சனி, 16 ஜூன், 2012

புதிய கண்டுபிடிப்பு சமதோஷம் !?



ஒரு பெண்ணின் ஜாதகத்திற்கும் ஆணின் ஜாதகத்திற்கும் பொருத்தம் பார்க்கும் பொழுது பல ஜோதிடர்கள் ஜாதகத்தில் பல தோஷங்கள் இருப்பதாகவும் , அப்படி தோஷம் உள்ள ஜாதகங்களை , அதே மாதிரியான தோஷம் கொண்ட ( சம தோஷம் ) ஜாதகத்துடன் இணைக்க வேண்டும் அப்பொழுதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று புதிய கதை ஒன்றை அவுத்து விட்டு இருக்கின்றனர், எங்களுக்கு தலை சுற்றி சுற்றி வருகிறது .

இதற்க்கு முன் செவ்வாய் தோஷம் , ராகு கேது தோஷம் , திசா சந்திப்பு என்று மக்களை குழப்பினார்கள், இப்பொழுது சம தோஷம் என்று புதிதாக துவங்கி உள்ளனர் , அவர்களுக்கு எங்களது சார்பில் ஒரே ஒரு கேள்வி , அதாவது தாங்கள் சொல்வது போல் தோஷமுள்ள ஜாதகத்தை , தோஷமுள்ள ஜாதகத்துடன் இணைக்க வேண்டும் என்கிறீர்கள், தோஷம் என்றால் தீமையை தரும் என்பது உங்களின் கருத்தாக இருக்கிறது , அப்படியெனில் ஒரு கெட்டவனுடன் கெட்டவன் சேர்ந்தால் எப்படி நன்மை நடக்கும் , அதிக தீமையான பலனைதானே தரும் .

இதில் எவ்வித உண்மையும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை , ஒரு நிலையான புத்தி கொண்ட நல்லவனுடன் ஒரு கெட்டவன் சேர்ந்தால் நிச்சயம் அவனும் நல்லவனாக மாறிவிடுவான் என்பது நிருபிக்க பட்ட உண்மை.
எடுத்து காட்டு : ( காந்தி , விவேகானந்தர் ) இவரை பின்பற்றிய மக்கள்

ஒரு கெட்டவனுடன் கெட்டவன் சேர்ந்தால் சம்பந்த பட்டவன் மற்றும் அவனை சார்ந்தவர்கள் , அனைவரும் பாதிக்க படுவார்கள்
எடுத்து காட்டு : ( ஹிட்லர் மற்றும் அவரது படைகள் , அவரால் பாதிக்கபட்ட மக்கள்  )

ஜாதகத்தில் மட்டும் எப்படி தோஷமுள்ள ஜாதகம் தோஷமுள்ள ஜாதகத்துடன் இணையும் பொழுது நன்மை செய்து விடும் , இதற்க்கு எந்த ஜோதிட நூல்களில் ஆதாரம் உண்டு தயவு செய்து எங்களுக்கு தெரிவியுங்கள் ஜோதிட சிகாமணிகளே !?

திசை சந்திப்பு உண்மையா ?

இல்லவே இல்லை பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண் பெண் , இருவருக்கும் ஒரே திசை நடந்தால் உடனே திசா சந்திப்பு உண்டு என்று ஜோதிடர்கள் தவிர்த்து விடுகின்றானர் , உண்மையில் நடக்கும் எந்த திசையானாலும் ஜாதகருக்கு எவ்வித ( நன்மை , தீமை ) பலனை தருகிறது என்ற கணிதம் செய்ய தெரியாத ஜோதிடர்களுக்கே இந்த சந்தேகம் வரும் , இந்த சந்தேகத்தின் பலனை ஜோதிடர்கள் பொருத்தம் பார்க்க வரும் அப்பாவிகள் மேல் திசை சந்திப்பு என்று  திணித்து விடுகின்றனர் என்பதே முற்றிலும் உண்மை .

ராகு கேது தோஷம் ,செவ்வாய் தோஷம் , உண்மையா ?

இதை வைத்துதான் பல போலி  ஜோதிடர்களின் பிழைப்பே நடக்கிறது, இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படவே எங்களது வலை பூவில் இதுபற்றிய பதிவுகளை மிகவும் விளக்கமாக கொடுத்துள்ளோம் , படித்து தெளிவு பெறுங்கள் .

சமதோஷம் உண்மையா ?

இதுவும் முற்றிலும் தவறான அணுகுமுறை , ஜோதிட கணிதம் சரியாக தெரியாத பொழுது வரும் குழப்பம் , மேலும் மக்களுக்கு ஜோதிடத்தை பற்றி என்ன தெரிந்து இருக்க போகிறது என்ற மனப்பான்மையின் வெளிப்பாடே ! தோஷம் என்பதிற்கெல்லாம் சமதோஷம் கண்டுபிடிப்பது என்பது உச்ச கட்ட நகை சுவை !

எங்களுக்கு தெரிந்து நல்ல ஜாதக அமைப்பை கொண்ட பல ஆண்கள் , பெண்கள் ஜாதகங்களை தோஷம் இருக்கிறது என்று நல்ல முறையில் அமைய வேண்டிய திருமணங்களை நிறைய ஜோதிடர்கள் தடுத்து விடுகின்றனர் , இதனால் சரியான வயதில் திருமணம் நடக்காமல் ஆண்களும் , பெண்களும் தவிக்கும் தவிப்பிற்கு அவரவர் பெற்றோர்களை கேட்டால் தெரியும் , மக்களே ஜோதிடர்கள் ஒன்றும் ( நாங்கள் உற்பட ) வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் இல்லை என்பதை உணருங்கள் , தங்களின் குழந்தைகளுக்கு சரியான வயதில் திருமண வாழ்க்கையை அமைத்து தந்து அவர்களுக்கு நன்மை செய்யுங்கள் , இல்லை எனில் வரும் காலங்களில் சராசரி திருமண வயது 34 என்று ஆகிவிட வாய்ப்பு உண்டு .

மேலும் ஒரு பெண்ணுக்கு 25 வயதிற்குள் திருமணம் அமைவது அவர்களின் மன நிலைக்கும் , உடல் நிலைக்கும் , பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் ( பெண்களுக்கு சரியான வயதில் பிறக்கும் குழந்தைகள் மிக சிறப்பான திறமைகளை பெற்று இருக்கும் , நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் ) நன்மையென மருத்துவ உலகம் மற்றும் ஆராய்சிகள் அறிவுறுத்துகிறது என்பதை மனதில் நிறுத்துங்கள் .

யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிக்கொண்டு வாழ்க்கையை பணயம் வைக்காதீர்கள் , உங்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வது நீங்களே என்ற உண்மையை உணருங்கள் மேலும் நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா ? என்பதே உண்மை .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

3 கருத்துகள்:

  1. ஜோதிடர்களையோ,ஜோதிடத்தையோஅல்லது எதைப் பற்றியும் குறை கூற தகுதி உள்ளவர் யாரும் இல்லை அவரவர்க்கு தெரிந்தவரை கூறுகிறார்கள் .நீங்கள் கூட அண்ணணுக்கு எந்த பாவகம் .தம்பிக்கு எந்த பாவகம் என தெரியாமல்தான் (சொந்த வீடு குறித்த கேள்வி பதிலில் )எழுதியிருந்தீர்கள் .எது சரி எது தவறு எப்படி சரி ,எப்படி சரியில்லை .எப்படியெல்லாம் பார்க்கவேண்டும் என்று எழுதுங்கள் குறை கூறி தகுதி இழக்க வேண்டாம் Dr.kanakaraj.cbe-31-9345760996

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வீடு எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரியாமலே, குத்துமதிப்பாக ஜோதிடம் பார்த்தால் இந்தமாதிரித்தான் எழுத தோணும்!!!!

      அவரவர்களுக்கு தெரிந்ததை தமக்கு மட்டும் பயன்படுத்தி கொண்டால் பிரச்சனையில்லை, அதை மற்றவரிடம் திணிக்கும் பொழுதுதான் பிரச்சனையே , ஊருக்கு வாக்கு சொல்லும் "பல்லி" சாணி சட்டியில் விழுந்ததாம்!!!!

      நீக்கு