வெள்ளி, 1 ஜூன், 2012

கடக லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும்பொழுது தரும் பலன் !



 

ஜாதகர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி காரணம் கால புருஷ தத்துவத்திற்கு கடகம் சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடாக சர நீர் ராசியாக வருவதே இதற்க்கு காரணம் , மேலும் ஜாதகருக்கு லக்கினம் எனும் வீடு 100 சதவிகிதம் நன்றாக அமைந்துவிடும் .

 மேலும் கடக லக்கினத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமரும்பொழுது ஜாதகருக்கு லக்கினத்திற்கு உண்டான முழு பலனையும் தானே செய்ய ஆராம்பித்து விடுவார்கள் அதுவும் 100 சதவிகிதம் நன்மையை மட்டுமே , மேலும் ஜாதகரின் உடல் நிலை எப்பொழுதும் நல்ல நிலையிலேயே இருக்கும் , சிறு சிறு உடல் உபாதைகள் வந்தாலும் அவை வெகு விரைவில் குணமடைந்து விடும் உடல் அமைப்பை பெற்று இருப்பார்கள் .

ஜாதகர் நினைக்கும் எண்ணங்களை அனைத்தையும் செயல் வடிவம் காணும் யோகத்தை பெற்றவர் என்பதில் சிறிது கூட சந்தேகமே இல்லை , ஜாதகருக்கு நல்ல கல்வியறிவு இயற்கையிலேயே சிறப்பாக அமைந்துவிடும் , குடியிருக்க சிறப்பான வசதிகள் கொண்ட சொகுசான வீடு அமைந்திருக்கும் , ஜாதகர் சிறு வயது முதல் தனது பெற்றோரின் அரவணைப்பில் நன்றாக வளரும் யோகம் உண்டாகும் , தாய் வழியில் ஜாதகர் அனைத்து யோகங்களையும் பெறுவார் .


 நல்ல பாசமான பெற்றோர்கள் இவர்களுக்கு அமைவார்கள் , இதன் காரணமாக சிறந்த ஒழுக்கமும் , கட்டுப்பாடும் , தன்னம்பிக்கையும் , சுயமாக வாழும் தன்மையும் கொண்ட மனிதனாக ஜாதகர் காணப்படுவார் , சிலருக்கு அளவுக்கு மீறிய சொத்துகள் நிறைந்திருக்கும் , இருப்பினும் ஜாதகர் கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு கொண்ட சிறந்த மனிதராக விளங்குவார் , மற்றவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்ப்படுத்தும் தன்மை உள்ள மனிதர் , மேலும் இவர்களை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை என்பதே ஜாதகருக்கு இருக்கும் சிறப்பான விஷயம் .

ஜாதகருக்கு கலை உணர்வு இயற்கையாக அமைந்திருக்கும் , கலைகளில் சிறந்து விளங்கும் தன்மை கொண்டுள்ளவராக காணப்படுவார் , பரந்த மனப்பான்மை , மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை , செல்வம் சேர்க்கும் திறமை , அதை முறையாக பயன்படுத்தும் தன்மை என, ஜாதகருக்கு அதிக நன்மையான பலனையே கடக லக்கினத்தில் அமரும், ராகுவோ அல்லது கேதுவோ தடையின்றி தந்துவிடுவார்கள் , இவர்கள் நினைத்த விஷயங்களை சிறப்பாக முடிக்கும் தன்மை கொண்டவர்கள்.


 கடக லக்கினத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமரும்பொழுது, கடக லக்கினத்திற்கு ஏழாம் வீடான மகரத்தில்  ராகுவோ அல்லது கேதுவோ அமரும் இந்த அமைப்பு மிக சிறப்பான யோகத்தையே வாரி வழங்கும் , கூட்டு தொழிலால் அதிக லாபம் , பொதுமக்கள் ஆதரவு , மனைவி வழியில் சொத்து , சுகம் , பெரும் வாய்ப்பு , அரசியலில் எதிர்பாராத வெற்றி என களத்திர பாவகமும் ௧௦௦ சதவிகித நன்மையை வாரி வழங்கும் , மகரமும் சர நில தத்துவ ராசி என்பதினால் .

மேலும் தொழில் ரீதியாக விரைவில் முன்னேற்றம் பெரும் அமைப்பு ஜாதகருக்கு இளம் வயது முதலே அமைந்து விடும் , கூட்டு தொழிலால் சகல யோகங்களையும் ஜாதகர் பெறுவார் , நல்ல நண்பர்கள் , தொழில் கூட்டாளிகள் என்று ஜாதகருக்கு அமைபவர்கள் எல்லாம் நல்லவர்களாகவே இருப்பார்கள் , வெளிநாடுகளில் இருந்து அதிக வருமான அமைப்பை ஜாதகர் பெறுவார் , ஏற்றுமதி , இறக்குமதி தொழில் கொடிகட்டி பறக்கும் நபர்கள் அனைவரும் இந்த அமைப்பை சார்ந்தவர்களே .

கலியுகத்தில் பிறந்தவர்கள் கடக லக்கினமாக பிறக்க வேண்டும் , அப்படி பிறந்தாலும் லக்கினத்தில் ராகுவோ , கேதுவோ அமர வேண்டும் , அப்படி அமர்ந்து லக்கினம் களத்திர வீடுகளின் பலன் ஜாதகருக்கு 18 வயது முதல் 50 வயது வரை நடக்குமானால், ஜாதகர் மிகசிறந்த அதிர்ஷ்ட சாலி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை, என்பதை அவர்கள் வாழ்க்கையில் ஏற்ப்படும் முன்னேற்றங்களை, பார்த்தால் நிச்சயம் தெரியும்.

எனவே கடக லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்வது 100 சதவிகித நன்மையை மட்டுமே செய்யும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை என்பதே ஜோதிட தீபத்தின் ஆணித்தரமான கருத்து .

 
குறிப்பு :

மேற்கண்ட பலன்கள் சுய ஜாதக ரீதியாக இலக்கின பலனை நடக்கும் திசைகள் புத்திகள் . அந்தரம் , சூட்சமம் ஆகியவைகள்  நடத்தினால் மட்டுமே நடைபெறும் என்பதை கவனத்தில் கொள்க .



வாழ்க வளமுடன்   
ஜோதிடன் வர்ஷன்
9443355696

2 கருத்துகள்: