வெள்ளி, 8 ஜூன், 2012

கடக லக்கினத்திற்கு லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்த இட பலன்கள்!



லக்கினத்தில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் வாழ்க்கையில் மிகசிறந்த அதிர்ஷ்ட யோகங்களை பெரும் வாய்ப்பினை பெறுவார் , நல்ல இடத்தில் வளரும் சூழ்நிலை இளவயது முதற்கொண்டே ஜாதகருக்கு அமையும் , நல்ல கல்வி அறிவு பெரும் யோகம் கொண்டவர்கள் மனோ திடமும் , தன்னம்பிக்கையும் அதிகம் காணப்படும் , வாழ்க்கையில் முன்னேற்றம் படிப்படியாக மிக விரைவாக ஏற்றப்படும் , நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராகவும் , தீய பழக்க வழக்கங்கள் அற்றவராகவும் ஜாதகர் காணப்படுவார் .

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகருக்கு எதிரி ஜாதகரே , மனம் போன போக்கில் ஜாதகரின் செயல் பாடுகள் அமையும் , அடிப்படையில் எந்தவித நன்மையையும் பெற முடியாத தன்மை ஏற்ப்படும் , மற்றவரிடம் நல்ல பெயர் வாங்க ஜாதகர் படாத பாடு பட வேண்டி வரும் , வாழ்க்கையில் நலம் பெற அதிகம் சிரமங்களை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டி வரும் , முன்னேற்ற தடை , மற்றவர் உதவி இல்லாத நிலை , மற்றவரை சார்ந்து வாழும் சூழ்நிலை என ஜாதகர் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான் , இவர்கள் எவ்வித தீய பழக்கங்களையும் தொடாமல் இருப்பது அவசியம் இல்லை எனில் அதற்க்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , இது உயிர் இழப்பு வரை செல்ல கூடும் .

2 ம் வீடு  சிம்ம ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் தேவை இல்லை எனில் அதிக துன்பம் பெற வேண்டி வரும் , வருமானத்தை முறையாக பயன்படுத்த இயலாது, பூர்வீகத்தில் வசிக்க இயலாது மீறி இருப்பின் ஜாதகருக்கு எவ்வித முன்னேற்றமும் கிடைக்காது , குடும்ப வாழ்க்கை மிகவும் சிரமம் தரும் , பலதார யோகம் கொண்டார்கள் , கண்பார்வை பாதிக்க வாய்ப்பு அதிகம் உண்டு , சேமிக்கும் பழக்கத்தை ஜாதகர் சிறு வயது முதலே பின்பற்ற வேண்டும் , இல்லை எனில் அதிக சிரமப்பட வேண்டி வரும் .

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் நல்ல முறையில் குடும்பம் நடத்தி செல்வார் , நல்ல மனைவி அமையும் யோகம் பெற்றவர் , நல்ல வருமானம் ஜாதகரை தேடி வரும் . சொத்து சுக சேர்க்கை ஜாதகருக்கு இயற்க்கையாக அமையும் , ஜாதகரின் பேச்சுக்கு நல்ல மதிப்பு உண்டு . கலைகளில் சிறந்து விளங்கும் தன்மை ஏற்ப்படும் , கலைத்துறையில் அதிகம் சாதிப்பவர்கள் இவர்களே , நிறைய இசை ஞானம் கொண்டவர்கள் . இவர்கள் அனைத்து திறமைகளும் தன்னுள் கொண்டவர்கள் இதை முறையாக பயன்படுத்தினால் உலக புகழ் பெரும் யோகம் பெற்றவர்கள்  .

3 ம் வீடு கன்னி  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் ஜாதகர் மிகவும் நல்ல பலன்களையே அனுபவிக்கும் யோகம் பெற்றவர்கள் , ஜாதகர் எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளும் நல்ல வெற்றி வாய்ப்பினை தரும் , எழுத்தின் மூலம் புகழ் பெரும் யோகம் பெற்றவர்கள் , கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள் , எப்பொழுதும் இளமை மாறாத தோற்றம் கொண்டவர்கள் , மக்கள் செல்வாக்கும் ஆதரவும் கொண்டவர்கள் தான் நினைத்ததை முடிக்கும் திறன் பெற்றவர்கள் , மற்றவர்களை அனுசரித்து சென்றால் வாழ்க்கை மிகவும் இனிமையான  வாழ்க்கையாக அமையும் .

4 ம் வீடு துலாம்  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன்  என்றால் ஜாதகர் குடியிருக்க நல்ல வீடு கிடைக்காது , தாய் வழியில் அதிக துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும் , நல்ல வேண்டி வாகனம் அமையாது , ஜாதாகர் சிந்தித்து செயல் படுவது மிக அவசியம் இல்லை எனில் அதிக துன்பம் ஏற்ப்படும் , மன ஆற்றலை நன்றாக வளர்த்து கொள்வது மிக அவசியம் , பொது மக்களை நம்பி எந்த காரியங்களில் இறங்கினாலும் ஜாதகர் அதிக துன்ப பட வேண்டி வரும் .

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் நல்ல யோகங்களை மனைவி வழியிலும் , நண்பர்கள் வழியிலும் , தனது தாய்வழியிலும் அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள் , நல்ல சிறந்த கல்வி அறிவு ஜாதகருக்கு எங்கு சென்றாலும் கைகொடுக்கும், மக்களால் அதிக நன்மை பெரும் யோகம் பெற்றவர்கள் , பொதுமக்கள் ஆதரவு எப்பொழுதும் ஜாதகருக்கு உண்டு , நல்ல வசதியான வீடு , வண்டி வாகனம் போன்ற அமைப்பை பெரும் யோகம் பெற்றவர்கள் .

5 ம் வீடு விருச்சக  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன்  என்றால் ஜாதகர் இறை அருள் இயற்கையாக அமைய பெற்றவர்கள் , நல்ல முன்னேற்றம் , ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள் , பூர்வீகத்தில் குடி இருப்பதால் திடீர் என  நல்ல முன்னேற்றமும் யோகமும் ஏற்ப்பாடு ஜாதகருக்கு நல்ல ஆண் வாரிசு கிடைக்கும் , குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் , எதற்க்காகவும் பயம் கொள்ளாதவர்கள் , கவலை அற்றவர்கள் , தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார்கள் .

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகரின் மன நிலையை யாரும் புரிந்து கொள்ள முடியாது , எந்த நேரத்தில் என்ன செய்வார் என்றே ஜாதகருக்கே தெரியாது , மனைவி வழியில் அதிக துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , மற்றவரால் இழப்புகளை அதிகம் சந்திக்க வேண்டிவரும் , மனநிலை பாதிக்கும் சூழ்நிலை , போதைக்கு அடிமை ஆகும்  நிலை மனதில் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் .

 6 ம் வீடு தனுசு  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் ஜாதகருக்கு மன நிலை பாதிப்பால் உடல் நிலை கெடும் , கடன் பெறுவது கொடுப்பது ஆகவே ஆகாது , சரியான நேரத்தில் உணவு அருந்துவது அவசியம் இல்லை எனில் மருத்துவ மனைக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைக்க வேண்டி வரும் , இந்த அமைப்பை பெற்றவர்கள் யாரையும் பகைத்து கொள்வது அவ்வளவு நன்மையை தருவது இல்லை , எதிரிகளிடம் கொஞ்சம் கவனமாக இருப்பது அவசியம் .

 7 ம் வீடு மகர  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் வாழ்க்கையில் அதிக துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் , மக்களிடம் நன்மதிப்பை பெறுவது மிகவும் கடினம் , பொது வாழ்க்கையில் ஜாதகர் அதிகம் தீமையான பலனை அனுபவிக்க வேண்டி வரும் , போதை வஸ்துக்களை கண்ணால் பார்ப்பது கூட தீமையை தரும் , மன நிலை ஒருமுக படுத்த இயலாது மற்றவர்களை சார்ந்து ஜீவிக்க வேண்டி வரும் , பரதேஷ ஜீவனம் அமைந்து விடும் தீய நண்பர்கள் சேர்க்கையும் , மனைவியாலும் அதிக தின்பத்திர்க்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , நல்ல ஆன்மீக வாதிகளிடம்  தீட்சை பெறுவது அவசியமாகிறது .

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் நல்ல யோக பலன்களை நிச்சயம் பெறுவார் , மக்களிடம் செல்வாக்கு அதிகம் உள்ளவர்கள் , நேர்மை மாறாத குணம் கொண்டவர்கள் , மற்றவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தருபவர்கள், நீதிக்காகவும் நியத்திர்க்காகவும் பாடுபடும் குணம் கொண்டவர்கள் , மக்களால் முன்னேற்றம் பெறுவார்கள் , மக்களுக்கு பிரதி பலன் பாராமல்  நன்மை செய்வார்கள் , மனைவி வழியில் நல்ல முன்னேறமும் ஆதரவும் கொண்டவர்கள் .

8 ம் வீடு கும்ப ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் ஜாதகருக்கு திடீர் இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் , உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் , நிறை முதலீடு செய்யும் பொழுது அதிக கவனம் தேவை , விபத்துகள் நடக்க வாய்ப்பு அதிகம் என்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனமும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது அவசியம் , மனநிலை அதிகம் பாதிக்க பாடுவது இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கு தான் , எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது அவசியம் .

9 ம் வீடு மீன  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் நன்மையான பலன்களை அதிகம் அனுபவிப்பார் , மக்களிடம் நல்ல செல்வாக்கு, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் , பரந்த மனப்பான்மை , பொது வாழ்வில் தூய்மை என ஜாதகரின் சிறப்பான குணங்கள் எதிர்பாராத முன்னேற்றத்தை அள்ளித்தரும் , ஆன்மீக வாழ்க்கையில் மிகசிறந்த முன்னேற்றம் பெரும் யோகம் கொண்டவர்கள் , இறை அருள் எப்பொழுதும் ஜாதகருக்கு நன்மையான பலன்களையே தந்து கொண்டு இருக்கும் .

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் ஜாதகர் தேவையில்லாத விஷயங்களை செய்வதால் சமுதாயத்தில் அவ பெயர் உண்டாகும் , இதனால் மன நிலை பாதிக்கும் தன்மை ஏற்ப்படும் போதை பொருட்களுக்கு அடிமை ஆகும் சூழ்நிலை ஏற்ப்படும் ஜாதகர் மன நிலை ஒருமுக படுத்துவது அவசியம் .


10  ம் வீடு மேஷ  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் செய்யும் தொழில்களில் நல்ல முன்னேற்றம் பெறுவது மிக கடினம் , தகப்பனார் வழியில் இருந்து எவ்வித  உதவிகளும் கிடைக்காது , சுய தொழில்கள்  செய்யும் பொழுது ஜாதகர் அதிக கவனமுடன் இருப்பது அவசியம் , இல்லை எனில் அதிக பாதிப்புகளை அனுபவிக்க வேண்டி வரும் , பொதுவாக இவர்கள் அவசர பட்டு செய்யும் அனைத்து காரியங்களும் தோல்வியை தரும் .

தேய்பிறை சந்திரன் என்றால்  ஜாதகர் பல தொழில் புரியும் பன்முக திறமையாளராக காணப்படுவார் , செய்யும் தொழில்களில் எல்லாம் சிறப்பான வெற்றிகளை காண்பார் , நினைக்கும் காரியங்களை சாதிக்கும் திறமை கொண்டவர்கள் , நல்ல உடல் அமைப்பை பெற்றவர்கள் , கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு கொண்ட பண்பாளர்கள் , நிறைந்த நிர்வாக திறன் கொண்டவர்கள் , மக்களிடம் நன்மதிப்பை பெரும் யோகம் கொண்டவர்கள் , மக்களுக்கு சேவை செய்யும் பணிகளில் சிறப்பாக செயல் படும் தன்மை கொண்டவர்கள் , நன்மைகள் அதிகம் பெரும் யோக அமைப்பை கொண்டவர்கள் .

11  ம் வீடு ரிஷப  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் நீடித்த அதிர்ஷ்டத்தை பெரும் தன்மை கொண்டவர்கள் , நல்ல உடல் அமைப்பு , கலைத்துறையில் வெற்றி , நல்ல சொத்து சுகம் , நல்ல மனோ திடம் , மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் கொண்டவர்கள் , உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் நல்ல நிலையை இருக்கும் ஜாதக அமைப்பை கொண்டவர்கள் , நினைக்கும் காரியங்களை முடிக்கும் திறைமை கொண்டவர்கள் , நிதி நிறுவனம் , சுய தொழில்களில் மிகசிறந்த முன்னேற்றம் பெரும் அமைப்பை பெற்றவர்கள் , நல்ல வசதியான வீடு , வண்டி , வாகன யோகம் பெற்றவர்கள் .


12  ம் வீடு மிதுன  ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :

வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும்  ஜாதகருக்கு  அதிக துன்பமே ஏற்ப்படும் , ஜாதகரின் பிடிவாத குணத்தால் அதிக இழப்புகளையும் மன போராடத்தையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்ப்படும் , இந்த அமைப்பை பெற்றவர்கள் நன்றாக சிந்தித்து செயல்படுவது அவசியம் அல்லது பெரியவர்களின் சொல்படி நடப்பது நன்மை தரும் , இல்லை எனில் அதிக துன்பமே ஏற்ப்படும் , திருமண வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் இல்லை எனில் பிரிவு நிச்சயம் உண்டு , செய்யும் அனைத்து காரியங்களையும் பெரியவர்களின் ஆலோசனை படி செய்வது அவசியம் .


வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து:

  1. thanks for the post..nan kadaka lakinam..en jathakathil santhiran meenathil irukirar..nan pirantha thithi theipirai thirithiyai.

    தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் ஜாதகர் தேவையில்லாத விஷயங்களை செய்வதால் சமுதாயத்தில் அவ பெயர் உண்டாகும் , இதனால் மன நிலை பாதிக்கும் தன்மை ஏற்ப்படும் போதை பொருட்களுக்கு அடிமை ஆகும் சூழ்நிலை ஏற்ப்படும் ஜாதகர் மன நிலை ஒருமுக படுத்துவது அவசியம்.//

    kandipaga ini manathai oru nilai padutha muyarchikuren...melum thagavalkal irundhalum valangavum..nandri

    பதிலளிநீக்கு