வெள்ளி, 24 அக்டோபர், 2014

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - மேஷ லக்கினம் பாகம் 5




 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷ ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று அமரும் பொழுது தரும் யோக பலன்களையும், வலிமை அற்று அமரும் பொழுது தரும் அவயோக பலன்களை பற்றியும் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு மகரம் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகமாக அமையும், இந்த மகரம் மேஷ லக்கினதிர்க்கும் சரி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் சரி 10ம் வீடாகவே அமைகிறது, மேலும் சர மண் தத்துவ அமைப்பில் இயங்குகிறது, இந்த மகரம் மேஷ லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு 6,8,11,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறாமல் இருந்தால் ஜாதகரின் ஜீவன மேன்மை மிகவும் சிறப்பாக இருக்கும் குறிப்பாக பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது மிகுந்த யோகத்தை தரும்.

மேஷ லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவகங்களும், ஜாதகர் பெரும் நன்மைகளும்:

ஜீவன ஸ்தானம் ஒன்பதாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

ஜாதகர் சிறந்த பேராசிரியாராக விளங்குவார், பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் தாளாளர், கல்வி துறையில் சிறந்து விளங்கும் மிக பெரிய  மனிதராக வலம் வரும் யோகத்தை தரும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து மற்றும் மிகுந்த நற்ப்பெயரை பெரும் யோகத்தை தரும், சிறு கல்வி நிறுவனமாக துவங்கி, மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்ஜியத்தை நிறுவும் தன்மை பெற்றவர்கள் எனாலாம், இந்த அமைப்பை பெற்ற அனைவரையும் நாம் ஏணியுடன் ஒப்பிடலாம், இவரது அறிவும் திறனும் மற்றவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தரும், ஜாதகர் பொது நலவாதியாக இருப்பார், தன்னம்பிக்கையும் மன உறுதியும் ஜாதகருக்கு மிகவும் அதிகமாக காணப்படும், எந்த ஒரு சூழ்நிலையிலும் ஜாதகர் நேர்மையை விட்டுத்தர விரும்ப மாட்டார், நமது தேசத்தின் பல உயரிய விருதுகளை பெரும், உண்மையான தகுதி பெற்றவர்கள் இவர்களே என்றால் அது மிகையில்லை, தனுசு உபய நெருப்பு தத்துவ அமைப்பில் இருப்பதால், ஜாதகர் ஆன்மீகம் சார்ந்த ஜீவன வாழ்க்கையும், கல்வி துறை மற்றும் சாஸ்திரம், எழுத்து, பத்திரிகை துறையில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும்

மேற்கண்ட அமைப்பை பெரும் ஜாதகர்கள் பலர் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் நபர்களாக காணப்படுகிறார்கள், விளையாட்டு துறையில் தனி நபர் அல்லது குழுவாக செயல்படும் யோகம் பெற்றவர்கள், தனது வெற்றிக்காக  அல்லது தனது குழுவின் வெற்றிக்காக அயராது பாடுபடும் தன்மையை பெற்றவர்கள், எந்த ஒரு செயலையும் சரியான திட்டமிடுதலுடன் செய்து வெற்றி காணும் அன்பர்கள் இவர்களே ! இதை தவிர கிராமத்தில் ஊர் பெரியவர், அல்லது பஞ்சாயத்து தலைவர், தனது சமுகத்திற்கு தலைமை பொறுப்பேற்று நடத்தி செல்லும் தலைமை பதவியை அலங்கரிக்கும் நபர்கள், நகரம் அல்லது வட்டம் போன்றவற்றிற்கு தலைவர் செயலாளர், கட்சியில் நல்ல பொறுப்புள்ள பதவிகளில் சிறப்பாக செயலாற்றும் நபர்கள் அனைவரும் மேற்கண்ட அமைப்பை நிச்சயம் பெற்று இருப்பார்கள், அரசியல் ரீதியான பதவிகள் ஜாதகரை தேடிவரும், பொதுமக்களிடம் நல்ல மதிப்பு மரியாதையை பெரும் யோகம் பெற்றவர்கள் என்றால் அது மிகையில்லை.

குறிப்பு : ( பொதுமக்கள் அல்லது குழு ஆகியவற்றை சார்ந்த தொழில்களை, அல்லது  பதவிகளை அலங்கரிக்கும் தன்மை பெற்றவர்கள், இவர்கள் அனைவரும் தனித்து செயல்படுவதை விட ஜீவன அமைப்பில்  கூட்டு முயற்ச்சியில் பணியாற்றுவது சிறந்த யோகத்தை தரும்.)

ஜீவன ஸ்தானம் பத்தாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் லக்கினம் என்ற அமைப்பிற்கும் ஜீவன ஸ்தானமாக வருவதாலும், சர மண் தத்துவ அமைப்பாக மகரம் அமைவதாலும் , ஜாதகர் பன்முக தொழில் திறமை பெற்றவர் எனலாம், குறிப்பாக மண் தத்துவம் சார்ந்த தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகம்  பெற்றவர்கள், எவரது சுய ஜாதகத்தில் இந்த மகரம் வலுபெற்று அமர்ந்து இருக்கின்றதோ, அந்த ஜாதகர் சர நில தத்துவத்தை குறிக்கும் மனித உடலின் உள்ள உறுப்புகள் சார்ந்த ஆய்வில் சிறந்து விளங்குவார்கள், ஒரு மனிதனை பார்த்த உடன் அவர் எவ்வித உடல் ரீதியான பாதிப்பில் உள்ளார் இவருக்கு என்ன செய்தால் நலம் பெறுவார் என்பதை மிக துல்லியமாக கண்டுணர்ந்து செயல்படும் வல்லமையை இறை அருள் இவர்களுக்கு இயற்கையிலேயே கொடுத்து இருப்பது ஆச்சரியாமான ஒன்றாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, பல சிறந்த சித்த மருத்துவர்கள் அனைவரது ஜாதகத்திலும் மகரம் மிகவும் வலிமை பெற்று அமர்ந்து இருப்பதை காண முடிகிறது, மேலும் மருத்துவம் சார்ந்த அனைத்து துறைகளிலும் இவர்கள் சிறந்து விளங்க இந்த மகரம் வலிமை பெற்றதே காரணமாக அமைகிறது.

இது உடல் சார்ந்த அமைப்பை மற்றும் தெளிவு படுத்துவதில்லை, மண் தத்துவம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் ஜாதகரை தன்னிகரற்று விளங்க வைத்துவிடுகிறது, குறிப்பாக நிலம், வீடு, வண்டி வாகனம், பல தொழில்களில் சிறந்து விளங்கும் யோகம், பல பெரிய நிறுவனங்களை சிறப்பாக நடத்தி முன்னேற்றம் காணும் வல்லமை, பல துறைகளில் சிறந்து விளங்கும் யோகம், ஜாதகர் செய்யும் தொழில்களில் தனிப்பட்ட யுக்திகளை பயன்படுத்தி வெற்றி காணும் அதி புத்திசாலித்தனம், சிறந்த அறிவாற்றல், புதிய மருந்து மற்றும் மருத்துவ உபகரணம் கண்டுபிடிக்கும் ஆற்றல், போக்கு வரத்து துறையில் சேவை சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வெற்றி, விவசாயம் சார்ந்த துறைகளில் எவரும் எதிர்பாராத வளர்ச்சியை பெரும் யோகம், அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் வல்லமை, தனக்கு கிழ் வேலை பார்க்கும் அனைவரையும் தனது ஆணைக்கு கட்டுபட்டு நடக்கும் விதமான செயல்திறன், எந்த ஒரு பிரச்சனையையும் துணிவுடன் எதிர்கொள்ளும் திறனும், அதில் வெற்றி பெரும் யோகத்தையும் தரும்.

குறிப்பு : ( சுய ஜாதகத்தில் மேற்கண்ட அமைப்பு காணப்படுமாயின், ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் மற்றவரிடம் வேலை செய்வது, அல்லது கூட்டாக செயல்படுவது சரியானது அல்ல, ஜாதகர் செய்யும் தொழில் சிறியதாக இருந்தாலும் கூட தனித்து இயங்குவது சிறப்பான வெற்றிகளை குவிக்க உதவும், மேலும் இவர்களுக்கு அரசு துறை வேலை வாய்ப்பு என்பது எதிர்பாராத வகையில் திடீர் என கிடைக்கும்)

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து: