செவ்வாய், 7 ஜூலை, 2015

சுய ஜாதகத்தில் பனிரெண்டு பாவகங்களின் வலிமையையும், நவகிரகங்கள் தனது திசையில் வழங்கும் பலன்களும் !


ஒருவரின் சுய ஜாதகத்தில் பனிரெண்டு பாவக வலிமையின் அடிப்படையில், தற்பொழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி கிழ்கண்ட பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !



லக்கினம் : சிம்மம் 
 ராசி : விருச்சிகம் 
நட்சத்திரம் : கேட்டை 2ம் பாதம் 

மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகருக்கு முதலில் சுய ஜாதக அமைப்பின் படி, 12 பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையை சிந்திப்போம்.

ஜாதகத்தில் வலிமையுள்ள பாவகங்கள் :

1,3,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம், எனவே ஜாதகர் இலக்கின வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை பரிபூரணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், மேலும் ஜாதகருக்கு 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் பாவகமாக அமைவதும், உபய காற்று தத்துவத்தில் இயக்கம் பெறுவதாலும், ஜாதகரின் செயல்கள் மற்றும் முயற்ச்சிகள் யாவும் அறிவுத்திறன் சார்ந்ததாக அமைந்திருக்கும், ஜாதகரின் அறிவு திறன் எடுக்கும் முயற்ச்சிகளில் இருந்து நல்ல வெற்றி வாய்ப்பினையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், விடா முயற்சியுடன் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட்டு ஜாதகர் நல்ல லாபத்தையும், அதிர்ஷ்டத்தையும் அடையும் நிலையை தரும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனையும், செயல்பாடுகளும் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வாரி வழங்கும், கமிஷன், தரகு, ஏஜென்சி துறைகளில் ஜாதகருக்கு நல்ல வெற்றி வாய்ப்பை பெற்று தரும், செல்வ செழிப்பு, சகலருக்கும் உதவி செய்யும் யோகம் தன்னம்பிக்கை, விடா முயற்ச்சி என்ற வகையில் நல்ல யோகத்தை ஜாதகருக்கு தொடர்ந்து வாரி வழங்கிகொண்டே  இருக்கும் என்பது சிறப்பான விஷயம் எனலாம்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நினைத்த விஷயங்கள் பலிதம் பெரும் யோகத்தை தரும், சிறந்த வியாபர விருத்தி, சகோதர வழியில் இருந்து வரும் சிறப்பான யோகங்கள், சொகுசு வாகனங்களை பயன்படுத்தும் யோகம், பண்ணை மற்றும் விவசாய பொருட்கள் மூலம் லாபம், கை நிறைவான வருமானம், அதிக சொத்து சுக சேர்க்கை, வீரியமிக்க செயல்களில் வெற்றி, குறிகோள்களை வெற்றிகரமாக அடையும் யோகம், தர்மத்தில் நம்பிக்கை, நேர்மையான குணம், ஜோதிடம் மற்றும் கணிதத்தில் புலமை பெரும் யோகம், திருமணம் வாழ்க்கைக்கு பிறகு யோகம், பயணங்களில் அதிக லாபம், தனிப்பட்ட முன்னேற்றத்தில் ஆர்வம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல தெய்வீக அனுபவங்கள் மூலம் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் யோகம், நல்ல ஆன்மீக பெரியவர்களின் சந்திப்பின் மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் பெரும் யோகம், எளிதில் அனைத்தும் கிடைக்கும் யோகம், சிறந்த புத்திகூர்மை, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை, தன்னம்பிக்கை குறையாத  செயல்திறன், சமூகத்தில் நற்ப்பெயர், பொதுமக்களிடம் நற்ப்பெயர், திடீர் அந்தஸ்து, உயர் பதவிகளை அலங்கரிக்கும் யோகம், ஆன்மீகத்தில் வெற்றி புதிய ஆராய்ச்சிகள் மூலம் நல்ல வருமான வாய்ப்புகளை பெரும் யோகம், புதிய சிந்தனைகளை பரீசித்து வெற்றிகாணும் யோகம், அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளை ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதத்தால் பெரும் யோகத்தை ஜாதகர்ருக்கு வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனது  திட்டமிடுதல் மூலம், வாழ்க்கையில் பெரும் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், எந்த ஒரு விஷயத்திலும் உள்ள நன்மையை எடுத்துகொண்டு வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொள்ளும் யோகம், மிதமிஞ்சிய தன்னம்பிக்கை  மூலம் பெரும் முன்னேற்றம் மற்றும் பொருள் வரவு, மிகுந்த அதிர்ஷ்டம், அனைத்திலும் நன்மையையும் லாபத்தையும் பெரும் யோகம், சிறந்த நற்குணங்களின் மூலம் சமூக அந்தஸ்தை குறுகிய காலத்தில் பெரும் யோகத்தை தரும், தான் எடுத்துக்கொண்ட விஷயத்தில் விடா முயற்சியுடன் போராடி வெற்றியை பெரும் யோகத்தை தரும்.

2,4,6,12ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகுக்கு 2ம் பாவக வழியில் இருந்து கலை துறையில் நல்ல ஈடுபாட்டையும் வெற்றியையும் வாரி வழங்கும், அறிய கலைகளில் புலமையையும் தேர்ச்சியையும் வாரி வழங்கும், கற்ற கல்வியும் பேச்சு திறனும் ஜாதகரின் வாழ்க்கையில் கை நிறைவான வருமான வாய்ப்பை பெற்று தரும், குழந்தைகள் மற்றும் கல்வி கலை துறை சார்ந்த விஷயங்களில் நல்ல வெற்றி வாய்ப்பை பெற்று தரும், எங்கு சென்றாலும் உதவி செய்ய ஜாதகருக்கு நல்ல மனிதர்களும், நண்பர்களும் கிடைப்பார்கள், தன்னைவிட வயதில் அதிகம் உள்ள நபர்கள் மூலம் அபரிவிதமான நன்மைகளையும், வருமான வாய்ப்புகளையும் ஜாதகர் பெறுவது இயற்கையானது, உடல்  உழைப்பை விட புத்திசாலிதனத்தால் ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை பெற்று தரும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் இசை, சினிமா, நாடகம் மற்றும் கலைத்துறை சார்ந்த விஷயங்களில் நல்ல ஈடுபாட்டையும் லாபத்தையும்  வாய் வழங்கும், இது சார்ந்த தொழில் அமைப்புகளில் இருந்து ஜாதகருக்கு நல்ல லாபத்தை பெற்று தரும், அறிய கலைகளை போதிப்பது, சொந்த வீடு, வண்டி வாகனம் தனது சுய உழைப்பின் மூலம்  பெரும் யோகத்தை தரும், வீடு மற்றும் நிலம் மூலம் வாடைகை வருமானம் பெரும் யோகத்தை தரும், வடக்கு சார்ந்த  திசைகளில் அமைந்த வீடுகளில் ஜீவனம் செய்வதால் ஜாதகருக்கு அபரிவிதமான நன்மைகள் வந்து சேரும், சுக போக வாழ்க்கைக்கு தேவையான பொருளாதார வசதிகளை ஜாதகர் குறுகிய காலத்தில் பெரும் யோகத்தை தரும், ஜாதகர் செய்யும் காரியங்களில் வெற்றி நிச்சயம்.

6ம் பாவக வழியில் இருந்து நல்ல உடல் ஆரோக்கியம், குழந்தைகள் மூலம் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கை, பொதுமக்களின் பணம் தன்வசம் இருக்கும் யோகம், தொடர்ந்து வரும் வருமான வாய்ப்பு, பொதுமக்கள் ஆதரவின் மூலம் உயரிய பதவிகளை பெரும் யோகம், யாரிடமும் பகைமை பாராட்டாத தன்மை, சிறு சிறு அதிர்ஷ்டங்கள் ஜாதகருக்கு தொடர்ந்த வண்ணம் வரும் அமைப்பு, விரைவில் குணம் பெரும் உடல் அமைப்பு, வயிறு சார்ந்த சிறு சிறு தொந்தரவுகள், எதிரியின் மூலம் லாபம் பெரும் யோகம், தொழில் வழியில் திடீர் முன்னேற்றங்களை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து தேவையில்லாத அவ பெயர், உடல் நல பாதிப்பால் சிறு சிறு தடங்கல்கள்,  பங்கு வர்த்தகம், லாட்டரி சூது மூலம் திடீர் இழப்பை தரும் என்ற போதிலும் இதற்க்கு இணையான வருமானத்தையும் வாரி வழங்கும், மனதை கட்டுபாடாக வைத்துகொள்ள ஜாதகர் அதிக போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும், திடீர் இழப்பை தவிர்க்க ஜாதகர் அதிக முன் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும், சரியான திட்டமிடுதல் ஜாதகருக்கு நல்ல வெற்றி வாய்ப்பை பெற்று தரும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ  தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக வருவதும் மிகுந்த யோகத்தை ஜீவன ரீதியாக வாரி வழங்கும், மேலும் 10ம் பாவகம் அதிக வலிமையுடன் இருப்பது ஜாதகர் சுய தொழில் செய்வதால் பெரும் யோக வாழ்க்கையை குறிக்கிறது, ஜாதகர் தனிப்பட்ட முறையில் தொழில் செய்வது சிறந்த நன்மைகளை வாரி வழங்கும், மேலும் ரிஷபம்  ஸ்திர நில தத்துவ அமைப்பை பெறுவதால்  நிலையாக ஓர் இடத்தில் செய்யும் தொழில்களில் நல்ல வெற்றிகளை பெறலாம், ஜாதகருக்கு வாக்கின் மூலம் வருமானம் வரும், பேச்சு திறன் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு வெற்றிகளை வாரி வழங்கும், வியாபாரம் மூலம் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும், பல தொழில்களை நிர்வகிக்கும் யோகத்தை தரும், பொதுமக்களை சார்ந்து செய்யும் தொழில்கள் ஜாதகருக்கு தொடர்ந்து வருமானத்தை வாரி வழங்கிகொண்டே இருக்கும்.

ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் :

5,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது, 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்வீக அமைப்பில் அதிக சிக்கல்களை உருவாக்கும், வெளியில் சென்று ஜீவனம் தேடும் பரதேஷ ஜீவனத்தை வழங்கும், குல தெய்வத்தின் நிந்தனைக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், பூர்வீகத்தில் ஜாதகருக்கு வெற்றி வாய்ப்புகள் குறையும், சிந்தனையும் செயல்திறனும் வெகுவாக ஜாதகருக்கு பாதிக்கும், வெளியூர் அல்லது வெளிநாட்டில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்,  மற்றவர்களுக்கு ஜாமீன் தருவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனைகளை தரக்கூடும், மன அமைதி வெகுவாக பாதிக்கும், கற்ற கல்வி ஜாதகருக்கு பயன் தாரது, எனவே ஜாதகர் பூவீகத்தில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கூட்டாளிகள் மூலம் நல்ல வருமான வாய்ப்பை பெற கூடும், கூட்டு முயற்ச்சி பலிதம் தந்த போதிலும், ஜாதகரின் முன்னேற்றம் சிறிது பாதிப்பை தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து இன்னல்கள் வந்த போதிலும் ஜாதகருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு குறைவு இருக்காது 7ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் பாவக அமைவது ஜாதகரின் முன்னேற்றம் என்பது ஜாதகரின் வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் மூலம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது, 7ம் வீடு 12ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் மேற்கண்ட அமைப்புகளில் இருந்து அதிர்ஷ்ட வாய்ப்பை வழங்கிய போதிலும், மன நிம்மதியை வெகுவாக குறைக்க கூடும், எனவே ஜாதகர் தனது மன ஆளுமை திறனை அதிக அளவில் வளர்த்துகொள்வது சிறந்தது, சமயத்தில் இவர்கள் வழியில் ஜாதகருக்கு இன்னல்கள் வந்த போதிலும், அந்த இன்னல்கள் மூலம் ஜாதகர் மிகுந்த யோகத்தையே பெறுவார் என்பது குறிப்பிட தக்கது.

8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும், இருப்பினும் திடீர் இழப்புகளை ஜாதகர் தவிர்க்க இயலாது, அதிக முதலீடுகளை தவிர்ப்பதும், சேமிக்கும் பழக்கத்தை கையாள்வதும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் ஏற்றுகொள்வது, சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும், பாதுகாப்பான பயணமும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும், ஜாதகரை பெரிய சிரமங்களில் இருந்து காப்பாற்றும்.

மேற்கண்ட பலன்கள் ஜாதகரின் சுய ஜாதக அமைப்பின் படி 12 பாவகங்களின் தன்மை, பெரும்பாலான பாவகங்கள் ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும் அமைப்பில் இருப்பது ஜாதகருக்கு சாதகமான விஷயமே, இனி ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை, எதிர்வரும் திசை எவ்வித பலன்களை தருகிறது என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

தற்பொழுது ஜாதகருக்கு நடைபெறும் திசை சுக்கிரன் திசை :  ( 02/08/1996 முதல் 02/08/2016 வரை )

தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை ஜாதகருக்கு 5,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது  ஜாதகர் படும் துன்பத்தின் தன்மையை தெளிவாக விளக்குகிறது, ஜாதகர் தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசையின் அவயோக பலன்களை 12ம் பாவக வழியில் இருந்து கடுமையாக அனுபவித்து வருவது தெளிவாகிறது, மேலும் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடாகவும், சர நீர் தத்துவ ராசியாக  கடகத்தில் அமைவதும், ஜாதகர் பெரும் மன அழுத்தம் மற்றும் மன போராட்டங்களை தெளிவு படுத்துகிறது, மனம் பாதித்தால் ஜாதகருக்கு சுக வாழ்க்கை எது என்பது போல், ஜாதகர் சுக்கிரன் திசையில் அதிக இன்னல்களுக்கு ஆர்ப்பட்டு, தெளிவற்ற குறிக்கோள் இல்லாத வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தந்தது, பொதுவாக சுக்கிரன் திசை மிகுந்த யோகத்தை தரும் என்பர், இங்கு ஜாதகருக்கு நடப்பதோ 5,7ம் பாவக வழியில் இருந்து மன நிம்மதி இழப்பு மற்றும் மனபோரட்டமே, ஆக ஜாதகர் சுக்கிரன் திசையில் கடந்து வந்த பாதை அவ்வளவு நன்றாக அமையவில்லை என்பதே முற்றிலும் உண்மை.

மேலும் தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் தசை கேது புத்தியும் 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஒரு வகையில் இன்னல்களை தரும் என்ற போதிலும், கோட்சார நன்மைகளை ஜாதகர் பெறுவதில் எவ்வித தடையும் இல்லை என்பது வரவேற்க தக்கது, கேது புத்தி ஜாதகருக்கு திடீர் நிகழ்வுகள் மூலம் நல்ல வெற்றி வாய்ப்பை கொடுக்கும் என்பது வரவேற்க தக்கது, ஜாதகருக்கு இனிவரும் காலம் நன்மைகளை செய்வதில் தடையில்லை .

ஜாதகருக்கு அடுத்து வரும் சூரியன் திசை தரும் பலன்கள் : ( 02/08/2016 முதல் 03/08/2022 வரை ) 

ஜாதகருக்கு அடுத்து வரும் சூரியன் திசை 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 10ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக வருவதும், அபரிவிதமான தொழில் முன்னேற்றத்தையும், அளவில்லா செல்வாக்கையும் வாரி வழங்கும் என்பது உறுதியாகிறது, தன்னிறைவான வருமான வாய்ப்புகள் ஜாதகருக்கு நிலையாக நின்று வருமானத்தை வாரி வழங்கும், பொருளாதார ரீதியான வெற்றிகளை ஜாதகர் பரிபூரணமாக அனுபவிக்கும் யோக காலமாக இதை கருதலாம், ஜாதகரின் பேச்சுக்கும் சொல்லுக்கும் மதிப்பு மரியாதை கிடைக்கும், ஜீவன வழியில் இருந்து மிகுந்த யோக பலனை ஜாதகர் தங்குதடையின்றி  சூரியன் திசையில் பெறுவார் என்பது 100% விகிதம் உறுதி, என்பதால் சூரியன் திசையில் ஜாதகர் தனது திட்டமிடுதல்களுக்கு முழு வடிவம் தரலாம், சகல நிலைகளில் இருந்தும் வெற்றிகள் ஜாதகருக்கு கைகொடுக்கும், மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது, வாழ்த்துகள்.


குறிப்பு :

சுய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் ( பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது ) இருந்த போதிலும், நடைபெறும் திசை எதிர்வரும் திசை யோகம் பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் அனுபவிக்க இயலும், மாறாக நடைபெறும் திசை அவயோக பலனை தரும் பாவகங்களின் தொடர்பை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு துன்பமே மிஞ்சும் என்பதற்கு நல்ல உதாரண ஜாதகமாக மேற்கண்ட ஜாதகத்தை எடுத்துகொள்லாம்.

ஜாதகருக்கு 1,3,9,11ம் வீடுகள் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம், 2,4,6,12ம் வீடுகள் பூர்வ புண்ணியமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம், 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோகத்தை வழங்கிய போதிலும், தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் சுக்கிரன் திசை 5,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை நடத்தியதால், ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலவில்லை, மேலும் ஜாதகருக்கு சுக்கிரன் திசை சரியான பருவ வயதில் வந்தது, ஜாதகரின் கல்வி, தொழில், வேலை மற்றும்  திருமணம் என பல நிலைகளில் அதிக இன்னல்களை வழங்கியது, வருந்தத்தக்க ஒரு விஷயமாகவே கருத வேண்டியுள்ளது, அடுத்து வரும் சூரியன் திசை, சந்திரன் திசை, செவ்வாய் திசை முறையே சூரியனும் செவ்வாயும் ஜீவன ஸ்தான வெற்றிகளையும், சந்திரன் பூர்வபுண்ணிய ஸ்தான அமைப்பில் இருந்தும் யோகங்களை தந்து ஹாட்ரிக் அடிப்பது, ஜாதகரின் யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது.

20 வருட சுக்கிரன் திசையில் அனுபவித்த இன்னல்களுக்கு நிகரான யோகங்களை ஜாதகர் தன்னிறைவாக பெற்று பின்யோக ஜாதகராக திகழ்வது வரவேற்க்கதக்கதே வாழ்த்துகள் அன்பரே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

4 கருத்துகள்:

  1. பாகைகள் கணக்கிடுவதிலேயே தவறு செய்கிறீர்கள் அன்பரே.

    இதற்கு முந்தைய பதிவின் பின்னூட்டத்தை கவனியும்.
    "அய்யா!, உங்களை மடக்குவதற்காக இதை எழுதவில்லை. சிறு பிழையும் அவநம்பிக்கைக்கு வித்தாகும் என்பதால் இதை எழுதுகிறேன்.

    12 ராசிகள். ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகைகள். முதல் ராசி மேஷம். கடைசி ராசி மிதுனம்.

    மென் பொருள் காட்டுவதைப் பாரும். cusp 7 ல் 27.23 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்த ஜாதகத்தில் 7ம் வீடான மேஷ ராசி 27 பாகைகளில் முடிகிறது என்று அர்த்தம்.

    அதாவது mundane astrology படி முதல் வீடான மேஷ ராசி 27.23 ல் முடிகிறது என்று அர்த்தம். அதாவது மேஷ ராசி 1 ம் பாகையில் தொடங்கி 27.23 பாகையில் முடிகிறது என்று அர்த்தம். இப்போது பாருங்கள் சரியாக வரும்."

    நான் உங்கள் போட்டியாளன் அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவக கணக்கீடுகள் பற்றிய கணித விஷயங்களை சற்று ஆய்வு செய்யுங்கள் அன்பரே ! தங்களின் கேள்விக்கு விடை கிடைக்கும், மேலும் ஜாதக கணிதம் பற்றிய துல்லியமான கணித விஷயங்களையும் ஆய்வு செய்யுங்கள் தங்களுக்கு தெளிவு கிடைக்கும், மாறாக 12 ராசிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு கேள்வி கேட்பதை விடுங்கள், ஜோதிட கணிதம் பற்றி தெரியாதவர்கள் கேட்க்கும் கேள்விகளை போல் உள்ளது தங்களின் கேள்விகள், முதலில் ராகு 9ல் இருக்கின்றாரா ? 8ல் இருக்கின்றாரா ? என்ற கேள்விக்கு ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்களா ?

      நீக்கு
  2. முந்தைய பதிவில் ராகுவைப் பற்றித்தான் இத்தனை நேரம்பேசினேன். புரியவில்லையா?
    உங்களுடைய மென் பொருளில் குறிப்பிட்டிருப்பது கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் பாவத்தின் ஆரம்பமல்ல. பாவத்தின் முடிவு. 1ம் பாவம் (கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் துலாம் )179 டிகிரியில் தொடங்கி 207ல் முடிவடைகிறது.

    இதைப்போலவே 9ம் பாவம் (கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் மிதுனம் ) 56ல் தொடங்கி 85ல் முடிவடைகிறது. இப்போது ராகு எங்கிருக்கிறார் எனப்பாருங்கள்.(60.53 பாகை)

    இப்போது கட்டத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையும் சரியாக இருக்கும்.

    மென் பொருட்களின் வேலையே நமது கணிக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதுதானே ஒழிய நேரத்தை வீணாக்க அல்ல.

    ராகு 9ல் இருக்கிறார் நீங்கள் நினைப்பதைப்போல 10 இல்லை என்பதைத்தான் இத்தனை நேரம் விளக்கினேன். ஆரம்பப் பாடம்படிக்கவேண்டியது நீங்கள்தான் போலிருக்கிறது.

    இதை இத்துடன் விடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1 ம் பாவகம் துலாம் ராசியில் உள்ள 207:23 பாகையில் துவங்கி விருச்சிக ராசியில் உள்ள 236:19 பாகையில் முடிவடைகிறது.
      2 ம் பாவகம் விருச்சிக ராசியில் உள்ள 236:19 பாகையில் துவங்கி தனுசு ராசியில் உள்ள 265:36 பாகையில் முடிவடைகிறது.
      3 ம் பாவகம் தனுசு ராசியில் உள்ள 265:36 பாகையில் துவங்கி மகர ராசியில் உள்ள 296:22 பாகையில் முடிவடைகிறது.
      4 ம் பாவகம் மகர ராசியில் உள்ள 296:22 பாகையில் துவங்கி கும்ப ராசியில் உள்ள 328:20 பாகையில் முடிவடைகிறது.
      5 ம் பாவகம் கும்ப ராசியில் உள்ள 328:20 பாகையில் துவங்கி மீன ராசியில் உள்ள 359:15 பாகையில் முடிவடைகிறது.
      6 ம் பாவகம் மீன ராசியில் உள்ள 359:15 பாகையில் துவங்கி மேஷ ராசியில் உள்ள 27:23 பாகையில் முடிவடைகிறது.
      7 ம் பாவகம் மேஷ ராசியில் உள்ள 27:23 பாகையில் துவங்கி ரிஷப ராசியில் உள்ள 56:19 பாகையில் முடிவடைகிறது.

      8 ம் பாவகம் ரிஷப ராசியில் உள்ள 56:19 பாகையில் துவங்கி மிதுன ராசியில் உள்ள 85:36 பாகையில் முடிவடைகிறது. ( இந்த 8ம் பாவகத்தில்தான் ராகு பகவான் 60:53 பாகையில் அமர்ந்து இருக்கிறார் )

      9 ம் பாவகம் மிதுன ராசியில் உள்ள 85:36 பாகையில் துவங்கி கடக ராசியில் உள்ள 116:22 பாகையில் முடிவடைகிறது.
      10 ம் பாவகம் கடக ராசியில் உள்ள 116:22 பாகையில் துவங்கி சிம்ம ராசியில் உள்ள 148:20 பாகையில் முடிவடைகிறது.
      11 ம் பாவகம் சிம்ம ராசியில் உள்ள 148:20 பாகையில் துவங்கி கன்னி ராசியில் உள்ள 179:15 பாகையில் முடிவடைகிறது.
      12 ம் பாவகம் கன்னி ராசியில் உள்ள 179:15 பாகையில் துவங்கி துலாம் ராசியில் உள்ள 207:23 பாகையில் முடிவடைகிறது.

      179:15 பாகையில் லக்கினம் ஆரம்பித்தல் ஜாதகருக்கு கன்னி லக்கினம் என்றாகிவிடும் அன்பரே !

      மேலும் ராகு பகவானின் திசை 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவதாக குறிப்பிட்டு இருக்கிறோமோ தவிர, ராகு 10ல் அமர்ந்து இருக்கிறார் என்று குறிப்பிடவில்லை, ராகு 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது எப்படி என்பது உயர் கணித சார ஜோதிடம் கற்று உணர்ந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்,

      ஒரு கிரகம் தாம் அமர்ந்த இடத்தின் பலனைத்தான் தனது திசை நடத்தும் என்று பொதுவான கருத்து, சார ஜோதிடம் உணர்ந்தவர்களுக்கு ஒரு கிரகம் எங்கு அமர்ந்து இருந்தாலும் சரி, தனது திசையில் வேறு பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் வல்லமை உண்டு என்பது தெளிவாகும்.

      ஒரு விஷயத்தை விவாதிப்பதற்கு முன்பு குறிப்பிட்ட விஷயத்தில் தெளிவு பெற்ற பின் விவாதியுங்கள் , இதற்க்கு மேல் விளக்கம் தர என்னால் இயலாது அன்பரே, சற்று விஷயம் தெரிந்தவர்களுடன் கலந்து உரையாடுங்கள், இல்லையெனில் எனது அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் 9443355696

      நீக்கு