ஞாயிறு, 5 மார்ச், 2017

சுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசையும் பாதக ஸ்தான தொடர்பும் !



சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு, சுய ஜாதக பலாபலன்கள் காண்பது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், சுய ஜாதகம் என்பது மூன்று காலங்களையும் உணர்த்தும் அட்சய பாத்திரம் என்றால் அது மிகையில், நாம் அனைவரும் நமது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை, வலிமை அற்ற தன்மை ஆகியவற்றை தெளிவாக உணர்ந்துகொண்டு, அதற்க்கு ஏற்றார் போல் தமது எதிர்காலத்தை சிறப்பித்து வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தலாம், நமது சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவான கண்ணோட்டம் இல்லாத சூழ்நிலையிலேயே, புலன் இன்பங்களுக்கு ஆர்ப்பட்டு விதி தரும் இன்னல்களில் சிக்கிக்கொண்டு துன்பம் அனுபவிக்கிறோம்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வாழ்வையும் தாழ்வையும் தருகின்றது, உதாரணமாக சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகரின் வளரும் சூழ்நிலை சிறப்பானதாக அமையும், சிறு வயது முதல் நல்ல உடல் ஆரோக்கியம், நல்ல மனநலம், கல்வியில் தேர்ச்சி, பெற்றோருடன் ஜீவித்து இருக்கும் யோகம், நீண்ட ஆயுள், புகழ் கீர்த்தி, சுய அந்தஸ்து என லக்கினம் சார்ந்த நன்மைகளை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவார், லக்கினம் வலிமை அற்று இருப்பின் அடிப்படையில் ஜாதகரின் வளரும் சூழ்நிலையே சிறப்பாக அமையாது, ஒவ்வொரு விஷயத்தையும் போரடி பெரும் சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளபடுவார், உடல்நலம் பாதிக்கும், தெளிவற்ற சிந்தனை ஜாதகருக்கு சிறப்பான வாழ்க்கையை தாராது, கல்வியில் தடை, பெற்றோரை விட்டு மற்ற இடத்தில் ஜீவித்து இருக்கும் சூழ்நிலை, நல்லோர் சேர்க்கை இன்றி வாழ்க்கை பாதை முரண்பட்ட திசையில் பயணிக்கும் சூழ்நிலையை தரும்.

லக்கினம் வலிமை பெறுவது ஜாதகருக்கு நன்மைகளையும், வலிமை அற்று காணப்படுவது ஜாதகருக்கு இன்னல்களையும் நல்கும் எனும் பொழுது மற்ற பாவகங்கள் வலிமை பெறுவதும் வலிமை அற்று காணப்படுவதும் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மை தீமை பலாபலன்களை எவ்விதத்தில் தரும் என்று நாம் சொல்லி தெரிவதில்லை, நாம் நமது ஜாதகத்தை மூன்று விஷயங்களை ஆய்வு செய்வதின் மூலம் யோக ஜாதகமா ? அவயோக ஜாதகமா ? என்று தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும்.

1 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகள் எந்த எந்த பாவகங்களுடன் தொடர்பு பெறுகின்றது, அப்படி தொடர்பு பெரும் வீடுகள் வலிமை பெற்று இருக்கின்றதா? வலிமை அற்று இருக்கின்றதா ?

2 நடைபெற்ற திசை சுய ஜாதகத்தில் எந்த பாவக தொடர்பு பெற்ற வீடுகளின் பலன்களை ஏற்று நடத்தியது? நடைபெறும் திசை சுய ஜாதகத்தில் எந்த பாவக தொடர்பு பெற்ற வீடுகளின் பலன்களை ஏற்று நடத்துகிறது ? எதிர்வரும் திசை சுய ஜாதகத்தில் எந்த பாவக தொடர்பு பெற்ற வீடுகளின் பலன்களை ஏற்று நடத்த இருக்கின்றது ?

3 நவகிரகங்களின் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகளுக்கு அல்லது  வீடுகளுக்கு கோட்சார கிரகங்கள் பெறும் தொடர்பு என்ன ? கோட்சார கிரகங்கள் தொடர்பு பெரும் நிலையில் இருந்து ஜாதகருக்கு தரும் நன்மை தீமை என்ன ?

மேற்கண்ட விஷயங்களில் நாம் தெளிவு பெரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு  மிக துல்லியமான பலாபலன்களை மிக எளிதாக காண முடியும், சுய ஜாதக வலிமையின் அடிப்படையில், ஜாதகர் செய்யும் திட்டமிடுதல்கள், செயல்பாடுகள்  தங்கு தடையின்றி வெற்றிகளை வாரி வழங்கும், மேற்கண்ட விஷயங்களை அடிப்படையாக கொண்டு ஓர் ஜாதகத்தை நாம் இன்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : விருச்சகம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : பூரட்டாதி 4ம் பாதம்.

ஜாதகத்தில் வலிமையான பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும்  வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு 1,7ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், லக்கின வழியில் சிறப்பான வளரும் சூழ்நிலை, புகழ் கீர்த்தி, நீண்ட ஆயுள் என்ற வகையில் நன்மைகளை பெறுவார்.

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து சகல நன்மைகளையும் தரும், ஜாதகரின் அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் சிறப்பான யோக வாழ்க்கையிற் தரும், தமது குழந்தைகள் வழியில் இருந்து நன்மைகளை பெறுவார்.

10,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றத்தையும், கவுரவம், அந்தஸ்து சுய மரியாதையும் பெறுவார், மதிப்பு மிக்க செயல்களால் வாழ்க்கையில் ஜீவன ரீதியான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெறுவார் .

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

3,9ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு சகோதரம் மற்றும் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து கடுமையான இழப்புகளை  நல்கும்.

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு சத்ரு ஸ்தான வழியில் இருந்து கடன் தொல்லைகளையும், அயனசயன ஸ்தான வழியில் இருந்து  நிம்மதி இழப்பு, மற்றவர்களால் மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களில் திடீரென பேரிழப்பை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

2,4,8ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப ஸ்தானம் மற்றும் வருமானம் சார்ந்த இன்னல்களையும், சொத்து,வண்டி வாகனம், வீடு நிலம், சுகபோகம் சார்ந்த வகையில் கடுமையான இன்னல்கள் மற்றும் இழப்புகளையும், ஆயுள் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை பெற்ற போதிலும் அதற்க்கு நிகரான திடீர் பொருள் இழப்புகளையும், நஷ்டங்களையும் வாரி வழங்கும், மேற்கண்ட ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை தவிர்க்க இயலாமல் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும்.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் பொருளாதார ரீதியான நன்மைகளை பெறுவதற்கு  அவரது ஜாதகத்தில் 2,4,6,7,8,10,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகத்தில் 7,10ம் பாவகங்களை தவிர மற்ற பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஜாதகரின் பொருளாதார ரீதியாக ஜாதகர் படும் இன்னல்களை தெளிவு படுத்துகிறது, சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் வலிமை பெறுவது நிலையான வருமானத்தையும், 4ம் பாவகம் வலிமை பெறுவது சொத்து, வீடு, நிலம், வண்டி வாகனம் சார்ந்த வருமானத்தையும், 6ம் பாவகம் வலிமை பெறுவது குறுகியகால வருமானத்தையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது வியாபார வழியிலான வருமானத்தையும், 8ம் பாவகம் வலிமை பெறுவது திடீர் என வரும் புதையல் யோகம் அல்லது அதற்க்கு நிகரான வருமானத்தையும், 10ம் பாவகம் வலிமை பெறுவது செய்யும் தொழில் மற்றும் வேலை வழியிலான வருமானத்தையும், 12ம் பாவகம் வலிமை பெறுவது செய்த முதலீடுகளில் இருந்து வரும் பெரிய அளவிலான வருமானத்தையும் குறிக்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர் 7,10ம் பாவக வழியிலான வருமானத்தை மட்டுமே எடுக்க இயலும் எனும் பொழுது ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் களத்திரம் மற்றும் ஜீவனம் சார்ந்த அமைப்பில் இருப்பது மட்டுமே நலம் தரும் மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவத்திற்கு 2ம் ராசியாகவும், ஸ்திர மண் தத்துவ அமைப்பில் இருப்பதால், ஜாதகர் அது சார்ந்த  ( நிலம், இடம்,நிலையான உலோக பொருட்கள், தனம் சார்ந்த வியாபாரம், தனது வாக்கின் வழியில் பொதுமக்களுடன் தொடர்பு பெரும் தொழில்கள் )  வியாபாரத்தையும், ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர நெருப்பு தத்துவ அமைப்பில் இருப்பதால் அது சார்ந்த தொழில்களையும் ( தொழில் நுட்பம், மின்சார சாதனம், விவசாய உபகரணம், உணவு தொழில், வீட்டு மின்சாதன பொருட்கள், கலை துறை, ஜோதிடம், கணிதம் ) ஜாதகர் தேர்வு செய்து முன்னேற்றம் காணலாம்.

ஜாதகருக்கு கடந்த கேது திசை வழங்கிய பலன்கள் ( 17/01/1995 முதல் 17/01/2002 வரை )  :

கேது திசை ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஸ்திரமான வெற்றிகளையும், வியாபர விருத்தியையும் வழங்கி இருக்கின்றது, மேலும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் ரீதியான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கி இருக்கின்றது, எனவே கேது திசை ஜாதகருக்கு களத்திர ஸ்தான வழியில் இருந்தும், ஜீவன ஸ்தான வழியில் இருந்தும் சுபயோகங்களை சிறப்பாக வழங்கி இருக்கின்றது.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை வழங்கும் பலன்கள் ( 17/01/2002 முதல் 17/01/2022 வரை )  :

தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,4,8ம் வீடுகள் பாதகஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியிலும், பாதக ஸ்தான வழியிலும் 200% விகித இன்னல்களை வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கு உகந்தது அல்ல, சுய ஜாதகத்தில் நடைமுறையில் உள்ள  திசை அல்லது புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை சந்திக்க சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், மேலும் ஜாதகரின் 2ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவதும், உபய நெருப்பு ராசியில்  அமைவதும் ஜாதகரின் வாழ்க்கையை கேள்வி குறியாக மாற்றும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலை, தெளிவற்ற முடிவுகளால் வாழ்க்கையில் அதிக இன்னல்களை தந்துவிடும், எனவே ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

சுக்கிரன் திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தியும் ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களை தருவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து எதிரி தொல்லை, வழக்கு, கடன், உடல் நல பாதிப்பையும், 12ம் பாவக வழியில் இருந்து வீண் விரையம் அனைவராலும் தொல்லை, மன நிம்மதி இழப்பு, மன அழுத்தம் என இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும். கோட்சார கிரகங்கள் மேற்கண்ட பாவகங்களுக்கு வலிமை சேர்ப்பது ஜாதகருக்கு ஒருவகையில் சில நன்மைகளை ஸ்திரமாக வாரி வழங்கும்.


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

3 கருத்துகள்: