செவ்வாய், 1 மே, 2012

குரு பலம் ! இருந்தால் மட்டும் தான் திருமணம் அமையுமா ?

குருபலம் 



கேள்வி :
 
பாரம்பரிய ஜோதிடத்தில் ஒருவரது சுய ஜாதகத்தில் , சந்திர ராசியில் இருந்து குரு பகவான் கோட்சார ரீதியாக  2 , 5 , 7 , 9  , 11 ராசிகளில் , சஞ்சாரம் செய்யும் பொழுது மட்டும் குரு பலம் இருக்கும் அந்த காலங்களில் மட்டும் திருமணம் நடக்கும்,  அப்படி நடந்தால் ஜாதகருக்கு யோகமான வாழ்க்கை அமையும் என்ற கருத்து நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது இது உண்மையா ?

 இதை தவிர குரு பகவான் கோட்சார ரீதியாக சந்திர ராசிக்கு மற்ற இடங்களில் இருக்கும் பொழுது திருமணம் செய்தால் அதிக கஷ்டம் வரும் , திருமண வாழ்க்கை நிலைக்காது , கணவன் மனைவி ஒற்றுமை இருக்காது என்பதெல்லாம் உண்மைய தங்களின் விளக்கம் தேவை ?


பதில் :

  இது முற்றிலும் தவறான கருத்து , மற்றும் பொதுவான கருத்து,  
காரணம் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு  திசை , புத்தி,  அந்தரம், சூட்சமம் ஆகியவை நன்றாக இருக்கும், களத்திர வீட்டு பலனையோ அல்லது களத்திர வீட்டுக்கு கோட்சார கிரகங்கள் 100  சதவிகித நன்மையோ தந்து நடத்துமாயின் அந்த காலங்களே,  ஜாதகருக்கு திருமணத்திற்கு  மிக சிறந்த யோக காலமாக இருக்க முடியும். 


மேலும் திருமண வாழ்விற்கும் குரு பகவானுக்கும் சம்பந்த ஏற்ப்பட ஒன்று குரு பகவான் களத்திர ஸ்தான அதிபதியாக இருந்தால் மட்டுமே களத்திர பாவத்திற்கு  நன்மை தீமையான பலனை தர இயலும் .


குரு பகவானுக்கும் , திருமண வாழ்க்கைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை மற்ற கிரகங்கள் போல்  அவர் ஒரு கிரகம் மட்டுமே , மிதுன, கன்னி  இலக்கண ஜாதகருக்கு உண்மையில் குருபகவான், தனது வீட்டுக்கு மறைவு நிலை பெரும் பொழுதே மிக சிறந்த இல்லற வாழ்க்கை அமையும் என்பது சம்பந்தபட்ட இலக்கணத்தை சேர்ந்தவர்களின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொண்டு பார்த்தால் நிச்சயம் புரியும் .

ஜாதகர் எந்த லக்கினம் ஆனாலும் , அந்த லக்கினத்திற்கு களத்திர பாவக வீட்டுக்கு உண்டான பலன் நடப்பு திசைகளில் நடைபெறுமாயின் நிச்சயம் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் இதில் சந்தேகமே இல்லை .

ஒருவேளை நடப்பு திசை களத்திற வீட்டுக்கு உண்டான பலனை நடத்தாமலோ , அல்லது களத்திர வீட்டுக்குண்டான பலனை தீமையான அமைப்பில் நடத்திக்கொண்டு இருக்கும் பொழுது ,   சந்திர ராசியில் இருந்து குரு பகவான் கோட்சார ரீதியாக  2 , 5 , 7 , 9  , 11 ராசிகளில் , சஞ்சாரம் செய்கிறார் என்று திருமண வாழ்க்கையை அமைத்துகொண்டால் நிச்சயம் இல்லற வாழ்க்கை 100  சதவிகிதம் பாதிக்க பட வாய்ப்பு அதிகம் .

  குரு பகவான் கோட்சார ரீதியாக  2 , 5 , 7 , 9  , 11 ராசிகளில் இல்லாமல்,  சுய ஜாதக அமைப்பில் களத்திர வீடு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் பொழுது திருமண வாழ்க்கை அமையுமாயின் இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாகவே இருக்கும் இதில் சந்தேகமே இல்லை .

 ஒரு ஜாதக அமைப்பில் திருமணம் யோகத்தை,  இலக்கணத்தையும் களத்திர வீட்டையும் அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்ய வேண்டுமோ தவிர சந்திரன் இருக்கும், ராசியை வைத்து அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்வது நலம்.

ஒரு ஜாதகத்தில் லக்கினமே 100  சதவிகித நன்மை தீமை பலனை நிர்ணயம் செய்கிறது , சந்திரனுக்கு இதில் ௧ சதவிகிதம் கூட சம்பந்தம் இல்லவே இல்லை என்பதே சரியானது , உண்மையானது .

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 




3 கருத்துகள்:

  1. அண்ணா,

    ////மிதுன, கன்னி இலக்கண ஜாதகருக்கு உண்மையில் குருபகவான், தனது வீட்டுக்கு மறைவு நிலை பெரும் பொழுதே மிக சிறந்த இல்லற வாழ்க்கை அமையும் என்பது சம்பந்தபட்ட இலக்கணத்தை சேர்ந்தவர்களின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொண்டு பார்த்தால் நிச்சயம் புரியும்.////

    சரியான பதில் எனக்குத்தெரிந்த ஒருவர் மிதுன லக்கினம் களத்திராதிபதி குரு கன்னியில் இருந்தார்.திருமணமான 5 வருடங்களில் கணவன் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார்,இரண்டு குழந்தைகள்.கணவன் இறந்தபோது வயது 25 தான் மிகவும் போராடித்தான் பிள்ளைகளை வளர்த்தார்,மறுமணம் செய்து கொள்ளவில்லை.இவரது திருமணம்,குழந்தை பிறப்பு,கணவன் இறந்தது அனைத்துமே குரு தசையில் தான். நட்சத்திரம் ஸ்வாதி(1ம்பாதம்),சுக்கிரன் 7ல்.குரு கன்னியில்.கேந்திராதிபத்தியம் பெற்ற கிரகம் மறைவுஸ்தானங்களில் இருந்திருக்க வேண்டும்,மாறாக மற்றுமொரு கேந்திரமான பகைவீட்டில் தனியாக இருந்தது அவரது திருமண வாழ்க்கையையே தவிடுபொடியாக்கி விட்டது. கணவன் இறக்கும்போது குரு தசையில் சுக்கிரபுத்தி.இதை பார்க்கத் தெரியாமால் ஜாதகம் பார்த்து ஆஹோ,ஒஹோ என சொன்னால் யார் பொறுப்பு.பொதுவாக திருமணம் நடக்க 7ம் அதிபதியின் தசை,புத்தி,அந்தரம் (அ) சூட்சும அந்தரம்,களத்திரகாரகன் சுக்கிரனின் தசை,புத்தி,அந்தரம் (அ) சூட்சும அந்தரம் நடக்கும் போது சம்பந்தப்பட்ட கிரகங்கள் கோட்சார ரீதியாக நல்ல இடங்களில் இருந்தால் எவ்வித சிரமங்களும் இன்றித் திருமணம் இனிதே நடக்கும்.இதை விடுத்து பாவம் குருபகவானை யாரும் தொல்லை செய்யாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. முற்றிலும் மாறுபட்ட இன்றைய நடைமுறைக்கு ஏற்ற யதார்த்த மான நிலையில் உங்கள் கருத்துக்கள் உள்ளது, மகிழ்ச்சி,
    ஆயில்ய நட்சத்திர மணமகன் ஜாதகப்படி மணப்பெண்னின் தாயாருக்கு உடலுக்கோ அல்லது உயிருக்கோ கெடுதல் என்று ஒரு கருத்து சொல்லப்படுகின்றதே ,, உண்மையா,,

    பதிலளிநீக்கு
  3. முற்றிலும் மாறுபட்ட இன்றைய நடைமுறைக்கு ஏற்ற யதார்த்த மான நிலையில் உங்கள் கருத்துக்கள் உள்ளது, மகிழ்ச்சி,
    ஆயில்ய நட்சத்திர மணமகன் ஜாதகப்படி மணப்பெண்னின் தாயாருக்கு உடலுக்கோ அல்லது உயிருக்கோ கெடுதல் என்று ஒரு கருத்து சொல்லப்படுகின்றதே ,, உண்மையா,,

    பதிலளிநீக்கு