வியாழன், 7 ஜூன், 2012

சுய ஜாதகத்தில் அதிர்ஷ்ட யோக அமைப்பு !



சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு நீடித்த அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் , லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் வீடு சர ராசியாக, அமைந்து பதினொன்றாம் வீடு பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு பெறவேண்டும் , அப்படி தொடர்பு பெற்ற வீட்டின் பலனை தற்பொழுது நடக்கும் திசை நடத்தவேண்டும் ( அது எந்த திசை ஆனாலும் சரி ) இந்த அமைப்பை பெற்ற ஜாதகருக்கு, சரியான வயதில் 18 முதல் 60 வயது வரை உள்ள காலகட்டங்களில் பதினொன்றாம் வீட்டின் பலன் நடந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் வெற்றிமேல் வெற்றி குவியும் , பொருளாதார வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் அதிர்ஷ்டகரமான பலனை அனுபவிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

கால புருஷ தத்துவத்திற்கு சர ராசியாக வருபவைகள் பின் வருமாறு :

மேஷம் :

காலபுருஷ தத்துவத்திற்கு மேஷம் முதல் வீடாகவும் , சர நெருப்பு தத்துவமாகவும் அமையும் , ஒரு ஜாதகருக்கு மேஷம் பதினொன்றாம் வீடாக இருந்து பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு பெற்று நடப்பு திசை இந்த வீட்டின் பலனை தருமாயின் , ஜாதகர் தனது செயல் பாடுகளினால் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறுவார் , தனது சுய உழைப்பால் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் பெறுவார் .


 இவரது முன்னேற்றத்திற்கு முழுகாரணம் ஜாதகரே , நல்ல சுறு சுறுப்பாக உழைப்பின் மூலம் சகல வசதி வாய்ப்பினையும் பெறுவார் , சுயமாக வாழ்க்கையில் விரைவில் முன்னேற்றம் பெற்றவர்களின் ஜாதக அமைப்பில் இந்த நிலை காணப்படும் , இவர்கள் அதிகம் மின் உற்பத்தி பொருட்கள் , வாகன எரிபொருள்கள் , உணவு  பொருட்கள் , இரும்புக்கம்பி உற்பத்தி தொழில்கள் , கட்டுமான தொழில்கள் , நெருப்பு சார்ந்த தொழில்களில் 100 சதவிகித வெற்றியை  பெறுகின்றனர். அதிர்ஷ்ட வாழ்க்கையினை தனது உழைப்பின் மூலம் பெறுபவர்கள் .

கடகம் :

காலபுருஷ தத்துவத்திற்கு நான்காம் வீடாகவும் , சர நீர் தத்துவமாகவும் அமையும், ஒரு ஜாதகருக்கு கடகம் பதினொன்றாம் வீடாக இருந்து பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு பெற்று நடப்பு திசை இந்த வீட்டின் பலனை தருமாயின் , ஜாதகர் தனது மனதில் நினைக்கும் கற்பனைகளை நிஜ வாழ்க்கையில் நடக்கும் அதிசயத்தை காண்பார் , கனவிலும் காண கிடைக்காத செல்வ வளங்களை பெரும் ஆற்றல் கொண்டவர் , மற்றவர்களின் மனதில் உள்ளவற்றை தனக்கு சாதகமாக மாற்றி அதில் அதிக லாபத்தை அடையும் தன்மை கொண்டவர்கள் , இவர்களுக்கு  பின்னால் ஒரு கூட்டமே அலையும் , அந்த அளவிற்கு மனதை வசியம் செய்யும் அமைப்பை தரும் .

 ஜாதகர் தனக்கு பின்னால் உள்ள மக்கள் செல்வாக்கை காந்தி மகான் மாதிரி நன்மையான அமைப்பில் பயன்படுத்துபவர்களும் உண்டு , சில போலிசாமியார் மாதிரி தீமையான விஷயங்களுக்கு பயன்படுத்துபவர்களும் உண்டு , இதில் சுயலாபம் பார்பவர்களும் உண்டு , பொது நல வாதிகளும் உண்டு . அது அவர்களுக்கு அமையும்  இலக்கின நிலையை  பொறுத்து . லக்கினம் நல்ல நிலையில் இருப்பின் நன்மை , இல்லை எனில் தீமை , இவர்கள் அதிகம் ஆடை ஆபரணம் , உணவு பொருட்கள் , தண்ணீர் , திரவ பொருட்கள் , மனோதத்துவ ஆசிரியர் ,மருத்துவர் , வெளிநாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் அதிக முன்னேற்றமும் வண்டி வாகனம் , போக்குவரத்து சார்ந்த தொழில்களிலும் வெற்றிவாய்ப்பினை பெறுகின்றனர் , எதிர்பாராத மக்கள் செல்வாக்கும் , முன்னேற்றமும் ஜாதகரை விரைவில் அதிர்ஷ்ட வாழ்க்கையினை தரும் .


துலாம் :

 காலபுருஷ தத்துவத்திற்கு ஏழாம்  வீடாகவும் , சர காற்று  தத்துவமாகவும் அமையும், ஒரு ஜாதகருக்கு துலாம் பதினொன்றாம் வீடாக இருந்து பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு பெற்று நடப்பு திசை இந்த வீட்டின் பலனை தருமாயின் ,ஜாதகரின் அறிவாற்றல் மிகசிறந்து விளங்கும் , தனது அறிவின் வழியில் அனைத்து யோகங்களையும் பெறுவார் , புத்தி கூர்மைக்கு  பெயர் பெற்றவர்கள் , எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வினை சொல்பவர்கள் இவர்களே , மஹா பாரதத்தில் வரும் கிருஷ்ணா பரமாத்மா போன்றவர்கள் , வெற்றி தேவதை இவர்களை தேடி வருவாள் , மற்றவர்களுக்காக தனது அறிவின் வழியில் உதவி செய்யும் பேராண்மை கொண்டவர்கள் .

 பிரதி பலனாக எதையும் எதிர்பார்க்காதவர்கள், இவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் மற்றவர்களுக்கு நீண்ட நெடுநாள் பலன்களை கொடுத்துக்கொண்டு இருக்கும் , ஜாதகருக்கு செல்வவளம் அதிகம் இருந்த போதிலும் எளிமையாக வாழும் குணம் கொண்டவர்கள் , பொதுமக்களுக்கு நன்மையை மட்டுமே செய்யும் நல்ல மனம் கொண்டவர்கள் எனவே இவர்களுக்கு இறைவன் தொடர்ந்து செல்வ வளத்தை அள்ளி தந்துகொண்டே இருப்பார் , இறந்த பின்னும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடிப்பவர்கள் , மக்கள் ஆதரவையும் , நண்பர்கள் உதவியையும் தனது சுய நலத்திற்க்காக பயன்படுத்ததவர்கள் .


மகரம் :

காலபுருஷ தத்துவத்திற்கு பத்தாம்  வீடாகவும் , சர நில தத்துவமாகவும் அமையும், ஒரு ஜாதகருக்கு மகரம் பதினொன்றாம் வீடாக இருந்து பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு பெற்று நடப்பு திசை இந்த வீட்டின் பலனை தருமாயின் , ஜாதகர் இயற்கையிலே பிறக்கும் பொழுதே நல்ல வசதி வாய்ப்பினை கொண்டவராக திகழும் யோகம் பெற்றவர் , பன்முக திறமையாளர் , நிறைய சொத்து சுகங்களை கொண்டவர் , தொழில் துறையில் அதிர்ஷ்ட யோகங்களை தொடர்ந்து பெரும் அமைப்பை பெற்றவர் , தனது தகப்பனார் வழியில் நல்ல சொத்து சுகங்களை பெரும் யோகம் பெற்றவர்.

 செய்யும் தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையை ஜாதகருக்கு இயற்க்கை தானாகவே அளிக்கும் , இவர்களால் பல குடும்பங்கள் நல்வாழ்வினை பெறுவார்கள் , தொழிலார்களையும் தன்னுள் ஒருவராக நடத்தும் பண்பாளராக ஜாதகர் காணப்படுவார் , முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் ஜாதகருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும், இந்த அமைப்பை பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் கூட்டு தொழில் செய்யும் பொழுது சரியான ஆளை தேர்ந்தெடுத்து தொழில் செய்வது மட்டுமே , இல்லை எனில் அனைத்து யோகமும் மற்றவருக்கு பயன்பட ஆரம்பித்துவிடும் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

3 கருத்துகள்: