ஞாயிறு, 8 ஜூலை, 2012

திருமண பொருத்தம் ஜோதிட ஆலோசனை !




ஆண்
நட்சத்திரம்
பெண் நட்சத்திரம்
பெருத்தம்
நட்சத்திரம்
மிருகசீரிடம் 1 ம் பாதம்
பூரட்டாதி 3 ம் பாதம்

தினம்
உண்டு
கணம்
உண்டு
மாகேந்திரம்


மத்திமம்
ஸ்திரி தீர்க்கம்
உண்டு
யோனி
உண்டு
ராசி


இல்லை
ராசி அதிபதி
உண்டு
வசியம்


மத்திமம்
ரஜ்ஜு
உண்டு
நாடி
உண்டு
வேதை
உண்டு


நட்சத்திர பொருத்தம் 11 / 8 பொருத்தம் உண்டு திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் , 16 வகை செல்வ வளங்களும் தம்பதியருக்கு , நிச்சயம் வாழ்நாள் முழுவதும் நிறைந்திருக்கும் வாழ்த்துகள் .



ஜாதக அமைப்பில் சிறப்பு பாவக பொருத்த நிலை

ஆண் :
            
ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் ( 2 ம் வீடு ) ஜீவன  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாக்கு ,தனம் ,குடும்பம், செல்வாக்கு,நிரந்தர வருமானம் ,மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தும் யோகம் , நல்ல ஒழுக்கம் , பெருந்தன்மையான குணம் என ஜாதகருக்கு மிக சிறப்பான பலன்களையே , வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கும் , எனவே ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது .

         
ஜாதகருக்கு குழந்தை மற்றும் பூர்வீக அமைப்பை குறிக்கும் , ஐந்தாம் பாவகம் , பாக்கியம் எனும் ஒன்பதாம் வீட்டுடன் தொடர்பு எனவே ஜாதகருக்கு தனது குலம் செழிக்க நிச்சயம் ஆண் வாரிசு திருமணம் ஆனா சில மாதங்களிலேயே குலதெய்வ அருளால் கிடக்க பெறுவார் , ஜாதகருக்கு ஐந்தாம் பாவகமும் சிறப்பாக இருக்கிறது .

       
ஜாதகருக்கு களத்திரம் எனும் ஏழாம் பாவகம் , ஜீவனம் எனும் பத்தாம் வீட்டுடன் தொடர்பு , எனவே கணவன் மனைவி , உறவு மிகவும் சிறப்பாக அமைந்து வாழ்நாள் முழுவது மிகவும் மகிழ்ச்சியாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , சிறப்பாக வாழ்க்கை நடத்துவார்கள் , மேலும் ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையை வாழ்நாள் முழுவதும் , கண்ணை இமை காப்பது போல் மனைவியை சிறப்பாக காப்பாற்றுவார் .

      
ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் , லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு , எனவே ஜாதகரின் வாழ்க்கையில் , திருமணத்திற்கு பிறகு சிறப்பான தொழில் முன்னேற்றங்களையும், அதிர்ஷ்ட வாழ்வினையும் நிச்சயம் பெறுவார் , எனவே இந்த ஜாதகம் மிகவும் யோக ஜாதகமே !

பெண் :

        
ஜாதகியின் லக்கினம் , லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் எனவே இயற்கையாக ஜாதகி அதிர்ஷ்ட தேவதையின் அருள் நிறைந்தவர் , இறைநிலையும் ஜாதகிக்கு மிகசிறந்த செல்வ வளங்களை இறுதி வரை அள்ளி தரும் .

       
ஜாதகியின் குடும்ப ஸ்தானம் ஜீவன  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவத, ஜாதகிக்கு  வாக்கு ,தனம் ,குடும்பம், செல்வாக்கு,நிரந்தர வருமானம் ,சந்தோஷமாக குடும்பம் நடத்தும் யோகம் , நல்ல ஒழுக்கம் , பெருந்தன்மையான குணம், கணவனுக்கு யோகம் தரும் அமைப்பு , பெரிய மனிதர்களை அனுசரித்து செல்லும் பக்குவம் , அன்பு , பாசம் , பண்பு போன்ற உயரிய குணங்கள் ஜாதகிக்கு இயற்கையாக அமைந்திருக்கும் , குடும்ப ஸ்தானம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது .

       
ஜாதகிக்கு குழந்தை மற்றும் பூர்வீக அமைப்பை குறிக்கும் , ஐந்தாம் பாவகம் , லாப ஸ்தானத்துடன் தொடர்பு எனவே ஜாதகிக்கு , நிச்சயம் குழந்தை பாக்கியம் ,குல தெய்வ அருளால் 100 சதவிகிதம் உண்டு , தனது நற்குணத்தால் குடும்ப வாழ்க்கை ஜாதகிக்கு மிக சிறப்பாக அமையும் .

       
ஜாதகிக்கு களத்திர பாவகம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் காரணத்தால் , கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்க்கை நடத்தும் குணம்  கொண்ட சிறப்பான ஜாதக அமைப்பாகும் , மேலும் திருமண வாழ்க்கை இறுதிவரை மிகவும் நன்றாக இருக்கும் , இல்லறம் மகிழ்ச்சி கரமானதாக அமையும் .ஜாதகிக்கு களத்திர பாவகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் உள்ளது .

       
ஜாதகிக்கு லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் வீடு மிகவும் சிறப்பாக உள்ள காரணத்தினால் , வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல முன்னேற்றமான வாழ்க்கை நிச்சயம் இறை அருளின் கருணையினால் அமையும் .



குறிப்பு

இருவருடைய ஜாதக அமைப்பில் பாவகங்கள் மிகவும் சிறப்பாக உள்ள காரணத்தினால் இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் , ஜாதக பொருத்தம் 100 / 98 சதவிகிதம் நன்றாக உள்ளது . இருவருடை லக்கினமும் சிம்மமாக அமைவது அதிசயமான ஒன்று இந்த நிலை ஜாதக பொருத்தம் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே அமையும் , இருவருடைய ஜாதக அமைப்பிலும் , சிறப்பான  யோகங்கள் பல உள்ளன , இது கவனிக்க பட வேண்டிய சிறப்பான விஷயம் .

செவ்வாய் தோஷ நிர்ணயம் :

லக்கினம் சிம்மம் என்பதால் , லக்கினத்திற்கு யோக அதிபத்யம் பெறுபவர் செவ்வாய் பகவான் , இவர் லக்கினத்திற்கு எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் தவறாமல் நன்மையை மட்டுமே செய்வார் , எனவே இந்த ஜாதக அமைப்பில் இருவருக்கும் செவ்வாய் தோஷம் என்பதே இல்லை , மேலும் பெண் மற்றும் ஆண் இருவரது ஜாதக அமைப்பிலும் , குரு பகவானின் இல்லத்தில்  செவ்வாய் அமர்வது மிகசிறந்த யோக பலனையே தருகிறது எனவே தான் ஜாதகர் இருவரும் , உயர்வாக கருதப்படும் மருத்துவ துறையில் சேவை செய்யும் யோகம் பெற்றுள்ளனர் இதற்க்கு காரணம் இவர்களது ஜாதகத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் என்பதில் சந்தேகம் இல்லை .

இவர்கள் இருவருக்கும்  திருமணம் நடந்தால் திருமண வாழ்க்கை 100 சதவிகிதம் வெற்றிகரமாக அமையும் வாழ்த்துகள் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக