புதன், 18 ஜூலை, 2012

ஜாதக ரீதியாக ஆண் வாரிசு உண்டா ?




கேள்வி :

அய்யா எங்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் முடிந்து விட்டது , மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு இந்த பெண் குழந்தைக்கு பிறகு இரண்டு முறை எனது மனைவி கருவுற்று எதிர்பாராத விதமாக இரண்டு முறையும் கரு சிதைவு ஏற்ப்பட்டு விட்டது இதற்க்கு என்ன காரணம் என்று எங்களுக்கும் தெரியவில்லை , எங்களது குடும்ப மருத்துவருக்கும் தெரியவில்லை இதற்க்கு காரணம் என்ன ? மேலும் கடந்த 3 வருடமாக நாங்கள் செய்து வரும் தொழிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை இதற்க்கு காரணம் என்ன ? எங்களது ஜாதக ரீதியாக ஆண் வாரிசு உண்டா ? ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கிறதா ? அப்படி இருப்பின் அதை எப்படி நாங்கள் நிவர்த்தி செய்வது ? தொழில் முன்னேற்றம் பெற சரியான ஆலோசனை வழங்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறோம் . எங்களது ஜாதக நகல்களை மின் அஞ்சலில் அனுப்பி வைத்துள்ளோம் , ஆலோசனை கட்டணத்தை வங்கி கணக்கில் செலுத்தி இருக்கிறோம் , தங்களின் ஆலோசனை மற்றும் சரியான பதிலை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம் .


பதில் :

பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஸ்தானமும் , ஜீவன ஸ்தானமும் நல்ல நிலையில் சுய ஜாதக ரீதியாக அமைந்து இருந்தால் நிச்சயம் ஜாதகருக்கு ஆண் வாரிசு உண்டு , செய்யும் தொழில் மிகசிறப்பான முன்னேற்றம் உண்டு , தாங்கள் அனுப்பி வைத்துள்ள ஜாதக அமைப்பில் தங்கள் இவருடைய ஜாதக அமைப்பிலும் இந்த பாவகங்கள் மிகவும் நல்ல நிலையிலேயே மிகவும் சிறப்பாக இருக்கின்றது , எனவே நிச்சயம் தங்களுக்கு ஆண் வாரிசு உண்டு ,மேலும் ஜீவன ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பதால், செய்யும் தொழிலும் நல்ல முன்னேற்றம் இருக்க வேண்டும் , ஆனால் உங்களின் கேள்வியிலிருந்து தாங்கள் இந்தவகை நன்மைகளை கடந்த சில வருடங்களாக எதையும் அனுபவிக்க வில்லை என்பதாகவே இருக்கிறது இதற்க்கு காரணம் என்னவென்பதை பார்ப்போம் .

மேற்கண்ட ஜாதக அமைப்பில் , பூர்வ புண்ணியம் , ஜீவன ஸ்தானம் ஆகியவை நல்ல நிலையில் அமைந்திருந்தும் ஜாதகர் இதன் வழி நன்மைகளை பெற முடியாததிற்கு முக்கிய காரணம் ஜாதகரின் நான்காம் வீடு அமைப்பே , ஜாதகரின் சுய ஜாதக அமைப்பில் வீடு, தாய், வண்டி, வாகனம், சுகம், ஆகியவற்றை குறிக்கும் நான்காம் வீடு பாதக ஸ்தானத்துடன் தொடர்பு , இந்த நிலையில் ஜாதகருக்கு குடியிருக்கும் வீடு பாதக ஸ்தானம் குறிக்கும் கிழக்கு திசை அமைப்பில் வீடு அமைந்து இருக்கிறது , மேலும் இவர் திருமணத்திற்கு பிறகு கிழக்கு திசை வாயிற்படி அமைந்த சொந்த புதிய வீட்டில் குடியேறி இருக்கிறார்.

இந்த கிழக்கு திசை இவருக்கு பாதக ஸ்தான அமைப்பில் வருகின்ற காரணத்தால் , இந்த வீட்டிற்கு வந்த நாள் முதல் ஜாதகருக்கு தொழில் ரீதியாக அதிக பாதிப்புகளை தர ஆரம்பித்து விட்டது ,  ஆண் வாரி பிறக்கவேண்டிய ஜாதகருக்கு பெண் வாரிசாக அமைந்து விட்டது , மேலும் ஆண் வாரிசாக அமைந்த இரண்டு குழந்தைகளும் கரு சிதைவு ஏற்ப்பட காரணமாக ஜாதகரின் குடியிருக்கும் வீடு அமைந்தது , எனவே ஜாதகர் தனது ஜாதக அமைப்பிற்கு யோகத்தை வழங்கும் வடக்கு திசை வாயிர்ப்படி அமைந்த வீட்டில் குடியேறுவது அனைத்திற்கும் நன்மை தரும் , மேலும் விரைவில் ஆண் வாரிசு எவ்வித குறை பாடும் இன்றி கிடைக்க பெறுவார்கள் , தொழில் முறையில் இருந்த சிக்கல்களில் இருந்து சில மாதங்களிலேயே விடுபட்டு முன்னேற்றம் பெறுவார்கள் என்பது நிச்சயம் .

எனவே ஒவ்வொருவரும் சுய ஜாதக ரீதியாக தனக்கு உகந்த திசையில் வாயிற்படி அமைந்த வீடுகளில் குடியிருக்கும் பொழுது , அந்த ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பில் உள்ள யோக நிலைகளை 100 சதவிகிதம் அனுபவிக்க முடியும் , மேலும் ஜாதக ரீதியாக பாதிப்புகள் ஏற்ப்படும் அமைப்பை பெற்று இருந்தாலும் அந்த காலங்களில் பாதிப்புகள் அதிக அளவில் இல்லாமல்  ஜாதகரை காப்பாற்றி நல்ல நிலைக்கு உயர்த்தும், இந்த பதிவை காணும் அனைவரும் தமக்கு உகந்த திசை அமைப்பில் உள்ள வீடுகளில் குடியிருந்து இறைஅருளின் பரிபூரண ஆசியை பெறுவார்களாக , இதைதான் நமது முன்னோர்கள் " இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே " என்றனர் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443306969

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக