செவ்வாய், 29 மே, 2012

திருமண பொருத்தம் ! மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் !



திருமண வயது வந்தவுடன்  தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித தடையும் இல்லாமல்  திருமணம் சிறப்பாக அமைந்து , அவர்களது வாழ்க்கை 16 வகை செல்வமும் பெற்ற  நிறைவான வாழ்க்கையாக அமைய  வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு , இந்த கனவு அனைவருக்கும் பலிப்பதில்லை, பெறோர்கள் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ வாழ்க்கை துணையை ஜாதக ரீதியாக தேர்ந்தெடுக்கும் பொழுது , நட்சத்திர பொருத்தம் எனும் ஒரு அமைப்பையும் , செவ்வாய் , ராகு கேது என்ற அமைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வரனையோ அல்லது வதுவையோ தவறாக தேர்ந்தெடுப்பது மட்டுமே இதற்க்கு முக்கிய காரணம் . இதற்க்கு சரியான தீர்வு என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம் .

வரனை ( மணமகனை ) தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்ணின்  பெற்றோர்கள், மணமகனின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

1)  ஜாதகனுக்கு லக்கினம் எனும் முதல் வீடு  எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்கினம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகன் மிகசிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பான் , மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும் , தீய பழக்க வழக்கங்கள் அற்றவனாக இருப்பான் , ஜாதகனுக்கு வாழ்க்கையில் சுயமாக முன்னேற்றம் பெரும் அமைப்பை தரும்.

2 ) ஜாதகனுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு நிலையான வருமானம் , இனிமையாக பேசும் தன்மை , மனைவியை  உயிருக்கு உயிராக நேசிக்கும் தன்மை , நல்ல பாரம்பர்ய குடும்பத்தை சார்ந்த அமைப்பு , மனைவியிடம் இறுதிவரை அன்பு மற்றும் பாசம் வைக்கும்  தன்மை என ஜாதகர் பல சிறப்பு அம்சங்களை கொண்டு இருப்பார்.

3 ) ஜாதகனுக்கு பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு தன் குலம் விளங்க புத்திரன் கிடைப்பான் . மேலும் ஜாதகனுக்கு பரதேஷ ஜீவனம் அமையாது . சிறு துன்பம் வந்தாலும்  பல பேர் உதவி செய்வார்கள் .
 
( சில பேர்  பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திரன் இல்லை என்று சொல்வார்கள், இது தவறான கருத்து ரிஷபம் , மிதுனம் ,கடகம்,கன்னி, துலாம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள்  பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து இங்கு ராகு கேது அமர்ந்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் 100 சதவிகிதம் நன்றாக இருக்கும் என்பதை நினைவில் 
கொள்க .)

4 ) ஜாதகனுக்கு சத்துரு ஸ்தானம் எனும் ஆறாம் வீடு நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படி நல்ல நிலையில்  இருக்கு அமைப்பை பெற்ற ஜாதகன் தனது மனைவியை எந்த நிலையிலும் கைவிட மாட்டான் , மேலும் வாழ்க்கையின் இறுதிவரை  தம்பதியினர் இருவரும் இணை பிரியாத நிலை தரும் .

5 ) களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு  எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, இந்த களத்திர பாவகம் நன்றாக இருந்தால்  ஜாதகருக்கு தனது மனைவி தன் உடலில் ஒரு பாதி என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும் , மற்ற பெண்களை தனது தாயாகவும் , சகோதரியாகவும் பாவிக்கும் தன்மை உள்ளவராக காணப்படுவார் , தனது வாழ்க்கை துணைக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் கொண்டவராக இருப்பார் , கணவனும் மனைவியும் அன்யோநியமாக குடும்பம் நடத்தும் தன்மை அமையும் , இல்லற வழக்கை எப்பொழுதும் மகிழ்ச்சி பொங்கும் .

6 ) ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் தனது மனைவியின், அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் திறன் ஜாதகருக்கு ஏற்ப்படும் , திருமணத்திற்கு பிறகு விரைவான முன்னேற்றம் பெற இந்த ஜீவன ஸ்தானம் மிக நன்றாக இருப்பது முக்கியம் , மேலும் நிரந்தர தொழில் அமையும் நல்ல குண இயல்பை ஜாதகர் கொண்டிருப்பார் .

மேற்கண்ட ஸ்தானங்கள்  ஒரு ஜாதகனுக்கு நன்றாக இருக்கும் பட்சத்தில் , ஜாதகனை 100 சதவிகிதம்  நம்பி தனது மகளை பெற்றோர்கள் கன்னிகா தானம் செய்து வைக்கலாம் , அப்படி செய்தால் நிச்சயம் திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள்.


வதுவை ( மணமகளை ) தேர்ந்தெடுக்கும் பொழுது பிள்ளையின்  பெற்றோர்கள், மணமகளின்  ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

1)  ஜாதகிக்கு  லக்கினம் எனும் முதல் வீடு  எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்கினம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகி  மிகசிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பாள்  , மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும் , மற்றவர்களை அனுசரித்து செல்லும் தன்மை ஏற்ப்படும். கணவனின் குறிப்பறிந்து செயல்படும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும் , கணவனின் சொல்படி அடங்கி நடக்கும் தன்மையும் , கணவனிடம்  நல்ல பாசமும் பற்றும் கொண்டவளாக இருப்பாள் . வருமுன் உணரும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும் . சமயோசித புத்திசாலித்தனம் கொண்டவளாகவும், சரியான நேரத்தில் கணவனுக்கு நல்ல யோசனை சொல்லும் புத்திசாலியாகவும் இருப்பாள் .

2 ) ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகி கணவனின் மனம் அறிந்து செயல்படும் தன்மை வாய்க்கும் , தன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பிரயோகிக்கும் தன்மை ஏற்ப்படும் , இனிமையாக பேசி கணவனை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்கும் தன்மை ஏற்ப்படும் , பொருளாதார ரீதியாக கணவனுக்கு ஏற்ப்படும் பிரச்சனைகளை கூட ஜாதகி தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றவளாக காணப்படுவாள் , சேமிக்கும் பழக்கம் சிறு வயது முதலே ஜாதகிக்கு
அமைந்திருக்கும் , தனது கணவனின் வருமானம் அறிந்து சிக்கனமாக செலவு செய்பவளாக இருப்பாள், குடும்பத்தை அனுசரித்து செல்லும் தன்மை கொண்டவளாகவும் , எவ்வித சூழ்நிலையிலும் தனது கணவனை விட்டு பிரியாத குணம் கொண்டவளாக இருப்பாள் இதுவே இவர்களின் சிறப்பு அம்சம் .

3 )
ஜாதகிக்கு சுக ஸ்தானம் எனும் நான்காம்  வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , சுக ஸ்தானம் எனும் நான்காம்  வீடு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகி பெரியவர்கள் போற்றும் குணம் கொண்டவளாகவும் , கற்பு  நெறியில் சிறந்து விளங்குபவளாகவும் , சகல வசதிகளையும் , நிறைவான மனமும் , மற்றவர்க்கு உதவும் மனப்பான்மையும் , சொத்து சுக சேர்க்கை கொண்டவளாகவும் இருப்பாள் , தன் கணவனின் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் இழுக்கு வராத செய்கையை கொண்டவளாக இருப்பாள் , குழந்தைகளை பேணி பாதுகாக்கும் தன்மை கொண்டவளாகவும் அன்பால் குழந்தைகளை ஆதரிக்கும் தன்மை கொண்டவளாக காணப்படுவாள், அன்பை மட்டுமே மூலதனமாக கொண்ட பன்புடைய சிறந்த பெண்ணாக காணப்படுவாள் .

4 ) ஜாதகிக்கு  பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால்
மட்டுமே , பிறக்கும்  குழந்தை நிறைந்த யோக சாலியாக இருக்கும் , தனக்கு பிறக்கும் குழந்தை  பல உயரிய பண்புகளையும் , இறைநிலை அருளை எப்பொழுதும் தன்னகத்தே கொண்ட குழந்தையாகவும் இருக்கும் , ஜாதகிக்கு உதவி செய்ய உறவினர்கள் பலர் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள் , நல்ல குடும்பத்தை சார்ந்தவராக ஜாதகி இருப்பார் .

5 ) களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு  எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, இந்த களத்திர பாவகம் நன்றாக இருந்தால் மட்டுமே கணவனுடன் எப்பொழுதும் சேர்ந்திருக்கும் தன்மை ஏற்ப்படும் , கணவன் செய்யும் தொழில் அதிக பங்களிப்பை செய்யும் குணமும் , கணவனுக்கு எப்பொழுதும் உறுதுணையாகவும் , தன்னம்பிக்கை அளிப்பவளாகவும் ஜாதகி இருப்பார் , குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை உள்ளவராக இருப்பார் , கணவனின் ஒரு பாதியாக உணரும் தன்மை ஜாதகிக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் . கணவனின் முன்னேற்றத்தில் அதிக பங்கு வகிக்கும் பேரு பெற்றவர்கள் , களிமண்ணையும் சிலையாக மாற்றும் சக்தி படைத்தவர்கள் . சமுதாயத்தில் தனது கணவனை மிகசிரந்தவனாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள் .

6 ) ஜாதகிக்கு  8 ம் வீடு  தனது கணவனின் உடல்நிலையையும் , மன நிலையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை இந்த பாவக வழியில் இருந்தே செயல் படும் , ஒரு பெண்ணின் ஜாதகத்தில்  இந்த 8 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது  மிக முக்கியம் கணவனுக்கு நீண்ட ஆயுளை தருவதே இந்த பாவகம் தான் , ஆண்கள் எவ்வளவு பாவம் செய்தாலும் அவர்களின்  உயிரை காப்பாற்றி வைப்பதே இந்த பாவகம் தான் என்பதை,  பெண்களுக்கு துன்பம் விளைவிக்கும் ஆண்கள் அனைவரும்  உணர வேண்டும் .

7 ) ஜாதகிக்கு 12 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது  மிக முக்கியம் கணவனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்  சந்தோஷங்களை தரும் அமைப்பு இந்த பாவக வழியில் இருந்தே செயல்படும் தன் கணவனுக்கு நல்ல மன நிம்மதியை எந்த சூழ்நிலையிலும் தரும் அமைப்பை பெற்றவளாக இருப்பாள் .
 
மேற்கண்ட ஸ்தானங்கள்  ஒரு ஜாதகிக்கு  நன்றாக இருக்கும் பட்சத்தில் , ஜாதகியை தனது மருமகளாக நிச்சயம் ஏற்றுகொள்ளலாம்.  திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள். ஜாதகி காலடி எடுத்து வைக்கும் இடத்தில் அனைத்து செல்வ வளங்களும் நிறைந்து நிலைத்து நிற்கும் .
 
குறிப்பு :

ஆண்பெண் இருவரது ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 அமைந்தாலும்,  மேற்கண்ட அமைப்புகள் நன்றாக இருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை 100 சதவிகிதம் வெற்றி பெரும், மேலும் மேற்கண்ட பாவகங்கள் நன்றாக இருந்து நட்சத்திர பொருத்தம் ( ரஜ்ஜு பொருத்தம் உட்பட )  இல்லை என்றாலும் அவர்களுக்கு திருமணம்  செய்து வைத்தால் வாழ்க்கை 100 சதவீதம் நன்றாக இருக்கும்.

ராகு கேது , செவ்வாய் தோஷங்கள் என்பதெல்லாம் நடைமுறையில் வாழ்க்கையில் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை என்பதே உண்மை , ஜோதிட அறிவு அற்ற ஜோதிடர்கள் வேண்டுமானால் இந்த தோஷங்களை பற்றி சொல்லி மக்களை குழப்பம் அடைய செய்யாலாம் , ஆனால்

ஜோதிட தீபத்திற்கு
மக்கள் ஜோதிட ரீதியான விழிப்புணர்வு பெற வேண்டும் என்பது மட்டுமே முக்கிய நோக்கம் ....

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

jothidadeepam@gmail.com

9 கருத்துகள்:

  1. நல்ல ஒரு விளக்கம்..ஒரு ஜாதக பொருத்தம் பார்க்க இத்தனை விசயங்கள் தேவை என்பதை தெளிவாக விளக்கி உள்ளது அருமை .மேலும் பத்து பொருத்தம் பார்த்து வந்தவர்கள் அவர்களுக்குள் பொருத்தம் இல்லாமல் இருகின்றனர். என் நெடு நாள் சந்தேகம் தீர்ந்தது
    நம்ம மெய் மெய்யப்பன் போன்ற ஜோதிடர்களின் விளக்கம் பத்து பொருத்ததில் எழு போதும் என்பார்கள்..ராகு கேது வைத்து விளையாட்டு காட்டி இருப்பார்கள்

    பதிலளிநீக்கு
  2. உங்களின் ஜோதிட முறை மற்றும் உங்களின் வலை பூ மற்ற ஜோதிடர்களிடம் இருந்து வித்தியாசமாக உள்ளது .. ஜோதிடத்தை தவிர வேறு விசயங்கள் இல்லை .. சினிமா நடிகர்களின் கவர்ச்சி படம் இல்லை ... சுய புராணம் இல்லை .. தவறான வழிகாட்டல் இல்லை ....நிறைய ஜோதிடர்களின் வலைத்தளம் பார்க்க முடியவில்லை .. அவ்வளவு விளம்பரம் மற்றும் சினிமா செய்திகள் ....

    பிரச்சனைகளும் அதற்கான உங்களின் ஜோதிடம் சார்ந்த விளக்கமும் அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ....எனக்கு கிடைத்தது போல மக்களுக்கு நல்ல ஜோதிடர் கிடைத்தால் சந்தோசம் ..

      டிவி ல நல்லா கோட் சூட் போட்டு வந்து ஜோதிடம் சொன்னால் மட்டும் போதாது.. மக்கள் வாழ்க்கையும் நல்லா இருக்கோணும்

      டிவில எல்லாருக்கும் பரிகாரம் சொல்லிட்டு பின்னாடி வாசல வந்து அவங்க ஜாதகத்தை நல்ல ஜோதிடரிடம் பார்ப்பது எந்த வகையில் நியாயம் ???

      நீக்கு
    2. என்னுடைய ஆதங்கம் என்ன என்றால் ஜோதிடம் போன்ற புனிதமான கலையை வலை பூவில் போடும்போது மற்ற எந்த விசயத்துக்கும் முக்கியதுவம் கொடுக்க கூடாது

      சில ஜோதிடர்களுக்கு வருமானம் போதவில்லை போலும் .... நடிகைகளின் கவர்ச்சிப்படம் போட்டு மக்களை கவர்கின்றனர்... நடிகர்களில் சிறந்தவர் யார் என்று கேள்வி வைகிறார்கள் .. நமக்கு நல்ல நேரம் எப்போது வரும் என்று போனால் அங்கு கவுண்டர் ஜாதி பற்றி தப்பாக சொல்லி வீட்டை காலி பண்ணி விட்டு ஜோதிடரே ஓடி விட்டார்...அவருக்கே நல்ல நேரம் இல்ல போல

      இப்படி நெறைய பத்தாச்சு .. ஆனால் அது போன்று கவர்ச்சி படம் போட்டு கவரவில்லை... நடிகர் பற்றி கூறி கூட்டத்தை கூடவில்லை ...ஜோதிட தீபம் ஜோதிடதையே போற்றுகிறது ..... வாழ்த்துக்கள் ...தொடருங்கள்

      நீக்கு
  3. மேற்கூறிய விஷயங்கள் அனைத்தயும் உள்அடைக்கிய

    தமிழ் சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கினாள் அனைவர்க்கும்

    பயனுளதாக இருக்குமே !

    சாய்ராம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல யோசனைதான் அன்பரே ! இருப்பினும் ஜோதிட மென்பொருளுக்கோ , கணினிக்கோ சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கிடையாதே , நாங்கள் பயன்படுத்தும் ஜோதிட மென்பொருள் ஜோதிட கணிதத்தை தெளிவாக தெரிந்துகொள்ள உதவும் ஒரு உள்ளீடு மென்பொருளாக மட்டுமே எடுத்து கொள்கிறோம் , அதன் மூலமாக சரியான ஜோதிட கணிதத்தின் அடிப்படையில் சரியான பலன் சொல்ல மனிதனின் அறிவாற்றலும் ஜோதிடத்தில் நல்ல ஞானமும் தேவை படுகிறது எனும் பொழுது நாம் என்ன செய்ய ?

      நீக்கு
  4. சினிமா நடிகர்கள் படம் இல்லை என்று வாசகர்கள் கருத்து எழுதி இருக்கிறார்கள்.அவர்கள் இந்த பிளாக்கின் முகப்பு பக்கத்தை பார்த்தார்களா என்று தெரியவில்லை.மற்ற ஜோதிடர்கள் போல் தாங்களும் நடிகர் நடிகைகளிடம் விருது பெருவது போல புகைப்படம் போட்டுள்ளீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சொல்வது சினிமா நடிகர் நடிகை கவர்ச்சி படத்தினையும், அவர்கள் எவ்வித ஆலோசனை தம்மிடம் கேட்காவிட்டாலும் கூட அவர்களுக்கு ராசி பலன் கூறும் அதிக பிரசங்கி தனத்தையும் தான் குறிப்பிடுகிறார் .

      ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொண்ட பிறகு அதற்க்கு விளக்கம் கொடுப்பதே சரியானது .

      நீக்கு