வியாழன், 28 ஜூன், 2012

நவ கிரகங்களின் பலமும் , அவர்களது திசைகளில் தரும் பலன்களும் !


 

ஒருவரது சுய ஜாதக அமைப்பில் நவகிரகங்கள்  பாவகங்களில் அமரும்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு ஏற்றார் போல் ஆட்சி , உச்சம் , நட்பு , சமம் , பகை , நீசம் என்ற அமைப்பில் அமர்ந்து இருப்பார்கள் , அப்படி அமரும்பொழுது ஜாதகருக்கு ஆட்சி , உச்சம் , நட்பு , சமம் , என்ற நிலையில் இருந்தால் நன்மையையும் , பகை , நீசம் என்ற நிலையில் இருந்தால் தீமையையும் தரும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது , மேலும் அந்த கிரகத்தின் திசை அமைப்பு வரும் பொழுது ராசி அமைப்பில் எவ்வாறு அமர்ந்துள்ளதோ அந்த அமைப்பில் பலனை வழங்கும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது .

அப்படி இருக்கும் பட்சத்தில் எம்மிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்த நபருக்கு  ஜாதக அமைப்பில் சுக்கிரன் உச்ச நிலையில் அமர்ந்து , லக்கினத்திற்கும் நல்ல ஆதிபத்தயம் பெற்று , சரியான வயதில் தனது திசையை நடத்துகிறது ஆகவே தங்களுக்கு  நிறைந்த யோக பலனை தரும் என்று மற்ற ஜோதிடர்களின் கணிப்பாக இருந்தது , இதன் காரணமாக ஜாதகர் சுக்கிரன் திசையில் நிறைய லாபம் பெற முடியும் என்ற ஜோதிடர்களின் கருத்துப்படி,  தொழில்கள் பலவற்றில் நிறைய முதலீடுகளை செய்து அனைத்திலும்,  இழப்புகளை மட்டுமே சந்தித்து கொண்டு இருக்கிறார்.

மேலும் எம்மிடம் அவரின் கேள்வி நான் ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில் தான் நிறைய முதலீடுகளை செய்தேன் ஆனால் அவர்களின் கணிப்பின் படி தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் சுக்கிரதிசை 8 வருடமாக கடுமையான இழப்புகளையும் , துன்பங்களையும் மட்டுமே சந்தித்து கொண்டு இருக்கிறேன் , மேலும் கடனாளியாக மாறும் சூழ்நிலையும்  ஏற்ப்பட்டு விட்டது , ஜோதிடர்கள் சொன்னதெல்லாம் பொய்யா என்றார் ? அதற்கு எமது பதில்  கணிப்பு ஜோதிடத்தினால் ஏற்ப்படும் நிலை இது என்றோம் .

அவருடைய ஜாதக அமைப்பை நன்கு கணிதம் செய்து அதன் பலன்களை அந்த ஜாதகருக்கு சொல்லி , அதிலிருந்து விடுபடும் வழி முறைகளை பற்றி ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தோம் .

உண்மையில் அவரது ஜாதக அமைப்பில் நடந்து கொண்டு இருக்கும் சுக்கிர திசை ராசிகட்டத்தில் உச்சத்தில் அமர்ந்து நல்ல நிலையில் இருந்தாலும் , தனது திசையில் பாதக ஸ்தானத்துக்கு  உண்டான பலனை வழங்கி கொண்டு இருந்தது , ஒரு கிரகம் சுய ஜாதகத்தில் என்ன பலம் பெறுகிறது என்பது முக்கியம் அல்ல , அதன் திசையில் எந்த வீடுகளின் பலனை நடத்துகிறது என்பதை சரியாக கணிதம் செய்து கண்டு பிடிக்க வேண்டும் இல்லை என்றால் , நல்ல கிரகத்தின் திசையெல்லாம் நன்மையை செய்யும் , தீய கிரகத்தின் திசையெல்லாம் தீமையை செய்யும் என்று பலன் சொல்வதால், நம்மை நாடி வருபவர்களின்  வாழ்க்கையில் தவறான ஆலோசனை வழங்க வேண்டி வரும் .

மேலும் ராசிகட்டத்தில் ஒரு கிரகம் எந்த நிலையில் இருந்தாலும் சரி என்ன விதமான பலன் பெற்றாலும் சரி , அந்த கிரகத்தின் திசையில் எந்த வீடுகளின் பலனை செய்கிறது என்பதே முக்கியம் , அதன் வழியே நன்மை , தீமை பலன்களை அந்த கிரகத்தின் திசை தரும் என்பதே சரியான ஜோதிட கணிதம் , இவ்வாறு கணிதம் செய்து பலன்களை சரியாக சொன்னோம் என்றால் , நம்மை நாடி வந்தவர் நன்மை பெறுகிறாரோ இல்லையோ , தீமையான பலனை அனுபவிக்காமல் இருக்கலாம் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து .

மேற்கண்ட ஜாதகருக்கு சுக்கிர திசை பாதக ஸ்தான பலனை தந்து 200 சதவிகித தீமையான பலனை அனுபவிக்க நேர்ந்தது , அவருக்கு சரியான ஜோதிட ஆலோசனை கிடைக்காமல் போனதிற்கு காரணம், ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றதே  , எங்களிடம் ஜோதிட ஆலோசனை பெற வரும் அன்பர்க்கெல்லாம்  நாங்கள் அறிவுறுத்துவது குல தெய்வ வழிபாட்டின் அவசியத்தை அனைவரும் உணருங்கள் என்பதே , வருமுன் உணர்த்தும் தன்மை இந்த பூர்வ புண்ணிய வீட்டின் அமைப்பிலிருந்தே நமக்கு கிடைக்கும் , நமக்கு கடுமையான சூழ்நிலைகளில் சரியான வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும் எனில் ஒவ்வொருவரும் தவறாமல் தமது குலதெய்வத்தை வருடம் ஒரு முறையாவது அமாவாசை திதியில் வழிபடுவது அவசியாமாகிறது .

இதில் சுய ஜாதக ரீதியாக பூர்வ புண்ணியம் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் , நல்லவர்கள் சேர்க்கையின் மூலம் வாழ்வில் முன்னேற்றம் இயற்கையாக அமைந்து விடும் .
சுய ஜாதக ரீதியாக பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டவர்களுக்கே இந்த மாதிரி தவறான ஆலோசனையின் பேரில் இழப்புகளையும் ,துன்பங்களையும் ,அனுபவிக்க வேண்டி வருகிறது.  சுய ஜாதக ரீதியாக பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டவர்கள் முறையாக தமது குல தெய்வத்தை வழிபடுவார்களே ஆயின் நிச்சயம் பூர்வ புண்ணியம் 100 சதவிகிதம் வழுவடைந்து ஜாதகர் நன்மையான பலன்களை  எந்த திசையிலும் பெற முடியம் .

இதன் மூலம் ஜாதகருக்கு நல்ல ஜோதிடன் , நல்ல நண்பர்கள் , நல்ல மருத்துவர் , நல்ல சட்ட ஆலோசகர் , சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் , தொழில் நல்ல கூட்டாளி , சிறந்த வாழ்க்கை துணை, நல்ல குழந்தைகள்   கிடைக்க பெறுவார்கள் . இதனால் ஜாதகர்  வாழ்க்கையில் படி படியான முன்னேற்றத்தை  பெறுவார் என்பது மறுக்க முடியாத உண்மை .

ஒரு ஜாதகத்தில் பலனை நிர்ணயம் செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

1 ) நடக்கும் திசை ஜாதகருக்கு எந்த பாவகங்களின்  பலனை தருகிறது ( ராசி அமைப்பில் அந்த கிரகம் எப்படி இருந்தாலும் அதுபற்றி எந்த கவலையும் இல்லை )             
2 ) அந்த பாவகங்கள் ஜாதகருக்கு நன்மையை தருகிறதா? அல்லது தீமையை தருகிறத?
3 ) அந்த பாவகங்களுக்கு  தற்பொழுது கோட்சார கிரக அமைப்புகள்
ஜாதகருக்கு நன்மையை தருகிறதா? அல்லது தீமையை தருகிறதா ?

இது மட்டுமே போதும்  அந்த ஜாதகருக்கு நிச்சயம் சரியான ஆலோசனையை தந்து விட முடியும் அதுவும் 100 சதவிகிதம் உண்மையாக , இதனால் நம்மை நாடி வருபவர்கள் நிச்சயம் தவறான முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் நலம் பெறுவார்கள் , நமக்கும் புண்ணிய பதிவு கிடைப்பதால் வாழ்க்கையில் இறையருள் சகல முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் , இதுவே ஜோதிட கலையின் தனி தன்மை . இதற்க்கு மாறாக ஜோதிட  கலையை கையாண்டால் அவர்களை படு குழியில் தள்ளிவிடும் .

குறிப்பு :
 
ஒருவரது ஜாதக அமைப்பில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது அந்த பாவக வழியில் இருந்து 200 சதவிகித தீமையான பலனையே அனுபவிக்க வேண்டி வரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து: