செவ்வாய், 28 அக்டோபர், 2014

சுய ஜாதகத்தில் பாவக வலிமையும், தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களும்!

 

ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதற்கொண்டு 12 பாவகங்களின் வலிமை, அந்த ஜாதகரின் வாழ்க்கையில் நடைபெறும் யோக அவயோக பலன்களை நிர்ணயம் செய்கிறது, நடைபெறும் திசா புத்திகள் 12 பாவக பலன்களை ஏற்று நடத்தி யோக அவயோக பலன்களை அனுபவிக்க வைக்கிறது, கோட்சார கிரகங்கள் தனது கோட்சார அமைப்பில் நின்று திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு தனது வலிமை அல்லது வலிமை அற்ற பலன்களை வாரி வழங்குகிறது, இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஜாதகரின் பலாபலன்களும் நிர்ணயம் செய்யபடுகிறது, இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு காணும் பொழுது நமக்கு மிக தெளிவாக புரியும் அன்பர்களே! 

உதாரண ஜாதகம் :


ஜாதகரின் லக்கினம் : விருச்சிகம் 
ஜாதகரின் ராசி : ரிஷபம் 
ஜாதகரின் நட்சத்திரம் : மிருகசீரிடம் 2ம் பாதம் 

இவரது சுய ஜாதக அமைப்பின்படி வலிமை பெற்ற பாவகங்கள் :

1,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதக அமைப்பில் 70% யோகத்தை தருகிறது.

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து 50% யோக பலன்களை வழங்குகிறது.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 6ம் பாவக வழியில் இருந்து 100% யோக பலன்களை வழங்குகிறது.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து 70% யோக பலன்களை வழங்குகிறது.

இவரது சுய ஜாதகத்தில் வலிமை அற்று பாதிப்பை தரும் பாவகங்கள் :

4,8,11ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 8ம் பாவக வழியில் இருந்து 30% அவயோக பலன்களை வழங்குகிறது.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 9ம் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களை தருகிறது.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 12ம் பாவக வழியில் இருந்து 100% இன்னல்களை தருகிறது.

மேற்கண்ட முறையில் ஜாதகருக்கு 12 பாவக அமைப்புகளின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலை காணப்படுகிறது, அடுத்து ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வுக்கு  எடுத்துகொள்வோம் அன்பர்களே !

தற்பொழுது நடைபெறும் சனி திசை( 21/06/2014 முதல் 21/06/2033 வரை )  ஜாதகருக்கு இரண்டு விதமான பலன்களை தருகிறது அதாவது 1,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தருகிறது, இதில் 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல உடல் நலம், மன நலம் சிறந்து விளங்கும், ஜாதகரின் செயல்கள் யாவும் பெருமைக்கு உரியதாக அமையும் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த யோகத்தை பெறுகிறார், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனது அறிவாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் மூலம் மிகுந்த லாபமும், குல தெய்வத்தின் அருளாசியும் கிடைக்க பெறுகிறார், எங்கு சென்றாலும் ஜாதகருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கும், தனது தொழில் துறையில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் புகழ் கீர்த்தி மேலோங்கும், தனது குழந்தைகள் மூலம் யோக வாழ்க்கையை பெரும் சிறப்பான நேரமிது.

 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை அமைப்பில் இருந்து உதவியும், ஆதரவும் அதிகரிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும், தம்பதியர் இருவரின் சுய முயற்ச்சியால் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் யோக காலம் இது, எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் நல்ல வெற்றியை குவிக்கும், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை கூட்டு முயற்ச்சியாக ஜாதகர் பெறுவார் என்பது உறுதியாகிறது, வெளிநாடு வெளியூர் செல்வதற்கு உண்டான யோக காலம்  இதுவென்றே  சொல்லலாம், சனி திசை சனி புத்தியில் வெளிநாடு வாய்ப்புகள் தேடிவரும் சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் ரிஷப ராசியில் அமைவதால் ஜாதகர் வெளிநாடு செல்வதால் நல்ல வேலை வாய்ப்பினையும், பொருளாதார முன்னேற்றத்தையும், அபரிவிதமான வருமானத்தையும் பெரும் யோகத்தை தரும், பொருளாதார ரீதியான தன்னிறைவு வாழ்க்கையை தற்பொழுது நடைமுறையில் உள்ள சனிதிசையே வாரி வழங்குகிறது.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்தும் 9ம் பாவக வழியில் இருந்தும் அதிக இன்னல்களை தரும், குறிப்பாக 9ம் பாவகம் சர நீர் ராசியாக இருப்பதால் மனோ ரீதியான போராட்டங்கள் ஜாதகரின் முயற்ச்சிக்கு தடையாக அமையும், உதாரணமாக ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் ஜாதகரின் மன நிலையின் காரணமாக தடை ஏற்ப்படும், இதானால் சில நேரங்களில் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரக்கூடும், இதன் காரணமாக ஜாதகருக்கு வரும் பல அதிர்ஷ்ட வாய்புகள் தட்டி போக வாய்ப்பு உண்டு எனவே ஜாதகர், தனது மன நிலையை முறையாக ஒருமை படுத்துவது நலம் தரும், அல்லது ஜாதகர் 8,9,12ம் பாவக அமைப்பிர்க்குண்டன பிரீதி பரிகாரங்களை தேடிகொள்வது சால சிறந்தது.

தற்பொழுது நடைபெறும் சனி திசை சனி புத்தியும் (21/06/2014 முதல் 24/06/2017வரை ) 1,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தருவதால் ஜாதகருக்கு 7,9ம் பாவக பலன்களே நடைமுறைக்கு வருகிறது, இந்த இரண்டு பாவகங்களுடன்  சம்பந்தம் பெரும் கோட்சார கிரகம் பற்றி ஆய்வு செய்யும் பொழுது குரு பகவான் மட்டும் 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% யோக பலன்களை வாரி வழங்குவதால் ஜாதகருக்கு 9ம் பாவக வழியில் இருந்தும் மிகுந்த நன்மையே நடைபெறும். ( அதாவது குரு பகவான் கடகத்தில் சஞ்சாரம் செய்யும் வரை ) ஆக ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனிதிசை சனி புத்தி மிகுந்த யோகத்தை தரும் காலமாகவே காணப்படுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக