திங்கள், 23 ஜூலை, 2012

திருமண தாமதம் ஏன் ?


குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகம் : 

ஒருவருடைய ஜாதக அமைப்பில் குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகமும், களத்திர பாவகம் எனும் 7 ம் பாவகமும் ஜாதகருக்கு அமையும் இல்லற துணையை நிர்ணயம் செய்கிறது, சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகம் ஜாதகருக்கு நல்ல நிலையில் அமர்ந்தால், ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக சரியான வயதில் ( பருவத்தில் ) பெரியோர்கள் முன்னின்று அவர்களின் ஆசியுடன் நடத்தி வைப்பார்கள். மேலும் ஜாதகருக்கு அமையும் குடும்ப துணை சிறப்பான நல்ல குணங்களை பெற்றவராகவும், ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும், ஜாதகரின் வெற்றிக்கு காரணமாகவும் இருப்பார், திருமணத்திற்கு பிறகு ஜாதகர் வாழ்க்கையில் தொழில், வருமானம்,மன மகிழ்ச்சி என சந்தோஷமான அமைப்பை பெறுவார்.

 

ஒரு வகையில் குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகம், வாக்கு என்ற அமைப்பை பெறுவதால் ஜாதகரின் வாக்கிற்கு மக்களிடம் நல்ல மதிப்பு மரியாதை கிடைப்பதற்கும் காரணமாக அமைகிறது, மேலும் வாழ்க்கை துணையின் வார்த்தைகள் ஜாதகருக்கு ஆருதலாகவும், ஆதரவாகவும், மன தெளிவை தரும் விதத்திலும் இருக்கும் , இதனால் ஜாதகர் எப்பொழுதும் மன மகிழ்ச்சியாக இருப்பார் இதன் காரணமாக ஜாதகர் செய்யும் வேலைகள் யாவும் வெற்றி பெரும் நிறைந்த வருவாய் கிடைக்கும் , பொருளாதாரத்தில் நிச்சயம் தன்னிறைவான வாழ்க்கை அமைய பெறுவார், பொருளாதாரத்தில் சிக்கல் என்பது வாழ்நாள் முழுவதும் நிச்சயம் வர வாய்ப்பே இல்லை, எனவே ஜாதகருக்கு சகல செல்வ வளங்களும்  நிறைந்து நிற்கும்.

 

ஒருவருடைய ஜாதக அமைப்பில் குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகமும், ரிஷப ராசியும் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்தால் மேற்கண்ட பலன்கள் ஜாதகருக்கு நிச்சயம் சரியான வயதில் நடக்கும் , குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகமும், ரிஷப ராசியும் ஒருவருடைய ஜாதக அமைப்பில் பாதிப்பான நிலையில் உள்ள ஜாதகருக்கே திருமண தாமதம் , காதல் திருமணம் , கலப்பு திருமணம் , வாழ்க்கை துணை இருக்க மறுமணம் செய்துகொள்ளும் நிலை, குடும்ப வாழ்க்கையில் சிரமங்கள் , வருமான இழப்பு , வாழ்க்கை துணையினால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் நிலை, சண்டை சச்சரவு , குடும்ப வாழ்க்கையில் மற்றவர் தலையீடு , அவர்களால் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலை, மன நிம்மதி இழப்பு , சேமித்து வைத்திருக்கும் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை என ஜாதகரை படாத பாடு படுத்தி எடுத்து விடும், எனவே இந்த அமைப்பை சார்ந்தவருக்கே நிச்சயம் திருமணம் தாமதமாக நடக்கிறது மேலும் இவர்களாகவே தனது வாழ்க்கையும் கெடுத்து கொள்கின்றனர் , இதைப்பற்றி விரிவாக சொல்ல எங்களுக்கு மனம் இல்லை .

 களத்திரம் ஸ்தானம் எனும் 7 ம் பாவகம்: 

சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு களத்திரம் ஸ்தானம் எனும் 7 ம் பாவகம் ஜாதகருக்கு நல்ல நிலையில் அமர்ந்தால், ஜாதகருக்கு பொருத்தமான வாழ்க்கை துணை தனது உறவினர் முறையில் இருந்தோ அல்லது நண்பர்கள் வழியில் இருந்தோ நிச்சயம் கிடைக்கும் , அப்படி கிடைக்கும் வாழ்க்கை துணை ஜாதகருக்கு 100 சதவிகிதம் பொருத்தமாக இருப்பார், ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் அமைப்புகளில் சிறந்து விளங்க உறுதுணையாகவும் , அறிவு அல்லது செல்வ வழியில் உதவி செய்யும் ஆற்றல் கொண்டவராகவும் நிச்சயம் இருப்பார் , திருமணத்திற்கு பிறகு ஜாதகரின் வாழ்க்கை நல்லதொரு திருப்பு முனையாக அமையும், அதாவது நல்ல நண்பர்கள், பெரிய மனிதர்கள்  சேர்க்கை , தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்த உறவினர்களின் ஆதரவு , அவர்களால் நல வாழ்க்கை மற்றும் முன்னேற்றம். கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான தொழில் வளர்ச்சி பொருளாதாரத்தில் தன்னிறைவு என ஜாதகர் மிக சிறப்பான பலன்களையே அனுபவிப்பார் .

 

மேலும் பொது மக்கள் செல்வாக்கு மிக சிறப்பாக அமைய வேண்டுமெனில் இந்த களத்திர பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , திருமணத்திற்கு பிறகு இந்த அமைப்பு மிகவும் சிறப்பாக செயல் படும், மக்கள் ஆதரவு அதிகம் உள்ள தொழில்களில் ஜாதகருக்கு நிச்சயம் நல்ல வரவேற்ப்பும் முன்னேற்றமும் ஏற்ப்படும், அதன் மூலம் ஜாதகர் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை பெரும் யோகம் ஏற்ப்படும் .

 

ஒருவருடைய ஜாதக அமைப்பில் களத்திரம் ஸ்தானம் எனும் 7 ம் பாவகமும், துலாம் ராசியும் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்தால் மேற்கண்ட பலன்கள் ஜாதகருக்கு நிச்சயம் சரியான வயதில் நடக்கும் , இதற்க்கு மாறாக பாதிக்க படுமாயின் , ஜாதகர் இளம் வயதிலேயே அவ யோகம் பெற்ற பெண்களுடன் சேர்க்கை பெரும் சூழ்நிலைக்கு தள்ள படுவார், இதனால் ஜாதகருக்கு நடக்க வேண்டிய திருமணம் தாமதப்படும், மேலும் திருமணத்தில் ஜாதகருக்கு அதிக ஆர்வம் இருக்காது , மேலும் திருமாணம் ஆகாமலே குடும்பம் நடத்தும் சூழ்நிலை  ஏற்படவும் வாய்ப்பு உண்டு, தனது இணையின் வாயிலாக அதிக பொருள் இழப்புக்கு ஆளாக வேண்டி வரும் , இருந்தும் மன நிம்மதியின்றி, ஆதரவு இன்றி  வாழ்க்கையின் இறுதி காலங்களை கழிக்க வேண்டி வரும், இதனால் பாதிக்க படுவது என்னவோ அவர்களின் பெற்றோர்கள் மட்டுமே.

 

எனவே இந்த அமைப்பை சார்ந்தவருக்கே நிச்சயம் திருமணம் தாமதமாக நடக்கிறது அல்லது திருமணமே நடக்காமல் போய் விடுகிறது , இந்த அமைப்பை பெற்றவர்களுக்கு உடலில் தெம்பும், கையில் பணமும் இருக்கும் வரை பிரச்சனை வருவதில்லை , அந்திம காலங்களில் முடியாத சூழ்நிலையில் மற்றவர் ஆதரவில் வாழ்நாளை கடத்தும் பொழுதுதான் உணருவார்கள் " தனக்கும் திருமணம் நடந்து ஒரு வாரிசு " அமைந்திருந்தால் நிம்மதியான வாழ்வு, அவர்களின் ஆதரவு  கிடைத்திருக்கும் என்று.

 எனவே சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் பாதிக்க பட்ட நபர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் வாழ்க்கை நடத்த வேண்டும் இல்லை என்றால் வாழ்க்கையின் இறுதி முடிவு மிகவும் பரிதாப கரமானதாக அமைந்துவிடும் .குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகமும் , களத்திரம் ஸ்தானம் எனும் 7 ம் பாவகமும் நன்றாக அமைய பெற்றவர்கள் கொடுத்து வைத்த அன்பர்கள் , இறையருள் இவர்களின் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்குகிறார் .

 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

2 கருத்துகள்: