இதுபோன்ற தவறான, பொருத்தமற்ற தேர்வுகளை தவிர்க்க " ஜோதிட சாஸ்த்திரம் " இன்றைய சந்ததியருக்கு 100% விகிதம் உதவுகிறது என்றால் அது மிகையில்லை, ஆனால் இன்றைய சந்ததியினர் " ஜோதிட சாஸ்த்திரம் " எந்த அளவிற்கு நம்புகின்றனர் என்பது கேள்விக்குறியே !, முழு மனதாக " ஜோதிட சாஸ்த்திரம் " எனும் கலையை நம்பும் அன்பர்களுக்கு நிச்சயம் சரியான தீர்வுகளையும், யோகம் நிறைந்த நல்வாழ்க்கையையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !
இன்றைய சிந்தனைக்கு தனது ஜாதக வலிமையின் மூலம், தனது கணவனுக்கு மிகுந்த சுபயோகங்களை நல்கும் ஓர் ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 3ம் பாதம்
ஜாதகிக்கு பாவக தொடர்பு :
1,3,5ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு லக்கின வழியில் இருந்து நல்ல உடல் நலம் மற்றும் சிறந்த மனவலிமையை தரும், அனைவருடன் சுமுக போக்கு, பெருந்தன்மையான குணம், மற்றும் கண்டிப்பு என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து மிகுந்த செல்வ செழிப்பு , எதிரிகளை வெல்லும் ஆற்றல், நல்ல மனநிலை, சிறப்பான சிந்தனை, சத்தியத்தை மதித்தல், கல்வி வழியில் யோக வாழ்க்கை, சிறந்த வியாபார வல்லமை, கமிஷன் தொழில் மூலம் சிறப்பான முன்னேற்றம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் எதிர்பாராத வெற்றி மற்றும் லாபங்கள் வந்து சேரும் அமைப்பு, 5ம் பாவக வழியில் இருந்து குலதெய்வ அனுக்கிரகம், ஆய கலைகளில் தேர்ச்சி, குழந்தைகளிடம் அன்பு, எதிர்ப்புகளை மிக எளிதாக கையாளும் தன்மை, புதிய சூழ்நிலையில் ஆர்வம், எஜென்ஜி துறையில் நல்ல லாபம் என்ற வகையில் நன்மைகளை தரும்.
2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து சிறந்த குடும்ப வாழ்க்கையை, இனிமையான பேச்சு திறன், கைநிறைவான வருமான வாய்ப்பு, கணவருடன் பாசம் மற்றும் சகல வசதி வாய்ப்புகளையும் பெரும் யோகம் என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து நிறைவான சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், பொருளாதார முன்னேற்றம், சகல வசதிகளும் கொண்ட வீடு, பண்ணை தோட்டம் என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் கணவருக்கு திடீர் அதிர்ஷ்டத்தையும், கணவரால் தனது வாழ்க்கையில் சிறப்பான யோகங்களையும், நீண்ட ஆயுளுடன் சுமங்கலியாக திகழும் சுப யோகத்தையும் ஜாதகி பெறுவார், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கவுரவம், தாய் வழியிலான யோக வாழ்க்கை, பாரம்பரியம் மிக்க விஷயங்களை கடைபிடிக்கும் யோகம், கவுரவ பதவி, கணவருக்கு தொழில் வழியிலான நன்மைகளை தரும் அமைப்பு என்ற வகையில் நன்மைகளை ஸ்திரமாக வாரி வழங்கும்.
7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 7ம் பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து சகல அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, தனது கணவருக்கு தேவையான விஷயங்களை சிறப்பாக செய்து கொடுக்கும் வல்லமை, தனது கணவருக்கு எந்த சூழ்நிலையிலும் நன்மையை தரும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் யாதொரு இன்னல்களும் இன்றி சுமுகமாக, சந்தோஷத்துடன் வாழும் யோகம், கூட்டு முயற்சியின் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகம் என்றவகையில் நன்மைகளை தரும்.
11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி பரிபூர்ண மஹாலக்ஷ்மி யோகம் நிறைந்தவர் என்பது உறுதியாகிறது, தனது கணவருக்கு சகல நிலைகளில் இருந்தும் அதிர்ஷ்டங்களை வாரி வழங்குபவர் என்பது 100% விகிதம் உறுதி மேலும் தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும் தன்னகத்தே கொண்டவர், மெய்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இணங்க, தனது அறிவு திறனால் சகல விஷயங்களையும் சீர்துக்கி பார்க்கும், சமயோசித அறிவாற்றல் பெற்றவர் என்பதுடன், அதிர்ஷ்டம் நிறைந்தவர் என்பது ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சம் ஆகும்.
6,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு, ரண சிகிச்சையும், மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்தால் வீண் இன்னல்களையும் சந்திக்கும் நிலையை தரும்.
12ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.
நடைபெறும் புதன் திசை ( 05/05/2012 முதல் 05/05/2029 வரை )
தற்போழுது நடைபெறும் புதன் திசை, ஜாதகிக்கு 7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, புதன் திசை முழுவதும் தனது கணவருக்கு முழு வீச்சில் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்தும், லாப ஸ்தான வழியில் இருந்தும் தன்னிறைவான யோக வாழ்க்கையை பெறுபவர் என்பதும் உறுதியாகிறது, புதன் திசைக்கு பிறகு வரும் கேது மற்றும் சுக்கிரன் முறையே 11ம் பாவக பலன் மற்றும் 3ம் பாவாக பலனையே தனது திசைகளில் ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே ஜாதகியும், ஜாதகியின் கணவரும் முழு அளவிலான யோக வாழ்க்கையை சிறப்பாக வாழும் தன்மையை தரும் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சுபயோக அமைப்பாகும்.
குறிப்பு :
பெண்களின் ஜாதகத்தில் இல்லற வாழ்க்கைக்கு சுபயோகங்களை நல்கும் 2,5,7ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பதும், நடைபெறும் திசை மற்றும் எதிர்வரும் தசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், மிகசிறந்த யோக வாழ்க்கையை தம்பதியருக்கு வாரி வழங்கும் என்பதில் ஐயம் இல்லை, மேலும் தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது அவரது ஜாதகத்தில் 2,5,7ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு தேர்வு செய்தால், காதல் திருமணமோ, நிச்சயிக்க பட்ட திருமணமோ 100% வெற்றியை பெரும், இல்லற வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக