வியாழன், 30 அக்டோபர், 2014

ஜாதக ரீதியான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சரியான பதில்கள் !



கேள்வி :

எனது ஜாதகத்தில் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளதா? தற்போது செய்யலாமா? நிலைத்து நீடிக்குமா?

பதில் : 

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஒரு சிறப்பான விஷயமே ? தாங்கள் நிச்சயம் சுய தொழில் செய்வதே சால சிறந்தது, தனிப்பட்ட முறையில் செய்யும் தொழில் நிச்சயம் வெற்றி பெரும், கூட்டு தொழில் நிச்சயம் சரிப்பட்டு வர வாய்ப்பில்லை மிகுந்த பின்னடைவை தரும்.

தற்பொழுது நடைபெறும் ராகு புத்தி தங்களுக்கு சாதகமான வகையில் 1ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையையே செய்வதால் தொழில் துவங்க இது ஒரு உகந்த காலம், மேலும் செய்யும் தொழிலில் நர்ப்பெயரும், வளர்ச்சியும் கிடைக்கும்.

ஜீவன ஸ்தானம் என்பது மிகவும் வலிமையாக இருப்பதால் நிச்சயம் தொழில் நீடித்து நிற்கும், தொடர்ந்து வெற்றிகளை தரும்.

கேள்வி : 

எப்படிப்பட்ட தொழில்கள் எனக்கு சரியாக வரும்? உதாரணமாக டிராவல் ஏஜென்ட்டு, கமிஷன் தொழில், விளம்பரம், டிசைனிங்,  போன்றவை.

பதில் :

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் தொடர்பு பெறுவது, லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் என்பதால், ஜாதகர் 100% லாபம் தரும் தொழிலை தேர்ந்தெடுத்து செய்வது நலம் தரும், குறிப்பாக கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் பாவகம் 7ம் ராசியாக வருவதால், ஜாதகர் பொதுமக்கள் சார்ந்த தொழில்களை மேற்கொள்வது சால சிறந்தது, விளம்பரம், திரைப்பட துறை, பேச்சு,எழுத்து, வியாபாரம், மக்கள் தொடர்பு, வீட்டு உபகரண பொருட்கள் விற்பனை, ஆடம்பர பொருள் விற்பனை, ஜோதிடம், கலை துறை, துணி வியாபாரம், மருத்துவ பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை, இரத்தின வியாபாரம், தனது அறிவாற்றலை பயன்படுத்தி விரைவில் வெற்றி பெரும் யோக வணிக தொழில்கள், மக்கள் தொடர்பு உடைய உணவு பொருள் விற்பனை, கல்வி துறை, போன்ற தொழில்களில் வெற்றியும் , முன்னேற்றமும் உண்டாகும்.




கேள்வி :

என் கையில் காசு தங்குமா? சேமிப்பு வருமா? 

பதில் :

2ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , தங்களின்  வருமானத்தை நிர்வகிக்க தெரியாதவர் என்பதை உறுதி படுத்துகிறது, தங்களது கையில் காசு இருந்தால் திடீர் செலவை தரும் என்பது மட்டும் உறுதி , எனவே சேமிக்கும் பழக்கத்தை கற்று கொள்வது நலம் தரும், உதாரணமாக் கையில் பணத்தை வைத்து கொள்ளாமல், வங்கியில் வரவு செலவு கணக்கை நிர்வகிப்பது சால சிறந்தது, 4ம் வீடு வலிமையாக இருப்பதால், சொத்து வீடு வண்டி வாகனம், பொருட்கள் மேல் முதலீடு செய்வது தங்களது வீண் விரைய செலவை குறைக்கும், சுய ஜாதகத்தில் எந்த பாவகம் வலிமை பெற்று இருக்கிறதோ அதன் தத்துவம் சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்வது, தங்களுக்கு சேமிப்பை வளர்க்கும். அல்லது வட்டிக்கு பணம் கொடுங்கள் வருமானமும் உண்டு, பணமும் விரையம் ஆகாது 6ம் வீடு மிகவும் வலிமை பெற்று இருப்பது கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் தரும்.

கேள்வி :

எனது ஜாதகத்தில் 10ம் பாவகத்தை பற்றி சொல்லுங்கள்?

பதில் :

4,6,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 100% நன்மையை தரும் அமைப்பே, எனவே தாங்கள் 4ம் பாவக அமைப்பில் இருந்து வீடு,நிலம்,வண்டி,வாகனம் போன்ற விஷயங்களில் தொழில் செய்யலாம், 6ம் பாவக வழியில் இருந்து கடன் கொடுப்பது, வட்டி தொழில், பொருட்களை வாங்கி உடனடியாக லாபம் பார்க்கும் தொழில், மருந்து மருத்துவ உபகரண வியாபாரத்தில் நல்ல லாபம், மருத்துவ துறையில் கமிஷன் அடிப்படையில் தொழில் செய்ய சரியான வாய்ப்பு உண்டாகும், 10ம் பாவக வழியில் இருந்து பொதுமக்கள் சார்ந்த அனைத்து தொழிலும் மிகுந்த முன்னேற்றத்தை  தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து கூட்டாக செய்யும் தொழிலும் வெற்றி பெரும், 12ம் பாவக வழியில் இருந்து ஆன்மீக வெற்றி, நீண்டகால முதலீடுகளில் நல்ல லாபம், பொருட்களின் பேரில் வட்டிக்கு பணம் தருதல், பேச்சின் மூலம் வரும் வருமானம், அரசியலில் எதிர்பாராத வெற்றி, அரசியல்வாதிகள் மூலம் லாபம் என்ற வகையில் ஜீவன பாவகம் யோகத்தை தரும்.

கேள்வி :

பங்கு மார்கெட் தொழில் நமக்கு சரி வருமா?

பதில் :

2,5,8,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, பங்கு வர்த்தக துறையில் ஈடுபட்டால், அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையை தரும், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட நிச்சயம் 5, 11ம் பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது அவசியம். பங்கு வர்த்தகம் தங்களுக்கு சரிப்பட்டு வராது !

கேள்வி :

தற்பொழுது ராகு கேது பெயர்ச்சி மற்றும் வரப்போகும் சனிப் பெயர்ச்சி யோக பலன்களை தருமா?

பதில் : 

தங்களுக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 12ம் பாவக பலனை தருவதால் ராகு கேது கோட்சார பலன்கள் எவ்வித நன்மை தீமையையும் செய்யவில்லை, ஆனால் எதிர்வரும் சனி பெயர்ச்சி தங்களுக்கு 12ம் பாவக வழியில் இருந்து 100% கோட்சார நன்மைகளை தொடர்ந்து 30 மாதங்கள் வாரி வழங்கும் என்பதால் தாங்கள் மகிழ்ச்சி கடலில் நீந்தலாம், தங்களுக்கு ஒன்று புதையல் கிடைக்க வேண்டும், அல்லது புதையலுக்கு ஈடான வருமானம் கிடக்க வேண்டும் என்பதால் இனி வரும் சனி பெயர்ச்சி தங்களுக்கு மிகுந்த யோகத்தை வாரி வழங்குகிறது என்பதே சிறப்பான விஷயம், தங்களின் 12ம் வீடு கால புருஷனுக்கு 8ம் வீடு என்பதால், தங்களுக்கு விபரீத ராஜ  யோகம் இனி வரும் காலங்களில் நடைபெறும், வாழ்த்துகள்.

கேள்வி :

வீட்டு மனை வாங்கியாச்சு. சொந்த வீடு எப்போது கட்டுவேன்?

பதில் :

சுக்கிரன் திசை குரு புத்தியில் வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

கேள்வி :

நான் செய்ய வேண்டிய கர்மவினை கழிப்பு பற்றி சொல்லுங்கள்.

பதில்:

வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்று கொள்வதும், மற்றவரிடம் கவனமாக பேசுவதும், குல தெய்வத்தை முறையாக வழிபடுவதும், எதிர்பாராமல் வரும் சில இழப்புகளை தாங்கி கொள்வதும், எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதை துணிவாக எதிர்கொண்டு வெற்றி பெறுவதும், தன்னம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடுவதும் சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், குறிப்பாக நல்ல ஆன்மீக பெரியவரிடம் தீட்சை பெறுவது யோகத்தை தரும், மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே சகல நன்மையையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

4 கருத்துகள்:

  1. ஐயா இரண்டாவது கேள்வி பதிலில் பத்தாம் பாவகம் தொடர்பு பெறுவது, லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதனை சற்று விளக்கமாக எனக்கு தெளிவுபடுத்தினால் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தங்களின் ஆர்வத்திற்கு நன்றி !

      ஒருவருக்கு ஜாதக பலனை நிர்ணயம் செய்து, ஜாதக ரீதியான தெளிவான பதில்களையும், சரியான தீர்வுகளையும் பரிந்துரை செய்ய மேற்கண்ட அமைப்பில் பாவக தொடர்புகளை பற்றிய தெளிவும், ராசி தத்துவ அமைப்புகள் பற்றிய புரிதலும் வேண்டும், மேலும் பாவக தொடர்பு என்பதே எங்களது ஜோதிட முறைக்கும், மற்ற ஜோதிட முறைக்கும் இருக்கும் சிறப்பான விஷயம், எனவே தாங்கள் ஜாதக ரீதியான பாவக தொடர்புகளை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் எங்களது ஜோதிட முறையை தெளிவாக அடிப்படையில் இருந்து கற்றுகொண்டால் மட்டுமே, தாங்கள் பாவக தொடர்புகளை பற்றி தெரிந்துகொள்ள இயலும், ஆர்வம் இருப்பின் தொடர்பு கொண்டு முறையாக கற்று கொள்ளுங்கள்.

      நீக்கு
  2. வணக்கம் ,தங்கள் விளக்கம் எளிமையாகவும், தெளிவாக உள்ளது. எனக்கு மருத்துவ உபகரணங்கள்(single use) தயாரிப்பில் ஆர்வம் உள்ளது.காரிய சித்தி உள்ளதா? வரும் தசாபுக்தி எப்படி இருக்கும் அய்யா?08-07-1983; 9.45pm மதுரை மேலூர்.

    பதிலளிநீக்கு