலும், கட்டுமான துறையிலும் மிகசிறந்த முன்னேற்றத்தை வாரி வழங்கி விடும், வருமானம் என்பது மேற்கண்ட அமைப்பை சார்ந்தவரகளுக்கு ஒரு பிரச்சனையாகவே இருக்காது, தொடர்ந்து வருமான வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணமே இருக்கும் என்பதால் இவர்களுக்கு தொழில் சார்ந்த பிரச்சனைகள் இருக்க வாய்ப்பில்லை, சேமிப்பு என்ற ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும், ஜாதகர் வாழ்க்கையில் ஸ்திரமான சொத்து சுகங்களை பெரும் யோகம் உண்டாகும்.

 குறிப்பு : ( சுயமாக நடுத்தர  முதலீடுகளை செய்து, ஏற்றுமதி இறக்குமதி  தொழில்களை செய்யும் யோகம் பெற்றவர்கள் ) 


ஜீவன ஸ்தானம் மூன்றாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

 இவர்களின் அறிவு திறன் என்பது ஜாதகருக்கு பயன்படுவதை விட மற்றவர்களுக்கே  அதிகம் பயன்படும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தொழில்களில் மிகசிறந்த முன்னேற்றத்தை பெரும் யோகம் பெற்றவர்கள், குறிப்பாக மருத்துவம்,சட்டம்,ஜோதிடம் போன்ற துறைகளில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தரும், இவர்களின் ஆலோசனை படி நடக்கும்  அன்பர்கள் அனைவரும் 100% நன்மையே பெறுவார்கள், தங்கு தடையின்றி வெற்றி வாய்ப்பை பெற்று தரும், ஜீவன ஸ்தானமான மகரம் உபய காற்று தத்துவமான மிதுனத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சிறந்த அறிவாற்றலை வாரி வழங்கி விடும், எவருக்கும் புரியாத விஷயங்களும், சூட்சும ரகசியங்களையும் தெளிவாக தெரிந்துகொள்ளும் அறிவு திறன் பெற்றவர்கள், இவர்களின் ஆலோசனை சமுதாயத்திற்கும், அரசு துறைகளுக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏஜென்சி துறையில் இந்த அமைப்பை பெற்றவர்கள் மிகுந்த முன்னேற்றத்தை பெறுவார்கள், கமிஷன் தரகு தொழில்களில் மிகுந்த லாபத்தை பெரும் யோகத்தை தரும்.

 சிறந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனைவரும் மேற்கண்ட அமைப்பை பெற்று இருப்பது கவனிக்க தக்கது, சமுதாயத்திற்கு சிறந்த மாணவர்களையும், நல்ல மனிதர்களையும் தரும் வலிமையையும் திறமையும் பெற்றவர்கள், தான் எடுக்கும் முடிவுகளில் இருந்து சிறிதும் பின்வாங்கத மன வலிமையை கொண்டவர்கள், தகவல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெரும் அன்பர்கள் இவர்களே என்றால் அது மிகையில்லை, புதிய கண்டுபிடிப்புகள், புதிய உபகரணங்களை சரியாக பயன்படுத்தும் அறிவாற்றல் பெற்றவர்கள், புதிய சிந்தனைகள் மூலம் தான் செய்யும் பணியின் சிரமங்களை வெகுவாக குறைத்துகொள்ளும் மதிநுட்பம் நிறைந்தவர்கள், எடுக்கும் எந்த ஒரு முயர்ச்சியிலும் பின்வாங்காமல் வெற்றி வாய்ப்பை பெரும் யோக அமைப்பை பெற்றவர்கள், எந்த ஒரு நிறுவனத்தையும் தனது மதி நுட்பத்தால் குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெற வைக்கும் தனித்தன்மை இவர்களுக்கே இறையருள் வாரி வழங்கி இருப்பது கவனிக்க தக்கது, மேற்கண்ட அமைப்பு ஜீவன ரீதியாக 33% சதவிகிதம் யோகத்தை அனுபவிக்கும் தன்மையை தரும் .

 குறிப்பு : ( சுயமாக சிறிய முதலீடுகளை செய்து சிறு வியாபர தொழில்களை செய்யும் யோகம் பெற்றவர்கள் ) 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக