வியாழன், 10 மே, 2012

குழந்தை பேரு கிடைக்க குல தெய்வ வழிபாடு !



சுய ஜாதகத்தில் தம்பதியர் இருவருக்கும் குழந்தை பாக்கியம் எனும் பூர்வ புண்ணியம் பாவகம் 100 சதவிகிதம்  நன்றாக இருந்து , அவர்கள் பூர்விகத்தில் இருப்பின் சந்தான பாக்கியம் எவ்வித தடையும் இல்லாமல் தமது குலம் விளங்க புத்திரன் கிடைப்பான் .

ஒரு வேலை இவர்களுக்கு  பூர்வ புண்ணியம் பாவகம் 100 சதவிகிதம்  நன்றாக இருந்து  தனது பூர்வீக அமைப்பை விட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டால் அந்த தம்பதியருக்கு நிச்சயம் பெண் குழந்தை கிடைக்கும் .


சுய ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் எனும் பூர்வ புண்ணியம் பாவகம் ஒருவருக்கு மட்டும் நன்றாக இருந்தால், அவர்கள் எங்கு இருந்தாலும் அந்த தம்பதியருக்கு நிச்சயம் பெண் குழந்தை கிடைக்கும் .

 ஆனால் சுய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் , எனும் ஐந்தாம் பாவகம் தம்பதியர் இருவரின் ஜாதக நிலையிலும்  பாதிக்க பட்டாலும் , கெட்டு விட்டாலும் , அந்த தம்பதியருக்கு சந்தான விருத்தி  கிடைப்பது மிகவும் சிரமம் , மேலும் இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கு பாக்கியம் எனும்  9  பாவகமும் பாதிப்படைந்து , அல்லது கெட்டு  விட்டால் குலத்திற்கு பேர் சொல்ல பிள்ளை இல்லை என்பதே கசப்பான உண்மை .

இந்த வகை அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு புத்திர சந்தானம் கிடைக்க இறைஅருள், மற்றும் ஜோதிட சாஸ்திரம் வழி காட்டுகிறதா?


நிச்சயம் வழிகாட்டுகிறது , புத்திர சந்தானம் கிடைக்க பெறாத தம்பதியர் இருவரும் தமது குல தெய்வம் எதுவோ அந்த தெய்வத்தை வழிபடுவதாலும் , சாந்தி செய்வதாலும் நிச்சயம் புத்திர சந்தானம் கிடைக்க பெறுவார்கள் .

வழிபடும் முறை :


தம்பதியர் இருவரும் அமாவசை திதியில் , தமது குலதெய்வ கோவிலுக்கு சென்று ,பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதும் , வஸ்திரம் அலங்காரமும் , மலர் மாலை அலங்காரமும் செய்வதும் , ஐந்தாம் பாவக காரகதுவத்தை வலுவடைய செய்யும் . மேலும் தாமே செய்த ஐந்து வகை சாதத்தினை,முன் பின் தெரியாத 50 பது நபருக்காவது  அண்ண தனம் செய்வது குலதெய்வத்தை சாந்தி செய்யும் , குல தெய்வம் மகிழ்ச்சி அடைந்து புத்திர சந்தான விருத்தியை கொடுத்து, குலம் தழைக்க அருள் புரியும், இந்த வழிபாட்டினை தம்பதியர் இருவரும் சேர்ந்து செய்வது 100 சதவிகித நன்மையை தரும் .


இந்த வழிபாட்டினை ஐந்தாம் பாவகம் பாதிக்க பட்ட அல்லது கெட்டு விட்ட,  தம்பதியர்  9 அமாவாசை திதிகளில் தொடர்ந்து செய்து வரும்பொழுது , வழிபாடு செய்யும் காலங்களிலேயே அவர்களது குலம்  தழைக்க நிச்சயம் ஒரு வாரிசு கிடைக்கும் என்பது உறுதி.

 அது மருத்துவ ரீதியாகவும் இருக்கலாம் , அல்லது இயற்கையாகவும் இருக்கலாம் , அவரவர் கர்ம வினை பதிவுக்கு ஏற்றார் போல் அமையும் , சந்தான விருத்தி இல்லாத தம்பதியர்  அனைவரும், இந்த ஆலோசனையை கடை பிடித்து அவர்களுக்கு 100 சதவிகித வெற்றியை கொடுத்துள்ளது என்பது இறை நிலையின் கருணையே !

 வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக