செவ்வாய், 21 அக்டோபர், 2014

காதல் திருமணம் செய்துகொள்ளும் நிலை ஒருவருக்கு ஏன் ஏற்ப்படுகிறது? காதலில் வெற்றி, காதல் திருமணத்தில் வெற்றி பெற என்ன செய்வது ?


அன்பர்களே ! 

ஒருவர் காதல் வயப்படுவதும், வயபட்ட காதலில் வெற்றி பெறுவது சுய ஜாதகத்தின் அடிப்படையிலேயே நிகழ்கிறது, இது இயற்கையின் நியதியே இயற்க்கைக்கு மாறாக எதுவும் நிகழ்வது இல்லை, பெரும்பாலும் காதல் திருமணங்கள் குறுகிய காலத்திலேயே மன வாழ்க்கையில் பிரிவை தருவதும், குறைந்த சதவிகிதத்தில் காதல் திருமணங்கள் வெற்றி பெறுவதும் சுய ஜாதகத்தின் அடிப்படையிலேயே, ஆண் பெண் இருவரின் சுய ஜாதகத்திலும் 2,7ம் பாவகங்கள் பாதிக்கபட்ட நிலையில் இருக்கும் பெருவாரியான ஜாதகங்கள் காதல் திருமணத்திலேயே முடிந்திருக்கிறது.

 இந்த காதல் திருமணம் என்ற விஷயத்திற்கு மேல் வரும் குடும்ப வாழ்க்கை என்ற நிலையை சுய ஜாதகத்தில் ஆண்களுக்கு 6ம் பாவகமும், பெண்களுக்கு 8ம் பாவகமும் நிர்ணயம் செய்கிறது, ஆண்களது சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கை துணையை உயிராக நினைத்து காப்பற்றும் வல்லமையை தரும், பெண்களது ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகி தனது கணவன் மேல் அதிக பாசமும் அன்பும் கொண்டவராகவும், கற்பு நெறியில் வழுவாமல் சிறப்பான இல்லற வாழ்க்கையையும், சிறந்த குடும்ப வாழ்க்கையையும் தருபவராக இருப்பார் என்பதிற்கு மற்று கருத்து இல்லை,

இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு காணும் பொழுதே நாம் தெளிவாக உணர முடியும்.


லக்கினம் : கன்னி 
ராசி : விருச்சிகம் 
நட்சத்திரம் : அனுஷம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் : ( 23/01/2003 முதல் 23/01/2020 வரை ) 

3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% இன்னல்களை தருவது 3ம் பாவக வழியில் இருந்து அசட்டு தைரியத்தையும், சிந்திக்காமல் முட்டாள் தனமாக செயலாற்றும் தன்மையை தந்தது, 5ம் பாவக வழியில் இருந்து சுயமான சிந்திக்கும் புத்திசாலிதனத்தை மழுங்கடித்தது, ஜாதகியை காப்பற்ற யாரும் இல்லை என்ற நிலையை தந்தது, 9ம் பாவக வழியில்  இருந்து சமுதாயத்தில் மிகப்பெரிய அவ பெயரை சந்திக்கும் தன்மையை தந்தது, 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி அதிர்ஷ்டம் இல்லாத துரதிர்ஷ்டம் பிடித்தவர் என்பதும், அதனை நோக்கியே ஜாதகியின் வாழ்க்கை பாதை அமைந்தது என்பதும் உறுதியானது, ஆக ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் புதன் திசை பாதக ஸ்தான வழியில் இருந்து 200% இன்னல்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது உறுதியாகிறது.

ஜாதகி சரியாக தற்பொழுது நடைபெறும் புதன் திசையில் ராகு  புத்தியில்  ( 20/07/2012 முதல் 07/02/2015 வரை ) தான் விரும்பிய நபரை நள்ளிரவில் தனது பெற்றோரை ஏமாற்றிவிட்டு, சுவர் ஏறி குதித்து சென்று திருமணம் செய்துகொள்ள வைத்தது, ( ஜாதகி கற்று கொண்ட நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் சிறப்பாக இதற்க்கு பயன்படுத்திகொண்டார் ) இதனால் ஜாதகியின் கல்வி பாதியிலேயே முடிவுக்கு வந்தது, இதன் பிறகு ஜாதகியின் பெற்றோர் காவல் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் அவமானபட்டது என்ற வகையில் பல இன்னல்களை தந்தது.

 உச்சகட்டமாக இவர்களின் உறவினர்களே இவர்களை ஏளனமாக பேச வைக்க காரணமாக அமைந்தது, ஜாதகி இதையெல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல், தனது லட்சியமே கருமம் என்று செயல்பட ஜாதகியின் 3ம் பாவகம் காரணமாக அமைந்தது, குறிப்பக ஜாதகியின் பெற்றோரை ஜாதகி மனிதராகவே மதிக்கவில்லை என்பது  இங்கே கவனிக்க வேண்டும்,  ஜாதகத்தில் தாய் தந்தையரை குறிக்கும் 10.4ம்  பாவகம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றிருப்பது, ஜாதகியின் பெற்றோருக்கு இறந்ததிற்கு சமானமாக ஒரு நிகழ்வை ஜாதகி செய்ய வைத்தது.

இதற்க்கு பிறகு நடந்த விஷயங்கள் தான் ஜாதகியின் வாழ்க்கையில் விரக்தியின் உச்சிக்கே கொண்டு சென்றது சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகிக்கு வாழ்க்கை துணை தேடித்தந்தது, 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றது வாழ்நாள் முழுவதும் ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கை இல்லை என்பதை ஸ்திரமாக ( சிம்மம் ஸ்திர நெருப்பு தத்துவம் ) நிருபணம் செய்தது, திருமணதிற்கு பிறகு ஜாதகிக்கு வாழ்க்கை நித்தியகண்டம் பூரண ஆயுசாக மாறியது, ஜாதகியின் கணவனுக்கு ஒரு நிரந்தரமான வேலை இல்லை என்பதே  அப்பொழுதான் தெரிந்தது, மேலும் ஜாதகரின் கணவர் அவரது பெற்றோரின் தயவிலேயே ஜீவனம் செய்பவர் என்பது ஜாதகிக்கு பெரிய இடியாக தலையில் இறங்கியது, தனது பெற்றோரை மீறி எந்த ஒரு விஷயத்தையும் செயலாற்றும் தன்மை அற்றவர் என்பதும், ஜாதகியும் அவர்களையே சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளபட்டார், குறுகிய காலத்தில் குழந்தை கருத்தரித்தது, மருத்துவ செலவிற்கும் ஜாதகி தனது வாழ்க்கை துணையின் பெற்றோரை எதிர்பார்க்கும் சூழ்நிலையை தந்து பல அவமானங்களை சந்திக்க வைத்தது, ஜாதகியின் தரித்திரம் முழுமையாக வேலை செய்ததை மிகவும் தாமதமாக உணர்ந்தார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜாதகி 8 மாத கர்ப்பிணியாக புகுந்த வீட்டில் இருந்து பொய் காரணங்களை கூறி ராசி இல்லாதவள்  என்று விரட்டி அடிக்கபட்டர், அப்பொழுதுதான் ஜாதகி தனது விதியின் கோரபிடியை உணர்ந்தார், பிறகு ஜாதகியின் தாய் மாமன் தற்பொழுது ஜாதகிக்கு அடைக்கலம் அளித்துள்ளார், இருப்பினும் ஜாதகி இன்னும் சாகசமான வாழ்க்கைக்கு திரும்ப இயலவில்லை, ஜாதகியின் பெற்றோர் ஆதரவும் இல்லை, சென்ற இடத்திலும் வாழ இயலவில்லை, இனிவரும் காலமும் ஜாதகிக்கு நன்மையை தரும் அமைப்பில் இல்லை ஏனெனில் நடைபெறும் புதன் திசை பாதக ஸ்தான பலனை தருகிறது, இனி அடுத்து வரும் புதன் திசை குரு புக்தி ஜாதகிக்கு 3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவக பலனையே வழுத்து நடத்துகிறது, இடையில் நடந்த ராகு புத்தி மட்டும் ஜாதகிக்கு 7,11ம் வீடுகள் லாப ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று சிறிது நன்மையை செய்தது, அதுவும் திசை நடத்தும் பாதக ஸ்தான பலனக்கு கட்டுபட்டே நடைபெற்றது என்பது தற்பொழுது நடைபெறும் நிகழ்வுகளில் இருந்து நாம் உணர்ந்துகொள்ளும் வாய்ப்பை ஜாதகியின் ஜாதகம் தெளிவு படுத்துகிறது.

மேற்கண்ட தீய பலன்களை ஜாதகியும், ஜாதகியை சார்ந்தவர்களும் அனுபவிக்க கரணம் என்ன ? என்பதை இனி பார்ப்போம் அன்பர்களே! முதலில் ஜாதகியின் பெற்றோர்களின் தகப்பனார் மற்றும் தாயார் அவர்களுக்கு பிறந்த பெண்  குழந்தையை சிசு கொலை செய்து இருக்கின்றனர், ஜாதகியின் பெற்றோரும் ஜாதகிக்கு முன் கருத்தரித்த கருவை, கருகலைப்பு செய்து இருக்கின்றனர், இதன் விளைவுகளை ஜாதகியின் சுய ஜாதகத்தில் 5, 9ம் வீடுகளின்  நிலையை வைத்து தெளிவாக தெரிந்துகொள்ள இயலும், 5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், ஜாதக ஆலோசனைக்கு வந்த ஜாதகியின் தாய் மாமாவிடம் விசாரித்து உறுதி செய்துகொண்டோம் ( ஏனெனில் ஜாதகியின் 5ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும் சர நில தத்துவமாக இருப்பதால் மண் தத்துவம் கொண்ட இயக்க நிலையில் இருக்கும் மனித உயிர் என்பது உறுதியாகிறது ) எனவே ஜாதகியும் ஜாதகியின் பெற்றோரும் அதிக இன்னல்களுக்கும் அவமானத்திற்கும் ஆளாக காரணம் அவர்கள் செய்த வினை பதிவே, இதற்க்கு உண்டான பலன்களையே இவர்கள் அனுபவிக்க நேருகிறது என்பதால், இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை என்றே ஜோதிடதீபம் கருதுகிறது.

ஜாதகியின் காதல் ஜாதகியையும் ஜாதகியை சார்ந்தவர்களையும் எங்கு கொண்டு நிறுத்தியிருக்கிறது என்பது இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள இயலும், எந்த ஒரு நன்மையும் தீமையும் அவர்கள் செய்யும் வினை பதிவிற்கு ஏற்ப்பவே நடைபெறுகிறது என்பதும் நிருபணமாகிறது. ஆக இவர்கள் இனி வரும் காலங்களிலாவது முதலில் செய்த பாவங்களை செய்யாமல் இருப்பதும், செய்த வினை பதிவிற்கு பரிகாரம் தனது மகள் பெற போகும் குழந்தையை காப்பற்றி, தனது மகளுக்கும் நன்மை செய்து வாழ்வதுமே சிறந்தது என்று ஜாதக ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தோம்.

அடுத்த பதிவில் காதலில் வெற்றி பெற்று வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்ற ஜாதக அமைப்பை பற்றி பதிவு செய்கிறோம், அன்பர்களே!

பின் குறிப்பு :

 மேற்கண்ட மண் தத்துவ ரீதியல் பாவம் செய்த இவர்களுக்கே, இந்த அளவிற்கு கடுமையான அவயோக பலன்களை அனுபவிக்க நேர்ந்தது எனில், ( ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், நாக தோஷம், களத்திர தோஷம், கிரக சந்திப்பு, திசா சந்திப்பு, ரஜ்ஜு பொருத்தம், நட்சத்திர பொருத்தம்) என்று வகைக்கு பல தோஷங்களை சொல்லிக்கொண்டு பல பேரது வாழ்க்கையில் விளையாடிக்கொண்டு இருக்கும் போலி ஜோதிடர்களுக்கு, காற்று நீர் தத்துவ அமைப்பில் இருந்து எவ்வித சிரமங்களை அவர்களும், அவர்களது குழந்தைகளும் அனுபவிப்பார்கள் என்பது இறை நிலைக்கே வெளிச்சம், இறை அருள் அவர்களுக்கு சரியான வழியை காட்டட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக