செவ்வாய், 25 செப்டம்பர், 2012

ஏழரை சனி படுத்தும் பாடு , சனிபகவான் தரும் நன்மை தீமை பலன்கள் !




பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் சந்திரன்  இருக்கும் ராசிக்கும் , அதற்க்கு முன் பின் ராசிகளில் சனிபகவான்  கோட்சார ரீதியாக சஞ்சாரம் செய்யும் பொழுது ஏழரை சனி காலம் என்றும் , இதில் ராசிக்கு முன் சஞ்சாரம் செய்யும் பொழுது விறைய சனி என்றும் , ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஜென்ம சனி என்றும் , ராசிக்கு பின் சஞ்சாரம் செய்யும் பொழுது பாதசனி என்றும் குடும்ப சனி என்றும் , இந்த காலகட்டங்களில் ஜாதகர் மிகவும் வாழ்க்கையில் சிரம பட வேண்டும் என்றும் , குறிப்பிட்ட ஏழரை ஆண்டுகளில் ஜாதகரை சனி பகவான் படுத்தி எடுத்து விடுவார் என்றும் , உச்ச கட்டமாக மங்கு சனி , பொங்கு சனி , வாக்கு சனி , மரண சனி என்று சனிபகவானுக்கு நான்கு பிரிவுகளையும் தந்து ஜோதிடம் பார்க்க வந்தவரின் வயிற்றில் ஜோதிடர்கள் பலர் புளியை கரைப்பதுண்டு , நாம் இந்த பதிவில் இது உண்மையா ? இல்லை உண்மைக்கு மாறானத ? என்பதை சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் .



எடுத்து காட்டாக மேற்கண்ட மகர இலக்கின , கன்னி ராசியை சார்ந்த அன்பருக்கு மற்ற ஜோதிடரின் கருத்து படி பாத சனியின் காலகட்டம் நடை பெறுகிறது என்றும் , இந்த காலகட்டத்தில் ஜாதகர் வண்டி வாகனங்களில் செல்லக்கூடாது என்றும் , தேவையில்லாத மருத்துவ செலவுகளை தரும் என்றும் எச்சரித்து உள்ளனர் , மேலும் பெண் பிள்ளைகளுடன் பேசகூடாது என்றும் , நண்பர்களுடன் சேரக்கூடாது என்றும் , மீறி செய்தால் ஜாதகர் அதிக பாதிப்புகளை சந்திக்க வேண்டும் என்றும் பயமுறுத்தி உள்ளனர் , உச்சகட்டமாக நடக்கும் ராகு திசை ஜாதகருக்கு சொத்து வண்டி வாகனம் , தாய் வழியில் இருந்து இழப்புகளையே தரும் என்றும் , ஜாதகர் கலப்பு திருமணம் தனது விருப்ப படி செய்து கொள்வார் என்றும்  எச்சரிக்கையும் செய்துள்ளனர் .

கடந்த ஐந்து வருடமாக ஏழரை சனி காலகட்டத்தில் ஜாதகர் இருப்பதாலும் , மேலும் இது மங்கு சனியாக இருப்பதாலும் ஜாதகருக்கு அதிக துன்பமே வரும் என்று ஜாதக பலனாக கூறியுள்ளனர் , இதை கேட்ட ஜாதகரின் குடும்பம் மிரண்டு போய் ஜாதகரை , தற்ப்பொழுது எச்சரிக்கை என்ற பெயரில் தினமும் படுத்தி எடுத்து கொண்டு இருக்கின்றனர் , நமது நண்பரின் அறிவுறுத்தலின் பெயரில் எம்மிடம் ஜோதிட பலன் காண வந்திருந்தனர் , அவர்களுக்கு கிழ்கண்டவாறு சரியான ஜோதிட பலன்களை சொல்லி அனுப்பி வைத்தோம் .

ஜாதகரின் சுய ஜாதக அமைப்பின் படி தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் , ராகு திசை முதலில் கெடுதலை செய்யவில்லை என்பதை தெளிவு படுத்தினோம் காரணம் நடக்கும் ராகு திசை களத்திரம்  எனும் ஏழாம் பாவகம் 7 ம வீட்டுடன் தொடர்பு பெற்று சர நீர் ராசியாக அமைந்து மிகசிறந்த நன்மைகளை தந்துகொண்டு இருக்கிறது என்பதை எடுத்து சொன்னோம் , மேலும் நடக்கும் சனி புத்தியும் மேற்கண்ட வீட்டின் பலனையே தருவதால் எவ்வித பயமும் தேவையில்லை என்று விளக்கினோம் , மேலும் தற்பொழுது கோட்சார சனி பகவான் லக்கினத்திற்கு மிகுந்த நன்மையை வழங்கி கொண்டு இருப்பதை தெளிவு படுத்தினோம் , ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டே பலன் காண வேண்டும் என்றும் , ராசியை வைத்து பலன் காணக்கூடாது என்பதை சொல்லி , நடக்கும் ராகு திசை தரும் பலன்களை பற்றி எடுத்து சொல்லியும் , ஏழரை சனியின் காலத்தில் ஜாதகருக்கு எவ்வித துன்பமும் ஏற்ப்படாது என்றும் தெளிவு படுத்தி , இனி ஜாதகர் கடை பிடிக்க வேண்டியதை சொல்லி அனுப்பி வைத்தோம் .


உண்மையில் மேற்கண்ட ஜாதகருக்கு ராகு திசை தரும் பலன்களை பற்றி இனி பார்ப்போம் , ராகு திசை ஜாதகருக்கு ஆரம்பித்த காலம் முதற்கொண்டு நன்மையை மட்டுமே செய்து வருகிறது இதற்க்கு காரணம்  , ஜாதகர் சர லக்கினம் என்ற அமைப்பை பெற்று ராகு திசை களத்திர பாவக பலனை தருவதே , மேலும் இந்த ராசி சர நீர் ராசியாக அமைந்து 100 சதவிகித நன்மையே தருகிறது , இதனாலேயே ஜாதாகர் பள்ளி இறுதி ஆண்டில் சிறப்பான மதிப்பெண்களை பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்ந்தெடுக்கபட்டார் , மேலும் அரசு உதவியின் மூலமாகவே மருத்துவ கல்வி கற்கும் யோகம் உண்டானது , மேலும் ஜாதகருக்கு களத்திர பாவகம் சிறப்பாக இருப்பதால் பெற்றோர் நிச்சயம் செய்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளும் யோகமே  உண்டாகும் , மேலும் களத்திர பாவகம் பொது மக்களை மற்றும் நண்பர்களை குறிப்பதால் இவர்கள் வழியில் இருந்து ஜாதகர் யோக பலன்களையும் , முன்னேற்றத்தை மட்டுமே அனுபவிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை .

உண்மையில் இந்த ஜாதகருக்கு லக்கினாதிபதி என்ற முறையில் சனிபகவான் மிகுந்த நன்மைகளையே வாரி வழங்கி கொண்டு இருக்கிறார் , இதில் ஒருவேளை ஜாதகருக்கு நடக்கும் ராகு திசை மற்றும் புத்திகள் ஜீவன ஸ்தான வீட்டின் பலனை தந்து கொண்டு இருந்தால் மட்டுமே கேட்ச்சார சனியை பற்றி நாம் கவலை கொல்லாம் , ஏனெனில் ஜீவன ஸ்தானம் துலாம் ராசி அந்த ராசியுடன் தற்பொழுது சனி பகவான் கோட்சார ரீதியாக சம்பந்தம் பெறுகிறார் , அப்படியே இருந்தாலும் அந்த வீட்டிற்கு சனிபகவான் நன்மையை செய்கிறாரா? இல்லை தீமையை செய்கிறாரா ? என்று கண்டு உணர்ந்து சரியான ஜாதக பலனை சொல்ல வேண்டும் , குத்து மதிப்பாக ஏழரை சனி எனவே சனியால் தீமைதான் விளையும் என்று பலன் கூறுவது முற்றிலும் ஜோதிட சாஸ்திர அமைப்பிற்கு உண்மைக்கு புறம்பானது .

ஒருவேளை ஜோதிடர்களுக்கு நடக்கும் திசை புத்தி , எந்த வீடுகளின் பலன்களை தருகிறது என்று தெரியாத நிலையிலேயே இந்த அவலங்கள் நிகழும் , மேலும் பொதுவான ஜாதக பலன்களை சொல்லி ஜோதிடர்கள் தப்பித்து கொள்ளவே , இந்த ஏழரை சனி , அஷ்டம சனி , கோட்சார குரு , ராகு கேது சஞ்சாரங்கள் பயன்படுகிறது என்பதே முற்றிலும் உண்மை . முதலில் நடக்கும் திசை எந்த வீடுகளின் பலன்களை தருகிறது , அவை நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா ? அந்த வீடுகளுடன் ஏதாவது கோட்சார கிரகங்கள் சம்பந்த பெறுகிறதா ? அவை நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா ? என்பதை தெளிவாக கணிதம் செய்தால் மட்டுமே ஜாதக பலன் கேட்க வந்தவருக்கு சரியான பலனை சொல்ல முடியும் இல்லை எனில் , பொது பலனை சொல்லி குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியதுதான் , இதனால் ஜோதிடரும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும் , ஜோதிடம் கேட்க வந்தவரும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும் என்பதே உண்மை , இதனால் ஜோதிடத்தின் மேல் மக்களுக்கு நிச்சயம் நம்பிக்கை குறைவே உண்டாகும் .


வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 


1 கருத்து: