சனி, 25 மார்ச், 2017

சுய ஜாதகத்தில் உள்ள யோகம் அவயோகம், வலிமை மற்றும் வலிமை அற்ற தன்மை பற்றி தெளிவு பெற.....


இறை அருள் அனைவருக்கும் எப்பொழுதும் தனது அருள் கரங்களை கொண்டு, வேண்டும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்க தயாராக இருப்பதை இறை அருள் நிரம்ப பெற்ற திருகோவில்களில், சிலை வடிவில் உள்ள இறைவனை காணும் பொழுது நாம் அனைவரும் உணர்வு பூர்வமாக உணர இயலும், "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்பதனை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் இறை அருளின் பரிபூர்ண கருணையை பெற அடித்தளமாக அமையும் பாவகங்கள், லக்கினம் எனும் முதல் பாவகம், பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம், மற்றும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் பாவகம் என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் லக்கினம், பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்று இருக்கும் ஜாதகர்களின் வாழ்க்கையில் இறை அருளின் கருணை சற்று அதிகம் என்றே சொல்லலாம், இவர்களுக்கு தடைகள் என்பது எதுவும் இல்லை என்ற நிலை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும், செய்யும் காரியங்கள் யாவிலும் சத்தியத்தை கடைபிடிக்கும் உத்தம நிலையை தருகிறது, சரியானதை லக்கினம் தேர்வு செய்கிறது, சிறப்பான நன்மைகளை பூர்வபுண்ணியம் வழங்குகிறது, நன்மைகள் வழியிலான பூர்ணகதியை பாக்கிய ஸ்தானம் நல்குகிறது, எனவே ஜாதகர் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தேடி செல்லாமல், தம்மை தேடிவரும் வழியிலான செயல்களை செய்து சிறப்படைகிறார், எனவே சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் வலிமை பெறுவது, எந்த ஓர் சூழ்நிலையிலும் இறையருளின் கருணையினால் ஜாதகர் நிலையான சுபயோக வாழ்க்கையை பெறுகிறார்.

சுய ஜாதகத்தில் உள்ள வலிமை வலிமை அற்ற நிலையை, யோகம் அவயோகம், தனது சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகர் பெரும் நன்மை தீமை ஆகியவற்றை சம்பந்தப்பட்ட ஜாதகர் துல்லியமாக அறிந்துகொள்ளவே சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெரும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் தன்னிலை முழுவதும் உணர்ந்தவராக திகழ்வார், வீண் கற்பனையில் காலத்தை எதிர்கொள்ளாமல், தனது சுய வலிமையையும், தனது திறமை மற்றும் தகுதியும் உணர்ந்து செயல்படும் யோகம் பெற்றவராக இருப்பார், குறிப்பாக தனது பிறவியின் நோக்கம் அறிந்து செயல்படும் வல்லமை பெற்றவராக திகழ்வார், மேற்கண்ட பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் சிறு வயது முதலே மிகுந்த விழிப்புணர்வுடன் திகழ்வார், மனதிற்கு அப்பாற்ப்பட்ட, புலனறிவுக்கு அப்பாற்ப்பட்ட சக்தி ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும், எதிலும் தெளிவு, அறிவார்ந்த செயத்திறன், தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி இவர்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க சுபயோகங்களை வாரி வழங்கும்.

நல்ல மனிதர்கள் சேர்க்கை, சமூகத்தில் பெரிய மனிதர்கள் அறிமுகம், ஆன்மீக பெரியோர்களின் ஆசி, குலதெய்வ அனுக்கிரகம், பித்ருக்கள் நல்லாசி ஆகியவற்றை பெற சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் தனக்கு உகந்த விஷயங்களையும், தனக்கு உகந்த காரியங்களையும் தேர்வு செய்வதற்கு மேற்கண்ட பாவகங்களின் வலிமை மிக மிக அவசியமாகிறது, வருமுன் உணரும் சக்தியும், விளைவு அறிந்து செயல்படும் வல்லமையும் மேற்கண்ட பாவக வலிமையின் அடிப்படையிலேயே ஒருவருக்கு அமைகிறது, மேலும் தனக்கு வரும் இன்னல்கள் மற்றும் துன்பங்களை இறைவழியில் நின்று வாழ்க்கையில் வெற்றி பெறவும், தன்னால் சாதிக்க இயலும் செயல்களை தேர்வு செய்து முன்னேற்றங்களை பெறவும் லக்கினம்,பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமையே ஓர் ஜாதகருக்கு அடிப்படை உந்துதலாக இருக்கின்றது.

கால நேரம் அறிந்து செயல்படும் தன்மையும், சுய ஜாதக வலிமை நிலையை பற்றிய தெளிவாக அறிந்து உணர்ந்து செயல்படும் வல்லமையையும், வாழ்க்கையில் வரும் சுப யோகங்களை தெளிவாக உணர்ந்து அதன் வழியிலான நன்மைகளை பெரும் ஆற்றலும் ஓர் ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையை மிக சிறப்பாகவும், முன்னேற்றம் மிகுந்ததாகவும் அமைத்துக்கொண்டு 100% விகித சுபயோகங்களை பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து: