சனி, 2 ஜூன், 2012

நாகதோஷம்,சர்பதோஷம் பற்றிய உண்மை விளக்கம் ! பகுதி 4

 

ராகு கேது எனும் இரு கிரகங்களும் லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், இருந்தாலே அவை பாதிப்பை மட்டும் செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறு. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது எனும் இரு கிரகங்கள் முறையே ஏதாவது ஒன்று லக்கினத்திற்கு 2,4,5,7,8,12 ம் வீடுகளில்  அமர்ந்தால் நன்மை செய்யுமா  தீமை செய்யுமா என்பதை பற்றி பார்ப்போம்.


மகர லக்கினத்திற்கு


2 ம் வீடு கும்ப ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு நல்ல குடும்பம் அமையும், கைநிறைய நல்ல வருமானம் பெரும் அமைப்பு என ஜாதகருக்கு மிகசிறந்த யோக பலனையே தரும் , மேலும் நல்ல மனைவி , செய்யும் தொழில் நிறைய வருமானம் , லாட்டரியில் பரிசு விழும் அமைப்பு , மனைவி வழி சொத்து , கூட்டாளிகளின் சொத்துகளை பெரும் அமைப்பு , ஜாதகரின் பேச்சாற்றலால் வருமானம் , இசை துறையிலிருந்து நல்ல வருவாய், நிலையான வருமானம் , திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம் என இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .

4 ம் வீடு மேஷ ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு வீடு வண்டி வாகனம் , சொத்து சுகம் , விவசாய நிலம் , ரியல் எஸ்டேட் வியாபாரம் , போக்குவரத்து சரக்கு வாகனம் ,  வெளிநாடு மதுபான வகைகளை விற்பனை என ஜாதகர் , செய்யும் அனைத்து தொழில்களிலும் வெற்றியினை மட்டுமே பெறுவார், ஜாதகருக்கு வருமானம் என்பது ஏதாவது ஒரு வகையில் வந்து கொண்டே இருக்கும் , மேலும் ஜாதகருக்கு அனைத்து வசதியும் கொண்ட வீடு அமையும் , சொகுசு வாகனம் அமையும் , ஜாதகரின் பேரில் வாங்கும் சொத்துகள் அனைத்தும் , பன்மடங்கு பெருகும் , நிலையான சொத்துகள் இவருக்கு எதிர்பாராத அமைப்பில் வந்து சேரும். ஆனால் ஜாதகருக்கு தகப்பானார் வழியில் இருந்து பெரிய நன்மைகளை பெற இயலாது , மேலும் தொழில் கவனமுடன் இல்லையெனில் விழ்ச்சியை ஜாதகரால் தவிர்க்க இயலாது , நான்காம் பாவாக அமைப்பிற்கு இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .

5 ம் வீடு ரிஷப ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு பூர்விக அமைப்பில் இருந்து பல முன்னேற்றங்களை அனுபவிக்க முடியும் , குல தெய்வத்தின் பரிபூரண அருள் ஜாதகருக்கு நிறைந்து இருக்கும் , வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் பெரும் அமைப்பை தரும் பூர்வீகத்தில் இருந்தால் , ஜாதகருக்கு நல்ல புத்திர சந்தானம் ஏற்ப்படும் , பிறக்கும் குழந்தையின் ஜாதக அமைப்பு ஜாதகருக்கு நன்மைகளை மட்டுமே வாரி வழங்கும், ஜாதகருக்கு செய்யும் தொழில்களில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்படும் , திடீர் என வாழ்க்கையில் சில அதிர்ஷ்டங்கள் வரும் , இதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஜாதகர் பெறுவார் , பழைய புராதன பொருட்களை சேகரிக்கும் தன்மை இயற்கையாகவே ஜாதகருக்கு அமைந்திருக்கும், பழைய சொத்துகள் , புதையல் யோகம் என ஜாதகருக்கு இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .

7 ம் வீடு கடக ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், தேய் பிறை 
சந்திரன் என்றால் ஜாதகருக்கு தனது மனைவி வழியிலும் , தாய் வழியிலும் நல்ல யோகங்கள் ஏற்ப்படும் , மேலும் கூட்டு தொழில் செய்வதால் ஜாதகருக்கு அபரிவிதமான யோகம் ஏற்ப்படும் , மக்கள் செல்வாக்கு ஜாதகருக்கு இயற்கையாக அமையும் , களத்திர வழியில் அதிக நன்மையை பெரும் அமைப்பினையே ஜாதகர் பெறுவார் , ஜாதகருக்கு அனைவரிடமும் நல்ல பெயர் கிடைக்கும். இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .

இதுவே வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் களத்திர வழியிலும் , கூட்டு தொழில் அமைப்பிலும் , எந்தவிதமான நன்மையையும் பெற இயலாது , மேலும் ஜாதகருக்கு பல தார அமைப்பு உண்டாகும் அதுவும் நிம்மதியற்ற வாழ்க்கையாக இருக்கும் , பொதுமக்களால் ஜாதகருக்கு துன்பம் உண்டாகும் , கூட்டாளிகள் ஒரு காலத்தில் நம்பிக்கை துரோகிகளாக மாற வாய்ப்பு அதிகம் , ஜாதகருக்கு கூட்டு தொழில் செய்வது அவ்வளவு நன்மையை தருவதில்லை. இந்த அமைப்பு 100 சதவிகித தீமையான பலனையே தரும் .

8 ம் வீடு சிம்ம ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் அமையும் , செய்யும் தொழில்களில் அதிரடியான முன்னேற்றம் பெறுவார் , அதிகம் அரசு துறையில் பணியாற்றும் யோகம் கொண்டவர்கள் , நல்ல அனுபவமும் , நிர்வாக திறமையும் கொண்டவர்கள் , இவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் பரிபூரண அருள் எப்பொழுதும் நிறைந்து இருக்கும் , அரசியலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் , ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் நல்ல லாபம் என ஜாதகருக்கு முன்னேற்றத்தின் மேல் முன்னேற்றமே கிடைக்கும் .இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .

12 ம் வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் எங்கே நிம்மதி , எங்கே நிம்மதி என்று பாட வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும் , ஜாதகரை அனைவரும் துன்புறுத்துவார்கள் , மேலும் ஜாதகரே தன்னை துன்புருத்திகொள்வார், போதை பழக்கத்திற்கு அதிகம் ஆளாகும் தன்மை இந்த அமைப்பை பெற்றவர்களுக்கே ஏற்ப்படுகிறது, நல்ல நிம்மதியான தூக்கம் ஜாதகருக்கு கிடைப்பது அரிது , பேய், பிசாசு, காத்து கருப்பு , என ஜாதகர் இந்த வழியிலும் துன்பம் அனுபவிக்க வேண்டி இருக்கும் , ஜாதகர் பட்டு மெத்தையில் படுத்தாலும் தூக்கம் கிடைக்காது, துன்பத்தில் இன்பம் காண்பவர்கள், இவர்கள் அனைவரும் மனதை கட்டுபடுத்த வேண்டும் இல்லை எனில் துன்பத்திற்கு அளவிருக்காது, இந்த அமைப்பு 100 சதவிகித தீமையான பலனையே தரும் .




கும்ப லக்கினத்திற்கு


2 ம் வீடு மீன ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு நல்ல குடும்பம் அமைய வாய்ப்பு குறைவு , நல்ல வருமானம் அமையாது இதன் காரணமாக , ஜாதகர் மன நிம்மதி இழக்கும் சூழ்நிலை ஏற்ப்படும் , ஜாதகர் சேமிக்கும் பழக்கத்தை சிறு வயது முதல் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் இல்லை எனில், பொருளாதார சிக்கல்களை அனுபவிக்க வேண்டி வரும் , மேலும் மனைவி இழுக்கும் இழுப்புக்கெல்லாம் சென்றாகவேண்டிய நிலை உருவாகும் , மனைவி என்ன பேசினாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட வேண்டும் , எதிர்த்து பேசினால் குடுமப்த்தில் நிம்மதி என்பது கிடைக்க வாய்ப்பு இல்லை, இந்த அமைப்பு 100 சதவிகித தீமையான பலனையே தரும் .

4 ம் வீடு ரிஷப ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு குடி இருக்க நல்ல வீடு கிடைக்காது, அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி கொண்டே இருக்க வேண்டி வரும், அல்லது தொழில் ரீதியாக இட மாற்றங்கள் ஜாதகருக்கு அமையும் , எந்த விதமான சொத்துக்களையும் ஜாதகர் தனது பெயரில் வைத்துகொள்வது அவ்வளவு நல்லதல்ல, தனது தாய்வழியில் சில துன்பங்கள் ஜாதகருக்கு ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் இருப்பினும் தனது பெற்றோரை பேணிகாப்பது அவசியம் , எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுதும் பெரிவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது ஜாதகருக்கு அதிக நன்மையை தரும் , இந்த அமைப்பு 100 சதவிகித தீமையான பலனையே தரும் .

5 ம் வீடு மிதுன ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும், பூர்வீகம் , குலதெய்வ அருள் , குழந்தைகளால் யோகம் , பூர்வ புண்ணியத்தில் வசிப்பதால் ஜாதகருக்கு அனைத்தும் நன்மையாக நடக்கும் , எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி பெரும் , மக்கள் செல்வாக்கும் , ஆதரவும் நிறைந்திருக்கும் , எழுத்தாற்றல் மூலம் ஜாதகர் அனைவரையும் வசியம் செய்யும் தன்மை உள்ளவராக காணப்படுவார், எழுத்து , அச்சு , பத்திரிகை துறை என ஜாதகர் சிறந்து விளங்கும் தன்மை ஏற்ப்படும் . இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .
 
சூரியனுக்கு 14 பாகைக்குள் இருக்கும் புதன் என்றால் , ஜாதகர் தனது பூர்வீகத்தில் வசிக்க இயலாது , இருந்தால் ஜாதகருக்கு எந்தவிதமான முன்னேற்றமும் கிடைக்காது , மேலும் குழந்தை பாக்கியம் அமைவதில் தாமதம் ஏற்ப்படும் , முன்னேற்றம் தடைபடும் , உதவி செய்வார்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவாகும்.இந்த அமைப்பு 100 சதவிகித தீமையான பலனையே தரும் .

7 ம் வீடு சிம்ம ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், மிக சிறந்த அரசியல்வாதி மக்களுக்காக பாடு படும் யோகம் உள்ளவர்கள் , நண்பர்கள் சேர்க்கை அதிகம் உள்ளவர்கள் , பொதுமக்களின் நிரந்தர ஆதரவு ஜாதகருக்கு எப்பொழுது உண்டு , பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்கும் குணம் கொண்டவர்கள் , மனைவியால் சகல யோகங்களும் ஜாதகருக்கு ஏற்ப்படும் , கூட்டு தொழிலால் நிகரற்ற லாபத்தை அடைவார்கள், தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள், எந்த சூழ்நிலையிலும் தர்மத்தை , சட்டத்தை மீறாதவர்கள், இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இருப்பின் எதையும் சாதிக்கும் தன்மை கொண்டவர்கள்,இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .

8 ம் வீடு கன்னி ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகிதம் தீமையான பலனையே தரும், திடீர் இழப்புகளை  சந்திக்க வேண்டி வரும் பொருளாதார ரீதியாகவும் , மன ரீதியாகவும் , ஜாதகர் கடன் பெறுவதும் , கடன் கொடுப்பதும் சிக்கலிலே கொண்டு விடும் தன்மை ஏற்ப்படும் .

சூரியனுக்கு 14 பாகைக்குள் இருக்கும் புதன் என்றால் , ஜாதகர் திடிர் என வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பை தரும் , நிறைய பொருள் வரவுகள் உண்டு , நீண்ட ஆயுள் உண்டு மக்கள் செல்வாக்கால் முன்னேற்றம் பெறுவார் , வட்டி தொழில் செய்வதால் 100 சதவிகித லாபம் பெறுவார், இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .

12 ம் வீடு மகர  ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் வெளிநாடுகளில் இருந்து நல்ல வருமானம் பெரும் யோகம் உண்டு , நல்ல நிம்மதியான வாழ்க்கை அமையும் , நேர்மையான குணத்தால் அனைவராலும் கவரப்படுவார் , பொருள் வரவும் தொழில் முன்னேற்றமும் அளவற்ற அமைப்பில் தானாக வந்து அமையும் , இவர்களுடன் சார்ந்து இருப்பவர்களும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார்கள் , கலை துறையில் சாதிக்கும் தன்மை ஜாதாகருக்கு நிச்சயம் உண்டு , வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யமாக செல்லும் , சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள் , ஆன்மீக பெரியவர்களின் அறிமுகம் ஜாதகருக்கு இயற்கையாக அமையும் . இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .



மீன லக்கினத்திற்கு

2 ம் வீடு மேஷ ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு குறைவற்ற வருமானம் எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கும் , குடும்பம் இனிதாக அமைந்திருக்கும் , ஜாதகரின் வார்த்தைக்கு அனைவரிடத்திலும் மதிப்பிருக்கும் , பொருளாதார அமைப்பில் விரைவில் முன்னேற்றம் தரும் அமைப்பை கொண்டவர்கள், அதே சமயம் பணத்தை சரியாக கையாளவில்லை எனில் திடிர் இழப்புகளை தவிர்க்க இயலாது , மற்றவரின் பேச்சை கேட்டுக்கொண்டு செய்யும் அனைத்து காரியங்களும் துன்பம் தரும் குடும்பம் , வருமானம் , வாக்கு என்ற அமைப்பில் 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .
4 ம் வீடு மிதுன ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகிதம் தீமையான பலனையே தரும், முயற்ச்சிகள் யாவும் தோல்வி பெரும் , முன்னேற்றம் தடைபடும் , சகோதர வழியிலும் , தாய் வழியிலும் துன்பமே ஏற்ப்படும் , வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை படும். இந்த அமைப்பு 100 சதவிகிதம் தீமையான பலனையே தரும்.

சூரியனுக்கு 14 பாகைக்குள் இருக்கும் புதன் என்றால் , வண்டி வாகனம் , சொத்து சுகம் , என ஜாதகருக்கு மிகசிறந்த யோக பலனையே தரும் , மேலும் சுயமாக உழைத்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அடையும் தன்மை பெற்றவர்கள் , அரசு துறைகளில் நல்ல ஆதாயம் ஜாதகருக்கு உண்டு , தனது புத்திசாலி தனத்தால் அனைத்தையும் அடையும் ஆற்றல் கொண்டவர்கள் .இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .

5 ம் வீடு கடக ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், வளர்பிறை சந்திரன் என்றால் ஜாதகரின் பூர்வீகத்தில் இருந்து கொண்டு சகல யோகங்களையும் அடையும் பேரு பெற்றவர்கள் , அதிர்ஷ்டம் ஜாதகருக்கு பரி பூரணமாக வேலை செய்யும் , குல தெய்வத்தின் அருளால் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் வாய்ப்பினை பெற்றவர்கள் இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .


தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் பூர்வீகத்தில் ஜீவித்திருக்க முடியாது புத்திர சந்தான தாமதம் உண்டாகும் குல தெய்வ சாபத்தால் வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஜாதகருக்கு கிடைக்காது இவர்கள் முறையாக குல தெய்வ வழிபாடு செய்து நலம் பெறுவது அவசியம் இந்த அமைப்பு 100 சதவிகிதம் தீமையான பலனையே தரும்.

7 ம் வீடு கன்னி ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகிதம் தீமையான பலனையே தரும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாது , பல தார யோகம் உண்டாகும் , கூட்டு தொழிலால் கடனாளியாக மாற வேண்டிய நிலை ஏற்ப்படும், மனைவியால் அதிக துன்பம் ஏற்ப்படும் இதனால் உடல் நிலை பாதிக்கும் மன நிலையும் பாதிக்கும் இந்த அமைப்பு 100 சதவிகிதம் தீமையான பலனையே தரும்.

சூரியனுக்கு 14 பாகைக்குள் இருக்கும் புதன் என்றால் , களத்திர வழியில் நல்ல சந்தோஷமும் , நண்பர்களால் முன்னேற்றமும் , கூட்டு தொழிலால் நல்ல லாபமும் ஜாதகருக்கு நிச்சயம் ஏற்ப்படும் , தன்னம்பிக்கை  கொண்டுள்ள மனிதராக காணப்படுவார் , பொதுமக்கள் ஆதரவு நிச்சயம் ஜாதகருக்கு எப்பொழுதும் உண்டு இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .

8 ம் வீடு துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு மனைவி வழியிலும் , நண்பர்கள் வழியிலும் அதிக கெடுதல்கள் நடக்கும் , மேலும் ஜாதகர் முன்பின் யோசனை செய்யாமல் செய்யும் செயல்களால் அதிக துன்பமும் , திடீர் இழப்புகளையும் சந்திக்க வேண்டி வரும் , இவர்கள்  ஆன்மிக பெரியவர்களிடம் தீட்சை பெறுவது முக்கியம், பெரியவர்களின் ஆலோசனை படி நடப்பது அவசியம் .இந்த அமைப்பு 100 சதவிகிதம் தீமையான பலனையே தரும்.

12 ம் வீடு கும்ப ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்ட சாலி ஜாதகருக்கு ஏதாவது ஒரு வகையில் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும், நல்ல நிம்மதியான வாழ்க்கை அமைந்துவிடும் , அதிக முதலீடு செய்வதால் நல்ல லாபம் பெரும் அமைப்பை கொண்டவர்கள் , பங்கு, லாட்டரி , சீட்டு ஆகிய வழிகளில் நல்ல முன்னேற்றம் ஜாதகருக்கு ஏற்ப்படும் , பெரிய முதலீடுகளை செய்து வருமானம் செய்யும் தொழில்களில் எல்லாம் விரைவான நிலைத்த முன்னேற்றத்தை பெரும் யோகம் கொண்டவர்கள் .இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் .

 குறிப்பு :

சுய ஜாதகத்தில் நடப்பு  திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவைகள்  2,4,5,7,8,12 வீடுகளின் பலன்களை நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட பலன்கள் நடக்கும் இல்லை எனில் மேற்கண்ட பலன்கள் ஜாதகரை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதை கவனத்தில் கொள்க. 



மேலும் மற்ற கிரகங்களின் பார்வை ராகு கேது அமரும் வீட்டிற்கு இருந்தால் பலன்கள் வேறுபடுமா என்ற சந்தேகம் ஏற்ப்படலாம் , உண்மையில் ராகு கேது எந்த வீடுகளில் அமருகிறர்களோ அந்த வீடுகளின் பலன்களை தான் மட்டுமே முழுவதும் உரிமையுடன் எடுத்துகொண்டு, செய்ய ஆராம்பிப்பார்கள் அது நன்மையாகவும் இருக்கலாம் , தீமையாகவும் இருக்கலாம் , இதில் மற்ற கிரகங்களின் பார்வை ஒன்றும் செய்ய இயலாது , உதாரணமாக பொம்மை முதல்வர் என்ற அமைப்பில்சம் பந்தபட்ட  வீட்டுக்கு அதிபதி மற்றும் சம்பந்தபட்ட பாவகம் ஆகியன பொம்மை முதல்வர் , அங்கு அமரும் ராகு கேதுவே முழுவதும் ஆட்சி செய்யும் .

மேலும் இது 
2,4,5,7,8,12 ஆகிய வீடுகளுக்கு மட்டும் தான் பலன் பொருந்தும் என்றில்லை லக்கினம் முதல் அனைத்து பாவகங்களுக்கும் பொருந்தும் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்வது அவசியம். உண்மையில் மாற்ற கிரகங்களை விட ராகு கேதுவுக்கே ஜாதகத்தில் பலன் நடத்துவதில் அதிக பங்கு உண்டு , ஒருவருக்கு ஏற்ப்படும் தொடர்புகளை ( நல்லவர் சேர்க்கை, தீயவர் சேர்க்கை ) நிர்ணயக்கும் தன்மை இந்த சாயா கிரகங்களுக்கு மட்டும் உண்டு என்பதை இந்த இடத்தில் குறிப்பிட
விரும்புகிறேன் . 


பலன்களை தருவதிலும் நன்மையோ தீமையோ எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை இந்த சாயா கிரகங்கள் . இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பி வையுங்கள் . நமது வலை பூவை காண்பவர்களுக்கு நிச்சயம் ராகு கேது நன்மையை தந்து கொண்டு இருக்கும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, காரணம் நல்ல விஷயங்களை தொடர்பு படுத்துவதில் ராகு கேதுவை மீற ஆளில்லை .



வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

2 கருத்துகள்:

  1. Neangal solli iruptu gents & ladies eruvarukkum pornthuma ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர் சுய ஜாதகத்தை பொறுத்து நடக்கும் திசையில் , சம்பந்த பட்ட வீடுகளின் பலன் நடந்தால் நிச்சயம் சரியாக அமையும் , ஆண் , பெண் ஜாதக அமைப்பிற்கு சில வேறுபாடுகள் மட்டும் உண்டு , பலன் ஒரே மாதிரியாகவே அமையும் .

      நீக்கு