செவ்வாய், 3 ஜூலை, 2012

கன்னி லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் தரும் பலன்கள் !



கன்னி லக்கினத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமரும்பொழுது  ஜாதகருக்கு தரும் பலன்களை பற்றி இனி காண்போம் ! ஜாதகருக்கு நீடித்த ஆயுளும், சுயமாக முன்னேற்றம் பெரும் வாய்ப்பு அதிகம் உண்டு , நல்ல உடல் ஆரோக்கியம் ஜாதகருக்கு சிறு வயது முதல் அமைந்து விடும் , ஜாதகருக்கு இயற்கையாக நல்ல குணம் , பெருந்தன்மையான மனம் , மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை , தனது பெற்றோர்கள் ஆதரவுடன் வளரும் சூழ்நிலை , நிறைவான அடிப்படை கல்வி , கலைகளில் ஆர்வம் , விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கும் தன்மை , மற்றவர்களின் முழு ஆதரவு , பெரியவர்களிடம் நன்மதிப்பு , அறிவார்ந்த செயல்களால் மற்றவரை திரும்பி பார்க்க வைக்கும் திறன் என ஜாதகருக்கு மிகசிறந்த நன்மைகளை மட்டும் வாரி வழங்கும் .

வாழ்க்கையில் அடிக்கடி சிறு சிறு அதிர்ஷ்டங்கள் ஜாதகருக்கு வந்து கொண்டே இருக்கும் , ஜாதகரும் அதை தவறாமல் பயன்படுத்தி முன்னேற்றம் பெற்று கொண்டே இருப்பார் , மேலும் இயற்கையாக சொத்து சுகம் அமைய பெற்ற ஜாதகர் , மற்றவர் உதவி இன்றி வாழ்க்கையில் தனி ஆளாக நின்று எந்த ஒரு காரியத்தையும் ஜெயிக்கும் தன்மை கொண்டவர் , இதனால் ஜாதகருக்கு நிறைய எதிர்ப்புகளையும் , எதிரிகளையும் சந்திக்க வேண்டி வரும் ,மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடிக்கும் பேராற்றல் கொண்டவர்கள் , இதில் ஜாதகர் கவனிக்க வேண்டியது, யாரிடமும் பகைமை பாராட்டாமல்  இருப்பது அவசியம். இல்லை எனில் மற்றவர்களால் ஜாதகர் செய்யும் அனைத்து காரியங்களும் தோல்வியை தழுவ நேரிடலாம் , விட்டு கொடுக்கும் மன பான்மையும் , ஜீவ காருண்யமும் ஜாதகருக்கு அவசியம் தேவை , மேலும் தனது உடலை கெடுக்கும் எந்த தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகமால் ஜாதகர் இருப்பது மிக மிக  முக்கியம் .

இவர்களுக்கு நல்ல நண்பர்கள் அதிகம் வாய்ப்பதில்லை , அப்படியே வாய்த்தாலும் பாதியிலேயே நட்பு முறிவு ஏற்ப்பட்டு விடுகிறது , அவர்களால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை அதிகம் ஏற்ப்படுகிறது , எதிர் பாலினரிடம் அதிக கவனமாக பழகுவது அவசியம் இல்லை எனில் வாழ்க்கையில் அதிக துன்பத்திற்கும் , மன போராட்டத்திற்கும் ஆளாக வேண்டி வரும் , மன நிம்மதி இழப்பு , தற்கொலை செய்து கொள்ளும் மன நிலை , முட்டாள் தனமாக ஏதாவது மற்றவர்களுக்காக செய்து விட்டு வாழ்நாள் முழுவதும் கண்ணீர் சிந்தும் நிலை என நண்பர்களும் ,
எதிர் பாலினரும் ஜாதகரை அதிகம் சோதனை செய்வார்கள் , இதனால் பாதிக்க படுவது என்னவே? இந்த கன்னி லக்கினத்தை சார்ந்தவர்கள் மட்டுமே , இவர்களின் சிரமங்களை மனதுக்குள் ரசிக்கும் மனம் கொண்ட நண்பர்கள் அமைவது ஜாதகருக்கு பெரிய இழப்பே , ஆகவே முன் எச்சரிக்கையாக யாரிடம் பழகினாலும், ஒரு எல்லைக்குள் அவர்களை நிறுத்தி விடுவதும் , தனது சுய விபரங்கள், சுய விஷயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே சாலசிறந்தது , நண்பர்கள் கூட்டாளிகள் விஷயத்தில் ஜாதகர் அதிக எச்சரிக்கை உடன் பழகுவது அவசியம் . இல்லை எனில் பாவம் ஒருபக்கம் பலி உங்கள் பக்கம் வரும் என்பது மறுக்க முடியாத உண்மை .

கன்னி லக்கினத்தில் அமரும் ராகுவோ அல்லது கேதுவோ ஜாதகருக்கு நல்ல உடல்நிலை , சிறந்த அடிப்படை கல்வி , நல்ல சூழ்நிலையில் வளரும் யோகம் , அனைவராலும் விரும்பப்படும் குணம் , வெற்றிகரமான தொழில் வளர்ச்சி , செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு , வெளிநாடுகளில் வசிக்கும் தன்மை அதனால் வரும் யோக அமைப்பு , பரம்பரை சொத்துகளை தன்வசம் பெரும் அமைப்பு , பல தொழில் புரியும் ஆற்றல் ,நல்ல ஞானம் , சிறப்பான சிந்தனை ஆற்றல் , என்றும் இளமை மாறாதா தோற்றம் , எடுக்கும் காரியங்களில் வெற்றி , சிறந்த செல்வ வளம் என 100 சதவிகித நன்மையான பலனையே லக்கினத்திற்கு வாரி வழங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக