புதன், 4 ஜூலை, 2012

பாவகங்களின் இரண்டு விதமான தன்மைகள் ! பகுதி 1




பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் தீமையை தரும் பாவகங்கள் என்பவை  3 ,6 ,8 ,12 மட்டுமே என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது , மேலும் ஒரு ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து எவ்வித நன்மையையும் பெற முடியாது , அந்த பாவகங்கள் 100 சதவிகிதம் தீமையான பலனை மட்டுமே தரும் என்பதாக இருக்கிறது , மேலும் இந்த பாவகங்களில் அமரும் கிரகங்கள் யாவும் ஜாதகருக்கு தீமையை மட்டுமே செய்யும் , நன்மையை செய்யாது இதன் வழியில் இருந்து ஜாதகர் கெடுதலான பலனை மட்டுமே அனுபவிக்க வேண்டும் , இந்த பாவகத்திர்க்கு அதிபதியான கிரகங்களின் திசை புத்தி நன்மையை செய்யாது என்பதும் , இந்த பாவகத்தில் அமர்ந்த கிரகங்களின் திசை ,புத்தி நடந்தாலும் நன்மை செய்யாது என்பதாகவே இருக்கிறது , உண்மை என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம் .

லக்கினம்
:

ஒருவரது
ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு ஆரோக்கியமான உடல் அமைப்பு , பரந்த மனப்பான்மை ,நல்ல எண்ணங்கள் , நீண்ட ஆயுள் பலம் , சிறப்பான வசதி வாய்ப்புகள் , தான் வளரும் காலத்தில் சிறப்பான விஷயங்களை கருக்கொள்ளுதல் , நல்லவற சேர்க்கை என ஜாதகர் ஒரு சிறப்பான சூழ்நிலையில் வளரும் யோகத்தை பெற்று இருப்பார் . இதனால் ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது
ஜாதகத்தில் இந்த இலக்கின பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் என்பதே உண்மை இந்த இடத்தில் லக்கினம் நன்மையை செய்யாது இலக்கின அமைப்பில்  ஜாதகர் தீமையான பலனையே அனுபவிக்க வேண்டி வரும் .

இரண்டாம்
பாவகம் :

ஒருவரது
ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு சிறந்த அறிவாற்றல் , நல்ல ஞானம் , நிறைவான வருமானம் , மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை , மனைவி வழியில் இருந்து நன்மைகள் பெறுதல் , வாக்கின் வழி நன்மையான பலன்கள் , தனது வாக்கின் மூலம் வருமானம் , தடையில்லா அடிப்படை கல்வி , புதிய சொத்துகள் தனது சுய உழைப்பால் வாங்கும் சக்தி , வாக்கு பலிதம் என ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது
ஜாதகத்தில் இந்த இரண்டாம்  பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக இரண்டாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் வருமானத்திற்கு வாழ்க்கையில் அதிக போராட்டங்களை சந்திக்க வேண்டிவரும் , அல்லது மற்றவரை சார்ந்து சூழ்நிலை கைதியாக இருக்க வேண்டி வரும் , மேலும் தனது வாயாலேயே தனது வாழ்க்கையை கெடுத்து கொள்ளவார் .

மூன்றாம்
பாவகம் :

ஒருவரது
ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால்  ஜாதகரின் மன ஓட்டம் , எண்ணத்தின் தன்மை , மனோ நிலை ஆகியவை சிறப்பாக இருக்கும் , எடுக்கும் முயற்ச்சிகளில் வரும் வெற்றிகள் , சிறு பயணத்தால் வரும் யோகம் , ஜன ரஞ்சக எழுத்தாற்றல் , தொலை தொடர்புகளால் ஜாதகர் பெரும் நன்மைகள் , ஜாதகரிடம் உள்ள மன உறுதி , தன்னம்பிக்கை , சகோதர வழி நன்மைகள் , கற்பனை வளம் , மற்றவரிடம் நல்ல பெயர் எடுக்கும் தன்மை , மக்கள் செல்வாக்கு ,போட்டிகளில் வெற்றி என ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது
ஜாதகத்தில் இந்த மூன்றாம்  பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக மூன்றாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் தன்னம்பிக்கை அற்றவராகவும் , பயந்த சுபாவம் கொண்டவராகவும் , செய்யும் காரியங்களில் வெற்றி பெற முடியாமல் தடுமாற்றம் பெரும் அமைப்பும் , அதனால் விரக்தி மன நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலையும் ஜாதகருக்கு நிச்சயம் ஏற்ப்படும் .

 

நான்காம் பாவகம் :

ஒருவரது
ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு  குடியிருக்க நல்ல வசதிகளுடன் சொகுசு வீடு அமையும் , அந்த வீட்டில் ஜாதகர் இருக்கும் வரை அனைத்து செயல்களும் வெற்றி மேல் வெற்றி  என்ற பலனை தரும் , ஜாதகரின் குணம் மிகவும் சிறப்பாக காணப்படும் , அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவராக இருப்பார் , தனது தாயின் வழியில் இருந்து சகல யோகங்களும் பெறுவார் , நல்ல சொகுசு வாகனம் , சொத்து சுகம் ஆகியவை மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கும் எனவே ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது
ஜாதகத்தில் இந்த நான்காம் பாவகம்  பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக நான்காம் பாவகம்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் குடியிருக்க நல்ல வீடு அமையாது , ஜாதகர் மேல்நிலை கல்வி , அல்லது உயர் கல்வி தடை படும் . ஜாதகரின் குணம் சற்றே வருத்தம் அளிக்கும் வகையில் இருக்கும் . ஜாதகருக்கு சொத்து சுகங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க இயலாது .


ஐந்தாம் பாவகம் :

ஒருவரது ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு எப்பொழுதும் இறைஅருள் துணையிருக்கும் , தனது பூர்வீகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் , உதவி செய்ய அனைவரும் முன்வருவார்கள் , பூர்விக சொத்துகள் ஜாதகருக்கு நிச்சயம் கிடக்கும் , நல்ல குழந்தைகள் கிடைப்பார்கள், ஆண் வாரிசு உண்டு , ஜாதகர் நினைக்கும் அனைத்தையும் சாதிப்பார் , பெரிய மனிதர்கள் தொடர்பும் , தனது சொந்த ஊரில் நல்ல மதிப்பும் , மரியாதையும் ஜாதகருக்கு என்றும் கிடைக்கும், எனவே ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது ஜாதகத்தில் இந்த ஐந்தாம் பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக ஐந்தாம் பாவகம்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், ஜாதகர் தனது பூர்வீகத்தில் குடியிருக்க முடியாது உதவி செய்ய யாரும் முன் வரமாட்டார்கள் , ஆண் வாரிசு அற்ற நிலை , தேவையில்லாமல் மற்றவர்களுடன் சண்டை சச்சரவுக்கு செல்லுதல் , நிலையான புத்தி இல்லாமல் துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை , பரதேச ஜீவனம் அமைந்து விடும்.


ஆறாம் பாவகம் :

ஒருவரது ஜாதகத்தில், இந்த பாவகம் நல்ல நிலையில் அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் , நோயற்ற வாழ்க்கை , கடன் பெறுவதால், கொடுப்பதால் லாபம் , வாழ்க்கையில் வரும் சிறு அதிர்ஷ்டங்கள் , சட்டத்தின் வழியில் இருந்து ஜாதகருக்கு யோகம், வழக்குகளில் வெற்றி , எதிரிகளை வெற்றி கொள்ளும் திறமை , எதிரியின் சொத்து ஜாதகருக்கு கிடைக்க பெறுதல் , புத்திசாலி தனத்தால் அனைத்தையும் வெற்றி கொள்ளுதல் என்று ஜாதகருக்கு இந்த அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையான பலன்களே நடைபெறும் .

ஒருவரது ஜாதகத்தில் இந்த ஐந்தாம் பாவகம் பாதிக்க பட்டாலோ, அல்லது கெட்டு விட்டாலோ ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்கள் தடை படும் , அல்லது இதற்க்கு மாறான தீமையான பலனை அனுபவிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக ஆறாம் பாவகம்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், வாழ்நாள் முழுவதும் உடல் நல பாதிப்புகள் இருந்து கொண்டே இருக்கும் , எதிரிகளிடம் தனியாக மாட்டி கொண்டு விழிக்க வேண்டி வரும் , வம்பு வழக்கில் சிக்கி அதனால் ஜாதகரின் வாழ்க்கை கேள்வி குறியாக மாற வாய்ப்பு அதிகம், இவர்கள் தொடுக்கும் வழக்குகள் அனைத்தும் இவருக்கு பாதகமாகவே அமையும் .
தொடரும்.......


எனவே இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் எந்த ஒரு பாவகமும் நல்ல நிலையில் இருந்தால் ( அதாவது சிறப்பான வீடுகளுடன் தொடர்பு பெற்று இருந்தால் ) மட்டுமே நன்மையை செய்யும், இதற்க்கு மாறாக பாதிக்க பட்டு இருந்தால் எந்த பாவகமாக இருந்தாலும் அந்த பாவக வழியில் இருந்து ஜாதகர் கெடுதலான பலனை அனுபவிக்க வேண்டும் குறிப்பிட்ட பாவகங்களின் பலன்களை தரும் திசை புத்தி காலங்களில் என்பதே முற்றிலும் உண்மை .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக