புதன், 29 மார்ச், 2017

கணவன் மனைவி பிரிவுக்கு குழந்தைகள் ஜாதகம் காரணமாக அமையுமா ?



 ஒருவருக்கு நன்மையான பலன்கள் நடைபெறுவதற்கும், தீமையான பலன்கள் நடைபெறுவதற்கும் அவரவர் சுய ஜாதக வலிமையே காரணமாக அமையும், மேலும் ஒருவரின் ஜாதகம் மற்ற ஒருவருக்கு நன்மை தீமை பலாபலன்களையும் தாக்கத்தையும் தருகிறது என்றால்? அது கணவன் மனைவி ஜாதகங்களுக்கு மட்டும் சாத்தியம், ஆனால் பெற்ற குழந்தைகளின் ஜாதகம் வழியிலான இன்னல்களை பெற்றோர் அனுபவிக்கின்றனர் என்பது சற்று உண்மைக்கு புறம்பானதே, ஒருவேளை குழந்தைகள் ஜாதகத்தில் பெற்றோர் இன்னலுற நேரும் என்றால், பெற்றோரின் ஜாதகம் மிகவும் வலிமை குறைவாக இருக்கும் என்பதே உண்மை நிலை, பொதுவாக குழந்தைகளின் ஜாதகம் பெற்றோரின் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு இல்லை ( குழந்தைகளின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தால் மட்டுமே சிரமம் தர கூடும், அதுவும் பெற்றோரின் சுய ஜாதகம் வலிமை குறைவாக இருப்பதினால் மட்டுமே இது நடைபெறும் ) எனவே குழந்தைகள் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யாமல் பெற்றோரின் சுய ஜாதகத்தையும் கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன் காண்பதே சாலச்சிறந்தது, இதை ஓர் தம்பதியர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

கணவர் ஜாதகம் :


லக்கினம் : கன்னி
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களான 2,5,7,8,12ம் வீடுகளில் 5ம் வீட்டை தவிர மற்ற அனைத்து வீடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, குறிப்பாக களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் களத்திர வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும் வல்லமை பெற்றது, ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையின் வழியில் அதிகமான மனஉளைச்சல் மற்றும் நிம்மதி இழப்பை ஜாதகர் வெகுவாக சந்திப்பார், ஜாதகருக்கு இரண்டு வாழ்க்கை துணை அமைந்தும் இருவரிடமும் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார், தனது 2வது மனைவி வழியில் புத்திர பாக்கியத்தை பெற்றது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள 5ம் பாவாக வலிமையை காட்டுகிறது.

2ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாய் வார்த்தை, பேச்சு, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும்.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தமது குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கையை ஜாதகர் பெறுவார் ( உண்மையில் குழந்தைகள் இந்த ஜாதகருக்கு சுபயோகங்களை தருகின்றனர் )

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், பொருளாதார சரிவையும், தாங்க இயலாத மனப்போராட்டத்தையும் சந்திப்பர், பெரும் கவலைகள் ஜாதகரை வாட்டி எடுக்கும், போதை வஸ்துக்களுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையை  குறிக்கும் பாவகங்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது ஜாதகரின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக சிதைக்கும்.

தற்போழுது நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வாரி வழங்கும், குரு திசை ராகு புத்தி வலிமை அற்ற குடும்ப ஸ்தானம் மற்றும் சத்ரு ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், தம்பதியர் தற்போழுது பிரிந்து இருக்கும் சூழ்நிலையையே தரும்.


மனைவி ஜாதகம் :


லக்கினம் : விருச்சகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : ரோகிணி 4ம் பாதம்

 ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களான 2,5,7,8,12ம் வீடுகளில் 12ம் வீட்டை தவிர மற்ற வீடுகள் அனைத்தும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், தனது கணவரின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகங்கள் பெரும்பாண்மையானவை ஜாதகிக்கு மிகவும்  வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும்  ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் திசை மட்டுமே பாதிக்கப்பட்ட 10,12ம் பாவக  பலனை ஏற்று நடத்துகிறது, மேற்கண்ட தனது கணவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசையும், ஜாதகிக்கு நடைபெறும் திசையும் ஏக காலத்தில் ஜாதகருக்கு  பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தான பலனையும், ஜாதகிக்கு பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவதே தம்பதியரின் பிரிவுக்கு முழு முதற் காரணமாக அமைகிறது, அடுத்து வரும் சனி புத்தி ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகியின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தர கூடும் என்பது " ஜோதிடதீபத்தின் " எச்சரிக்கை.

மேலும் சனி புத்தி காலத்தில் ஜாதகி தன்னை விட வயதில் அதிகம் உள்ள  பெரியோர்கள் வார்த்தைகளை மதித்து நடப்பது சகல நலன்களையும் தரும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், நடைபெறும் திசைபுத்தி  வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஜாதகர்  பெரும் இன்னல்களுக்கு ஓர் அளவு இருக்காது என்பது மேற்கண்ட தம்பதியரின் ஜாதகம் கொண்டு தெளிவடையலாம்.

குறிப்பு :

திருமணத்திற்கு முன்பு பொருத்தம் காணும் பொழுது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த ஓர் ஜாதகத்தை, அதை போன்றே பாதக ஸ்தானத்தால் பாதிப்படைந்த ஓர் ஜாதகத்துடன் இணைப்பது மாபெரும் தவறாகும், குறிப்பாக குடும்பம் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், அதற்க்கு இணைசேர்க்கும் ஜாதகம் மிகுந்த வலிமையுடன் இருந்தால் மட்டுமே தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும் , இல்லை எனில் இல்லற வாழ்க்கை வெகுவாக கசப்பை தந்து, குறுகிய காலத்தில் பிரிவை தரும், மேலும் தம்பதியரின் சுய ஜாதகத்தில் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வழங்கும் பலாபலன்களை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைப்பது மிக முக்கியமான விஷயமாக அமைகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக