திங்கள், 30 ஜூலை, 2012

ஜோதிட ஆலோசனை : எனக்கு திருமணம் செய்யும் யோகம் உண்டா ?



 

கேள்வி :

அய்யா கடந்த ஐந்து வருடமாக எனக்கு வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் , ஆனால் ஏதாவது ஒருவகையில் தடை ஏற்ப்பட்டு கொண்டே இருக்கிறது , மேலும் எனக்கு திருமணம் செய்து கொள்ளும் யோகம் உண்டா ? அது விருப்ப திருமணமா ? பெற்றோர்களால் நிச்சயக்க பட்ட திருமணமா ? அல்லது திருமணமே நடக்காதா வயது வேறு 33 தாண்டி விட்டது, இதற்க்கு காரணம் என்ன ? என்ன பரிகாரம் செய்தால் எனது திருமண  வாழ்க்கை தடையின்றி நடை பெரும் என்பதை தயவு செய்து கூறுங்கள்.

பதில் :

தங்களுடைய ஜாதக அமைப்பில் களத்திரம் எனும் ஏழாம் பாவகம் 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் , குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் , பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் எனவே தாங்களுக்கு திருமண வாழ்க்கை அமைவது அவ்வளவு எளிதான விஷயமல்ல, காரணம் ஒருவருக்கு அமையும் திருமண வாழ்க்கையை பற்றி குறிப்பிடும் 2 ,7 ம் பாவகங்கள் இரண்டும் கடுமையான பாதிப்பில் உள்ளது , மேலும் தங்களுக்கு 7 ம் பாவகம் சிம்ம வீட்டுடன் தொடர்பு பெற்று  கடுமையாக பாதிக்க பட்டு இருப்பது , திருமணத்திற்கு முன் தீய பெண்கள் தொடர்பை ஏற்ப்படுத்தி அதனால் பொருள் இழப்பு மற்றும்  திருமண தாமதத்தை ஏற்ப்படுத்தும் என்பதே உண்மை .

மேலும் தங்களது நண்பர்கள் வழியில் இருந்தும் உங்களுக்கு அதிக தொல்லை ஏற்ப்படலாம் , களத்திர பாவக அமைப்பில் இருந்தும் தீமையான பலன்களே நடை பெரும் , தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் ராகு திசை சுக்கிர புத்தியில் நிச்சயம் திருமணம் நடை பெற வாய்ப்பு இல்லை , ஆனால் அடுத்து வரும் சூரிய புத்தியில் திருமணம் நடை பெற நிச்சயம் வாய்ப்பு உண்டு , அப்படி அமைய பெரும் வாழ்க்கை துணை நிச்சயம் தங்களது ஜாதி அமைப்பை சேர்ந்தவராக இருக்க 100 சதவிகிதம் வாய்ப்பு இல்லை , கலப்பு திருமணம் செய்து கொள்ளவே  அதிக வாய்ப்பு  இருக்கிறது , அதற்க்குண்டான அறிகுறிகள் தங்களுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம் , மேலும் அவர் கணவனால் கைவிடப்பட்டவராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு , இந்த அமைப்பை பெற்ற ஜாதகியை தங்கள் திருமணம் செய்துகொள்ளும் பொழுது வாழ்க்கை மிகவும் , நன்றாக இருக்கும் அதிக துன்பங்கள் இருக்க வாய்ப்பு குறைவு.

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களின் விருப்பபடி வாழ்விழந்த  பெண்ணுக்கு தாங்கள் வாழ்க்கை தரும் பொழுது உங்களின் ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகமான 2 ,7 ம் பாவகங்கள் வலிமை பெரும் அதன் வழி நன்மைகளை தாங்கள் நிச்சயம் பெறுவீர்கள் என்பது தங்களின் ஜாதக அமைப்பிற்கான பலன் , தங்களின் ஜாதக அமைப்பில் கன்னி பெண்ணிற்கு வாழ்வளிக்கும் யோகம் இல்லை என்பதே உண்மை . எனவே ஜாதக பலனை முழுவதுமாக மனம் உவந்து ஏற்றுக்கொண்டு, வாழ்விழந்த ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை தந்து உங்களின் கர்ம வினை பதினை கழித்துக்கொண்டு , நலமான வளமான வாழ்க்கையை பெறுங்கள் , இதை தவிர்த்து உங்களது வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு பெண் பார்த்து கொண்டு இருப்பார்களே ஆயின் எவ்வளவு காலம் ஆனாலும் தங்களுக்கு திருமணம் நடை பெற வாய்ப்பு இல்லை , இது உறுதி . உங்களின் விருப்ப படியே திருமணம் அமையும் .

பரிகாரம் :

வளர் பிறை வியாழன் அன்று பிராமண ஆசி பெறுவது தங்களுக்கு திருமண வாழ்க்கை விரைவில் நடை பெற வழி வகுக்கும் , திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது , தங்களின் குல தெய்வ வழிபாட்டினை தொடர்ந்து செய்வதும் , பித்ரு கர்மங்களை முறைப்படி செய்வதும் திருமண வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைத்து தரும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
944335596


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக