புதன், 17 பிப்ரவரி, 2016

திருமண பொருத்தம் சுய ஜாதகத்தில் பாவக வழியிலான நிர்ணயம் !


திருமண பொருத்தம் காண்பதில், சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டு வதுவுக்கும்,வரணுக்கும் பொருத்தம் நிர்ணயம் செய்வது தாம்பதியர் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களையும், மகிழ்ச்சி நிறைந்த யோக வாழ்க்கைக்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தரும், மேலும் தம்பதியர் ஒற்றுமை, பொருளாதார முன்னேற்றம், சமுதாய அந்தஸ்து, சிறந்த புத்திர பாக்கிய யோகம், மன வாழ்க்கையில் பிரிவு இல்லாத நிலை, மனமொத்த தாம்பத்திய வாழ்க்கை என சகல விதங்களில் இருந்து சிறப்பான நற்பலன்களை வாரி வழங்கும், எனவே திருமண பொருத்தம் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்வது எப்படி என்பதை, உதாரண ஜாதகங்கள் கொண்டு இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே!

வரன் ஜாதகம் 


வது ஜாதகம் 



பாவக வழியிலான திருமண பொருத்தம் :

தம்பதியரின் இல்லற வாழ்க்கையை நிர்ணயம்  செய்யும்  குடும்பம் ஸ்தானம் எனும் 2ம் பாவக பொருத்தம் :

ஜாதகருக்கு 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது சிறப்பு, எனவே ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை என்பது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமையும்.

ஜாதகிக்கு 2ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவக்த்துடன் சம்பந்த்தம் பெறுவது, ஜாதகி தனக்கு அமையும் இல்லற வாழ்க்கையில் இருந்து  அதிக இன்னல்களையும் துன்பங்களையும், எதிர்கொள்வதை காட்டுகிறது, ஜாதகிக்கு குடும்பம் எனப்படும் 2ம் பாவகம் 200% விகித பாதிப்பில் இருப்பது இல்லற வாழ்க்கையில் துன்பத்தையும் துயரத்தையும் வாரி வழங்கும்.

தம்பதியரின் ஒற்றுமையையும், இனிமையான தாம்பத்திய வாழ்க்கையையும் நிர்ணயம் செய்யும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவக பொருத்தம் :

ஜாதகருக்கு 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் தனது மனைவியுடனான ஒற்றுமையையும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் மன நிலையையும், தாம்பத்திய வெற்றியையும் உறுதி செய்கிறது, ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையாக காணப்படுவது ஜாதகருக்கு களத்திர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த யோகங்களை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தாம்பத்த்திய வாழ்க்கையை கேள்விகுரியாக்குவதுடன், ஜாதகியை மணந்துகொள்ளும் அன்பரின் வாழ்க்கையை 200% விகித இன்னல் அடைவதை  உறுதி படுத்துகிறது, ஜாதகியின் வாழ்க்கை துணைக்கு மிகுந்த இன்னல்களையும், மன நிம்மதி இழப்பையும் அதிக அளவில் தரும், ஜாதகியின் கணவருக்கு சுய ஜாதகத்தில் எவ்வித யோகங்கள் இருந்தாலும் பலனின்றி போகும், ஜீவன வாழ்க்கைக்கே போராடும் சூழ்நிலையை தரும்.

தம்பதியர் ஒருவர் வழியில் இருந்து ஒருவர் பெரும் யோகம், ஆயுள் போன்றவற்றை நிர்ணயம் செய்யும் 8ம் பாவக பொருத்தம்:

ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சுலப வழியில் ஜீவன வெற்றியை தரும், செய்யும் தொழிலில் புதையலுக்கு நிகரான யோக வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், தனது  வாழ்க்கை துணைக்கு தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை அனுபவிக்கும் யோகத்தை ஏற்படுத்தி தருவார், ஜாதகருக்கு பூர்ண ஆயுள் விருத்தியை தரும்.

ஜாதகிக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சுலப வழியில் ஜீவன வெற்றியை தரும், செய்யும் தொழிலில் புதையலுக்கு நிகரான யோக வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், தனது வாழ்க்கை துணைக்கு யோகத்தை தந்த போதிலும், பெரிய அளவிலான நன்மைகளை செய்வதற்கு இயலாமல் 2,7ம் பாவகங்கள் தடுக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் இருந்து பிரிவு ஏற்படுவதால் தனது கணவனுக்கு யோகத்தை தரும்.

தம்பதியர் தமது குலம் விருத்தி பெற சிறப்பான வாரிசுகளை வழங்கும் 5ம் பாவக பொருத்தம்:

ஜாதகருக்கு 5ம் வீடு பாதக பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஆண் வாரி அமைவதில் தடைகளை ஏற்ப்படுத்தும், சமயோசித அறிவு திறன் ஜாதகருக்கு சரியான நேரத்தில் பயன்பட வாய்ப்பு இல்லாமல் போகும் , கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம் என்பது சற்று குறைவானதாகவே அமையும், பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

ஜாதகிக்கு 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது நல்ல வாரிசை வாரி வழங்கும் ( வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது அவசியம் ) தான் கற்ற கல்வி இறுதி வரை ஜாதகிக்கு முழு பலனை வாரி வழங்கும், குழந்தைகள் வழியில் இருந்தும், குல தெய்வத்தின் வழியில் இருந்தும் மிகுந்த நன்மைகளை பெறுவார், எந்த ஒரு சூழ்நிலையிலும் இறை அருள் ஜாதகிக்கு பாதுகாப்பாக விளங்கும்.

நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலன்கள் மற்றும் பொருத்தம் :

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 30/07/2012 முதல் 30/07/2028 வரை ) 2,6,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது, ஜீவன முன்னேற்றத்தை ஜாதகருக்கு அபரிவிதமாக வாரி வழங்கும் என்பதால் குரு திசை முழுவதும் ஜாதகருக்கு யோக காலமே, குரு திசையில் தற்பொழுது நடைபெறும் சனி புத்தி ( 17/09/2014 முதல் 30/03/2017 வரை ) 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தொழில் ரீதியான வெற்றிகளை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதால் சனி புத்தியும் ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து யோக பலன்களை வாரி வழங்குகிறது.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ( 16/07/1997 முதல் 16/07/2017 வரை ) 3,6,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித அவயோக பலன்களையும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தருவது மிகுந்த இன்னல்களை தரும், சுக்கிரன் திசையில் புதன் புத்தி ( 16/07/2013 முதல் 16/05/2016 வரை ) 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது, குடும்பம் மற்றும் களத்திரம் என்ற அமைப்பில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், மேலும் ஜாதகிக்கு திருமணத்திற்கு உகந்த காலமும் இதுவல்ல என்பது உறுதியாகிறது.

எனவே எந்த விதத்திலும் மணமகனுக்கு ஏற்ற பொருத்தமான மணப்பெண் இதுவல்ல என்பது "ஜோதிடதீபத்தின்" கருத்து.

ஆனால் மணமகளுக்கு சிறந்த நன்மைகளை தரும், பொருத்தமான மணமகன் என்பது கவனிக்க தக்கது, ஜாதகி இந்த மணமகனை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வது, ஜாதகிக்கு மிகுந்த யோகத்தை தரும், ஆனால் அதற்க்கு தற்பொழுது நடைபெறும் திசாபுத்தியும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானமும்  வழிவிடுமா என்பது கேள்விக்குறியே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக