திங்கள், 2 ஜூலை, 2012

குடியிருக்கும் வீடு தரும் யோகம் ?




கேள்வி :

வணக்கம் அய்யா, தங்களின் வலை பூவை சில வாரங்களாக தொடர்ந்து படித்து வருகிறேன், மிகவும் சிறப்பாக இருக்கிறது , தாங்களது இருக்கு இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே ! என்ற பாதிவை கண்டேன் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது , ஒரு ஜாதகத்தில் ஒருவருக்கு குடியிருக்கும் வீடு தரும் பலன்களை பற்றிய விளக்கம் மிகவும் அருமை , குடியிருக்கும் வீட்டின் திசை அமைப்பு ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை தருமா ? அப்படி எனில் சில மாதங்களில் நான் புதிதாக கட்ட இருக்கும் வீட்டின் வாயிர்ப்படி எப்படி அமைந்தால் ? எனது வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கு என்பதை தயவு செய்து கூறவும் தங்களுக்குண்டான ஆலோசனை கட்டணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்து விட்டேன் , தங்களின் ஆலோசனையை ஆவலுடன் எதிர் நோக்கும் !


 பதில் :

தங்களுடைய வாழ்க்கையில்  நடக்கும் நன்மை, தீமையை  நிர்ணயம் செய்வதில் 80 சதவிகிதம் முக்கிய பங்கு வகிப்பது, தாங்கள் குடியிருக்கும் வீடு மற்றும்  அதன் வாயிர்ப்படி, என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை . ஒருவருடைய ஜாதக அமைப்பில் எவ்வளவு நன்மையான பலன்களை திசா அமைப்பு தந்தாலும் , அதன் முழு பலனையும் ஜாதகர்  அனுபவிக்க வேண்டும் எனில் , சுய ஜாதக அமைப்பில் நான்காம் வீடு அமைப்பு குறிப்பிடும் திசையில்  வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருந்தால் மட்டுமே 100 சதவிகிதம் நன்மையான பலன்கள் நடக்கும் .மேலும் ஜாதக அமைப்பில் இந்த நான்காம் வீடு 2 ,6 ,8 ,12 ம் பாவகத்துடன் தொடர்பு பெறாமல் இருந்தால் நிச்சயம் ஜாதகருக்கு நல்ல வசதி மிக்க வீடு, வண்டி ,வாகனம், சுகம் , கல்வி ஆகியன இயற்கையாக அமைந்து விடும் .

தங்களது ஜாதக அமைப்பில் தங்களது நான்காம் வீடு , களத்திர பாவகத்துடன் சம்பந்தம் , மேலும் இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையை தங்களுக்கு வாரி வழங்குகிறது எனவே , தங்களுக்கு இதுவரை நிறைவான உயர்கல்வி , வசிக்க சிறப்பான வீடு , வசதி மிக்க வண்டி வாகனம் அமைந்திருக்கும் என்பதில் சிறிதும் ஜோதிட தீபத்திற்கு சந்தேகம் இல்லை . தாங்களது சுய முயற்ச்சியால் புதிதாக வீடுகட்டும் யோக அமைப்பு மிகவும் சிறப்பாக காணப்படுகிறது , இந்த பலன் இன்னும் 73 நாட்களுக்கு பிறகு நடக்க வாய்ப்பு அதிகம். இந்த யோக  பலன் தங்களுக்கு தொடர்ந்து மூன்று வருடம் நடை முறையில் இருக்கும் .

எனவே தாங்களது சுய ஜாதக அமைப்பின் படி மேற்கு திசை வாயிர்ப்படி அமைந்த வீடாக அமைந்து கொள்வது , தங்களது ஜாதகத்தில் உள்ள நன்மைகள் அனைத்தையும் தவறாமல் வாரி வழங்கும் , தங்களுக்கு ஏற்ற வாயிர்ப்படி , மேற்கு திசை மட்டுமே . இதனால் தங்களுக்கு  நீடித்த ஜீவன மேன்மை , மக்கள் செல்வாக்கு , கற்ற கல்வியால் ஆதாயம் , நல்ல வண்டி வாகனம், சொத்து சுகம் என சகல நன்மைகளையும் நிச்சயம் தரும் எவ்வித சந்தேகமும் தங்களுக்கு வேண்டாம் , தாங்கள் வீடு கட்டி முடித்த சில மாதங்களிலேயே , நல்ல சிறப்பான இடத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு , அதன் மூலம் தங்களுக்கு ஆண் வாரிசு கிடைக்க பெறுவீர்கள் , மேற்கு திசை வாயிற்படி அமைந்த அந்த வீட்டில்  தாங்கள்  குடியிருக்கும் வரை தங்களுக்கு யோகமே .

 அடுத்ததாக வரும் ராகு புத்தி தங்களுக்கு தீமையான பாவக பலனை செய்தாலும் , மேற்கு திசை வாயிற்படி அமைந்த அந்த வீட்டில்  தாங்கள்  குடியிருக்கும் வரை இந்த பாவக வழியில் இருந்து தங்களுக்கு எவ்வித தீமையான பலனும் நடை பெறாது ஆகவே தாங்கள் எதற்கும் கவலை பட தேவையில்லை  வாழ்த்துக்கள்.

குறிப்பு :

ஒருவரது ஜாதக அமைப்பில் நான்காம் பாவகம் பாதக ஸ்தானதுடன் தொடர்பு பெறுமாயின் , அதற்குரிய திசை வாயிர்ப்படி அமைந்த வீட்டில் ஜாதகர் குடியிருந்தால் ஜாதகருக்கு 200 மடங்கு தீமையான பலனை, நடப்பு திசை  கொடுக்க ஆரம்பித்து விடும் , இதன் வழி துன்பங்களை ஜாதகர் நிச்சயம் அனுபவித்தே தீர வேண்டும் , வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத சூழ்நிலை ஏற்ப்படும் , துவங்கும் அனைத்து காரியங்களும் தோல்வியில் முடிவடையும் , குடும்ப வாழ்க்கை சிறப்பிக்காது , நல்ல தொழில் அமையாது , உறவினர் உதவி கிடைக்காது , மக்கள் செல்வாக்கு இல்லாத நிலை , என ஜாதகரை ஒரு வழி செய்து விடும் , இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள், சுய ஜாதக ரீதியாக  தங்களுக்கு நன்மையை தரக்கூடிய திசையில் வாயிற்படி அமைந்த வீடுகளை ஜாதக ரீதியாக கண்டறிந்து அந்த வீடுகளுக்கு விரைவில் குடி பெயர்வது அதிக நன்மையை தரும். .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக