திங்கள், 9 ஜனவரி, 2017

ஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும் விபத்து, இழப்பு, விரையம் என இன்னல்களை தரும் என்கின்றனர், இதற்க்கு பரிகாரம் என்ன?


 கேள்வி :

எதிர்வரும்  ஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும் விபத்து, இழப்பு, விரையம் என இன்னல்களை தரும் என்கின்றனர், இதற்க்கு பரிகாரம் என்ன? எனது ஜாதகப்படி எதிர்காலம் எப்படி இருக்கும்? சற்று மனபயமும் குழப்பமாகவும் உள்ளது, இதற்க்கு சரியான தீர்வு வேண்டுகின்றேன்.

பதில் :

கடந்த தலைமுறையினரை சார்ந்த அன்பர்களின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை சரியாக தெரியாத நிலையில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் முதல் எழுத்தை கருத்தில் கொண்டும், நாம நட்ஷத்திரம் கண்டறிந்து அதன் மூலம் ராசியை அடிப்படையாக கொண்டு சம்பந்தபட்ட நபருக்கு ராசி பலன் கண்டு, எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான அறிவுரைகளை ஜோதிடர்கள் வழங்கினார், இது கடந்த தலைமுறையினருக்கு ஓரளவு மன ஆறுதல்களையும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையையும் ஏற்பட்ட செய்தது, தற்போழுது உள்ள தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு இந்த பிரச்சனை 100% விகிதம் இல்லை எனலாம், ஏனெனில் ஒவ்வொருவரின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை அனைவருக்கும் சரியாக தெரிந்து இருக்கின்றது,( இன்னும் ஒருபடி மேலே சென்று மக்கள் தமக்கு பிறக்கும் குழந்தையை நல்ல நேரத்தில் அறுவை சிகிசிச்சையின் மூலம் பெற்றுக்கொள்கின்றனர், இது எந்தளவுக்கு சரி என்பது ஆய்வுக்கு உற்ப்பட்டது ) இவற்றின் துணை கொண்டு ஒருவருக்கு மிக துல்லியமாக சுய ஜாதகத்தை கணிதம் செய்து விடலாம், இதை ஓர் கணினி சில நொடிகளில் செய்து விடுகிறது, கால மாற்றத்தில் தற்போழுது உள்ள தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை எனலாம், எனவே நாம நட்ஷத்திரம் கொண்டு ராசிபலன் காணவேண்டிய கட்டாயம் இந்த தலைமுறையினருக்கு இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் ஒருவரது லக்கினம் தெரியும் பொழுது, ராசியை அடிப்படையாக கொண்டு பலன்காண வேண்டிய கட்டாயமும் இல்லை, எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் எனும் முது மொழிக்கு ஏற்ப, சுய ஜாதகத்தில் சகல விஷயங்களையும் கட்டுப்படுத்துவதும், யோக அவயோக, நன்மை தீமை பலன்களை வழங்குவது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையே என்றால் அது மிகையாகாது, மேலும் ஒருவரது சுய ஜாதகத்தை கொண்டு பலன் காண முற்படும் பொழுது சந்திரன் அமர்ந்த ராசியை கொண்டு பலன் காண வேண்டிய அவசியமில்லை என்பதை இந்த பதிவில் தெளிவாக விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமை பட்டுள்ளது.

சுய ஜாதகம் கொண்டு பலன் காணும் பொழுது நமக்கு கிடைக்கும் நன்மைகள் :

1) சுய ஜாதகம் கொண்டு பலன் காணும் பொழுது ஜாதகர் பிறந்த லக்கினத்தை கொண்டே பலன் காணலாம் எனும் பொழுது, சந்திரன் நின்ற ராசிக்கு உண்டான பலாபலன் பற்றி நாம் கருத்தில் கொள்ள தேவையில்லை, நமக்கு சுய ஜாதகம் இல்லாதா நிலையிலே நாம நட்ஷத்திரம் கொண்டு ராசிபலன் காணலாம்.

2) லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பற்றி தெளிவாக அறிந்துகொள்ளும் பொழுது, ஜாதகருக்கு உள்ள யோகம் மற்றும் அவயோகம் பற்றிய ஒரு தெளிவும், இதனால் ஜாதகர் அனுபவிக்கும் நன்மை தீமை பற்றி தெளிவாகவும், துல்லியமாகவும் தெரிந்துகொள்ள இயலும்.

3) நவ கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகர் நவ கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் தரும் யோக அவயோகம் மற்றும் ஜாதகர் பெரும் நன்மை தீமையை பற்றி மிக மிக துல்லியமாகவும் உண்மையாகவும் தெரிந்துகொள்ள இயலும்.

4) தற்போழுது நடைமுறையில் உள்ள நவ கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு, கோட்சார கிரகங்கள் தரும் தரும் நன்மை தீமை பற்றி தெளிவு பெரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெற கூடிய யோக அவயோக நிகழ்வுகள் மிக துல்லியமாக அறிந்துணர்ந்து, அவரின் வாழ்க்கையில் வரும் யோகங்களை ஏற்று கொள்ளவும், அவயோகங்களை கிரகித்து கொள்ளவும் அறிவுரைகளை நிச்சயம் வழங்க முடியும்.

5)  மேற்கண்ட முறையில் லக்கினத்தை கொண்டு ஒருவருக்கு துல்லியமான சுய ஜாதக பலன் காண்பது போல், சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாக கொண்டும், நாம நட்ஷத்திர ராசியை கொண்டும் ஒருவருக்கு  நிச்சயம் துல்லியமான பலன் காண இயலாது என்பதை உறுதி படுத்துகிறோம், ஒருவேளை ராசியை வைத்து பலன் கண்டு அது சரியாக இருப்பின் "காகம் அமர பனம்பழம் விழுந்த" கதையாகவே அமையும்.

இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

கீழ்கண்ட ஜாதகருக்கு  ஜோதிடர்கள் அறிவுறுத்திய விஷயம், ஜாதகர் மகர ராசி என்பதனால் எதிர்வரும் சனி பெயர்ச்சி ஏழரை சனியாக அமைவதால், ஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும், இதனால் விபத்து, இழப்பு, விரையம் என இன்னல்களை தரும், தங்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்படும், குடும்பத்தில் நிம்மதி இருக்காது, கடன் தொந்தரவு அதிகரிக்கும், திடீர் விபத்து மூலம் வீண் மருத்துவ செலவுகள் வரும், சண்டை சச்சரவு, வம்பு வழக்கு, உடல் நல பாதிப்பு , உறவுகள் மனகசப்பு, குழந்தைகள் வழியில் இன்னல்கள் என கடுமையான இன்னல்களை எதிர் வரும் ஏழரை சனி தரும், என்று சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாக கொண்டு, ஜாதக ஆலோசணை வழங்கப்பட்டு இருக்கின்றது, இனி அவரது சுய ஜாதகத்தை கொண்டு அவரது சுய ஜாதக வலிமை, நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக பலன்கள் தரும் நன்மை தீமை, அதற்க்கு கோட்சார கிரகங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 

ஜாதகருக்கு மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,5,7,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், இதனால் ஜாதகர் 1,3,5,7,11ம் பாவக வழியில் இருந்து 100% விகித சுபயோக பலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் ஆகிறார்.

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

2ம் வீடு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, இனிமையான குடும்ப வாழ்க்கையையும், கைநிறைவான வருமான வாய்ப்புகளையும், இனிமையான பேச்சு திறமையையும் தரும், தனம் சார்ந்த சிக்கல்கள் ஏதும் ஜாதகருக்கு வாராது.
6,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6,8,9,10ம் பாவக வழியில் இருந்து 70% விகித சுபயோகங்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 4,12ம் பாவக வழியில் இருந்து ஸ்த்திரமான 70% விகித இன்னல்களை தரும், குறிப்பாக மேற்கண்ட பாவக வழியிலான பாதிப்பை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் ஜாதகர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமையுடன் இருப்பதால் ஜாதகருக்கு சுய ஜாதகம் 95% விகித மிக மிக வலிமையுடன் உள்ளது என்பதால், முழு அளவிலான யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை கொண்டவர் என்பது உறுதியாகிறது.

ஜாதகருக்கு தற்போழுது குரு மஹா திசை ( 23/03/2013 முதல்  23/03/2029 வரை ) நடைபெறுகின்றது, தனது திசையில் குரு பகவான் ஜாதகருக்கு 6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனை ஏற்று நடத்துகின்றார், இதானால் ஜாதகர் ஜீவன வழியில் நல்ல முன்னேற்றமும், கவுரவம் மற்றும் அந்தஸ்த்து குறையாத யோக வாழ்க்கையையும் பெறுவார் மேலும் குறுகிய கால லாபங்களை ஜாதகர் தனது தொழில் ரீதியாக பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தரும், எனவே குரு திசை முழுவதும் ஜாதகருக்கு ஜீவன வழியிலான நன்மைகளே நடைபெறும், தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி ( 12/05/2015 முதல் 22/11/2017 வரை ) நடைமுறையில் உள்ளது, சனி புத்தியும் ஜாதகருக்கு  6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனையே ஏற்று நடத்துகின்றார், எனவே ஜாதகருக்கு நடைபெறும் குரு திசையும், சனி புத்தியும் வலிமை பெற்ற 6,10ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது ஜாதகருக்கு ஜீவன ரீதியான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும்.

குரு திசையில் அடுத்து வரும் புதன் புத்தி ( 22/11/2017 முதல் 28/02/2020 வரை ) தனது புத்தியில் 1,3,5,7,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராஜயோக பலன்களை வாரி வழங்குவது, ஜாதகருக்கு 1,3,5,7,11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை தன்னிறைவாக வாரி வழங்கும், குரு திசையில் கேது புத்தி ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் ரீதியான திடீர் அதிர்ஷ்டங்களையும், குரு திசையில் சுக்கிரன் புத்தி  8,9ம் வீடுகள்  ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 8ம் பாவக வழியில் தொழில் ரீதியாக திடீர் அதிர்ஷ்டத்தையும், 9ம் பாவக வழியில் சமூக அந்தஸ்து மற்றும் பெயரும் புகழையும் ஜீவன ரீதியாக வழங்கும். எனவே ஏழரை சனி நடைபெறும் நேரமான ஏழரை வருடமும் ஜாதகருக்கு ஜீவனம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளே சுய ஜாதக ரீதியாக நடைபெறுகின்றது என்பது உறுதியாகிறது அன்பர்களே, மேலும் தற்போழுது நடைபெற இருக்கின்ற சனி பெயர்ச்சி மேற்கண்ட திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு சம சப்த்த பார்வையாக சனி பகவான், தனது வர்க்க கிரகமான புதனுக்கு உரிய மிதுன ராசியை வசீகரித்து, ஜாதகருக்கு மென்மேலும் ஜீவன ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் மிகுந்த லாபத்தை தரும், வியாபார விருத்தி, செல்வச்செழிப்பு என்ற வகையில் ஜீவன ஸ்தானத்தை வசீகரிக்கும் கோட்சார சனி ஜாதகருக்கு நன்மையே செய்கின்றார் என்பதும் உறுதியாகிறது.

எனவே எதிர்வர இருக்கும் சனி பெயர்ச்சியால் ( மகர ராசிக்கு ஏழரை சனி என்ற வாதம் சுய ஜாதகம் வலிமை பெறுவதாலும், நடைபெறும் திசாபுத்தி ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதாலும் எடுபடாது ) மேற்கண்ட ஜாதகருக்கு எவ்வித துன்பமும் சிறிதும் இல்லை என்பதே சுய ஜாதக ரீதியான உண்மை நிலை என்பதை "ஜோதிடதீபம்" இந்த பதிவில் தெளிவு படுத்துகிறது.

குறிப்பு :

 ஒருவரது சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தாலோ, தற்போழுது நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருந்தாலோ, கோட்சார கிரகங்களினால் யாதொரு பாதிப்பு இருக்காது என்பதே உண்மை நிலை, மேலும் சந்திரன் நின்ற ராசியை வைத்து பலன்காண முற்படுவது சம்பந்தப்பட்ட நபரின் மனம் சார்ந்த விஷயங்களை மட்டுமே பாதிக்கும், சுய ஜாதக வலிமையை சிறிதும் பாதிக்காது என்பது 100% விகித உண்மை என்பதை இங்கே "ஜோதிடதீபம்" பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக