வெள்ளி, 18 மே, 2012

ரிஷப லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் தரும் பலன் !



 ஜாதகருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை ராகுவோ , கேதுவோ அமரும் பொழுது நிச்சயம் தந்து விடுவார் , மேலும் ஜாதகர் தனது உடலை பேணி பாதுகாக்கும் வித்தையை தெரிந்து , அதன் படி நடந்து உடலை ஒரு கோவிலாக பாதுகாக்கும் தன்மை வாய்ந்தவராக காணப்படுவார் , ஆனால் மனதளவில் அதிகம் பயம் கொண்டவராக காணப்படுவார் , மேலும் யோக கலையில் மிக சிறந்து விளங்கும் நபராக இருப்பார் , ஜாதகரின் குணம் நேர்மையானதாகவும் , பொருளாதரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுபவராகவும் இருப்பார்.

இவர்களின் நல்ல எண்ணங்கள் அனைத்தும் பலிதமாகும் , ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டே அனைத்தையும் சாதிக்கும் தன்மை ஏற்ப்படும் , முன்னேற்றம் என்பது நிதானமானதாகவும் , படி படியாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார் , நல்ல கல்வியறிவு பெரும் பாக்கியம் ஜாதகருக்கு அமையும் , சிறு வயது முதல்  நல்ல சிறப்பான இடங்களில் வளரும் சூழ்நிலை  ஜாதகருக்கு அமையும் , அனைவரின் உதவிகளும் , ஜாதகருக்கு நிச்சயம் கிடைக்கும் , மக்கள் செல்வாக்கு ஜாதகருக்கு இயற்கையிலேயே அமைந்து விடும் தன்மை ஏற்ப்படும் , மற்றவர்களை விட மாறுபட்ட சிந்தனை கொண்டவராக ஜாதகர் காணப்படுவார் .

இவர்களுக்கு அமையும்  மனைவியும் , நண்பர்களும் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு 100 சதவிகிதம் பிரதிபலன் பாராமல் உதவி செய்வார்கள் , அதிகம் நண்பர்களின் துணையுடன் வாழ்க்கையை வெற்றி கொண்டவர்கள் இந்த அமைப்பை பெற்றவர்களே.  மேலும் நடப்புக்கு இலக்கணமாக விளக்கும் தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் , கூட்டு தொழிலால் வெற்றிவாய்ப்பு இந்த ஜாதகருக்கு 100 சதவிகிதம் உண்டு .

மாமனார் வழியில் இருந்து சொத்து சுகங்களை அதிகம் பெரும் ஜாதகர்கள் இந்த அமைப்பை சார்ந்தவர்களே , பாரம்பரியா சொத்து சுகங்களால் நன்மை அடையும் ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள்  இவர்களே , மேலும் முன்னோர் சொத்து , இன்சுரன்ஸ் பணம் , அந்த வகையில் அதிக வருமானம் பெரும் அமைப்பும் ஜாதகருக்கு அமையும் , ஜாதகர் ஒரு புதுமை விரும்பியாக இருப்பார் , அலங்கார பிரியரும் கூட , இவர்கள் அதிகம் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர் .

எதிர்பாராத நேரத்தில் பட்டம் பதவி என அனைத்து வகை முன்னேற்றமும் இவர் எதிர்பாராத நேரத்தில் அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள் , மக்கள் அனைவராலும் விரும்பப்படும் நபர்களாகவே இவர்கள் காணப்படுகின்றனர் , மக்கள் செல்வாக்கு , மக்களுக்கு சேவைசெய்யும் வாய்ப்பினை இயற்கையாகவே ஜாதகருக்கு தேடிவரும் அமைப்பை கொண்டவர்கள் .

எனவே ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு லக்கினத்தில் ராகுவோ , கேதுவோ அமரும் அமைப்பை பெற்றவர்கள் 100  சதவிகித நன்மையை மட்டுமே இலக்கின வழியிலும் , களத்திர வழியிலும் பெறுவார்கள் .

குறிப்பு :

மேற்கண்ட பலன்கள் சுய ஜாதக ரீதியாக இலக்கின பலனை நடக்கும் திசைகள் புத்திகள் . அந்தரம் , சூட்சமம் ஆகியவைகள்  நடத்தினால் மட்டுமே நடைபெறும் என்பதை கவனத்தில் கொள்க .


வாழ்க வளமுடன்   
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக