திங்கள், 16 ஜூலை, 2012

பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தமும், சிறப்பு குழந்தை ( Special kid ) பிறப்பும் !



எனது நெருங்கிய நண்பரின் உறவினரின் ஜாதகம் இது , இந்த ஜாதகருக்கு தீர்மானம் ஆவதற்கு முன் எங்களிடம் ஆலோசனை பெற வந்தனர் ,  ஜாதகரின் வாழ்க்கையை அடிப்படியில் இருந்து பார்க்கும் பொழுது நல்ல வளரும் சூழ்நிலை ஜாதகருக்கு அமைந்து இருக்க வில்லை , கல்வியும் சரி தடை பட்டது , நண்பர்கள் சேர்க்கையும் சரியானதாக அமைய வில்லை , இதற்க்கு காரணம் குடும்பம் ,மற்றும் இலக்கின பாவங்கள் பாதக ஸ்தனாத்துடன் சம்பந்தம் பெற்றது,  பரம்பரை தொழில் மட்டும் ஜாதகருக்கு சிறப்பாக வாய்த்து இருந்தது , தனது தகப்பானாருடன் சேர்ந்து அந்த தொழிலை சிறப்பாக செய்யும் யோகம் ஜாதகருக்கு ஏற்ப்பட்டது , இதற்க்கு காரணம் சுகம் மற்றும் ஜீவன ஸ்தானங்கள் சிறப்பாக அமைந்ததுமே . மேலும் இவரது ஜாதக அமைப்பு படி பூர்வ புண்ணியம் ஸ்தானம் லக்கினத்திற்கு பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெற்று இருந்தது , இது ஜாதகரின் முன்னேற்றத்தை வெகுவாக பாதித்துக்கொண்டு இருந்தது .

எம்மிடம் ஜாதகர் வந்த பொழுது திருமண பொறுத்த அமைப்பை பார்த்து திருமணம் செய்ய ஆலோசனை கேட்டனர் , குழந்தை பாக்கிய அமைப்பை பற்றி கேட்ட பொழுது , ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டு இருப்பதால் ஜாதகர் தனது பூர்விகத்தை விட்டு வெகு தொலைவில் ( 100 km அப்பால் அல்லது எல்லை அமைப்பை தாண்டி ) குடியிருக்க வேண்டும் , திருமண வாழ்வில் எவ்வித சிக்கலும் இல்லை ஆனால் ஜாதகர் தனது பூர்விகத்தில் குடியிருக்கும் பொழுது  ஆண் குழந்தை பிறந்தால் , அந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்ப்படலாம் என்று அறிவுறுத்தி இருந்தோம்.

ஆனால் ஜாதகர் குடும்பம் இதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் திருமணத்திற்கு பிறகு தனது பூர்விகத்திலேயே குடி அமர்த்தினர் ஒரு வருடத்திற்கு பிறகு ஜாதகருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது , குடும்பமே மிகவும் சந்தோஷ பட்டது , ஏனெனில் நாம் சொல்லியது போல் அந்த குழந்தைக்கு எவ்வித குறைபாடும் இருக்கவில்லை, இந்த சந்தோசம் அவர்களுக்கு  வெகு நாள் நீடிக்கவில்லை இரண்டு வருடங்களுக்கு பிறகு அந்த குழந்தை வளர வளர தான் அதன் பெற்றோருக்கு , அந்த குழந்தை ஒரு சிறப்பு குழந்தை ( special kid ) என தெரிய வந்தது அதாவது கேட்க்கும் திறன் , பேசும் திறன் , தானாக நடக்கும் வலிமை அற்றது என தெரிய வந்தது, இதற்குள் அவர்கள் அவசர பட்டு ஒரு குழந்தை போதும் என்று குடும்ப கட்டுபாடு வேறு செய்து விட்டனர், இதனால் அவர்களது குடும்பம் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர் .

மீண்டும் அவர்கள் எம்மிடம் ஆலோசனை பெற வந்தனர் , அய்யா தாங்கள் சொல்லியது போல் நடந்து விட்டது , இதற்க்கு நாங்கள் செய்த பாவம் தான் காரணமா அல்லது வேறு எதாவது பாதிப்பா , நாங்கள் மிகவும் மன துயரத்துடன் இருக்கிறோம் எங்களுக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் என்றனர் , கவலை பட வேண்டாம் இதற்க்கு காரணம் நீங்கள் செய்த பாவமும் அல்ல  புண்ணியமும் அல்ல தங்களது மகனின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் கடுமையாக பாதிக்க பட்டதே , எனவே இனியாவது அவர்களை பூர்விகத்தை விட்டு வெகு தொலைவிற்கு  சென்று குடியிருக்க சொல்லுங்கள் , நிச்சயம் இறைவன் அருளால் நன்மை பெறுவீர்கள் என்று ஆலோசனை வழங்கினோம் , இங்கு இருக்கும் தொழில் எப்படி செய்வது என்றனர் , நல்ல நிர்வாகியை வேலைக்கு அமர்ந்துங்கள் மாதத்தில் இரண்டு முறை வந்து தொழில் நன்றாக நடை பெறுகிறத என்று கவனித்து கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தோம் .

சில மாதங்களுக்கு பிறகு அவர்கள் மறுபடியும் வந்து நன்றி சொன்னார்கள்  , காரணம் இவர்கள் தனது பூர்விகத்தை விட்டு சென்ற சில மாதங்களிலேயே நல்ல மருத்துவர் அமைந்து அந்த குழந்தை படி படியாக குணம் அடைந்து வருவதாகவும் , குழந்தையின் தாய் செயற்கை முறையில் மீண்டும் கருவுற்று இருப்பதாகவும் , தான் செய்து வந்த தொழிலை சென்ற இடத்தில் மிகவும் பெரிய அளவில் செய்து வருவதாகவும் மகிழ்வுடன் தெரிவித்தனர் , எல்லாம் இறை நிலையின் கருணை என்றோம் .

இவர்கள் நாங்கள் முன்பே சொன்னது போல் திருமணம் ஆனா உடன் வேறு இடத்திற்கு சென்று இருந்தால் , இந்த துன்பங்களை அனுபவித்து இருக்க தேவையில்லை, அந்த குழந்தையும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நன்றாக பிறந்து இருக்கும் , இதற்க்கு முக்கிய காரணம் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டு தனது பூர்விகத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லாமல் இருந்தது மட்டுமே காரணம் , மேலும் தொழில் அமைப்புகளில் பெரிய வெற்றிகளை பெற முடியாததிர்க்கும் இதுவே காரணம் . பூர்விகத்தை விட்டு சென்றவுடன் இவ்வித பாதிப்புகளில் இருந்து, அவர்களது குடும்பம் விரைவாக மீண்டு வர தொடங்கி விட்டது ஜாதக ரீதியான பலன்களை ஒருவருக்கு ஜாதகம் சரியாக தருகிறது என்பது இங்கே 100 சதவிகிதம் நிருபிக்க படுகிறது .   

எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் இந்த பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டாலோ? பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றாலோ ? தனது பூர்விகம் எதுவோ அந்த இடத்தை விட்டு எங்களது ஆலோசனை படி வெகு தொலைவில் ( 100 km அப்பால் அல்லது எல்லை அமைப்பை தாண்டி ) குடியிருக்க வேண்டும் , அப்படி இருப்பவர்களுக்கு இந்த பாவக வழியில் இருந்து எவ்வித துன்பமும் நிச்சயம் ஏற்ப்படுவதில்லை என்பது கண்கூடாக கண்ட உண்மை .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443306969

1 கருத்து: