சனி, 18 அக்டோபர், 2014

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - மேஷ லக்கினம் பாகம் 4



கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷ ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று அமரும் பொழுது தரும் யோக பலன்களையும், வலிமை அற்று அமரும் பொழுது தரும் அவயோக பலன்களை பற்றியும் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு மகரம் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகமாக அமையும், இந்த மகரம் மேஷ லக்கினதிர்க்கும் சரி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் சரி 10ம் வீடாகவே அமைகிறது, மேலும் சர மண் தத்துவ அமைப்பில் இயங்குகிறது, இந்த மகரம் மேஷ லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு 6,8,11,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறாமல் இருந்தால் ஜாதகரின் ஜீவன மேன்மை மிகவும் சிறப்பாக இருக்கும் குறிப்பாக பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது மிகுந்த யோகத்தை தரும்.


 மேஷ லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவகங்களும், ஜாதகர் பெரும் நன்மைகளும்:


ஜீவன ஸ்தானம் நான்காம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :


ஜாதகர் மிகுந்த யோகசாலி மற்றும் அதிர்ஷ்டசாலி என்று தெளிவாக சொல்லலாம் ஏனெனில் ஜாதகர் துவங்கும் எந்த ஒரு தொழிலும் மிக சிறப்பான முன்னேற்றத்தை  வாரி வழங்கும் தங்கு தடையின்றிய வருமானத்தை தரும், குறிப்பாக ஜாதகர் வண்டி வாகனம் சார்ந்த தொழில்களிலும், நீர் தத்துவம் கொண்ட உணவு பொருட்கள் அமைப்பில் இருந்தும் மிகப்பெரிய வருமானத்தை பெறுவார், குறிப்பாக காய்கறி, விவசாய உற்பத்தி பொருட்கள், உணவகம் மற்றும் உணவகம் சார்ந்த தொழில்கள், மக்கள்  அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், அரிசி மற்றும் தானிய பொருட்கள், ஆடை மற்றும் அணிகலன்கள் சார்ந்த தொழில்கள் என ஜாதகரை மிகப்பெரிய வருமானத்தை தரும் தொழில்களில் ஈடுபடுத்தி, மிக பெரிய வெற்றிகளை வாரி வழங்கிவிடும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கும் தொழில்கள் யாவும் இவர்களுக்கு ஏற்றது.

பொதுவாக மேற்கண்ட அமைப்பை தனது சுய ஜாதகத்தில் பெற்ற அன்பர்கள்! விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை தருவது சிறப்பான நற்பலன்களை வாரி வழங்கும், ஏனெனில் இவர்களுக்கு போதிய அளவில் நிறைவான நிலபுலன்கள் இயற்கையிலேயே அமைந்திருக்கும், ஒருவேளை ஜாதகர் நிலபுலன்கள் இல்லாதவராக இருப்பின் தனது சுய முயற்சியால் சொத்து சுகங்களை குறுகிய காலத்தில் சம்பாதிக்கும் யோகத்தை தரும், இரண்டாவதாக இவர்களுக்கு ஏற்ற தொழில் நிச்சயம் மோட்டர் தொழில் எனப்படும் வண்டி வாகன துறையே, அதாவது ஜாதகர் சிறிதாக ஆரம்பிக்கும் மோட்டார் தொழில் அபரிவிதமான வெற்றியை தந்து, மிகப்பெரிய வண்டி வாகனங்களுக்கு சொந்தகாரராக வாழ்க்கையில் உயர்த்தி விடும், ஒரு காலத்தில் மிதி வண்டியில் கூட செல்ல இயலாத நிலையில் இருந்தவரை, மிக விலை உயர்ந்த சொகுசு வாகனங்களில் செல்லும் யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம், ஆக மேற்கண்ட அமைப்பை சார்ந்தவர்களுக்கு முதலில் விவசாய தொழிலையும், இரண்டாவதாக வண்டி வாகன தொழிலையும் செய்யலாம்.

குறிப்பு : ( சுயமாக பெரிய முதலீடுகளை செய்து மிகப்பெரிய தொழில்களை செய்யும் யோகம் பெற்றவர்கள் )

ஜீவன ஸ்தானம் ஐந்தாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

பெரும்பாலான ஜாதகர்கள் இந்த அமைப்பை பெரும் பொழுது தனது முன்னோர்கள் என்ன தொழிலை மேற்கொண்டு இருந்தார்களோ, அந்த தொழிலே ஜாதகருக்கு அமைந்துவிடுகிறது, தலைமுறை தலைமுறையாக செய்துவரும் தொழில்கள் ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்துவிடுகிறது, அதன்வழியிலேயே ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கை மேற்கொள்ளும் யோக அமைப்பை  பெற்று விடுகிறார், மேலும் குடும்ப அமைப்பில் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்யும் கூட்டு அமைப்பை தருகிறது, இவர்கள் செய்யும் தொழில்கள் ஸ்திரமான அமைப்பிலும், நீடித்து நெடுங்காலமாக தொடர்ந்து செய்துவரும் அமைப்பையே தருவதால் ஜாதகர் அனுபவமும், அறிமுகமும் தொழில் விருத்தியை அபரிவிதமாக வாரி வழங்கிவிடுகிறது.

மேற்கண்ட அமைப்பு சுய ஜாதகத்தில் அமையும் பொழுது சில ஜாதகர்கள் அரசு துறையில் பணியாற்றும் யோகத்தை பெற்று இருக்கின்றனர், குறிப்பாக மின்வாரியம், அரசு போக்குவரத்து கழகம், கிராம, நகர நிர்வாகம் சார்ந்த அரசு துறைகளில் பணியாற்றும் யோகத்தை தருகிறது, கிராம நிர்வாக அலுவலர் பணிகளில் சிறப்பாக செயல்படும் அன்பர்கள் இவர்களே! அரசு மருத்துவம் சார்ந்த துறைகளில் சிறப்பாக பணியாற்றும் யோகத்தை தருவது இந்த அமைப்பே , இதை தவிர ஜாதகர் பல சரக்கு கடை, மருந்து கடை, உணவகம், காய்கறி வியாபாரம் , பேக்கரி, துணிக்கடை, மின்சார உபகரணம் விற்கும் அங்காடி என ஜாதகர் ஸ்திரமானதாக செய்யும் நடுத்தர வியாப்ரங்களில் நல்ல முன்னேற்றமும், சிறப்பான பொருளாதார வளர்ச்சியையும் பெறுகின்றனர்.

குறிப்பு : ( சுயமாக ஸ்திரமான வியாபர  தொழில்களை செய்யும் யோகம் பெற்றவர்கள் ) 

ஜீவன ஸ்தானம் ஏழாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

உலக புகழ் பெரும் தொழில் அதிபர்கள் இவர்களே என்றால் அது மிகையில்லை, காரணம் மேஷ லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானம் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, சர காற்று தத்துவமாக இருப்பதே, ஜாதகரின் அறிவு திறன் அபரிவிதமாக செயல்படும், பெரிய நிறுவனங்களை தலைமை ஏற்று நடத்தும் புகழ் மிக்க பொறுப்புகள் ஜாதகரை தேடி வரும், ஜாதகரின் தனிப்பட்ட புதுமையான அணுகுமுறை தான் ஏற்றுகொண்ட  பொறுப்புகளின் வெற்றியை 100% நிர்ணயம் செய்யும், ஜாதகரின் நடைமுறையை பலர் பின்பற்றுவார்கள், புதிய யுக்தியும் புதிய செயல்பாடுகளும் ஜாதகரி புகழின் உச்சிக்கே எடுத்து செல்லும், இதனால் செல்வாக்கும் வருமான வாய்ப்பும் அதிரடியாக உயரும், இவர்களின் அறிவு திறனின் செயல்பாடுகளை எவராலும் யூகிக்க இயலாது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

பெரும்பாலும் மேற்கண்ட அமைப்பை பெரும் ஜாதகர் அனைவரும் திருமணதிற்கு பிறகே அபரிவிதமான வளர்ச்சியை பெறுகிறார்கள் என்பது கண்கூடாக கண்ட உண்மை, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அபரிவிதமான மன ஆற்றலையும், உடல் வலிமையையும் பெறுவதால் ஜாதகரின் அறிவு திறன் மிதமிஞ்சிய அளவில் செயல்பட ஆரம்பிக்கிறது, இதன் காரணமாகவே ஜாதகர் அபரிவிதமான வளர்சியை பெறுகிறார், உலக அளவில் அனைவராலும் கவனிக்கப்படும் தன்மையை தருகிறது, பொதுமக்களின் ஆதரவை அபரிவிதமாக பெரும் யோகத்தை பெற முடிகிறது, விடா முயற்சியும் அளவில்லா அறிவு திறனும் ஜாதகரால் இயலாதது ஒன்றும் இல்லை என்ற நிலையை தருகிறது, ஜாதகரின் லட்சியத்தை நோக்கிய பயணத்தில் எவ்வித இடையுருகளையும் எதிர்கொள்ளும் வல்லமையை வாரி வழங்குகிறது, இவர்களின் தனிப்பட்ட தொழில் முயற்சிகளை விட பொதுமக்களை சார்ந்த தொழில்களில் பிரகாசிக்க வைக்கிறது, எனவே அது சார்ந்த தொழில்களை ஜாதகர் தேர்ந்தெடுப்பது சிறப்பான யோகத்தை தரும்.

குறிப்பு : ( சுயமாகவும், பொது துறையிலும், பல தொழிலாளர்களை கொண்டுள்ள மிகப்பெரிய நிறுவனங்களையும் நிர்வாகிக்கும் வல்லமை பெற்றவர்கள்.)

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக