வெள்ளி, 3 மார்ச், 2017

திர்ஷ்டம் அதிர்ஷ்டம் வழங்கும் யோக வாழ்க்கை !


அதிர்ஷ்டம் என்றால் புலன் அறிவுக்கு, புலப்படாமல் வரும் யோக வாழ்க்கை , திர்ஷ்டம் என்றால் புலன் அறிவு மூலம் உணரப்பட்டு வரும் யோக வாழ்க்கை, சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம் உண்டா ? என்ற கேள்வி அனைவர் மனதிலும் தோன்றுவது இயற்கையே, அதிர்ஷ்டம் பற்றி அனைவரும் அறிந்தது உண்டு, திர்ஷ்டம் பற்றி யாரும் கேள்விகளை வினவியது இல்லை, சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டத்தை வழங்குவது லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் எனில், திர்ஷ்டத்தை வழங்குவது மற்ற அனைத்து பாவகங்களும் என்றால் அது மிகையில்லை.

 திர்ஷ்ட லாபங்களை நல்குவதில் முதலிடம் வகிப்பது வீர்ய ஸ்தானம் எனும் 3ம் பாவகமே, அதற்க்கு அடுத்து 1,4,7,10 பாவகங்கள் வலிமை பெறுவது திர்ஷ்ட பலன்களை சிறப்பாக வழங்கும் பாவகங்கள் ஆகும், தனது கடின உழைப்பின் மூலம் தனது புலன் அறிவு மூலம் உணரப்பட்டு வரும் யோக வாழ்க்கை என்பது நிலையாக நிலைத்து இருக்கும், அதிர்ஷ்டத்திற்கு அந்த நிரந்தரம் உண்டா என்பது கேள்விக்குறியே, சுய ஜாதகத்தில் திர்ஷ்ட யோகங்களை பெற்றவர்கள் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்களே, ஏனெனில் இது தொடர் வெற்றிகளை வாரி வழங்கி கொண்டே இருக்கும், அதிர்ஷ்டம் போன்று குறுகிய கால நன்மைகளை மட்டும் தருவதல்ல, குறிப்பாக வீர்ய ஸ்தானமான 3ம் பாவக வழியில் இருந்து வரும் திர்ஷ்ட யோக வாழ்க்கை என்பது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், மேலும் நிரந்தரமான யோக வாழ்க்கையை நல்குவதில் வீர்ய ஸ்தான வலிமையை விட, லாப ஸ்தான வலிமை குறைவு என்றே சொல்லலாம்.

சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் வலிமை பெற்றவர்கள் எவரும் அதிர்ஷ்டத்தை விரும்புவதில்லை, ஏனெனில் திர்ஷ்டமாக அவர்களுக்கு வரும் யோகம் அவர்களுக்கு தெளிவாக தெரியும், அதற்க்கு உண்டான திட்டமிடுதல்களுடன் செயல்பட்டு வாழ்க்கையில் தொடர் முன்னேற்றங்களையும், யோகங்களையும் பெறுவார்கள், அதிர்ஷ்டம் அப்படிப்பட்டதல்ல, வருவதும் தெரியாது, செல்வதும் தெரியாது, சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் வலிமை இழந்து காணப்படும் பொழுது, அவர்களுக்கு அதிர்ஷ்டம் எனும் விஷயம் மிக பெரியதாக தெரியவரும், மேற்கண்டவற்றில் திர்ஷ்டம் அதிர்ஷ்டம் ஆகிய இரண்டு விஷயங்களையும் கலந்து தருவது சுய ஜாதகத்தில் 2,6,8,12ம் பாவகங்கள் என்றால் அது மிகையில்லை.

 சுய ஜாதகத்தில் 2,6,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்ற அன்பர்கள் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள், இவர்களுக்கு எதுவும் நிகரில்லை எனலாம், தனது வாழ்க்கையை திர்ஷ்டம், அதிர்ஷ்டம் இரண்டு நிலைகளில் இருந்தும் யோகங்களை பன்மடங்கு பெரும் வல்லமை பெற்றவர்கள், எந்த ஒரு விஷயத்தையும் மிக எளிதாக கையாண்டு வாழ்க்கையில் வெற்றிகளை மட்டுமே சிறப்பாக பெற்றுகொண்டே இருப்பார்கள், 2,6,8,12ம் பாவகங்கள் மறைவு ஸ்தானங்கள் என்ற பொழுதிலும் வலிமை பெரும் பொழுது நிறைவான யோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து: