புதன், 3 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - கும்ப லக்கினம்




சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 1ல் ராகு பகவானும், 7ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

கும்ப இலக்கின சிறப்பு இயல்புகள் :

கும்ப  ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் தன்னம்பிக்கையும், சமயோசித புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவு திறனால் சமாளிக்கும் யோகம் பெற்றவர்கள், தன்னிறைவான சுக போக வாழ்க்கையை தனது சுய முயற்ச்சி  மூலம் ஈட்டும் வல்லமை பெற்றவர்கள், தனது சிந்தனைக்கும் அறிவு திறனுக்கும் வரும் சவால்களை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெரும் அன்பர்கள், எப்பொழுதும் சுறு சுறுப்பான இயக்கத்துடனும் புதிய உத்வேகத்துடனும் செயலாற்றும் தன்மை பெற்றவர்கள், தனது அறிவு திறன், விடா முயற்ச்சி, கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் தன்னை தேடி வரசெய்யும் வல்லமை பெற்றவர்கள், வருமுன் உணரும் சக்தியும், செய்யும் செயல்களின் முடிவினையும் தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள், சரியான திட்டமிடுதல்கள் இவர்களின் வெற்றிகரமான வாழ்க்கையை 100% விகிதம் நிர்ணயம் செய்யும், மனதில் நினைத்த எண்ணங்களையும், லட்சியங்களையும் தமது வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டுவரும் திறமை இயற்கையாகவே அமைய பெற்றவர்கள், வாழ்க்கையில் நடந்ததை மறந்து "வந்தது வரட்டும் வருவதை எதிர்கொள்வோம்" என்று எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துகொள்ளும் மன தைரியமும், தன்னம்பிக்கையும் இவர்களது சிறப்பு என்றால் அது மிகையல்ல.

கடந்த ராகு கேது பெயர்ச்சி கும்ப இலக்கின அன்பர்களுக்கு 2ல் கேதுவும்,  8ல் ராகுவும்,  சஞ்சாரம் செய்து குடும்ப ஸ்தான அமைப்பில் இருந்து அதிக இன்னல்களையும், துன்பங்களையும், வருமான இழப்புகளையும் வழங்கியது, 8ல் கேது சில சமயம் தவிர்க்க இயலாத திடீர் இழப்பையும், உடல்நல குறைவையும் தந்தது, முதலீடுகளில் இருந்து வீண் விறையங்களையும் எதிர்பாராத சந்தர்பங்களில் வழங்கியது, ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது பெயர்ச்சியினால் மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்குகிறது, லக்கினத்தில் கேது பகவானின் சஞ்சார நிலை தங்களுக்கு அறிவு திறன், புத்திசாலித்தனம் மூலம்  வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தரும், திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத உதவிகள், சுய தொழில் முன்னேற்றம், அனைவரின் ஆதரவு கிடைத்தல்,  முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் வாய்ப்பு, சிந்தித்து சரியான விஷயங்களை கையாளும் வல்லமை, எதிர்ப்புகள்    அனைத்தும்  அகன்று வெற்றி வாய்ப்பினை மிக எளிதாக பெரும் யோகம், உடல் மற்றும் மன நலனில் ஆர்வம், இதுவரை தீராத உடல் தொந்தரவுகளுக்கு சரியான மருத்துவம் மூலம் நலம் உண்டாகுதல், சிறந்த  ஆன்மீக குருவின் ஆசி மூலம் வாழ்க்கையில் நலம் பெறுதல், சிறப்பு வாய்ந்த ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோக, புதிய மாற்றங்களையும் புதிய வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் லாபமும், அதிர்ஷ்டமும் பெரும் யோகம், செல்லும் இடங்களில் நல்ல வரவேற்ப்பு, அன்னியர்கள் மூலம் அளவில்லா லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், எனவே லக்கினத்தில் கேது சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை வாரி வழங்கும்.

7ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால், தங்களின் வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித ஸ்திரமான நன்மைகளை பெற இயலும், குறிப்பாக இதுவரை திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு, அதிஷ்டம் மிகுந்த சிறப்பான வாழ்க்கை துணை பெரும் யோகம் உண்டாகும், காதலில் வெற்றியும், திருமண வாழ்க்கையில் சந்தோஷமும் உண்டாகும், நண்பர்கள் கூட்டாளிகள் தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவிகரமான செயல்களில் ஈடுபடுவார்கள், கூட்டு தொழில் மூலம் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வெளிநாடுகளில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அளவில்லா லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், தொழில்   விருத்தி தங்களுக்கு தங்கு தடையின்றி அமையும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்காலம், மருத்துவம் சார்ந்த கல்வி கற்றுகொண்டு  இருக்கும் மாணவர்களுக்கு சிறந்த முன்னேற்றமும், நல்ல வேலை வாய்ப்பும் அமையும், வெளிநாடு வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை வாரி வழங்கும்,  எதிர்பார்ப்புகள் நிறைவேறும், சமூக அந்தஸ்தும்,கௌரவமும் அதிகரிக்கும், அரசியலில் உள்ள அன்பர்களுக்கு ஸ்திரமான வெற்றி கிட்டும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் அதிர்ஷ்டமும், லாபமும் அதிகரிக்கும், கூட்டு தொழிலில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான லாபம் நிச்சயம் கிடைக்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி கும்ப இலக்கின அன்பர்களுக்கு 100% விகிதம் சுய முன்னேற்றத்தையும் எதிர்பாராத மக்கள் செல்வாக்கையும் வாரி  வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, கும்ப  இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் லக்கினம் மற்றும்  களத்திர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் கும்ப இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 01 மற்றும் 07ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே கும்ப இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 01,07ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக