செவ்வாய், 7 மார்ச், 2017

தம்பதியர் ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான வலிமையையும், வாரிசு ( ஆண் ) யோகமும் !

 
 
தம்பதியரின் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீடு பெரும் வலிமையின் அடிப்படையிலும், திருமணத்திற்கு பிறகு தம்பதியருக்கு நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்து பாவக வலிமையின் அடிப்படையிலும், குழந்தைபாக்கியம் சிறப்பாக அமைகிறது, தம்பதியரின் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவதும், நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது, குறுகிய காலத்தில் புத்திரபாக்கியமும், தனது சந்ததி விருத்தி பெற நல்ல ஆண் வாரிசும் அமைகிறது.

 மாறாக தம்பதியர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் எனும் 5ம் பாவகம் வலிமை அற்று இருப்பதோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதோ, நடைபெறும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதோ, புத்திர பாக்கியத்தில் தடைகளையும், ஆண் வாரிசு அற்ற தன்மையையும் ஏற்ப்படுத்துகிறது, குறிப்பாக தம்பதியர் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது என்பது, புத்திர பாக்கியத்தில் கடுமையான தடைகளையும், தாமதங்களையும் வாரி வழங்குகிறது, தனது சந்ததி விருத்தி பெற தம்பதியர், பல வேண்டுதல்கள் வழிபாடுகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு அவதியுற நேருகிறது, இத்தனை இன்னல்களை கடந்து ஓர் குழந்தை கிடைத்தாலும், அந்த குழந்தை வழியிலான இன்னல்களை தம்பதியர்கள் அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தருகிறது.

தம்பதியர் ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் வீடு வலிமை பெற்று இருப்பின், நிச்சயம் அவர்களுக்கு தனது குலம் தழைக்க, நல்ல ஆண்வாரிசு அமையும், குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தை வழியில் இருந்து சிறப்பான யோகங்களை தம்பதியர் நிச்சயம் பெறுவார்கள், தம்பதியர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் வலிமை பெற்றும், சந்தானபாக்கியம் அமையவில்லை எனில், நடைபெறும் திசை அல்லது புத்தி தம்பதியருக்கு பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்க கூடும், காலதாமதம் ஆனாலும் நிச்சயம் அவர்களுக்கு நல்ல ஆண்வாரிசு உண்டு என்பதால், பாதிக்கப்பட்ட பாவக பலன்கள் முடிவுக்கு வரும்வரை தம்பதியர் அவசரபடாமல் பொறுமையை கடைபிடிப்பதே சால சிறந்தது, இயற்கைக்கு  முரணாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது குழந்தை பிறப்பில் சிக்கல்களையும், தம்பதியருக்கு இன்னல்களையும் தர வாய்ப்பு உள்ளது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் எந்த ஒரு பயமும் இல்லமால், சற்று பொறுமை காப்பதே சரியான வழி, இதை ஓர் தம்பதியர் சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்..

கணவர் :


லக்கினம் : ரிஷபம்
ராசி : விருச்சகம் 
நட்ஷத்திரம் : கேட்டை 1ம் பாதம் 

மனைவி :

லக்கினம் : கடகம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : பூசம் 1ம் பாதம் 

தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் புத்திர பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவக வலிமை நிலை :

ஜாதகருக்கு 5ம் வீடு அதிர்ஷ்டம், லாபம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு நல்ல புத்திர பாக்கியத்தை நல்கும் என்பது தெளிவாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிக மிக வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தை  வழியில் இருந்து ஜாதகர் ஜீவன முன்னற்றம் மற்றும் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை பெறுவார் என்பது 100% விகிதம் உறுதியாகிறது.

ஜாதகிக்கு 5ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இறை அருளின் கருணை மூலம் நல்ல வாரிசை பெறுவார் என்பது உறுதியாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மம் குடும்பம் ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பிறக்கும் குழந்தைகள் வழியில் இருந்து நார்ப்பெயரும், சமுதாய அந்தஸ்த்தையும் நல்ல அறிவு திறனையும் பெறுவார், பிறக்கும் குழந்தையும் மேற்கண்ட யோக பலன்களை அனுபவிக்கும், மேலும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட குழந்தையாக திகழும்.

தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவதுடன், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மம் மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

தம்பதியர் இருவருக்கும் தற்போழுது நடைபெறும் திசைபுத்தி தரும் பலன்கள் :

ஜாதகருக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 6,8,12ம் பாவக வழியில் இன்னல்களை தருகிறது, சுக்கிரன் திசையில் தற்போழுது நடைபெரும் ராகு புத்தி வலிமை பெற்ற 2,10ம் பாவக பலனை தருவது சிறப்பான அம்சமாகும்.

ஜாதகிக்கு நடைபெறும் புதன் திசை 5ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று புத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, நல்ல ஆண் வாரிசை புதன் திசையில் தரும், புதன் திசையில் தற்போழுது நடைபெறும்  ராகு புத்தி ஜாதகிக்கு 8,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதக ஸ்தான பலனை தருவது இன்னல்களை தரும் என்ற போதிலும், 6,10ம் வீடுகள் புத்திர ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ராகு புத்தி காலத்திலேயே நல்ல ஆண் வாரிசு உருவாகும் என்று உறுதியாக சொல்லலாம். 

கணவரின் ஜாதகத்தில் 6,8,12ம் பாவகம் பாதிப்பதும், மனைவியின் ஜாதகத்தில் 8,11ம் பாவகங்கள் பாதிப்பது மட்டும் இன்னல்களை  தரும் அமைப்பாகும், எனவே மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீதி பரிகாரங்களை தம்பதியர் இருவரும் மேற்கொள்வது  சாலச்சிறந்தது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், தம்பதியரின் வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக